என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 3 பேர் கைது
- ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் சோதனை.
- ரூ.10 ஆயிரம், 3 மோட்டார் சைக்கிள்கள் 6 செல்போன்களை பறிமுதல்.
பட்டீஸ்வரம்:
கும்பகோணம் பகுதியில் ஆன்லைன் வழியாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்க்கு ரகசிய தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து அவர் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் மேற்பா ர்வையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில், சிறப்பு காவல் சப்-இன்ஸ்பெக்டர்கள்ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, பார்த்திபநாதன், செந்தில்குமார், ஜனார்த்த னன், பெண் காவலர் சீதா ஆகியோர் அடங்கிய தனி படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த வீட்டை அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது அந்த வீட்டில் வைத்து செல்போன் மூலமாக ஆன்லைன் விபச்சாரம் செய்து வந்த சோழபுரத்தை சேர்ந்த பரமேஸ்வரன் மற்றும் பெண்கள் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ரம்யா, முருக்கங்குடியைச் சேர்ந்த பிரேமி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அங்கு இருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.
விசாரணையில் இவர்கள் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் குடும்பம் நடத்துவது போல் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த 2 மாதகாலமாக ஆன்லைன் மூலமாக விபச்சாரம் செய்து வந்துள்ளனர் என தெரிய வந்தது.
மேலும் அவர்களிமிருந்து ரூ.10 ஆயிரம், 3 மோட்டார் சைக்கிள்கள் 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர்3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்