search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.
    • நான் படிக்கும்போது நல்ல ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன்

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விமேக்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய வேகபந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், "கிராமப்புறங்களில் இருக்கும் வாய்ப்பைக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.

    "எந்த துறையை தேர்வு செய்தாலும் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். 20 வயதில் ஒரு லட்சியம் வைத்து முன்னேறினால் 30 வயதில் இலக்கை அடைய முடியும். லட்சியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. நான் படிக்கும்போது நல்ல ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன். கிரிக்கெட் விளையாடும் பொழுது மூத்தவனான நீ எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றுகிறார்கள் என்று பேசினார்கள்.

    இன்று சாதித்த பிறகு எனக்கு அப்பவே தெரியும் என்று சொல்கிறார்கள். இதுதான் உலகம் மற்றவர்களுக்காக வாழ வேண்டாம். உங்களுக்கு பிடித்த விஷயத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும். இப்பொழுது கிராமப்புறம் மட்டுமன்றி அனைத்து இடங்களிலும் செல்போன்கள் வைத்து விளையாடுகின்றனர். உடலுக்கு ஆரோக்கியமாக நல்ல காற்றில் குறைந்தது நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

    அனைத்து விளையாட்டுகளும் அவசியம். அதேபோல் படிப்பும் அவசியம். ஆனால் படிப்பிற்கும் எனக்கும் தூரம். படிப்பு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் என்ற நடராஜன், இப்போதும் எனக்கு மொழி பிரச்சனை இருக்கு என்றார். படிக்கும் பொழுது செங்கல் சூளையில் வேலை செய்து இருக்கிறேன், கட்டிட வேலையை செய்து இருக்கின்றேன். அதை ஒரு தடையாக நினைக்காமல் உழைத்ததால் தான் முன்னேற முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து விளையாட்டுகளிலும் அனைவரும் சாதிக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் தன்னடக்கமும் முக்கியம் என்றும் நடராஜன் பேசினார்.

    இதனையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    • பொதுமக்கள் தங்கள் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    • தங்களிடம் செல்போன்களை காணவில்லை என்று வந்த புகார்களை ஆய்வு செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சாலையில் செல்பவர்கள் செல்போன்களை தவற விட்டு சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் பகுதியில் கண்டெடு க்கப்பட்ட செல்போனை கும்பகோணம் போலீ சாரிடம் ஒப்படைத்தனர்.

    இதை தொடர்ந்து கும்பகோணம் குற்றப்பிரிவு போலீசார், தங்களிடம் செல்போன்களை காணவில்லை என்று வந்த புகார்களை ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட செல்போன் குறிப்புகளோடு ஒத்துப்பார்த்ததில் 15 பேருக்கு சொந்தமான செல்போன் பற்றிய விவரங்கள் ஒத்துப்போனது. பின்னர், புகார்தாரர்கள் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். 15 செல்போன்களை உரியவ ர்களிடம் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் ஒப்படைத்தார்.

    இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் நிருபர்களிடம் கூறுகையில்:-

    செல்போன் வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கும்பகோணம் சரக பகுதியில் செல்போன் மட்டுமல்லாது திருட்டு போன அனைத்து பொருட்களையும் விரைவில் மீட்கப்படும் என்றார்.

