search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நமது அம்மா"

    பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு அ.தி.மு.க. நாளேடான நமது அம்மா வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டு உள்ளது. #LoksabhaElections2019 #ADMK #Rajinikanth #NamathuAmma
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து வெளியிட்டு இருந்தார்.

    இதையடுத்து அ.தி.மு.க. நாளேடான நமது அம்மா ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நதிநீர் இணைப்பு திட்டங்களை வரவேற்று இருக்கிறார் ரஜினிகாந்த்.

    இதன் மூலம் தனது ஆதரவு பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணிக்கே என்பதை ரஜினிகாந்தின் குரல் உறுதி செய்திருக்கிறது.

    125 வருட காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டதும், முல்லைப் பெரியாறு உரிமையில் முதல்கட்ட வெற்றியை ஈட்டியதும், அரை நூற்றாண்டு கனவான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றிட ஆணையிட்டதும், தி.மு.க. விரயமாக்கிய பழைய வீராணம் திட்டத்தை புதிய வீராணம் திட்டமாக்கி தலைநகர் சென்னையில் தாகம் தீர்த்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்.

    இதற்கு மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் தேசிய நதிகளை இணைப்பதற்கும், குறிப்பாக கோதாவரி ஆற்றின் உபரி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக கோதாவரி-கிருஷ்ணா, காவிரி இணைப்புத் திட்டத்தை ரூ.60 ஆயிரம் கோடியில் நிறைவேற்ற முன் வந்திருப்பதோடு, நீர் மேலாண்மை திட்டங்களுக்கு வெகுவான முன்னுரிமையை பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

    இதனையெல்லாம் கருத்தில் கொண்டே பாய்ந்தோடும் நதியின் நீரை பாரத தேசம் எங்கும் இணைக்கும் திட்டங்களால் பசுமை கொஞ்சும் பிரதேசமாக இந்நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த விருப்பத்தை கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை ஆதரிக்கிறார்.


    இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணிக்கு தனது நல் ஆதரவை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.

    ஏற்கனவே ‘காலா’ ஆதரவு கழகத்துக்கே என நமது அம்மா நாளிதழ் வெளியிட்ட செய்தி இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது. ரஜினிகாந்தை வாழ்த்துவோம். வரவேற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #ADMK #Rajinikanth #NamathuAmma
    மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேடான நமது அம்மாவில் குத்தீட்டி என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. #ADMK #MKStalin #MekedatuDam
    சென்னை:

    அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேடான நமது அம்மாவில் குத்தீட்டி என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    காவேரி தண்ணீரை தமிழகத்திற்கு கரைபுரள விடமாட்டோம் என கங்கணம் கட்டி செயல்படுவது கர்நாடகத்தை ஆளுகிற காங்கிரஸ் கூட்டணி அரசு என்றிருக்க, அந்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டே, மேகதாதுக்கு எதிராகப் போராட்டம் என்று தி.மு.க. நடத்துவது பித்தலாட்டத்தின் உச்சமல்லவா?

    இப்படித்தான், இத்தாலி காங்கிரசோடு அன்றும் இணை பிரியாமல், மத்தியிலே கூட்டணி ஆட்சி நடத்திக் கொண்டு, ஈழத்து இன அழிப்பை முன்னின்று நடத்துவதற்கு துணை போன தி.மு.க. மொத்தத்தையும் முடித்துவிட்டு தமிழினத்தை ஏமாற்ற அண்ணாவின் கல்லறையை, உண்ணா நோன்பு நாடகம் நடத்தும் மேடையாக்கி, உலகமே சிரிக்க மோசடி கூத்து நடத்தியது.

    அவ்வழியிலேயே இப்போதும் தமிழின துரோக காங்கிரசோடு கூட்டணியை தொடர்ந்து கொண்டே, தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்றும் தரங்கெட்ட கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக செயல் தலைவர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.


    பாராளுமன்றத்திலே சிறு குறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பதாக வாக்களித்துவிட்டு தமிழகத்து வணிகர்களை ஏமாற்ற இங்கே வந்து வால்மார்ட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியது.

