search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா தேர்தல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஐந்து வருடங்களாக கர்நாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர்.
    • சாதி மத பேதமின்றி அனைவரையும் ஒன்று போல நடத்தியதுதான் வெற்றிக்கு காரணம்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். அவர்களைத் தொடர்ந்து மந்திரிகளாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

    பதவியேற்பு விழாவில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

    எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து தலைவர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக கர்நாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர். அது இப்போது முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட்டு அன்பு வெற்றி பெற்றுள்ளது.

    காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாங்கள் 5 உத்தரவாதங்களை கொடுத்திருக்கிறோம். பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம். சொல்வதைச் செய்கிறோம். நாங்கள் அறிவித்த 5 உத்தரவாதங்கள் மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தப்போகிறது. சாதி மத பேதமின்றி அனைவரையும் ஒன்று போல நடத்தியதுதான் வெற்றிக்கு காரணம்.

    ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். கிரக லட்சுமி திட்டத்தின்கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும். இந்த உத்தரவாதம் உள்ளிட்ட 5 உத்தரவாதங்கள் குறித்த அறிவிப்பு, இன்று நடைபெறும் கர்நாடக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வெளியாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று இரவு முடிவு எட்டப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது. கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்துப் பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. நேற்று அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். முதல்வர் பதவியை முதல் 2 ஆண்டுகள் ஒருவரும், மீதமுள்ள 3 ஆண்டுகளை மற்றொருவரும் ஏற்கும் வகையில் செயல்படலாம் என்று கூறினார். இதை இருவரும் ஏற்க மறுத்து விட்டனர். சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் விட்டுக்கொடுக்க மறுத்ததால் புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடித்து வந்தது.

    தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று இரவு முடிவு எட்டப்பட்டது. கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் புதிய எம்.எல்.ஏக்களுக்கான பதவியேற்பு விழா பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறும் என நேற்று இரவு காங்கிரஸ் மேலிடம் தெரிவித்தது.

    இன்று காலையில் அடுத்தகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. சித்தராமையா அடுத்த முதல்வர் என்றும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வர் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. டி.கே.சிவக்குமார் மாநில தலைவராகவும் நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 5 நாட்களாக நிலவி வந்த மூட்டுக்கட்டை நீங்கியது.

    அடுத்து சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் பதவியை பெற சில மூத்த தலைவர்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர். அமைச்சர் பதவியை பெறுவதற்கு எம்எல்ஏக்களிடையே கடும் போட்டி இருப்பதால் குழப்பம் நிலவுகிறது. 

    • முதல்வரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.
    • பாஜகவின் போலிச் செய்தி தொழிற்சாலைக்கு ஊடகங்களின் ஒரு பகுதி பலியாகி விட்டது.

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வரை தேர்வு செய்யும் பணியில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இது தொடர்பாக பல்வேறு யூகமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

    முதல்வரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர். இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் (கர்நாடகா பொறுப்பாளர்) ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-

    பாஜகவின் போலிச் செய்தி தொழிற்சாலைக்கு ஊடகங்களின் ஒரு பகுதி பலியாகி விட்டது. பாஜக பல மாநிலங்களில் முதல்வர்களை தேர்வு செய்வதற்காக 7 முதல் 10 நாட்கள் எடுத்துக் கொண்டபோது, பிரதமரிடம் இதேபோல் கேள்வி எழுப்பினார்களா? ஆனால் அதே நபர்கள், ஒரு குறிப்பிட்ட ஊடகங்கள், உண்மையான ஜனநாயக மரபுகளின்படி செயல்படும் மல்லிகார்ஜுன் கார்கேவின் செயல்முறைக்கு ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளன.

    கர்நாடக சகோதர சகோதரிகளால் நிராகரிக்கப்பட்ட பாஜகவின் விரக்தி எங்களுக்கு புரிகிறது. முதல்வர் தேர்வு விவகாரம் தொடர்பாக இங்கிருந்து காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அறிக்கை வெளியிட வேண்டாம். யாராவது கருத்து தெரிவித்தால் ஒழுக்கமின்மையாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காங்கிரஸ் பெரும்பான்மையை கடந்து 119 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
    • பாஜக 75 தொகுதிகளிலும், மஜத 25 தொகுதிகளிலும், மற்றவை 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது.

    ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

    அதன்படி, காங்கிரஸ் பெரும்பான்மையை கடந்து 119 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து பாஜக 75 தொகுதிகளிலும், மஜத 25 தொகுதிகளிலும், மற்றவை 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

    இதனால், கர்நாடகவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் சூழலில் உள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    • மோதலில் ஒரு போலீஸ்காரர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
    • தடை உத்தரவு மே 14ம் தேதி மாலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

    மங்களூரு:

    கர்நாடகாவில் நேற்று ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. நாளை மறுதினம் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு மங்களூருவின் மூடுஷெட்டே என்ற பகுதியில் நேற்று இரவு காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கற்களை வீசி தாக்கினர். இதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 4 பேர் காயமடைந்தனர். மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    இந்த மோதலை தொடர்ந்து, நகரில் பதற்றம் நீடிப்பதால் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க 5 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு மே 14ம் தேதி மாலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூட்பித்ரி காங்கிரஸ் வேட்பாளர் மிதுன் ராயின் வாகனம் சென்றபோது, மூடுஷெட்டே பகுதியில் பாஜகவினர் திரண்டு நின்று, பிரதமர் மோடிக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பி உள்ளனர். அவர்களுக்கு போட்டியாக காங்கிரஸ் தொண்டர்களும் முழக்கங்கள் எழுப்பி உள்ளனர். அதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 114 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
    • ஜீ மேட்ரைஸ் மற்றும் பி மார்க் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ் முந்தியது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறற்து. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி உள்ளது. மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது வரும் 13ம் தேதி தெரிந்துவிடும். மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

    இதற்கிடையே வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கின. இதில் ஜன் கி பாத், மேட்ரைஸ் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக உள்ளது.

    பாஜக 94 முதல் 117 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என ஜன் கி பாத் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 91 முதல் 106 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 14 முதல் 24 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    இதேபோல் மேட்ரைஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 114 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. காங்கிரஸ்-86, மதச்சார்பற்ற ஜனதா தளம்-21 இடங்கள் பெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் பாஜக 85 முதல் 100 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 94 முதல் 108 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 32 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

    ஜீ மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ் முந்தியது. காங்கிரஸ் 108 தொகுதிகள், பாஜக 86 தொகுதிகள், மதச்சார்பற்ற ஜனதா தளம் 28 தொகுதிகளை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

    பி மார்க் நடத்திய கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் முந்தியது. காங்கிரஸ் கட்சிக்கு 94 முதல் 108 இடங்கள் வரை கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது. பாஜகவுக்கு 85 முதல் 100 இடங்கள், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 24 முதல் 32 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    ஒட்டுமொத்தமாக இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை பார்க்கும்போது எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்றே தெரிகிறது. ஆட்சியமைப்பதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னரே வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதாக நினைத்து கிராம மக்கள் ஆத்திரம்.
    • வாக்குப்பதிவு செய்யப்படாத கூடுதல் இயந்திரங்களை உடைத்து, வாகனங்கள் மீது தாக்குதல்.

    கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் மசபினாலா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறி வரிசையில் காத்திருந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதற்கான முறையான காரணத்தை தெரிவிக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தன.

    வாக்குப்பதிவு செய்யப்படாத கூடுதல் இயந்திரங்களை உடைத்து, தேர்தல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆனால், வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னரே வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதாக நினைத்து கிராம மக்கள் ஆத்திரமடைந்தது பின்னர் தெரியவந்தது.

    கூடுதல் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற நிலையில் பொதுமக்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், விஜயபுரா மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த விவகாரத்தில் 23 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதற்கான முறையான காரணத்தை தெரிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு.
    • தேர்தல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது கிராம மக்கள் தாக்குதல்.

    கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் மசபினாலா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறி வரிசையில் காத்திருந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதற்கான முறையான காரணத்தை தெரிவிக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தன.

    வாக்குப்பதிவு செய்யப்படாத கூடுதல் இயந்திரங்களை உடைத்து, தேர்தல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆனால், வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னரே வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதாக நினைத்து கிராம மக்கள் ஆத்திரமடைந்தது பின்னர் தெரியவந்தது.

    இந்நிலையில், கூடுதல் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற நிலையில் பொதுமக்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

    • இது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறும் செயல் என்று காங்கிரஸ் கூறியது.
    • காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. அதன்பின்னர் வாக்குப்பதிவு முடியும் வரை யாரும் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என தேர்தல் நடத்தை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடக மக்களுக்கு கடிதம் எழுதினார். அதில், கர்நாடகாவை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாற்றும் பணிக்காக உங்கள் ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கிறேன் என கேட்டுக்கொண்டார்.

    தேர்தலுக்கு முந்தைய நாளில் பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோள், தேர்தல் விதிமீறல் என பலரும் கருத்து தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியும் கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறும் செயல் என்று கூறியது. அத்துடன், இந்த விஷயத்தை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் (கர்நாடகா பொறுப்பு) ரன்தீப் சுர்ஜேவாலா தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததற்காக, அவர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். சட்டங்கள் பிரதமருக்கு பொருந்துமா இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • கோவா அரசின் இந்த முடிவிற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    • அண்டை மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது விடுமுறை அளிப்பது வழக்கம்.

    அண்டை மாநிலமான கர்நாடகாவில் நாளை சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், கோவாவில் உள்ள கர்நாடகாவை சேர்ந்த வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக, மே 10ம் தேதி (நாளை) அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை கோவா அரசு அறிவித்துள்ளது.