    • ரூ.1½ கோடி மதிப்புள்ள செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • பல்வேறு வகையில் பணம் இழக்க நேர்ந்தால் சைபர் கிரைம் எண் 1930 என்ற இலவச அழைப்பில் அழைக்கவும்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையம் கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவான செல்போன்கள் திருட்டு தொடர்பான புகார்கள் விசாரிக்கப்பட்டு வந்தன.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் உத்தர வின்பேரில் மாவட்டத்தில் திருட்டுப்போன செல்போன் கள் குறித்து தீவிர விசா ரணை நடத்தப்பட்டது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் திருட்டுப்போன ரூ.13 லட்சத்து 81 ஆயிரத்து 750 மதிப்புள்ள செல்போன் கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் துரித நடவடிக்கையால் இதுவரை ரூ.1 கோடியே 58 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள 1107 செல்போன்கள் கைப்பற்றப் பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வங்கி மோசடி தொடர்பான புகாரில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 2 மாதத்தில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 406 ரூபாய் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது. இது வரை ரூ.44 லட்சத்து 28 ஆயிரத்து 805 உரியவர்க ளுடைய வங்கி கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    வங்கியில் இருந்து பேசுவ தாக கூறி ஏமாற்றும் நபர்க ளிடம் விழிப்புணர்வோடு இருக்கவும், வங்கி கணக்கு எண், சிவிவி மற்றும் ஓடிபி போன்ற விபரங்களை முன் பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், பணம் இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் மொபைல் ஆப்களை நம்பி யும், ஆன்லைன் வேலை வாய்ப்பு வாக்குறுதியை நம்பியும், முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் பல்வேறு வகையில் பணம் இழக்க நேர்ந்தால் சைபர் கிரைம் எண் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார். அளிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் தெரி வித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போனில் எந்தவிதமான சேவையும் வழங்கப்பட கூடாது.
    • குழந்தைகளின் வயதை உறுதி செய்வதற்கான அமைப்பும் ஸ்மார்ட்போனில் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    பீஜிங்:

    நவீன உலகில் செல்போன் இன்றியமையாததாகி விட்டது. குழந்தைகள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன்களை குழந்தைகள் அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு தூக்கமின்மை, மோசமான கல்வி செயல் திறன் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதனால் குழந்தைகளிடம் செல்போன்களை கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் செல்போன்களை குழந்தைகள் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

    இது தொடர்பாக சீனாவின் செல்போன் கட்டுப்பாட்டாளர் அமைப்பு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

    18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மேலும் 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 40 நிமிடங்களும், 8 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு மணி நேரமும் 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் 2 மணி நேரம் செல்போனை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

    18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போனில் எந்தவிதமான சேவையும் வழங்கப்பட கூடாது.

    18 வயதுக்குட்பட்டவர்கள் மொபைல் சாதனங்களில் இரவு 10 முதல் காலை 6 மணி வரை இணையத்தை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் பேஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது. குழந்தைகளின் வயதை உறுதி செய்வதற்கான அமைப்பும் ஸ்மார்ட்போனில் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் இணைய சேவை வழங்குபவர்கள், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நேர வரம்புகளில் இருந்து விலக்கு பெற பெற்றோர் கேட்டுக்கொண்டால் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதே போல் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாடல்கள் மற்றும் ஆடியோ உள்ளடக்கம் மட்டுமே இருக்க வேண்டும்.12 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் செய்தி சார்ந்த உள்ளடக்கம் மட்டுமே காட்டப்பட வேண்டும்.

    தவறான பழக்கத்தை தரும் உள்ளடக்கத்தை வழங்காமல் இப்போதே உறுதி செய்யுமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சீனா அரசு அறிவுறுத்தி உள்ளது.

    • ரூ.4 ஆயிரம் மதிப்பிலான 2 செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
    • சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை சிவக்குமார் ஆய்வு செய்துள்ளார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு கடைவீதியில் செல்போன் மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் சிவக்குமார் (வயது48). இவர் நேற்று முன்தினம் இரவு செல்போன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையில் இருந்த ரூ.4 ஆயிரம் மதிப்பிலான 2 செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    உடனடியாக தனது கடையில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை சிவக்குமார் ஆய்வு செய்துள்ளார். அதில் மணல்மேடு மாதாகோவில் தெருவை சேர்ந்த நிலவழகன் (40) என்பவர் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து செல்போன்களை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதுகுறித்து அவர் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளுடன் சென்று மணல்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலவழகனை கைது செய்தனர்.

