search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளையர்கள் கைது"

    • திருமங்கலம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்கள் விருதுநகரை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி லாலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மகன் அருண்பாண்டியன்(வயது 25). இவர் காரியாபட்டியில் உள்ள சாம்சங் கம்பெனியில் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார் .

    சம்பவத்தன்று அருண் பாண்டியன் காரியாபட்டியில் வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    கள்ளிக்குடி- டி.கல்லுப்பட்டி ரோட்டில் வடக்கம் பட்டி பிரிவு அருகே சென்ற போது 3 பேர் திடீரென வழிமறித்து மிரட்டினர். பின்னர் அருண் குமார் பையில் இருந்த ரூ.500 பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.

    கள்ளிக்குடி காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன்(38). லோடு மேனான இவர் வில்லூர் கிராமத்தில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிள் வந்த இவரை 3 பேர் மிரட்டி ரூ. ஆயிரம் பறித்து சென்றனர்.

    இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் 2 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பல் என தெரியவந்தது. இதைய டுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட விருதுநகர் ஆலம்பட்டியை சேர்ந்த கிஷோர், பிரவீன் குமார், மாரீஸ்வரன் ஆகியோ ரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பல்வேறு இடங்களில் நகை -பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங் களில் ஈடுபட்டிருக்கலாம் என ெதரிகிறது. இதன் அடிப்படை யில் விசாரணை நடந்து வருகிறது.

    • வழிப்பறியில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை விளாச்சேரியை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியம் (வயது 43). இவர் டாஸ்மாக் கடையில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். பாலசுப்பிரமணியன் விளாச்சேரி, கலைஞர் நகரில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டனர். இதற்கு அவர் தர மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த 2 பேரும், பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி விட்டு ரூ. 450 -ஐ பறித்து சென்றது.

    இது தொடர்பாக பாலசுப்பிரமணியன், திருநகர் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வளையப்பட்டி, மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீமைராஜா (வயது 43) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான திருநகர் பிரவீன் என்பவரை தேடி வருகின்றனர்.

    மதுரை கே.புதூர் முத்துராமலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன்(26) இவர் தபால் தந்தி நகரில் உள்ள ஒயின் ஷாப்பில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.

    ராஜசேகரன் சிப்ஸ் கடை முன்பாக நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.900த்தை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக ராஜசேகரன், தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட பீ.பி.குளம் காந்திஜி தெரு, கோகுல்விஜய்(29), பி.பி.குளம் இந்திரா நகர், சுதாகரன்(45) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களில் சுதாகரன் மீது போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    மதுரை மேலவாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சரவணன் மகன் நிதீஷ்குமார் (23). இவர் இரவு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 600-ஐ பறித்துச் சென்றார். இது தொடர்பாக திடீர்நகர் போலீசில் நிதிஷ்குமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 28), ரெயில்வே ஊழியர். இவர் மதுரை ரெயில் நிலைய கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் நின்றபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

    இதற்கு பாலமுருகன் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டி அவர் வைத்திருந்த ரூ. 2,500-ஐ பறித்துச் சென்று விட்டார். இது தொடர்பாக பாலமுருகன், திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட தக்காளி கணேசன் என்பவரை தேடி வருகின்றனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    • ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சங்கர் சிங், சுரேந்தர் சிங், லட்சுமணராம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ராயக்கோட்டை,

    ராஜஸ்தான் மாநிலம் தாளி மாவட்டம் திப்பிலிகலா கிராமத்தைச் சேர்ந்தவர் ருக்காராம். இவரது மகன் கலுராம் (வயது 32).

    இவர் ராயக்கோட்டையில் உள்ள தக்காளி மண்டி அருகே எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவரது கடை தரைதளத்தில் அமைந்துள்ளது. 2-வது தளத்தில் கலுராம் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கடந்த 21-ந்தேதி கலுராம் கடைக்கு சென்று விட்டார். இவரது மனைவி யசோதா, குழந்தைகள் மீனா, கிருத்திகா ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது கலுராம் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் யசோதா மற்றும் குழந்தைகளை கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சங்கர் சிங், சுரேந்தர் சிங், லட்சுமணராம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.4.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மோட்டார் சைக்கிளை பைனான்ஸ் நிறுவனத்தில் கொடுத்து விட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டுவது போல் நடித்து திருடி சென்றது தெரிய வந்துள்ளது.
    • போலீசார் கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பைனான்ஸ் ஒன்றில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் வாங்க சென்றனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளை வாங்குவது போல் நடித்து அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கொள்ளையர்கள் உருவம் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரவீன், நவீன் என்பதும் மற்றொருவர் 17 வயது சிறுவர் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். நாகர்கோவிலில் சுற்றித்திரிந்த பிரவீன், நவீன் மற்றும் 17 வயது சிறுவனை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் விசாரணை நடத்திய போது இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுசீந்திரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடி மார்த்தாண்டம் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அந்த மோட்டார் சைக்கிளை பைனான்ஸ் நிறுவனத்தில் கொடுத்து விட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டுவது போல் நடித்து திருடி சென்றது தெரிய வந்துள்ளது.

