என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில் ரூ.5 லட்சம் மதிப்பு செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
- போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
- ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், ராசா மிராசுதாரர் மருத்துவமனை உள்பட மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட பொதுமக்கள் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில்
சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் , ஏட்டு செந்தில் குமார் மற்றும் போலீசார்
காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மாயமான செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் தேடும் பணியை தொடங்கினர். மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் செல்போனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
அப்போது சம்பந்தப்பட்ட செல்போன்கள் ஈரோடு, நாமக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் சிலர் ஏற்கனவே கடைகளில் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர்களிடம் செல்போன்களை போலீசார் மீட்டனர்.
மேலும் சில செல்போன்கள் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் சில இடங்களில் உள்ள கடைகளில் விற்கப்பட்டதும் தெரியவந்தது. அதனை ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் உறுதிப்படுத்திய பிறகு போலீசார் மீட்டனர்.
சில செல்போன்களை கீழே கிடந்ததாக பொதுமக்கள் சிலர் போலீசிடம் ஒப்படைத்தனர். இவ்வாறாக பொதுமக்களால் தவறவிட்டு, புகார் பெற்று ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.
இன்று அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரா முன்னிலையில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா இன்று சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.
அப்போது அவர், கஷ்டப்பட்டு செல்போன்கள் வாங்குகிறீர்கள். அதனை சரியான முறையில் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்