    • சில செல்போன்களை கீழே கிடந்ததாக கூறி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ,சைபர் கிரைம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குபேந்திரன், காவலர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்களை கண்டுபிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் தேடும் பணியை தொடங்கினர். மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் செல்போனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட செல்போன்கள் தஞ்சாவூர் நகரம் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் சில செல்போன்களை கீழே கிடந்ததாக கூறி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கடைகளில் விற்பனைக்கு இருந்த செல்போன் ஐ.எம்.இ.ஐ எண்ணையும், புகார் கொடுத்திருந்த ஐ.எம்.இ.ஐ எண்ணையும் போலீசார் ஒப்பிட்டு பார்த்து கடை உரிமையாளரிடம் இருந்து அந்த செல்போன்களை மீட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் யாராவது செல்போனை விற்க வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    வெளியூரில் கண்டுபிடிக்கப்பட்ட சில செல்போன்கள் அவர்களாகவே கொரியர் மூலம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி விட்டனர்.

    இவ்வாறாக பொதுமக்களால் தவறவிட்டு, புகார் பெற்று ரூ.3 லட்சம் மதிப்புள்ள 25 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இன்று அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் , சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். அப்போது அவர் செல்போன்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

    • ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் சோதனை.
    • ரூ.10 ஆயிரம், 3 மோட்டார் சைக்கிள்கள் 6 செல்போன்களை பறிமுதல்.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணம் பகுதியில் ஆன்லைன் வழியாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்க்கு ரகசிய தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து அவர் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதன் அடிப்படையில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் மேற்பா ர்வையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில், சிறப்பு காவல் சப்-இன்ஸ்பெக்டர்கள்ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, பார்த்திபநாதன், செந்தில்குமார், ஜனார்த்த னன், பெண் காவலர் சீதா ஆகியோர் அடங்கிய தனி படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    அப்போது கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த வீட்டை அதிரடியாக சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வீட்டில் வைத்து செல்போன் மூலமாக ஆன்லைன் விபச்சாரம் செய்து வந்த சோழபுரத்தை சேர்ந்த பரமேஸ்வரன் மற்றும் பெண்கள் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ரம்யா, முருக்கங்குடியைச் சேர்ந்த பிரேமி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அங்கு இருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

    விசாரணையில் இவர்கள் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் குடும்பம் நடத்துவது போல் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த 2 மாதகாலமாக ஆன்லைன் மூலமாக விபச்சாரம் செய்து வந்துள்ளனர் என தெரிய வந்தது.

    மேலும் அவர்களிமிருந்து ரூ.10 ஆயிரம், 3 மோட்டார் சைக்கிள்கள் 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர்3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்தனர்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    • ரூ.10.40 லட்சம் மதிப்புள்ள 52 ஸ்மார்ட் செல்போன்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
    • வேறு வங்கி கணக்கு எண்ணுக்கு அனுப்பிய ரூ.10 ஆயிரம் தொகையும் திரும்ப பெறப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் மற்றும் திருடிச் சென்ற செல்போன்களை மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கலந்து கொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார்.

    இதன்படி ரூ.10.40 லட்சம் மதிப்புள்ள 52 ஸ்மார்ட் செல்போன்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் பே.டி.எம், மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட ரூ.3 லட்சம் பணத்தை வங்கி மற்றும் பேடிஎம், நிர்வாகத்தின் உதவியுடன் மீட்கப்பட்டு உரியவரிடம் கொடுக்கப்பட்டது.மேலும் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டுவின் கார் டிரைவர், தவறுதலாக வேறு வங்கி கணக்கு எண்ணுக்கு அனுப்பிய ரூ.10 ஆயிரம் தொகையும் திரும்ப பெறப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் பண மோசடி நீலகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையம் மூலம் ஆன்லைன் பண மோசடி, லோன் ஆப் மூலம் மோசடி, மார்பிங், ஆன்லைன் மூலம் ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற குற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுவரை பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 67 வழக்குகளுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 679 புகார்கள் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் நடந்த சைபர் கிரைம் வழக்குகளில் இதுவரை ரூ.6 கோடியே 1 லட்சத்து 67 ஆயிரத்து 232 பணம் மோசடி பேர்வழிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளது. இதில் ரூ.8 லட்சத்து 52 ஆயிரத்து 230 மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர சுமார் ரூ.4 கோடியே 39 லட்சத்து 90 ஆயிரத்து 404 பணம் செல்லாமல் வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. முடக்கப்பட்டுள்ள பணம் நீதிமன்ற உத்தரவு பெற்று மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் இதுவரை தொலைந்து போன 129 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் மோசடி தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிலிப், சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி, சப் இன்ஸ்பெக்டர்கள் கலைவாணி, யசோதா மற்றும் போலீசார் பிரவீன், கருணாகரன், ஜெகதீஸ், கண்ணன் உள்பட பலர் இருந்தனர்