    அது போலவே, பொன் விளையும் பூமியை புல்லும் முளைக்காத பாலைவனமாக்கவும், விளைநிலங்களை வெடிகுண்டு கிட்டங்கிகளாக்கும் விபரீதங்கள் நிகழ்த்தவும், அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் அணி வகுத்த மீத்தேன், கெயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒரு பக்கம் ஒப்பந்தக் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு, மறுபக்கம் மீத்தேனுக்கு எதிர்ப்பு என்று கனிமொழியை அனுப்பி கண்டனக் கடிதம் கொடுப்பதுமாக, காலமெல்லாம் தி.மு.க. ஆடி வரும் மோசடி கூத்தில் மேலும் ஒன்றாகவே அமைகிறது மேகதாதுவுக்கு எதிராக தி.மு.க.வின் அனைத்துக் கட்சிக் கூட்டமும், ஆர்ப்பாட்டமும்.

    மேகதாதுவில் கர்நாடக காங்கிரஸ் அரசு அணை கட்டினால், அந்த காங்கிரஸ் கட்சியோடு வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க மாட்டோம் என்று ஒரு வார்த்தை பேசுவதற்கு துப்பில்லாத தி.மு.க. இன்னும் எத்தனை நாடகங்கள் நடத்தினாலும், நற்றமிழ் பூமி அதனை ஒரு நாளும் நம்பாது... காரணம்... காவேரி கன்னடர்க்கு, கச்சத்தீவு சிங்களர்க்கு... முல்லையாறு கேரளர்க்கு... முள்ளிவாய்க்கால் மட்டுமே தமிழர்க்கு என்று இடஒதுக்கீடு பெற்றுத்தந்த துரோக இயக்கம் தி.மு.க. என்பதை ஒவ்வொரு தமிழனும் உதிரத்தில் அல்லவா எழுதி வைத்துள்ளான்.

    அதனால் குறிஞ்சிமலர் நடிகர் ஸ்டாலின் போடுகிற கூப்பாடு ஒருநாளும் அரசியலுக்கு பயன்தராத அரை வேக்காடுதானே.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #ADMK #DMK #MKStalin #MekedatuDam
    டி.வி. சேனல் குறித்து விமர்சனம் செய்த நடிகர் விஷாலுக்கு அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ளது. #NamadhuAmma #ADMK #Vishal
    சென்னை:

    தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என 2 முக்கிய சங்கங்களிலும் தலைமை பொறுப்பில் இருப்பவர் நடிகர் விஷால்.

    சில ஆண்டுகளாகவே நடிகர் விஷால் அரசியலுக்கு வருவார் என்று செய்திகள் வெளியாகின. ரஜினியும் கமலும் கட்சி தொடங்குவதற்கு முன்பே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அரசியலுக்குள் நுழைந்தார்.

    ஆனால் கடைசி நேர குளறுபடிகளால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாதபடி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதற்கு அ.தி.மு.க.வினரே காரணம் என்று சொல்லப்பட்டதால் விஷாலுக்கும் அ.தி.மு.கவுக்குமான பனிப்போர் தொடங்கியது.

    இந்தநிலையில் அ.தி.மு.க.வுக்கு சொந்தமாக நியூஸ் ஜெ என்ற செய்தி சேனல் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. அப்போது டுவிட்டரில் விஷால் வெளியிட்ட ஒரு பதிவு, அ.தி.மு.க.வைச் சீண்டுவதுபோல அமைந்தது.

    அவர் வெளியிட்டு இருந்த பதிவில், “மற்றுமொரு செய்திச் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாதச்சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பைத் தொடங்க முடிகிறது? 2019-ம் ஆண்டுக்காகக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார். இது அ.தி.மு.க.வினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    விஷாலின் பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு விவாதத்தையும் உண்டாக்கியது. அவரது பதிவுக்கு கீழேயே பலர் கமெண்டுகளில் ‘அ.தி.மு.க.வை மட்டும் விஷால் சீண்டுவது ஏன்? மற்ற கட்சியினர் வைத்திருக்கும் சேனல்களுக்கும் கணக்கு கேட்பீர்களா?’ என்ற ரீதியில் கேள்விகள் கேட்க தொடங்கினார்.