    போலீசார் கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பிரவீன், நவீன் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    கைது செய்யப்பட்ட பிரவீன், நவீன் மீது ஏற்கனவே 4 வழக்குகளும் 17 வயது சிறுவன் மீது 6 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • தூத்துக்குடியை சேர்ந்த ஸ்ரீராமன் போக்சோ வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது திருட்டு வழக்கில் சிறையில் இருந்த சேர்மதுரை, பாலகிருஷ்ணன் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
    • 3 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் சிறையை விட்டு வெளியே வந்த ஸ்ரீராமனை பொள்ளாச்சியில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.

    பொள்ளாச்சி:

    கோவை பொள்ளாச்சி மாவட்டம் அருகே சூளேஸ்வரன்பட்டியில் கடந்த 9-ந்தேதி சிக்கந்தர் என்பவர், வீட்டை பூட்டி விட்டு கோட்டூர் ரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு மனைவியுடன் சென்றார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 13 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததால் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம் திருவரங்கம்பட்டியை சேர்ந்த மணி என்ற பாலகிருஷ்ணன் (36), தென்காசி மாவட்டம் குறும்பலாப்பேரியை சேர்ந்த சேர்மதுரை (28) , நெல்லை பாளையம்செட்டி குளத்தை சேர்ந்த அந்தோணி என்ற அருவாபாண்டி (22), தென்காசி சாலடியூரை சேர்ந்த மணிகண்டன் (28), தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்ரீராமன் (38) என்பது தெரியவந்தது. பவானியில் பதுங்கி இருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதானவர்களிடம் இருந்து 58 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் கைதான நபர்களில் ஸ்ரீராமன் தவிர மற்ற 4 பேர் மீதும் தமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.

    தூத்துக்குடியை சேர்ந்த ஸ்ரீராமன் போக்சோ வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது திருட்டு வழக்கில் சிறையில் இருந்த சேர்மதுரை, பாலகிருஷ்ணன் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து 3 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் சிறையை விட்டு வெளியே வந்த ஸ்ரீராமனை பொள்ளாச்சியில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.

    பாலகிருஷ்ணணும், சேர்மதுரையும், ஸ்ரீராமனை தொடர்புகொண்டு தீபாவளிக்கு பொள்ளாச்சிக்கு வருவதாக தெரிவித்து உள்ளனர். இதையடுத்து பொள்ளாச்சிக்கு வந்ததும் 3 பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது பாலகிருஷ்ணணும், சேர்மதுரையும் கேரளாவுக்கு சென்று நகை, பணத்தை திருட செல்கிறோம் என்று கூறினர். அதற்கு போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ஸ்ரீராம் கேரளாவுக்கு ஏன் செல்ல வேண்டும். பொள்ளாச்சிலேயே கைவரிசை காட்டலாம் என்று கூறி உள்ளார்.

    அதன்பிறகு சூளேஸ்வரன்பட்டிக்கு சென்று நகைகளை திருடிவிட்டு, 3 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிக்கு சென்று உள்ளனர். இவர்களுக்கு அருவா பாண்டியும், மணிகண்டனும் உதவியாக இருந்துள்ளனர்.

    திருடிய நகைகளை விற்ற பணத்தில் 5 பேரும் விலை உயர்ந்த மதுபாட்டில்களை வாங்கி மது அருந்தி உள்ளனர். மேலும் அழகிகளுடன் உல்லாசமாக இருந்து பணத்தை செலவழித்து உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

    கைதான 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பொள்ளாச்சி கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த மினி வேனை காணவில்லை.
    • கோட்டக்குப்பம் பகுதியில் காணாமல் போன மினி வேன் நெய்வேலியில் உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள கோட்டக்குப்பம் பகுதி சின்னமு தலியா ர்சாவடியைச் சேர்ந்தவர் வினோத்(28). இவர் சொந்தமாக மினிவேன் வைத்துள்ளார். கடந்த 12ந் தேதி இரவு தனது வீட்டிற்கு வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுவிட்டார். காலையில் எழுந்து வெளியில் வந்து பார்க்கும் போது வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த மினி வேனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வினோத் அக்கம் பக்கம் உள்ளவ ர்களிடம் விசாரித்தார்.

    இதனைத் தொடர்ந்து கோட்டக்கு ப்பம் காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்தார். இதுகுறித்து கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நி லையில் கோட்டக்குப்பம் பகுதியில் காணாமல் போன மினி வேன் நெய்வேலியில் உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக நெய்வேலி காவல்துறையினரின் உதவியுடன் கோட்டக்குப்பம் போலீசார் மினிவேனை கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசா ரணையில் கடலூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்(24), குறிஞ்சி ப்பாடியைச் சேர்ந்த மருதுபா ண்டி(22) ஆகியோர் மினி வேனை திருடிச் சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது.இவ்விருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மினி வேனை மீட்டு சின்ன முதலியார்சாவடி வினோத்தி டம் ஒப்படைத்தனர். மேலும் மினி வேனை திருடிய இருவரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.

    • தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பு அதிகம் நடைபெற்றது.
    • தொடுகாடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஈக்காடு, காக்களூர், திருவள்ளூர் நகரம், மப்பேடு பன்னூர், புல்லரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பு அதிகம் நடைபெற்றது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில் மப்பேடு இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தொடுகாடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    அவர்கள், காக்களூர் பகுதியை சேர்ந்த ராஜ்கமல் (27) ,மேல கொண்டையூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் (36) என்பதும், இருவரும் மப்பேடு, பன்னூர், புல்லரம்பாக்கம், ஈக்காடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் மற்றும் தனியாக செல்பவர்களிடம் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×