search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்த சஷ்டி விரதம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது.
    • தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும்.

    அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து தேவர்கள் நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுபடுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்று கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் கூறியுள்ளார்.

    கந்தசஷ்டி விரத நாட்களில், ஆணவம், வன்மம், மாயை எனும் 3 அசுர சக்திகளையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும்.

    உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப் படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழி அமைப்பதே இந்த விரதத்தின் பெறும் பேறாக அமைகிறது.

    கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம்கிட்டும் என்பது ஐதீகம்!.

    "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பதற்கேற்ப; கந்தசஷ்டியில் விரதமிருந்தால் "அகப் பையாகிய "கருப்பையில்" கரு உண்டாகும் என்பது மறை பொருள்களாகும்.

    வசிட்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையை உடையது. அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர்.

    கந்த சஷ்டி விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கடை பிடிக்கப்பட வேண்டும் இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் அதிகாலை எழுந்து சந்தியா வந்தனம் முதலிய காலைக் கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாபட்சர மந்திரத்தை எழுத வேண்டும். "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி நீரில் மூழ்கி எழ வேண்டும்.

    கிணறு, குளம் போன்ற நீர்நிலை களில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறிய வாறு தூய நீராடி, தோய்த்து உலர்ந்த ஆடை அணிந்து அமைதி யான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெரு மானை நினைத்து தியானம் செய்ய வேண்டும்.

    தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் மட்டும் அருந்தி இருப்பது மிகவும் சிறப்பான விரதமாகும்.

    பட்டினி கிடக்கும் வயிற்றி னுள் வெளிப்படும் அதிக சக்திமிக்க வெப்பம், வாய்வு, பித்தம், இவற்றைத் தணித்து உடல்சம நிலையைப்பேணு வதற்கும், பசி, தாகம், இவற்றை ஓரளவு தணிக்கவும் இது உதவுகிறது.

    இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக் கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கலாம்.

    விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.

    ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்பப்பூர்வமாக அர்ச்சனை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை கொள்ளவேண்டும்.

    உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும். ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை. அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒரு முறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம்.

    உயிர், உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நார்த்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.

    விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேலை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும். ஏழாம் நாள் காலை விதிப்படிப்பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    கந்தசஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை... என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்.

    கந்தசஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். நன்மக்கட்பேறும் கிடைக்கும் என்பது உண்மை.

    சஷ்டி ஆறு நாட்களும் கந்தபுராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும். பாம்பன் ஸ்ரீமத்குமர குருபரதாச சுவாமிகள் கந்தபுராணத்தின் சுருக்கமாக முதல்வன் புராண முடிப்பு என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனை பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும். மேலும் குமரகுருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்தபுராணத்தின் சாரமாகும்.

    கந்த சஷ்டி கவசத்தில் சுவாமிகள் கூறியது போல், நம் நினைவெல்லாம் முருகனாக இருந்தால் அஷ்ட லட்சுமிகள் நம் வீட்டில் வாசம் செய்வார்கள். சஷ்டி விரதம் இருப்பதினால் நவகிரகங்களும் நமக்கு நன்மையே செய்யும்.

    சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் எளிய உணவை உட்கொண்டு, அதிக வேலை செய்யாமல், மவுனத்துடன் இருப்பதால் உடலில் நச்சுப் பொருட்கள் தானாகவே வெளியேறி நம் உடலும், குடலும் சீராகிறது.

    உடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய் களைக்கூட உண்ணா நோன்பின் மூலம் நீக்கி விட முடியும். உண்ணா நோன்பின் போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படு கின்றன. உள்ளுறுப் புக்களை வீணாகச் சுற்றியிருந்த பகுதிகள் கரைக்கப்படுகின்றன.

    உண்ணா நோன்பு மிகவும் எளியது. ஆனால் சிறப்பான ஊட்டச் செய லாக அமைந்து உடலைக் காக்கிறது. உண்ணா நோன்பின் போது, உடல் ஓய்வடை கிறது. எல்லா உறுப்புக் களுக்கும், அமைதி கிட்டுகிறது. நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன. வெப்பநிலை மாறி இயல்பு தன்மை ஏற்படுகிறது.