    விஷால் தனது பதிவு பற்றி கூறும்போது ‘நான் இந்த அரசாங்கத்துக்கு வரி கட்டுபவன். எனக்கு கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறது. ஒரு சேனல் நடத்த ஆண்டுக்கு ரூ.30 கோடி வரை செலவாகும். அவர்களுக்கு எங்கிருந்து இந்த பணம் வருகிறது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    விஷால் கருத்துக்கு இன்று வெளியான அ.தி.மு.க நாளேடான நமது அம்மா கண்டனம் தெரிவித்து உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ‘நியூஸ் ஜெ’ தமிழ்ச் செய்தி தொலைக்காட்சிக்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துக்கள் குவிகிற வேளையில், ஒரு ‘வி‌ஷமப்பயல்’ மட்டும் வாழ்த்துக்கு பதிலாக வன்மத்தை கக்குகிறது. காசு ஏது என்று காழ்ப்புணர்ச்சி பேசுகிறது.

    இப்ப மட்டுமா?... வெகு நாளாகவே குறிப்பாக அம்மாவின் மறைவுக்குப் பிறகு துரோகியின் தூண்டுதலின் பேரில், கழகத்தை தொடர்ந்து பழிக்கிற துஷ்டனாகிவிட்ட “அந்த தோல்விப்பட நடிகர்” கணக்கு கேட்க வேண்டிய இடம், “63 லட்சம் ரூபாய் சொத்து கணக்கு காட்டிவிட்டு, தொலைக்காட்சி, பத்திரிகை நடத்துவதோடு, டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றியும், ஊரெங்கும் கூட்டம் நடத்துகிறேன் என்று மாதம் 10 கோடி ரூபாயை செலவு செய்யும் அந்த மாபியா தலைவனிடம் தானே...”

    அதைவிடுத்து, ஏறத்தாழ 2 கோடி தொண்டர்களை கொண்ட இமயப் பேரியக்கத்திடம்... ஆறாம் முறையாய் தமிழகத்தை ஆட்சி செய்யும் கழகத்திடம்... தொலைக்காட்சி தொடங்க பணம் ஏது என்று டுவிட்டரிலே, பதிவு போட்டு தனது நமைச்சலை வெளிப்படுத்துவது வெட்கக்கேடல்லவா?...

    சரி அதெல்லாம் போகட்டும்... நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 7 கோடி ரூபாயை காணோம்னு கோடம்பாக்கமே உன்னை கொலை வெறியில் தேடுகிறபோது, உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை...

    போ... போ... வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லு....

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. #NamadhuAmma #ADMK #Vishal
    பிச்சைக்காரர்களுக்கு இலவசம் தேவை என்று கமல்ஹாசன் கூறியதற்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. #ADMK #KamalHaasan #NamadhuAmma
    சென்னை:

    பிச்சைக்காரர்களுக்கு இலவசம் தேவை என்று கமல்ஹாசன் கூறியதற்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. நாளேடான நமது அம்மா வில் வெளியாகியுள்ள கட்டுரை வருமாறு:-

    பிச்சைக்காரர்களுக்குத் தான் இலவசம் தேவை என்கிறாரே கமல்ஹாசன். அப்படியென்றால் ஊனமுற்ற ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்குகிறாரே அவர், அது எதற்காக?

    மக்களால் அரசுக்கு வருவாயாக வழங்கப்படுகிற வரிப்பணம், அவர்களுக்கான மக்கள் நலத்திட்டங்களாகி மீண்டும் அவர்களுக்கே உரிய பலன்களாக, திரும்பக் கிடைக்கிறபோது, அதனை ஒருபோதும் இலவசம் என்று சொல்லக்கூடாது என உத்தரவிட்டு அவற்றிற்கு விலையில்லா பொருட்கள் என்கிற பெயரைச் சூட்டியவர் ஈகைக்கும், வாகைக்கும் இலக்கணம் வகுத்த எங்கள் அம்மா.

    இதையெல்லாம் உள் வாங்கிக் கொள்ளாத உள்நோக்க உளறல் நாயகன். ஈரிலை அரசு மீது தொடர்ந்து வன்மத்தைக் கக்குவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

    எங்கள் அம்மாவின் அரசு, கல்வியை, மருத்துவத்தை, ஏழை, எளியோருக்கு விலையில்லாமல் தொடர்ந்து பல்லாண்டுகளாக வழங்குகிறது.

