search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவிஸ் வங்கி"

    • நான் சொல்றேன் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
    • தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை 80 சதவீத பெண்களுக்கு கிடைக்கும். வெறுமனே குற்றம் சாட்டக் கூடாது.

    திண்டுக்கல்:

    காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

    தமிழகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றோம். பெருந்தலைவருக்கு செய்கிற மரியாதையிலேயே, பெரிய மரியாதை இதுதான். தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் கொணடு வரப்பட்டதற்கு காரணம் பெருந்தலைவர் காமராஜர். தமிழகத்தில் பா.ஜ.க. இதற்கு எதிராக செயல்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்காக ஒரு புதிய திட்டங்கள் கூட பாரதிய ஜனதா கொண்டு வரவில்லை.

    9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு ஒரு புதிய சாலை கூட கொண்டு வரவில்லை. இங்கு நடைபெறுவது எல்லாம் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள் தான். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே இருக்கிறது. அதனோடு தொடங்கப்பட்ட மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் முடிவு பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    அதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறோம். அமைச்சர் செந்தில் பாலாஜி மொரீசியஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்கிறார். இது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு. டெல்லியில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாமா. நான் சொல்றேன் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். அதற்கு காரணம் இங்கே இருக்கிற பணத்தை சுவிஸ் பேங்க்கில் டெபாசிட் செய்யத்தான். இது அரசியல் ஆயிடுமா. இதனால் யாருக்கு என்ன பலன் அண்ணாமலை அளந்து பேச வேண்டும். செந்தில் பாலாஜி என்ன குற்றவாளியா? குற்றம் சுமத்தி இருக்கிறீர்கள். உங்களது அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றனர். அமித்ஷா மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த போது குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தார்.

    அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களுக்கும் நிபந்தனைகள் இருக்கும். நிபந்தனைகள் இல்லாமல் எந்த திட்டங்களும் செயல்படுத்த முடியாது. தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை 80 சதவீத பெண்களுக்கு கிடைக்கும். வெறுமனே குற்றம் சாட்டக் கூடாது. பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் மக்கள் எதிர்கின்றனர். மோடி 9 வருடத்தில் எதையுமே சாதிக்கவில்லை. எனவே சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியாதவர்கள், ஜாதியை சொல்லி ஓட்டு கேட்க நினைக்கின்றனர். இந்தியாவில் பல ஜாதிகள், பல மதங்கள் உள்ளன. விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். காமராஜர் பிறந்த நாளன்று இரவு நேர பாடசாலையை தொடங்கியுள்ளார். இதை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

    தமிழகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றோம். பெருந்தலைவருக்கு செய்கிற மரியாதையிலேயே, பெரிய மரியாதை இதுதான். தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் கொணடு வரப்பட்டதற்கு காரணம் பெருந்தலைவர் காமராஜர். தமிழகத்தில் பா.ஜ.க. இதற்கு எதிராக செயல்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்காக ஒரு புதிய திட்டங்கள் கூட பாரதிய ஜனதா கொண்டு வரவில்லை.

    9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு ஒரு புதிய சாலை கூட கொண்டு வரவில்லை. இங்கு நடைபெறுவது எல்லாம் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள் தான். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே இருக்கிறது. அதனோடு தொடங்கப்பட்ட மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் முடிவு பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    அதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறோம். அமைச்சர் செந்தில் பாலாஜி மொரீசியஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்கிறார். இது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு. டெல்லியில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாமா. நான் சொல்றேன் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். அதற்கு காரணம் இங்கே இருக்கிற பணத்தை சுவிஸ் பேங்க்கில் டெபாசிட் செய்யத்தான். இது அரசியல் ஆயிடுமா. இதனால் யாருக்கு என்ன பலன் அண்ணாமலை அளந்து பேச வேண்டும். செந்தில் பாலாஜி என்ன குற்றவாளியா? குற்றம் சுமத்தி இருக்கிறீர்கள். உங்களது அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றனர். அமித்ஷா மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த போது குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தார்.

    அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களுக்கும் நிபந்தனைகள் இருக்கும். நிபந்தனைகள் இல்லாமல் எந்த திட்டங்களும் செயல்படுத்த முடியாது. தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை 80 சதவீத பெண்களுக்கு கிடைக்கும். வெறுமனே குற்றம் சாட்டக் கூடாது. பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் மக்கள் எதிர்கின்றனர். மோடி 9 வருடத்தில் எதையுமே சாதிக்கவில்லை. எனவே சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியாதவர்கள், ஜாதியை சொல்லி ஓட்டு கேட்க நினைக்கின்றனர். இந்தியாவில் பல ஜாதிகள், பல மதங்கள் உள்ளன. விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். காமராஜர் பிறந்த நாளன்று இரவு நேர பாடசாலையை தொடங்கியுள்ளார். இதை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆண்டுதோறும் இந்த கணக்கு விவரங்களை அளித்து வருகிறது.
    • இதுவரை சுமார் 34 லட்சம் கணக்குகளின் விவரங்களை அளித்துள்ளது.