    உண்ணா நோன்பின் போது ரத்தமும் நிண நீரும் தூய்மையாக்கப்படுகின்றன. காம உணர்வு தணிகிறது. உண்ணா நோன்பின் போது, தூய நினைவுகள் வளர்கின்றன.விரதத்தால் நம் உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது. மனதில் இருந்து உருவாகும், காம, குரோத அறுவகை கெட்ட குணங்களையும், ஆறுமுகன் எப்படி சூரபத்மனை அழித்தானோ அவ்விதமே நமது குணங்களையும் அழித்து விடுகிறான். கெட்டவை நீங்கி, நல்லவை நம் மனதில் குடியேறுகிறது.

    உள்ளமும் உடலும் புத்துணர்ச்சி பெறுகிறது. முருகனது கருணை எங்கும், எப்பொழுதும் பொங்கி வழிகிறது. நமக்கு முருகனிடம் எவ்வளவு ஈடுபாடு உள்ளது என்பதை காட்டும் உறைகல்தான் இந்த விரதங்கள். நம்மால் இயன்றளவு விரதம் இருக்கலாம். வீட்டிலேயே விரதமிருந்து, ஆறுமுகனை அர்ச்சிக்கலாம். வீட்டில் வசதியில்லாதவர்கள் கோவிலுக்கு சென்று வழிபடலாம். முடிந்தவர்கள் திருச்செந்தூர் போய் வரலாம்.

    எத்தனை மந்திரங்கள், பாடல்கள், தோத்திரங்கள் இருந்தாலும் சஷ்டி விரத நாட்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் விரும்பி படிப்பது சஷ்டி கவசமே. இது எளிமையான தமிழ் மொழியில் இருப்பதால் சொல்வதற்கும் எளிமையாக உள்ளது. எனவே அதிக அளவில் பெண்கள் சஷ்டி கவசம் படிக்கிறார்கள். அதன் சிறப்புப் பற்றி நாளை காணலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி முடிந்ததும் சஷ்டி விரத காலம் ஆரம்பமாகும்.
    • முருகப்பெருமான் சூரனை வதைத்த நாளே கந்தசஷ்டி எனப்படுகிறது.

    தீபாவளி முடிந்ததும் சஷ்டி விரத காலம் ஆரம்பமாகும். இன்று (திங்கட்கிழமை) விரதம் தொடங்கி விட்டது. சஷ்டி விரதம் என்பது ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அமாவாசையில் தொடங்கி சஷ்டி எனப்படும் வளர்பிறை ஆறாவது நாள் நிறைவுறும். முருகப்பெருமான் சூரனை வதைத்த நாளே கந்தசஷ்டி எனப்படுகிறது. சஷ்டியில் விரதமிருந்து அகப்பையாகிய கருப்பையில் கருவைத் தாங்கியோர்

    ஏராளம். ஆறுமுகரை வழிபட்டால் வாழ்வில் எந்த குறையும் வராது. வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை' என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் சரவணன் தரும் சந்தான செல்வத்தை குறை ஏதும் வராமல் காத்திடும் சஷ்டி தேவி பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது.

    குமரேசன் தாள்பற்றி குழந்தைவரம் பெறலாம் என்றாலும், அன்னை சஷ்டிதேவியே பரிந்துரைத்து அந்த பாக்கியத்தை பெற்றுத்தருகிறாள் என்கின்றன புராணங்கள். குழந்தைகள் நலம்காக்கும் தாயாகத் திகழும் சஷ்டி தேவி யார்?

    தோன்றிய விதம்:

    சஷ்டி தேவி, முருகனது தேவியாகிய தெய்வானையின் அம்சமாகத் தோன்றியவள் என்றும், சஷ்டி தேவியே சண்முகனை மணக்க மனம்கொண்டு தேவசேனாவாக வடிவெடுத்தாள் எனவும் இருவிதமான கருத்துகள் உண்டு. அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் யுத்தம் நடந்த காலகட்டம். முருகப்பெருமான் தேவர்கள் படைத்தலைவனாக பொறுப்பேற்று வீரத்திருக்கோலம் பூண்டு களமாடினார்.

    அந்த நேரத்தில் மருமகனான முருகனின் வீரத்தையும் அழகையும் கண்டு மகிழ்ந்த மகா விஷ்ணு ஆனந்தக்கண்ணீர் சிந்த அது ஒரு பெண்ணுருக் கொண்டது. பெருமாளின் ஆனந்தக்கண்ணீரில் இருந்து தோன்றியதால் மக்களுக்கு ஆனந்தத்தையும், நலத்தையும் அருள வல்லவள் என்று மகாலட்சுமியால் ஆசிர்வதிக்கப்பட்டாள் அந்தப் பெண். அமாவாசை முடிந்த ஆறாம் நாள் தோன்றியதால் இவளுக்கு சஷ்டி என்றே பெயர் சூட்டப்பட்டது.