    அதன் மூலம் கல்வி பயின்று உயர்ந்த பதவிகளால் உச்சம் தொட்டு நிற்பவர்களை எல்லாம் கமலின் கருத்து பிச்சைக்காரர்கள் என்கிறதா?

    தொடர்ந்து மூன்றாண்டுகள் இந்தியாவிலேயே உணவு தானிய உற்பத்தியில் தமிழகமே முதலிடம் என்கிற ஹாட்ரிக் சாதனையைப் புரிவதற்கு விவசாயப் பெருமக்களுக்கு விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்களை எல்லாம் தமிழக அரசு இலவசமாக தந்து உழவர்களை ஊக்க மூட்டுகிறதே, இதனையெல்லாம் விவசாயிகள் பெறுகிற பிச்சை என்கிறாரா? வில்லங்க ரூப கமல்ஹாசன்.


    சரி அதெல்லாம் போகட்டும், “கட்சி தொடங்கிய நீங்க, கட்சியை நடத்துவதற்கு பணத்திற்கு என்ன செய்வீங்க” என்று பத்திரிகையாளர் கேட்டபோது, “எனக்கான நிதியை என் கட்சித் தொண்டர்கள் தருவார்கள்” என்று இலவசத்திற்கு தன் தொண்டர்களிடமே துண்டு விரிக்கிற திருவாளர் கமல்ஹாசனை வேண்டுமானால், அரசியல் பிச்சைக்காரர் என்று அழைக்கலாம்.

    தாங்கள் அமைத்த அரசாங்கத்திடமிருந்து நலத் திட்டங்களை பெறுபவர்கள் ஆட்சி அதிகாரத்தின் பங்காளர்களே தவிர, அவர்கள் கையேந்திகள் அல்ல என்பதை கருத்துக் குருடர் கமல்ஹாசன் உணர்ந்து கொள்வது உத்தமம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #KamalHaasan #NamadhuAmma
    சாமானியனின் கவலை சர்க்காருக்கு புரியவில்லை என பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வின் நாளேடான நமது அம்மாவில் கட்டுரை வெளியாகியுள்ளது. #ADMK #CentralGovt #PetrolPriceHike
    சென்னை:

    அ.தி.மு.க.வின் நாளேடான நமது அம்மாவில் “ஆவேசக் கூச்சலும், அடிவயிறு எரிச்சலும்..” என்ற தலைப்பில் வெளியாகி உள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

    * கதர் கட்சி ஆண்ட காலத்திலான ஏராள ஊழல்கள் இப்போது இல்லைதான்.

    * ஊழல் இல்லை என்கிற அதே வேளையில்மனிதன் நிம்மதியாய் வாழும் சூழலில்லை என்கிற அளவுக்கு பெட்ரோல்- டீசல் விலையேற்றம் பெருங்கவலை தருகிறதே...

    * எரிபொருள் விலை ஏறினால் எல்லா விலையும் ஏறுமே என்கிற சாமானியன் கவலை சர்க்காருக்கு புரியலையே...

    * சிலிண்டர் விலைறேற்றம் ஏறத்தாழ ஆயிரத்தை தொடும் நிலையில் நடுத்தர வர்க்கம் நிம்மதி இழக்குதே... நித்திரை துறக்குதே...

    * அடுப்பெரியும் அதே வேளை சிலிண்டர் விலை கேட்டு அடித்தட்டு மக்களுக்கோ அடி வயிறும் எரியுதே... இதை அறியாதது போல மத்தியில் ஆளும் அரசு அபாரமாய் நடிக்குதே...

    * உலகத்தின் வர்த்தகம் பெரும்பாலும் அமெரிக்க டாலரின் அடிப்படையில் என்றிருக்க... இதுவரை காணாத இந்திய பணத்தின் வீழ்ச்சி ஏற்றுமதி செய்வோரை ஏகத்துக்கும் அழிக்குதே... இதனால் ஆட்குறைப்பு வேலை இழப்பு ஏராளமாய் நடக்குதே....

