search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் நிர்வாகம்"

    • தேரோட்டம் 2-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது.
    • திருமண மண்டபங்களில் கட்டாயமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

    அவினாசி :

    அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகரம் தொடும் நிகழ்ச்சியான தேரோட்டம் 2-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது. தேர்த்திருவிழாவின் போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். எனவே அது தொடர்பான ஆலோசனை கூட்டம் அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அவினாசியை சேர்ந்த மண்டபம் உரிமையாளர்கள், நிர்வாகிகள், அன்னதான கமிட்டியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள் வருமாறு:- திருமண மண்டபங்களில் கட்டாயமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். அவசியம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொது மக்களுக்கு பாதுகாப்பான முறையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் மற்றும் தொற்றுநோய் பாதிக்கப்பட்ட பணியாளர்களை உணவு சமைக்க, பரிமாற அனுமதிக்க கூடாது. உணவு தயாரிக்க தரமான சமையல் பொருட்கள் மற்றும் குளோரினேசன் செய்யப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தேர் செல்லும் நான்கு ரத வீதிகளில் வாகனங்கள் மூலம் அன்னதானம் வழங்கக்கூடாது. உணவு தயாரிக்க பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் அனுமதி சீட்டு பெற்று குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். மீதமான உணவுப் பொருட்களை எக்காரணம் கொண்டும் வடிகால்களிலோ, சாலைகளிலோ, பொது இடங்களிலோ கொட்ட கூடாது. உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவு மாதிரிகள் சேகரிக்கப்படுவதால் தரமான பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் கொள்முதல் செய்து பயன்படுத்தி அன்னதானம் வழங்க வேண்டும். திருமண மண்டபங்களில் தேர்வரும் நேரங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்த கழிவறைகளை அன–மதிக்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    • இரு தரப்பினரையும், அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • ஒற்றுமையாக இருந்து கோவில் விழாவை நடத்த அறிவுறுத்தினார்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8வது வார்டு உறுப்பினராக உள்ள சுகன்யா ஜெகதீஸ்.(31) இவர் பல்லடம், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அன்னதானம் வழங்குவதற்கு ஏற்கனவே கோயில் கமிட்டியாரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்று இருந்ததாகவும், தற்போது, அவரையும் அவரது கணவரையும், கோவிலுக்குள் வரவேண்டாம் என்றும், அன்னதானத்தை வேறு நபர் வழங்குவதாகவும் கோவில் நிர்வாகத்தினர் கூறுவதாகவும். இது குறித்து கேட்டபோது மிரட்டல் விடுப்பதாகவும், இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில்,நேற்று, பல்லடம் பச்சாபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்; பச்சாபாளையம் பகுதியில் மின்மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் ஒன்றாக போராடி வருகிறோம். இந்தப் பிரச்சினையை திசை திருப்புவதற்காக கோவிலிக்குள் வரவேண்டாம் என்று சொன்னதாக கோவில் நிர்வாகிகள் மீது புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து நியாயம் கேட்பதற்காக இங்கே வந்தோம் என்றனர். பின்னர் இரு தரப்பினரையும், அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். கோவிலில் வழிபட யாரையும் தடை செய்யக்கூடாது.

    ஒற்றுமையாக இருந்து கோவில் விழாவை நடத்த அறிவுறுத்தினார். இருதரப்பும் ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

    • ராஜபாளையத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • கோவில் நிர்வாகத்தை பார்ப்பது தொடர்பாக தகராறு இந்த விரோதம் இருந்து வந்தது.

    விருதுநகர்

    ராஜபாளையம் சோலைச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 42). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை பார்ப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து குருசாமி தரப்பினரும், கண்ணன் தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதுபற்றி குருசாமி ராஜபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கண்ணன் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் குருசாமி உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருதரப்பினர் மோதிக்கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×