    வெள்ளையானையான ஐராவதம் அப்பெண் குழந்தையைக் கண்டு எடுத்துவந்து தேவேந்திரனிடம் அளிக்க, இந்திரனும், இந்திராணியும் சஷ்டி தேவியை தங்களது மகளாகப் பேணி வளர்த்தனர். மிகுந்த வீரம் உடைய சஷ்டி தேவி, தேவர்கள் படையில் இருந்து யுத்தம் செய்தாள். அசுர கணங்கள் தோல்வி அடைந்து ஓடின.

    வெற்றியைக் கொண்டாடும் விதமாக சரவணனுக்கு மாலைகள் சூட்டி, 'அரோகரா' என்று கோஷமிட்டு வாழ்த்தினார்கள் அனைவரும், தேவர்கள் யாவரும் தத்தமது பரிசுகளை வழங்கி வாழ்த்திய சமயத்தில் இந்திரன், தனது மகளான சஷ்டி. என்கிற தேவ சேனாவை குமரக் கடவுளுக்குத் திருமணம் செய்து தருவதாகக் கூறினார். முருகனுக்கு மிகவும் பிரியமானவள் சஷ்டி. போர்க்கோலத்தில் இருந்த சஷ்டியை மணப்பெண்ணாக அலங்கரித்தாள் மகாலட்சுமி தேவி, தேவர்சேனையில் இணைந்து போரிட்டதால், சஷ்டி தேவிக்கு `தேவசேனா' என்ற பெயரும் வந்தது என்றொரு புராணக்கதை சொல்கிறது.

    பொன்னாபரணங்கள், அழகான ரத்தினக் கிரீடம், இடுப்பிலே பல மணிகள் கொண்ட மேகலை, புயங்களிலே தோள் வளைகள், கைகளிலே வைர நவமணி வளையல்கள், கால்களில் அழகான வெள்ளிக் கொலுசுகள் என அணிந்து அழகே உருவாக நின்ற தேவசேனாவின் வளைக்கரத்தை தனது தெய்வீக திருக்கரத்தால் பற்றி திருமங்கல நாணிட்டு மாலைசூட்டி மணம் செய்து கொண்டார் மயில்வாகனன். இதை ஒட்டியே சூரசம்ஹார நிகழ்ச்சியின் நிறைவாக தெய்வானை திருக்கல்யாணம் நடத்தப்படும் வழக்கம் வந்தது.

    சஷ்டி தேவியின் சிறப்பு:

    மிகவும் பழமையான காலம் தொட்டே சஷ்டி தேவி வழிபாடு இருந்திருக்கிறது. இதனை பத்மபுராணம், யாக்ஞ் யவல்கிய ஸ்மிரிதி போன்ற நூல்கள் மூலமாக அறியலாம். பெண்களுக்கு குறிப்பாக கர்ப்பிணிகளுக்கும். அவர்களது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பவள் சஷ்டி தேவி. குழந்தைகள் கருவாக உருவாவது முதல், பதினாறு வயது வரும் வரை சஷ்டியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், திருஷ்டி, தோஷம், பயக்கோளாறு போன்றவற்றை நீக்குபவள் சஷ்டி தேவியே. அவளது சிறப்பை விளக்க தேவி பாகவதத்திலும், வாயு புராணத்திலும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

    பலப்பல யுகங்களுக்கு முன்னால் பிரியவிரதன் என்னும் ஓர் அரசன் இருந்தான். அவனது மனைவி மாலினி தேவி. இருவருக்கும் பலகாலமாகக் குழந்தைகள் இல்லை. பல முனிவர்களிடமும் குலகுருவிடமும் யோசனை கேட்டனர். அப்போது சுயம்புவமனு என்பவர் புத்திர காமேஷ்டி யாகத்தைப் பற்றிக் கூறினார். அப்படியே இருவரும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தனர். ஒவ்வொரு முறையும் மகாராணிக்கு குழந்தை பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தை இறந்தே தான் பிறக்கும் இப்படியே பன்னிருமுறை நிகழ்ந்தது. அப்போது அங்கே வந்த யாக்ஞ் யவல்கிய மகரிஷி சஷ்டி தேவியின் பெருமைகளை அரசனுக்கும் அரசிக்கும் எடுத்துரைத்தார்.

