search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிக்க அனுமதி"

    • கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு அனுமதி
    • கொடிவேரி அணை க்கு குறைந்த அளவே பொதுமக்கள் வந்திருந்தினர்

    கோபி,

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த வாரம் நீர்ப்பிடிப்பு பகுதி களில் பரவலாக பலத்த மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையொட்டி கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்ப ணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இதனால் தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்கவும், ரசிப்பதற்கும் தடை் விதிக்க ப்பட்டது.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையில் இருந்து குைறந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி கொடி வேரி தடுப்பணையில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. தடுப்ப ணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் கடந்த 5 நாட்களுக்கு பிறகு கொடி வேரி தடுப்பணையில் இன்று முதல் பொதுமக்க ளுக்கு அனுமதி வழங்க ப்பட்டு உள்ளது.

    இதையொட்டி இன்று காலை கொடிவேரி அணை க்கு குறைந்த அளவே பொதுமக்கள் வந்திருந்தினர். தொடர்ந்து அவர்கள் அணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    • தீபாவாளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாள் விடுமுறை விடப்பட்டது.
    • தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மாத்தூர் தொட்டில் பாலத்தை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

    மறு கால் திறந்து விட்ட தால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரண மாக அருவியில் தண்ணீர் அதிக அளவு வந்ததால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தீபாவாளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாள் விடுமுறை விடப்ப ட்டதால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க திரண்டு வந்தனர். இதனால் 7 நாட்களுக்கு பிறகு தடை விலக்கப்பட்டு இருந்தது.

    இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்தனர். அருவியில் குளித்து விட்டு குழந்தைகளுடன் சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.

    சிறுவர்கள் நீச்சல் குளத்தில் குளித்து வந்தனர். அதன்பிறகு அருவியின் மேற்பகுதியில் படகு சவாரியும் செய்து மகிழ்ந்தனர். அதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மாத்தூர் தொட்டில் பாலத்தை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    • கடந்த 28 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் வழி முறைகளை கடை பிடித்து பாதுகாப்புடன் தடுப்பணை யில் குளிக்க வேண்டும்

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப் பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்ப த்துடன் வருவார்கள். அவர்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.

    இந்த நிலையில் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து ஆற்றில் அதிகமாக தண்ணீர் திறந்து விட ப்பட்டது. இதனால் கொடி வேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. மேலும் பொது மக்கள் குளிக்கும் இடங்க ளிலும் தண்ணீர் அதிகளவு சென்றது.

    இதையொட்டி கொடி வேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அணைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. ஆற்றிலும் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கொடி வேரி தடுப்பணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    இதையொட்டி கடந்த 28 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறும் போது, கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் குறைந்து உள்ளதால் இன்று முதல் பொது மக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    எனவே சுற்றுலா பயணிகள் வழி முறைகளை கடை பிடித்து பாதுகாப்புடன் தடுப்பணை யில் குளிக்க வேண்டும் என்றனர்.

    இதையொட்டி இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் வந்து கொடிவேரி தடுப்பணைக்கு வந்து பார்த்து ரசித்தனர்.

    மேலும் பலர் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன்களை ருசித்து விட்டு சென்றனர்.

    ×