மதுரையில் வேகமாக பரவும் காய்ச்சலால் மக்கள் அச்சம்

மதுரையில் வேகமாக பரவும் காய்ச்சலால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்காக 172 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரையில் வேகமாக பரவும் காய்ச்சலால் மக்கள் அச்சம்
Published on

மதுரை

மதுரையில் வேகமாக பரவி வரும் காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் மத்தியில் அச்சம்

ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் 172 இடங்களில் சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்த ப்பட்டன.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் "இன்புளு" காய்ச்சல் வேக மாக பரவி வருகிறது.இதனை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்களிடம் காய்ச்சல் அறிகுறிகளை கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்டத்தை பொருத்தவரை டெங்கு, கொரோனா உள்ளிட்ட தோற்றுப் பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்புளுயன்சா காய்ச்சல் பரவுவதை தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இன்புளுவென்சா காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக தெரியவந்துள்ளது. தொற்று நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ள 29 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் சுகா தாரத்துறையினர் முழு வீச்சில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாவட்டம் முழுவதும் 172 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் பரி சோதிக்கப்பட்டு வருகி றார்கள்.

மேலும் காய்ச்சல் காரணமாக தினமும் குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்து வமனைகளில் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.

எனவே மதுரையில் வேகமாக பரவி வரும் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வர சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

மாநகராட்சி பகுதியில் 29 இடங்களிலும், நகராட்சி களில் 9 இடங்களிலும், 13 பேரூராட்சி பகுதிக ளிலும், 19 கிராம பகுதிக ளிலும் டாக்டர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொரோனா, டெங்கு உள்ளிட்ட நோய்தொற்று பரவல் தொடர்பாகவும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. வேகமாக பரவும் இன்புளு காய்ச்சலால் மக்கள் மத்தியிலும் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com