    `மன்னா! நீ வழக்கம் போல புத்திர காமேஷ்டி யாகம் செய்! அதோடு உன் குழந்தை பிறந்த ஆறாம் நாள் சஷ்டி தேவிக்கு பூஜை செய்வதாகவும், வருடா வருடம் சஷ்டி விரதம் இருப்பதாகவும் வேண்டிக்கொள். அப்படிச் செய்தால் உன் குறை நீங்கும்" என்று சொல்லி, பூஜை முறையையும் கற்றுக் கொடுத்தார். அதேபோல அவர்களும் வேண்டிக்கொள்ள, இம்முறை அழகான ஆண் குழந்தை உயிரோடு பிறந்தது. மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர் அரச குடும்பத்தினர்.

    அந்த சந்தோஷத்தில் சஷ்டி தேவிக்கு பூஜை செய்வதை மறந்து போய்விட்டனர். அதனால் குழந்தை பிறந்த ஆறாம் நாள் இறந்துவிட்டது. மன்னரும் அரசியும் கதறிக் கலங்கி கண்ணீர் வடித்தனர். 'பூஜை செய்ய மறந்தது எங்கள் குற்றம்தான்! ஆனால் ஏன் பச்சிளம் குழந்தையை தண்டிக்கிறாய்?" என்று அழுது கேட்டனர். அப்போது சஷ்டி தேவி அவர்கள் முன் தோன்றினாள்.

    `மன்னா! இந்த பூவுலகில் எந்த குழந்தை பிறந்தாலும் பிறந்த ஆறாம் நாள், தாயும் சேயும் இருக்கும் அறைக்குள்ளேயே எனக்கென்று சாதம் படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அந்தக் குழந்தைக்குப் பதினாறு வயதாகும் வரை எந்தக் கெடுதலும் வராமல் நான் பார்த்துக் கொள்வேன்" என்றாள்.

    அதன்படியே அரசனும் அரசியும் கொஞ்ச சாதத்தில் பால் கலந்து அதனை அன்னை சஷ்டிக்கு அர்ப்பணித் தனர். மகிழ்ந்த சஷ்டி தேவி, இறந்த குழந்தையை எடுத்து முத்த மிட அது உயிர் பிழைத்தது. அன்று முதல் இன்று வரை வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் குழந்தை பிறந்த ஆறாம் நாள் பால் சாதம் சஷ்டி தேவிக்குப் படைக் கப்படும் வழக்கம் தொடர்கிறது.

    சஷ்டி தேவியின் வடிவம்:

    யசூர் வேதம் மற்றும் யாக்ஞ்யவல்கிய ஸ்மிரிதி, தேவி கொலு விருக்கும் விதத்தை வர்ணிக்கிறது. அழகான பொன்னிற மேனியில் சிவப்பு நிற பட்டுப்புடவை இலங்க பொன்னாபரணங்கள் மின்னக் காட்சி யளிப்பாளாம் அன்னை. மடியில் எட்டுக் குழந்தைகளைத் தாங்கியபடி தோற்றம் தருவாள். இவளது வாகனம், கரும்பூனை. முருகனைப் போற்றி வழிபட்டால் சஷ்டி தேவிக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் முருகனை நினைத்து சஷ்டி விரதம் இருப்பவர் களுக்கு கேட்டவற்றை எல்லாம் அளிக்கிறாள்.

    வயல்களில் நல்ல விளைச்சல் பெற, பெண்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்க, கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவத்தில் நல்ல குழந்தை பெற, பிறந்த குழந்தையை கெட்ட சக்திகள் தீண்டாதிருக்க என்று சஷ்டி தேவியை வேண்டி வழிபடுகிறார்கள்.

    குழந்தை வரம் வேண்டி சஷ்டி விரதம் இருப்போர், குழந்தை பிறந்த பின் நினைவாக பிறந்த ஆறாம் நாள் தாயும் சேயும் இருக்கும் அறையிலேயே சஷ்டி தேவிக்கு அன்னம் படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கிடைத்தற்கரிய பாக்கியமான சந்தான பாக்கியம் நிலைத்து, அக்குழந்தை நோய் நொடியின்றி பலகாலம் வாழும்.