    * ஒரு புறம்... வருமான வரி கடுமை. மறுபுறம்... இவ்வுலகில் இல்லாத அளவுக்கு இருபத்தெட்டு சதவீதம் வரை ஜி.எஸ்.டி. வசூலிக்கும் கொடுமை...


    இந்த வரிவிதிப்பு வதையில் இருந்து... பெட்ரோல்- டீசலுக்கு விலக்கு தரமாட்டோம் என்கிற பிடிவாத நிலைமை....

    * மேலும் தாமரை ஆளாத மாநிலங்களை மாற்றாந்தாய் போக்கோடு நடத்துகிற சிறுமை... அத்தனையும் சேர்ந்துதான் ஆவேசம் கொள்ளச் செய்யுதோ ஆகாய விமானத்திலும் குழாயடிச் சண்டைக்கு அடிப்படை ஆகுதோ....

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #CentralGovt #PetrolPriceHike
    சி.பி.ஐ. சோதனையை சுட்டிக்காட்டி வாழ வைத்த இயக்கத்தை வசைபாடுவது நியாயமா? என்று டி.டி.வி தினகரனை கண்டித்து அ.தி.மு.க. நாளேடான நமது அம்மாவில் கட்டுரை வெளியாகியுள்ளது. #ADMK #TTVDhinakaran #Sasikala
    சென்னை:

    அ.தி.மு.க. நாளேடான நமது அம்மாவில் டி.டி.வி.தினகரனுக்கு கேள்வி எழுப்பி கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    இந்திய வரலாற்றிலேயே வருமான வரித்துறை ஒரே நேரத்தில் 193 இடங்களில் சோதனை நடத்தியது உங்க பேமிலியில்தான்.

    அதே போல கட்சிக்கு தலைவர்களாக இருப்பவர்களில் கா.பி.போ.சா. சட்டத்தின் கீழ் சென்னை, கடலூர் என்று ஒரு வருடத்திற்கு மேலாக, சிறையிலிருந்த பெருமையும் உமக்கே உரியது.

    மேலும், அந்நிய செலாவணி மோசடி வழக்கில் ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டு கண்டி‌ஷன் பெயிலில் இருந்து கொண்டு கட்சி நடத்துவதும், பிறருக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போதிப்பதும் நீங்க மட்டும்தான்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சித்தி, அத்தை, தம்பி என பலர் ஜெயிலிலும், தங்கை, தங்கை கணவர், தம்பி இவர்களோடு தாங்கள் பெயிலிலும் என இந்த நாட்டிலேயே, இவ்வளவு ஏன் இந்த உலகத்திலேயே ஒரு குடும்பமே குற்றவாளிகளின் நாற்றங்கால்களாக இருப்பதும் நீங்கதான்.


    ஆனால் இதற்கெல்லாம் நீங்க எந்த வகையில் உணர்ச்சியை காட்டுறீங்க. கூச்சமில்லாம, “நான், எங்க சித்தி எல்லோரும் அப்பவே ஜெயிலுக்குப் போனவங்க”... “ நான் லஞ்சம் கொடுத்ததற்காக திகார் சிறைக்குப் போனது கூட சின்னத்தை மீட்கத்தானே..”

    “என் மீதுள்ள வழக்கு எல்லாம், விதி மீறல்களே தவிர குற்றங்கள் கிடையாது”. இப்படியும் கூட கடுகளவு கூச்சமில்லாமல் கதாகாலட்சேபம் செய்து கட்சி நடத்தும் தாங்கள், சி.பி.ஐ. சோதனையை சுட்டிக்காட்டி வாழ வைத்த இயக்கத்தை வசைபாடுவது நியாயமா?

    சோதனைகள் நடைபெற்றாலே, ஒருவர் குற்றவாளி என்று சொன்னால், மத்திய ஆட்சியாளர்களின் காவல்துறையான சி.பி.ஐ.யை வைத்து இந்த நாட்டில் உள்ள மொத்த எதிர்க்கட்சிகளையும் குற்றவாளிகளாக்கி விட முடியுமே?

    அதனால், நீட்டி முழக்குவதால் நீங்க ஒரு நாளும் உத்தமனாக முடியாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #TTVDhinakaran #Sasikala
    ×