search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூரில் வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது
    X

    திருவள்ளூரில் வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது

    • தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பு அதிகம் நடைபெற்றது.
    • தொடுகாடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஈக்காடு, காக்களூர், திருவள்ளூர் நகரம், மப்பேடு பன்னூர், புல்லரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பு அதிகம் நடைபெற்றது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில் மப்பேடு இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தொடுகாடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    அவர்கள், காக்களூர் பகுதியை சேர்ந்த ராஜ்கமல் (27) ,மேல கொண்டையூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் (36) என்பதும், இருவரும் மப்பேடு, பன்னூர், புல்லரம்பாக்கம், ஈக்காடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் மற்றும் தனியாக செல்பவர்களிடம் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×