search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசில் தஞ்சம்"

    • திருமணத்துக்கு எதிர்ப்ப தெரிவித்தால் வீட்டை விட்டு வெளியேறினார்
    • காதல் ஜோடி பெற்றோருடன் போலீசார் பேச்சுவார்த்தை

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பங்களா மேட்டை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மகன் வெற்றிவேல் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு வெற்றிவேலுக்கு அதே சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த இந்துமதி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து அவர்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இந்துமதியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் தங்களது மகளுக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க அவரசமாக ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    இதனையடுத்து இந்துமதி நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்றார்.

    2 பேரும் அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்தனர். பின்னர் காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • திட்டக்குடி அருகே போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
    • இருவீட்டு பெற்றோரை அழைத்து சமாதானப்படுத்தினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுநத்தம் கொடிகளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது27). அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் கவுசல்யா (23) இவர்கள் இருவரும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். அப்போது 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதனால் கவுசல்யா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். அதிர்ச்சி அடைந்த கவுசல்யா தன்னை திருமணம் செய்துகொள்ள முருகானந்தத்தை வற்புறுத்தி உள்ளார். ஆனால் காதலர்கள் 2 பேரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்த நிலையில் முருகானந்தம் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

    எனவே ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் கவுசல்யா தரப்பினர் புகார் அளித்தனர். இதுகுறித்து திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, சப் இன்ஸ்பெக்டர் தனசீலன் ஆகியோர் இருவீட்டு பெற்றோரை அழைத்து சமாதானப்படுத்தினர். பின்னர் போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு ஆவினங்குடி போலீஸ் நிலைத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். அதன்பின்னர் கவுசல்யாவின் பெற்றோர், உறவினர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

    • பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்
    • வடவள்ளி போலீசில் தஞ்சம் அடைந்தனர்

    வடவள்ளி,

    கோவை உப்பிலி பாளையம் ஜி.வி. ரெசிடென்சி வீதியை சேர்ந்தவர் மணிராஜ் (22). பேரூர் பகுதியில் லோடு ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    பேரூர் அருகே உள்ள ஆண்டிபாளையத்தை சேர்ந்த வர் சுபாஷினி (19). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். மணிராஜூக்கும், சுபாஷினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் சுபாஷினி திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அவரது பெற்றோர் வடவள்ளி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரில் சுபாஷினியை மணிராஜ் கடத்திச் சென்று விட்டதாக தெரிவித்து இருந்தனர்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் தேடுவதை அறிந்த மணிராஜூம், சுபாஷினியும் நேற்று மாலை வடவள்ளி போலீஸ்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் 2பேரும் வெள்ளலூரில் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்தை பதிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    சுபாஷினியின் பெற்றோர் தங்களுடன் வரும்படி கூறி கண்ணீர் விட்டு அழுதனர். ஆனால் சுபாஷினி காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். காதல் ஜோடியினர் 2 பேரும் மேஜர் என்பதால் சுபாஷினியை அவரது காதலனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    பாசமாக வளர்த்த மகள் தங்கள் வார்த்தையையும் மீறி காதலனுடன் செல்வதை பார்த்து பெற்றோர் கண்கலங்கிய படி போலீஸ்நிலைய வாசலில் நின்றனர். பெண்ணின் பெற்றோர் நடத்திய பாசப்போராட்டம் அங்கு ேதாற்றுப் போனது. 

    திருவட்டாரில் ஒரே பள்ளியில் பணியாற்றியபோது ஆசிரியரை காதலித்த ஆசிரியைக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசில் தஞ்சம் அடைந்தார்.
    தக்கலை:

    திருவட்டார் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தக்கலை பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் வேலை பார்த்து வந்தார்.

    இதே பள்ளியில் வெண்டலிக்கோடு பகுதியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ஒருவரும் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. பணி நிமித்தம் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இதில் ஆசிரியருக்கும், ஆசிரியைக்கும் காதல் மலர்ந்தது. அவர்கள் பள்ளிக்கு வெளியே அடிக்கடி சந்தித்து கொண்டனர்.

    ஆசிரியரும், ஆசிரியையும் காதலிக்கும் தகவல் அவர்களின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதில் ஆசிரியையின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலனை சந்திக்கவும் அனுமதி மறுத்தனர்.இதனால் மனமுடைந்த ஆசிரியை நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அவர் நேராக காதலனை சந்தித்து அவரையும் அழைத்துக் கொண்டு தக்கலை போலீஸ் நிலையம் சென்றார்.

    அங்கு போலீசாரிடம் நாங்கள் இருவரும் ஒருவரை யொருவர் காதலிக்கிறோம். இதை பெற்றோர் ஏற்க மறுக்கிறார்கள். எனவே எங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறினர்.

    இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்களை போலீஸ் நிலையம் வரவழைத்து சமரச பேச்சு நடத்தினர். இதில் ஆசிரியரின் காதலை அவரது பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். ஆசிரியையின் காதலை ஏற்க அவரது பெற்றோர் மறுத்தனர். ஆனால் ஆசிரியை பெற்றோருடன் செல்ல மறுத்ததோடு, காதலருடன்தான் செல்வேன் என உறுதியாக கூறினார்.

    இருவரும் மேஜர் என்பதால் போலீசார் காதல் ஜோடியின் முடிவை ஏற்று அவர்களை சேர்ந்து வாழ அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
    ×