    • மதுரை அருகே கட்டிட காண்டிராக்டரிடம் பணம், செல்போன்கள் திருடப்பட்டன.
    • இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் சக்தி சிவராஜ் (வயது 36). கட்டிட கான்ட்ராக்டரான இவர் மதுரை துவரிமான் மேலக்கால் மெயின் ரோட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கி, நாகமலை புதுக்கோட்டையில் திருமண மண்டபம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தி தங்க வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் சக்தி சிவராஜ் சம்பவத்தன்று இரவு அறையில் படுத்து தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, அவர் வைத்திருந்த 14 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 செல்போன்களை காணவில்லை. இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் அறைக்குள் புகுந்து பணம் மற்றும் செல்போன்களை திருடியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி மேற்கண்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லேப்டாப், 3 செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்.

    பட்டீஸ்வரம்:

    தஞ்சை மாவட்டம் அய்ய ம்பேட்டை கடைத்தெருவில் உள்ள ஒரு இடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரன்ட் பூரணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து இதில் சம்பந்தபட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யுமாறு அய்யம்பேட்டை போலீசா ருக்கு உத்தரவிட்டார்.

    அதன் அடைப்படையில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கு மார் தலைமையில் போலீசார் அருண் மற்றும் கார்த்திக் ஆகியோர் அய்யம்பேட்டை கடைவீதியில் உள்ள காம்ப்ளக்ஸில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த முகமது ரஃபீக் (வயது48), அவரது மனைவி மும்தாஜ் பேகம் (44) ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் ஆன்லைன் லாட்டரி வியாபாரத்திற்கு பயன்படுத்திய லேப்டாப், 3 செல்போன்கள், மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கைப்பற்றி தம்பதியினர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    • ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், ராசா மிராசுதாரர் மருத்துவமனை உள்பட மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட பொதுமக்கள் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இதையடுத்து நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில்
    சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் , ஏட்டு செந்தில் குமார் மற்றும் போலீசார்
    காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    மாயமான செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் தேடும் பணியை தொடங்கினர். மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் செல்போனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட செல்போன்கள் ஈரோடு, நாமக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் சிலர் ஏற்கனவே கடைகளில் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர்களிடம் செல்போன்களை போலீசார் மீட்டனர்.

    மேலும் சில செல்போன்கள் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் சில இடங்களில் உள்ள கடைகளில் விற்கப்பட்டதும் தெரியவந்தது. அதனை ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் உறுதிப்படுத்திய பிறகு போலீசார் மீட்டனர்.

    சில செல்போன்களை கீழே கிடந்ததாக பொதுமக்கள் சிலர் போலீசிடம் ஒப்படைத்தனர். இவ்வாறாக பொதுமக்களால் தவறவிட்டு, புகார் பெற்று ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.

    இன்று அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரா முன்னிலையில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா இன்று சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.

    அப்போது அவர், கஷ்டப்பட்டு செல்போன்கள் வாங்குகிறீர்கள். அதனை சரியான முறையில் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.

    • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
    • கன்னியாகுமரி டி.எஸ்.பி., திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டார்.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள சந்தையடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அகஸ்தீஸ்வரம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம் போல் செல்போன் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த விலை உயர்ந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 10 செல்போன்கள் திருட்டுபோய் இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஒரு பெரிய கல்லை எடுத்து கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் சென்று செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது.

    செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் கன்னியாகுமரி டி.எஸ்.பி., திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டார். இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க அவர் உத்தரவிட்டார்.

    ×