search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை வேந்தர் நியமனம்"

    தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தை எதிர்த்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #ChennaiHighCourt
    சென்னை:

    கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த கே.சக்கரவர்த்தி. இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள கோவாரண்டோ மனுவில், ‘10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே துணை வேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் என்று பல்கலைக்கழகம் மானிய குழு விதி உள்ளது. ஆனால், இந்த விதியை மீறி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தங்கசாமி உதவி பேராசிரியராக மட்டுமே பணியாற்றியுள்ளார். ஆனால், இணை பேராசிரியராக 6 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பதாக தங்கசாமி தன்னுடைய சுயவிவரக் குறிப்பில் தெரிவித்துள்ளார். எனவே துணை வேந்தராக பணியாற்ற தங்கசாமிக்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.



    இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக்குழு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #ChennaiHighCourt
    துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஆளுநர் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. #VCAppointments #BanwarilalPurohit #RajBhavan
    சென்னை:

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியபோது, துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பல கோடி ரூபாய் அளவிற்கு பணம் புரண்டதாகவும் தெரிவித்தார். தான் பதவியேற்றபிறகு தகுதியின் அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாகவும் கூறினார். ஆளுநரின் இந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், கடும் விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது.

    இந்நிலையில் துணை வேந்தர் நியமன முறைகேடுகள் தொடர்பாக ஆளுநர் வெளியிட்ட கருத்துக்கு ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-


    துணை வேந்தர் நியமனத்தில் யார் மீதும் குற்றம் சுமத்தியோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தோ ஆளுநர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. கோடிக்கணக்கான பணத்தின் அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவதாக கல்வியாளர்கள் கூறிய தகவலை சுட்டிக்காட்டி தெரிவித்தார்.

    2018-க்கு முன் ஒரு துணைவேந்தர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்றத்தால் ஒரு துணைவேந்தர் பதவி நீக்கப்பட்டார். 2 துணைவேந்தர்களுக்கு எதிராக லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சோதனைகள் நடைபெற்றுள்ளன.

    2018ல் இதுவரை 9 துணைவேந்தர்கள் முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. #VCAppointments #BanwarilalPurohit #RajBhavan
    நிர்மலாதேவி விவகாரம் வெளியே வந்தால் பல பழம் பெருச்சாளிகள் சிக்குவார்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #BJP #PonRadhakrishnan #NirmalaDevi
    சென்னை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நிர்மலாதேவி விவகாரம் வெளியே வந்தால் பல பழம் பெருச்சாளிகள் சிக்குவார்கள். இதில் கவர்னரை தொடர்பு படுத்தி பேசுவதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கிறது. அரசு இது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும்.

    துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் என்றால் ஒரு விசயத்தை கவர்னர் சொல்லும் போது முழு ஆதாரமும் தெரிந்த பிறகுதான் கூறி இருப்பார். எந்த காலகட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிவிக்கவில்லை. அந்த உண்மைகள் வெளிவந்தால் பலரது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.

    யாரையும் பின்னால் இருந்து இயக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இயக்க வேண்டும் என்றால் முன்னாள் இருந்தே இயக்குவோம்.


    சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் இதுவரை நாங்கள் தலையிட்டது இல்லை. எச்.ராஜா, எஸ்.வி.சேகர் விவகாரங்கள் பற்றி போலீசிடம்தான் கேட்க வேண்டும்.

    அ.தி.மு.க. அரசு மீது தி.மு.க. ஊழல் பட்டியல் கொடுப்பதாக கூறுகிறீர்கள். அதோடு அவர்கள் ஆட்சி காலத்தில் நடந்த தவறுகள் பற்றிய புகாரையும் சேர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #NirmalaDevi
    தகுதி அடிப்படையில் தான் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டதாக துணை வேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்ய லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    இது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிதலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் பி.துரைசாமி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

    அவரிடம் நிருபர்கள், கடந்த காலங்களில் துணை வேந்தர்கள் நியமனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் கை மாறியுள்ளதாக கவர்னர் பன்வாரிலால் எழுப்பியுள்ள புகார் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து துணை வேந்தர் துரைசாமி கூறியதாவது:-

    தகுதி அடிப்படையில் தான் துணை வேந்தர் நியமனம் நடைபெற்று வருகிறது. அப்போதைய கவர்னர் வித்யாசாகர்ராவ் இருக்கும் போது தான் நான் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டேன்.

    அதாவது துணை வேந்தர் பதவிக்கான நேர்முகத்தேர்வில் 3 பேர் பங்கேற்றோம். இதில் விதிமுறைகளின் படி தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தான் இப்பதவி கிடைக்கப்பெற்றேன். இதில் எவ்வித பணப்பரிமாற்றமோ, சிபாரிசுகளோ நடைபெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×