    புதுடெல்லி :

    சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், கருப்பு பணத்தை பதுக்கி வைக்க பாதுகாப்பான இடங்களாக கருதப்பட்டு வந்தன. அதனால், அந்த வங்கிகளில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், கணக்கில் காட்டப்படாத பணத்தை போட்டு வைத்திருந்தனர்.

    அவர்கள் வரிஏய்ப்பு செய்வதால், அந்தந்த நாடுகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. எனவே, இதற்கு முடிவுகட்ட அந்த வங்கிக்கணக்கு விவரங்களை பெறுவதற்காக, தானாக தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தை சுவிட்சர்லாந்து அரசுடன் செய்து கொண்டன.

    இதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து, சுவிஸ் வங்கிகளில் உள்ள வெளிநாட்டினரின் கணக்கு விவரங்களை அந்தந்த நாட்டிடம் சுவிட்சர்லாந்து பகிர்ந்து கொள்ள தொடங்கியது.

    ஆனால், இந்தியாவிடம் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்துதான் இந்தியர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ள தொடங்கியது. ஆண்டுதோறும் இந்த கணக்கு விவரங்களை அளித்து வருகிறது.

    இந்தநிலையில், தொடர்ந்து 4-வது ஆண்டாக இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து ஒப்படைத்துள்ளது. கடந்த மாத இறுதியில் இந்த விவரங்கள் வந்து சேர்ந்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

    இந்த 4-வது தொகுப்பில், நூற்றுக்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியோரின் வங்கிக்கணக்கு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. சிலர் ஒன்றுக்கு மேல் வைத்திருந்த கணக்குகளின் விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும், தொழிலதிபர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறிய வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மற்றும் அரசியல்வாதிகள், முந்தைய அரச குடும்பத்தினர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அவற்றில், இந்தியர்களின் பெயர், முகவரி, வங்கியின் பெயர், கணக்கு எண், கணக்கில் நிலுவையில் உள்ள தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இக்கணக்குகளில் மொத்தம் எவ்வளவு தொகை உள்ளது, எத்தனை பேரின் கணக்குகள் கிடைத்துள்ளன போன்ற விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். ரகசியம் கடைபிடிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறி இருப்பதே அதற்கு காரணம்.

    சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை அந்தந்த நபர்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குடன் வருமான வரி அதிகாரிகள் ஒப்பிட்டு பார்ப்பார்கள். வருமானத்தை மறைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

    வரிஏய்ப்பு, சட்டவிரோத பண பரிமாற்றம், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி போன்ற குற்றங்களை கண்டுபிடிக்க இந்த தகவல்கள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபோல், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியாவுக்கு அடுத்தகட்ட தகவல்களை சுவிட்சர்லாந்து அளிக்கும்.

    இந்தியா மட்டுமின்றி மொத்தம் 101 நாடுகளுடன் சுவிஸ் வங்கிக்கணக்கு தகவல்களை சுவிட்சர்லாந்து பகிர்ந்து வருகிறது. இதுவரை சுமார் 34 லட்சம் கணக்குகளின் விவரங்களை அளித்துள்ளது.

    • அனில் அம்பானி, சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்குகளில் ரூ.420 கோடி வரி ஏய்ப்பு.
    • அனில் அம்பானியிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    புதுடெல்லி :

    பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி, சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்குகளில் ரூ.814 கோடி அளவுக்கு முதலீடு செய்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    அவர் வேண்டுமென்றே சுவிஸ் வங்கி முதலீடுகளை மறைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டி, அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக அனில் அம்பானியிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    • கடந்த ஆண்டு நிலவரப்படி ஒட்டுமொத்தமாக ரூ.30,500 கோடிக்கு மேல் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் உள்ளது.
    • 2020-ம் ஆண்டை ஒப்பிடுகையில் (ரூ.20,700 கோடி) சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அதிகம் ஆகும்.

    சூரிச் :

    சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு தொடர்பான விவரங்களை சுவிட்சர்லாந்து அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு நிலவரப்படி தங்கள் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் வைப்புத்தொகை குறித்து தற்போது தகவல் அளித்து உள்ளது.