    வழிபாடு:

    கந்த சஷ்டி அன்றே சஷ்டி தேவியையும் பூஜித்து வணங்கலாம். அன்னைக்கு என்று உருவச்சிலைகள் எதுவும் இல்லை. ஆகையால் முருகன் படத்துக்கே பூஜைகள் செய்ய வேண்டும். பொதுவாக சிவப்பு வர்ணம் இந்த தேவிக்கு உரியது. சிவப்பு நிறப் பூக்களால் முருகனை அர்ச்சித்து விட்டு சஷ்டி தேவியை மனமுருகி வேண்டினால் போதும். தேவியின் அருள் கிட்டி விடும்.

    பூஜையின் போது சிவப்பு வண்ணப் புடவையும் சிவப்புக்கயிறும் வைப்பது வழக்கம். அந்தக் கயிற்றை குழந்தையின் கைகளில் கட்டினால் எந்தத் தீங்கும் வராமல் பாதுகாப்பாள் அன்னை சஷ்டி. புடவையை யாராவது ஏழை சுமங்கலிக்குத் தானமாகக் கொடுப்பது சிறந்தது. கண்டிப்பாக திருமணமான பெண்களுக்கு மட்டுமே அந்தப்புடவையை தானமாக அளிக்கவேண்டும்.

    கன்னிப் பெண்கள்அதனை உடுத்தக் கூடாது என்பது ஐதீகம். இந்த வருடம் நவம்பர் 18-ம் தேதி கந்த சஷ்டி வருகிறது. அன்று நாம் முருகனோடு சேர்த்து அவனது பிரியத்துக்குரிய தேவியான சஷ்டியையும் பூஜித்து வணங்கி, சந்தான சவுபாக்யங்களைப் பெற்று நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் உள்ள குழந்தைச் செல்வங்களுடன் ஆனந்த வாழ்வு வாழுங்கள்!

    திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப்பெருமான் முற்றுப்பெறச் செய்தார். இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    உண்மையில் முருகன் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை. சூரன் முருகனிடம் சரணாகதி அடைந்தான். அவன் வேண்டு கோளை ஏற்று அவனை இரு கூறாக்கி ஒன்றை சேவலாகவும், மற்றொன்றை மயிலாகவும் முருகன் மாற்றினார். அவைகளை கொடியாகவும், வாகனமாகவும் வைத்துக் கொண்டு அவனை முருகப்பெருமான் தன்னுடனேயே சேர்த்துக் கொண்டார். இப்படி பகைவனுக்கும் அருளியது கந்தன் கருணை எனப்படுகிறது.

    இப்படி சேவற்கொடியோன் ஆன மயில்வாகனனை வணங்கும் போது பகவானு டைய மயில், வேல், சேவல், திருச்செந்தூர் ஆலயம் மற்றும் கடல், கடலை ஒட்டிய பகுதி ஆகியவற்றையும் நாம் வணங்க வேண்டும். எனவே நாளை திருச்செந்தூர் தலத்தின் சிறப்புகளை காணலாம்.

    • ஆறுபடை வீடுகளிலும் முருகன் தலங்களிலும் இத்திருவிழா நடைபெறும்.
    • கந்தர் சஷ்டி விரதத்திற்குக் கணக்கற்ற பலன்கள் உண்டு.

    கந்தர்சஷ்டி விரதம் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலும் ஆறு நாட்களுக்கு

    ஸ்ரீ முருகப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும்.

    ஆறுபடை வீடுகளிலும் முருகன் தலங்களிலும் இத்திருவிழா நடைபெறும்.

    இந்த ஆறு நாட்களும் விரதம் இருப்பவர்கள் காலையில் நீராடி, உபவாசம் இருத்தல் வேண்டும்.

    கோவிலிலோ அல்லது இல்லத்திலோ முருகனை வழிபாடு செய்து பாராயணம் செய்யலாம்.

    இக்காலங்களில் திருப்புகழ், கந்தர்சஷ்டி கவசம், சண்முக கவசம், கந்தர் அனுபூமி ஆகியவற்றைப் பாராயணம் செய்தல் சிறப்பாகும்.

    ஆறுதினமும் உபவாசம் இருந்து ஆறாம் நாள் இரவு பால், பழம் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது.

    உடல்நிலை இடம் கொடுக்காதவர்கள் தினமும் ஒரு வேளை மதியமோ அல்லது இரவோ

    பலகாரமோ அல்லது பால், பழமோ சாப்பிட்டுக் கொள்ளலாம்.