    இது தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களுக்கும் உள்ளடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோவா அரசின் இந்த முடிவிற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதுகுறித்து கோவா மாநில தொழில்துறை சங்கத் தலைவர் தாமோதர் கோச்கர், இது மாநில அரசின் அபத்தமான முடிவு என்று கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில், "கோவாவில் உள்ள தொழில்துறையினர் இது முற்றிலும் அபத்தமான மற்றும் முட்டாள்தனமான முடிவாக கருதுகிறார்கள். மாநில அரசின் இத்தகைய ஒருதலைப்பட்ச முடிவுகளுக்கு எதிராக சட்டப்பூர்வ தீர்வுகளை பரிசீலித்து வருகிறோம்" என்றார்.

    இந்நிலையில், விடுப்பு குறித்து கோவா முதல்வர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அண்டை மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது விடுமுறை அளிப்பது வழக்கம். கடந்த ஆண்டு கோவாவில் தேர்தல் நடந்த அன்று கர்நாடகாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டது" என்றார்.

    • உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.
    • மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான அழைப்பு பிரிவினைவாத அழைப்புக்கு சமம் என பாஜக கூறி உள்ளது.

    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசியதை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. 'சோனியா காந்தி, 6.5 கோடி கன்னடர்களுக்கும் உறுதியான செய்தியை தெரிவித்திருக்கிறார். கர்நாடகாவின் நற்பெயர், இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு களங்கம் ஏற்படுத்த ஒருவரையும் காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது" என்று அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதில் கர்நாடகாவின் இறையாண்மை என்ற வார்த்தைதான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது. கர்நாடகாவின் இறையாண்மை என்று பேசியதன்மூலம் கர்நாடகாவை இந்தியாவிடம் இருந்து பிரிக்கவேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மேலும், காங்கிரஸ் மீதும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.

    'இந்திய யூனியனில் கர்நாடகா ஒரு முக்கியமான உறுப்பு மாநிலமாகும். இந்திய யூனியனின் எந்த ஓர் உறுப்பு மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான எந்த ஒரு அழைப்பும் பிரிவினைவாத அழைப்புக்கு சமம்' என பாஜக தனது கடிதத்தில் கூறி உள்ளது.

    இந்த புகார் மனுவை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு தொடர்பாக விளக்கம் அளித்து, திருத்த நடவடிக்கைகளை எடுக்கும்படி கூறி உள்ளது. 

    • பிரதமர் மோடி தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நேற்று நிறைவு செய்தார்.
    • தேர்தலுக்காக கர்நாடகத்தில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 2,430 பேரும், பெண் வேட்பாளர்கள் 180 பேரும், 3-ம் பாலின வேட்பாளர் ஒருவரும் போட்டியிடுகிறார்கள்.

    இதில் பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரசில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி கட்சி சார்பில் 217 வேட்பாளர்களும் அடங்குவர்.

    சட்டசபை தேர்தலுக்காக கர்நாடகத்தில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். இவர்களில் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேர் பொது வாக்காளர்கள் ஆவர். 47 ஆயிரத்து 488 பேர் அரசு ஊழியர்கள் ஆவர். வருகிற 10-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

    சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. கடைசி நாளான இன்று தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்தனர்.

    கர்நாடக தேர்தல் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகளின் தலைவர்கள் நாடு முழுவதிலும் இருந்து கர்நாடகாவில் குவிந்துள்ளனர். பா.ஜ.க.வை பொருத்தவரை பிரதமர் மோடி  7 நாட்கள் பிரசாரம் செய்துள்ளார். தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை பிரதமர் மோடி நேற்று நிறைவு செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்க ளின் முதல்-மந்திரிகள், மத்திய, மாநில அமைச்சர் கள் என 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அடுத்தடுத்த கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருப்பதால் அக்கட்சியினர் உற்சாகமாக பிரசாரம் செய்து வருகின்றனர். கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிர தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் தலைமையில் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா, முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி, கட்சியின் மாநிலத் தலைவர் சி.எம். இப்ராகிம் ஆகியோர் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டனர். மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே இன்று பா.ஜ.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார். இருப்பார் மற்றும் கபு மற்றும் உடுப்பி நகரத்தில் அவர் வாக்குகள் சேகரித்தார். முன்னதாக அவர் ஸ்ரீ மஞ்சுநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது சொந்த ஊரான ஹாவேரியிலும், கனகபுரா தொகுதியிலும் பிரசாரம் செய்தார். பா.ஜனதா வேட்பாளர்க ளுக்கு ஆதரவாக நடிகர் சுதீப், நடிகைகள் ஸ்ருதி, தாரா ஆகியோரும் திறந்த வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்தார்கள்.

    பெங்களூரு சிவாஜிநகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் ஒரே மேடையில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்கள். அதற்கு முன்பாக பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல், பெங்களூரு புலிகேசிநகர் தொகுதிகளில் ராகுல்காந்தி பிரசாரம் செய்திருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தனது சொந்த மாவட்டமான கலபுரகியில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறற்றது. அதன்பின்பு தொகுதியில் ஓட்டுரிமை இருக்கும் தலைவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல், நட்சத்திர பேச்சாளர்கள் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. நாளை மறுநாள் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. 13ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

    ×