    அதன்படி, கடந்த ஆண்டு நிலவரப்படி ஒட்டுமொத்தமாக ரூ.30,500 கோடிக்கு மேல் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் உள்ளது. இது முந்தைய 2020-ம் ஆண்டை ஒப்பிடுகையில் (ரூ.20,700 கோடி) சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அதிகம் ஆகும். அந்தவகையில் ஒரு ஆண்டில் மட்டுமே 50 சதவீத அளவுக்கு இந்தியர்களின் தொகை அதிகரித்து இருக்கிறது.

    மேலும் இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் ஆகும். இதைத்தவிர சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் சேமிப்பு அல்லது டெபாசிட் கணக்குகளில் வைத்திருக்கும் பணமும் 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுமார் ரூ.4,800 கோடியாக உயர்ந்துள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



    மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் சுவிச்சர்லாந்து வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் பணம் 80 சதவிகிதம் குறைந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். #MonsoonSession #PiyushGoyal #SwissBank
    புதுடெல்லி:

    இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சுவிச்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் அதிகளவில் பணம் பதுக்கல் செய்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் புயலாக வீசிய நிலையில், மோடி பல வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தார்.

    பிரதமரானதும் கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையாக தனி குழு அமைத்தார். ஆனால், அதன் பின்னர், அந்த வேலையில் எந்த முன்னேற்றமும் நடந்ததாக தெரியவில்லை. இந்நிலையில், சுவிசர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை கடந்த மாதம் வெளியிட்டது. 

    கடந்த 2016-ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். அதாவது, 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,000 கோடிகளுக்கும் மேல் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ளனர்.

    கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு கூறி வரும் நிலையில், இந்த தரவுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலர் அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

    இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் இன்று பதிலளித்த மத்திய நிதி மந்திரி பியூஷ் கோயல், “2014ம் ஆண்டில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததும், 2014 மற்றும் 2017க்கு இடையில் சுவிஸ் தேசிய வங்கியில் வைப்புத் தொகை 80% ஆக குறைந்துள்ளது” என கூறினார்.

    மேலும், சர்வதேச செட்டில்மெண்ட் வங்கி வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், 2016-ம் ஆண்டை விட கடந்த ஆண்டில் இந்தியர்கள் சுவிச்சர்லாந்தில் இந்தியர்கள் வைத்துள்ள சொத்துகள் 34.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் வெளியான அறிக்கை தவறாக தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். 
    ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததை வைத்து கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மோடி, கிண்டல் செய்து பதிவிட்ட ட்வீட்களை தற்போது காங்கிரஸ் கட்சியினர் தேடி எடுத்து, கேள்விகளை எழுப்பி வருகின்றனர். #RupeeAllTimeLow #Congress #Modi
    புதுடெல்லி:

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாயை தொட்டு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப்போர், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வு என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.

    ரூபாய் மதிப்பு வீழ்ச்சியுடன் சேர்ந்து சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள பணத்தின் மதிப்பு 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால், வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தது போல, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஐ.டி விங் உறுப்பினர்கள் சமூக வலைதளத்தில் பாஜகவை தாளித்து வருகின்றனர்.

    குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66 ரூபாயை தொட்டது. அப்போது, குஜராத் முதல்வராகவும், பிரதமர் போட்டியில் இருந்த மோடி, மன்மோகன் சிங் வயதுக்கு ஏற்றவாறு ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது என ட்வீட் செய்திருந்தார். மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூபாயின் மதிப்பு 40 ரூபாய்க்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.

    இது மட்டுமல்லாது, கருப்புப்பணம், பெட்ரோல் விலை உயர்வு, பயங்கரவாதம் ஆகியவை குறித்து அப்போதைய காங்கிரஸ் அரசையும், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் மோடி கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்திருந்தார். தற்போது, மோடி பிரதமராகி 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், மேற்கண்ட பிரச்சனைகள் அனைத்தும் விஸ்வரூபம் எடுத்துள்ளதே தவிர துளியும் குறையவில்லை. 



    அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், எனக்கான முறை இது என காங்கிரஸ் கட்சி தற்போது மேற்கண்ட பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளது. ‘ரூபாயின் மதிப்பு 40-க்கு வரும் என கூறினீர்களே? இப்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 69 ரூபாயாக உள்ளது.

    கருப்புப்பணத்தை மீட்டு 15 லட்சம் கொடுப்பேன் என்றீர்களே? இப்போது, 50 சதவிகித பணம் சுவிஸ் வங்கியில் அதிகரித்துள்ளது.’ என பெட்ரோல் விலை உயர்வு, பயங்கரவாதம், பணமதிப்பிழப்பு ஆகிய பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து காங்கிரஸ் அதிரடி கேள்விகளை எழுப்பி வருகிறது.

