search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 3 பேர் கைது
    X

    மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 3 பேர் கைது

    • மோட்டார் சைக்கிளை பைனான்ஸ் நிறுவனத்தில் கொடுத்து விட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டுவது போல் நடித்து திருடி சென்றது தெரிய வந்துள்ளது.
    • போலீசார் கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பைனான்ஸ் ஒன்றில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் வாங்க சென்றனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளை வாங்குவது போல் நடித்து அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கொள்ளையர்கள் உருவம் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரவீன், நவீன் என்பதும் மற்றொருவர் 17 வயது சிறுவர் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். நாகர்கோவிலில் சுற்றித்திரிந்த பிரவீன், நவீன் மற்றும் 17 வயது சிறுவனை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் விசாரணை நடத்திய போது இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுசீந்திரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடி மார்த்தாண்டம் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அந்த மோட்டார் சைக்கிளை பைனான்ஸ் நிறுவனத்தில் கொடுத்து விட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டுவது போல் நடித்து திருடி சென்றது தெரிய வந்துள்ளது.

    போலீசார் கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பிரவீன், நவீன் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    கைது செய்யப்பட்ட பிரவீன், நவீன் மீது ஏற்கனவே 4 வழக்குகளும் 17 வயது சிறுவன் மீது 6 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×