search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people fear"

    • திருச்சி கே.கே.நகர் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்
    • போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    திருச்சி:

    திருச்சி மாநகரின் மிக வேகமாக வளர்ச்சி பெறும் பகுதியாக இருந்து வருவது கே.கே.நகர். இதன் ஒரு பகுதியான ஆசாத் நகரில் அதிக அளவில் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசாத் நகர் முதல் தெருவில் வசித்து வரும் பாண்டியன் என்பவரது மனைவியின் கழுத்தில் இருந்து மர்ம நபர் செயினை பறித்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு செயின் பறித்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஆசாத் நகர் முதல் தெருவில் வசித்து வரும் தங்கராஜ் என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார்.

    இவரது மனைவி சரோஜா (70). கணவர் மறைவுக்கு பிறகு சரோஜா, தனது மகன் பாலமுருகனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    முன்னதாக தான் வசித்த திருச்சியில் உள்ள வீட்டை பாதுகாப்பதற்காக ஐயப்பன் நகர் பகுதியை சேர்ந்த பணிப்பெண் ஒருவரை நியமித்து தனது வீட்டினை பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த பெண் நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு வந்து வீட்டினை பார்த்து விட்டு சென்றிருந்தார்.

    நேற்று மாலை மீண்டும் வீட்டினை பார்க்க வந்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த பணிப்பெண் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் வீட்டில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த வீட்டில் இருந்த நகை திருடப்பட்டு இருந்ததை அறிந்து அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த துணிகள் அனைத்தும் சிதறிய நிலையில் இருந்ததை ஆய்வு செய்த காவல்துறையினர் இதுகுறித்து அமெரிக்காவில் இருக்கும் சரோஜாவிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த தொடர் கொள்ளை சம்பவம் ஆசாத் நகர் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரையில் வேகமாக பரவும் காய்ச்சலால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • இதற்காக 172 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மதுரை

    மதுரையில் வேகமாக பரவி வரும் காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் மத்தியில் அச்சம்

    ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் 172 இடங்களில் சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்த ப்பட்டன.

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் "இன்புளு" காய்ச்சல் வேக மாக பரவி வருகிறது.இதனை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்களிடம் காய்ச்சல் அறிகுறிகளை கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    மதுரை மாவட்டத்தை பொருத்தவரை டெங்கு, கொரோனா உள்ளிட்ட தோற்றுப் பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்புளுயன்சா காய்ச்சல் பரவுவதை தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    மதுரை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இன்புளுவென்சா காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக தெரியவந்துள்ளது. தொற்று நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ள 29 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் சுகா தாரத்துறையினர் முழு வீச்சில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் 172 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் பரி சோதிக்கப்பட்டு வருகி றார்கள்.

    மேலும் காய்ச்சல் காரணமாக தினமும் குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்து வமனைகளில் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.

    எனவே மதுரையில் வேகமாக பரவி வரும் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வர சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

    மாநகராட்சி பகுதியில் 29 இடங்களிலும், நகராட்சி களில் 9 இடங்களிலும், 13 பேரூராட்சி பகுதிக ளிலும், 19 கிராம பகுதிக ளிலும் டாக்டர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கொரோனா, டெங்கு உள்ளிட்ட நோய்தொற்று பரவல் தொடர்பாகவும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. வேகமாக பரவும் இன்புளு காய்ச்சலால் மக்கள் மத்தியிலும் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    மாமல்லபுரம் பகுதியில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பீதியை தொடர்ந்து அரசு அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் குவிந்தனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், தேவநேரி, மணமை, கடம்பாடி, பெருமாளேரி, குழிப்பாந்தண்டலம் பகுதியை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் இன்று காலை மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு, பன்றி காய்ச்சல் இருக்கிறதா? என்று அறிய ரத்த பரிசோதனைக்கு மருத்துவர்கள் அனுப்பினர்.

    இதை வரிசையில் நின்று கவனித்த மற்ற சாதாரண சளி, இருமல், தலைவலி மற்றும் தொடர் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளும் பயத்தில் தங்களுக்கும் டெங்கு, பன்றி காய்ச்சல் வந்திருக்குமோ என்ற பயத்தில் மருத்துவர்களிடம் கட்டாய ரத்த பரிசோதணைக்கு எழுதி தரும்படி வற்புறுத்தினர்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவர்களிடையே நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

    பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் போதிய விழிப்புணர்வு விளக்கம் கொடுத்து நோயாளிகளை சமாதானப்படுத்தினர்.

    ×