    மேலும், மோடியின் பழைய ட்வீட்களை தேடி எடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த கேள்விகளை எழுப்பும் போது, பாஜக கையை பிசைந்து கொண்டு நிற்கிறது. சர்வதேச அளவில் எல்லா ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. அதனால், இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது என பாஜகவினர் சமாளித்து வருகின்றனர்.

    எங்களுக்கு வந்தால் ரத்தம், உங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? போன்ற கேள்விகளையும் காங்கிரசார் எழுப்புகின்றனர். மேற்கண்ட விவகாரங்களால் சமூக வலைதளம் கருத்து மோதல் களமாக மாறியுள்ளது. 
    சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் முன்பை விட அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், 2019 இறுதிக்குள் பணம் பதுக்கியவர்கள் பட்டியலை பெற்றுவிடுவோம் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். #SwissBank
    புதுடெல்லி:

    இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சுவிச்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் அதிகளவில் பணம் பதுக்கல் செய்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் புயலாக வீசிய நிலையில், மோடி பல வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தார்.

    பிரதமரானதும் கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையாக தனி குழு அமைத்தார். ஆனால், அதன் பின்னர், அந்த வேலையில் எந்த முன்னேற்றமும் நடந்ததாக தெரியவில்லை. இந்நிலையில், சுவிசர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை வெளியிட்டது. 

    கடந்த 2016-ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். அதாவது, 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,000 கோடிகளுக்கும் மேல் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ளனர்.



    கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு கூறி வரும் நிலையில், இந்த தரவுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலர் அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

    இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு இன்று பதிலளித்த மத்திய நிதி மந்திரி பியூஷ் கோயல், “2019 நிதியாண்டு இறுதிக்குள் சுவிச்சர்லாந்து நாட்டுக்கு முறைகேடாக பணம் அனுப்பியவர்கள், வங்கியில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலை பெற்றுவிடுவோம்” என கூறினார்.

    மேலும், இந்தியா - சுவிச்சர்லாந்து அரசுகள் இடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, 2018 ஜனவரி 1-ம் தேதி முதல் நிதியாண்டின் இறுதி வரை எல்லா தகவல்களும் நாள் பெறுவதற்கு தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் கோயல் தெரிவித்துள்ளார். 
    சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள தொகை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    ஜுரிச்:

    இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சுவிச்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்துள்ளதாக கூறப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் புயலாக வீசிய நிலையில், மோடி பல வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தார்.

    பிரதமரானதும் கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையாக தனி குழு அமைத்தார். ஆனால், அதன் பின்னர், அந்த வேலையில் எந்த முன்னேற்றமும் நடந்ததாக தெரியவில்லை. இந்நிலையில், சுவிச்சர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை வெளியிட்டது. 

    கடந்த 2016-ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். அதாவது, 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,000 கோடிகளுக்கும் மேல் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ளனர்.

    ஆண்டு வாரியான தரவுகளின் படி 2017-ல் மொத்தமாக வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பணம் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது 2017-ம் ஆண்டில் மட்டும் 1.46 ட்ரில்லியன் இந்திய மதிப்பில் சுமார் 100 லட்சம் கோடி டெபாசிட் ஆகியுள்ளது.

    கடந்த 2016-ல் அதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியர்களின் டெபாசிட் 45 சதவிகிதம் சரிவு கண்டது. ஆனால், இந்த ஆண்டு நேர்மாறாக டெபாசிட் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.



    கடந்த 2017-ம் ஆண்டின் தரவுகளின் படி நேரடியாக இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் வைத்திருக்கும் தொகை சுமார் ரூ.6,891 கோடியாகும். 2006-ம் ஆண்டு இறுதியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த தொகை மட்டும் ரூ.23 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இது 10-ல் ஒரு பங்கு குறைந்தது. 

    இந்தச் சாதனை அளவுக்குப் பிறகு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் அதிகரித்திருப்பது இது மூன்றாவது முறையாகும். 2011-ல் 12 சதவிகிதம், 2013-ல் 43 சதவிகிதம் தற்போது 2017-ல் 50.2 சதவிகிதம் அதிகரித்தது. அதாவது, 2004-ல் 56 சதவிகித அதிகரிப்புக்குப் பிறகு தற்போது 2017-ல் 50 சதவிகிதத்துக்கும் சற்று கூடுதலாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கி இருப்பில் அதிகரித்துள்ளது.

    கருப்புப்பணத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு கூறி வரும் நிலையில், சுவிஸ் வங்கியின் இந்த தரவுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
    ×