search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலினம்"

    • திருநங்கை சகோதரிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு தேவையான வீட்டு உபயோக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
    • வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நீதித்துறை, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருப்பூர் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுகந்தி வரவேற்று பேசினார். கோவை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். நிர்மலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்வர்ணம் ஜே.நடராஜன் தலைமை தாங்கிபேசினார். அப்போது அவர் பேசியதாவது:- "ஒரு இனத்திற்கான உரிமை மறுக்கப்படும்போது அதனை பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு மீண்டும் உரிமைகள் மீட்கப்பட்டு வரும் காலங்களிலும் அவ்வுரிமைகள் தொடர வேண்டும் என்பதை நமக்கு நினைவு கூறுவதே உலக மகளிர் தின கொண்டாடப்படும் வரலாறு. ஒரு பெண்ணின் விடாமுயற்சியும் தைரியமும் அவர் உழைப்பினால் பெரும் வெற்றியும் அதன் பின்னர் வரும் காலங்களில் அந்த துறை சார்ந்தபெண்கள் சிறந்து விளங்குவதற்கு முதல் வித்தாகும். இனி வரும் காலங்களில் பாலின சமத்துவத்தை முன்னெடுத்து வருங்கால சந்ததியினருக்கு சமத்துவ சமுதாயத்தை தருவோம் என்று இந்த நன்னாளிலே நாம் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டுகிறேன் என்றார்.

    விழாவில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீ குமார், விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு, வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் பழனிசாமி, சிவப்பிரகாசம், ராஜேந்திரன் மற்றும் நிறங்கள் அமைப்பின் நிறுவனர் சங்கரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வின் இறுதியாக முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா நன்றியுரை வழங்கினார்.

    மேலும் இந்நிகழ்வில் மகளிர் தினத்தை முன்னிட்டு நிறங்கள் அமைப்பை சேர்ந்த திருநங்கை சகோதரிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு தேவையான வீட்டு உபயோக மளிகை பொருட்கள் வழங்கப்ப ட்டது. அதனை தொடர்ந்து பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான பறையாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட மற்றும் தாலுக்கா சார்பு நீதிபதிகள், நீதித்துறை, நடுவர்கள், வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×