    கந்தர் சஷ்டி விரதத்திற்குக் கணக்கற்ற பலன்கள் உண்டு.

    சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழியாகும்.

    சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது இதன் பொருளாகும்.

    கந்தர்சஷ்டி விரதத்தை முசுகுந்தச் சக்கரவர்த்தி அனுஷ்டித்து எல்லா நலன்களும் பெற்றுச் சிறப்புடையவர் ஆனார்.

    • காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.
    • பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.

    சஷ்டி விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?

    கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின்சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.

    பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர்.

    ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும்.

    கந்தசஷ்டிவிரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும்.

    காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.

    ஆனால், வயோதிகர்கள்,நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு.

    காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.

    காலை, மாலை வழிபாட்டின் போதுஅவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோசெய்ய வேண்டும்.

    ஆறுநாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம்.

    மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவதுநன்மை தரும்.

    சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர்வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.

    பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள்.

    பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதாரவேண்டுங்கள்.

    அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லதுசிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள்.

    பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்குபொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள்.

    பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம்ஒன்றினை ஏற்றுங்கள்.

    ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள்.

    மனம் முழுவதும் அந்தமயில் வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம்,கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளை சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.

    ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்றுஉங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள்.

    முன் செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர். முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம்முருகா! என்று ஜபிப்பது நன்மை தரும்.

    நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும்.

    எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான்.

    ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.

    அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர்.

    மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோ நீராட வேண்டியது அவசியம்.

    அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன்கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்) பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    வேறுசிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடைநைவேத்யத்தை தரிசனம் செய்தபின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு.

    வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு,நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டியயாவும் நிச்சயம் கைகூடும்.

    நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில்நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.

    • ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும்.
    • மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம்.

    சஷ்டி விரதம் வழிமுறைகள்

    கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி.

    நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.

    அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும்.

    கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை... என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.,வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்.

    கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும்.

    நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை.

    சஷ்டி ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும்.

    பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வன் புராண முடிப்பு' என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார்.

    இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.

    மேலும் குமர குருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்த புராணத்தின் சாரமாகும்.

    பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு.

    ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

    மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம்.

    முருகனுக்காக வெள்ளிக் கிழமை விரதம் இருப்பவர்கள், அதை ஐப்பசி மாத முதல் வெள்ளிக் கிழமையன்று தொடங்குவது சிறப்பு.

    அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும்.

    இரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம்.

    சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.

    • குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும்.
    • கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி.

    கந்தசஷ்டி விரதத்தின் பலன்கள்

    குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று.

    "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.

    எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும்.

    சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.

    முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம்.

    இந்த விரதத்தை மனதில் கொண்டே "சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்'' என்ற பழமொழி எழுந்தது.

    சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.

    கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும்.

    கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.

    அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம்.

    உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.

    விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி,

    தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும்.

    ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது.

    • அறுகோண வடிவிலான ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.
    • இதை 'சாயாபிஷேகம்' என்றார்கள். 'சாயா' என்றால் 'நிழல்' என்று பொருள்.

    சஷ்டி யாகம்

    திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார்.

    அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.

    குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்த குருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டத்திக்கு பாலகர்கள், துவார பாலகர்கள் என அனைத்து தெய்வங்கள், தேவதைகளை எழுந்தருளச் செய்வர்.

    உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.

    ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தளி சூரபத்மனை சம்ஹாரம் செய்வார்.

    அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாக சாலைக்கு திரும்புவார்.

    கண்ணாடிக்கு அபிஷேகம்

    ஜெயந்திநாதர், சூரபத்மனை சம்ஹாரம் செய்த பிறகு பிரகாரத்தில் உள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார்.

    அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும்.

    அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார்.

    இதை 'சாயாபிஷேகம்' என்றார்கள். 'சாயா' என்றால் 'நிழல்' என்று பொருள்.

    போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம்.

    இந்நிகழ்ச்சிக்குப் பிறகுதான், முருகப்பெருமான் சன்னதிக்கு திரும்புவார் அத்துடன் சூரசம்ஹார வைபவமும் நிறைவடையும்.

    ராஜகோபுரம் திறக்காதது ஏன்?

    திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

    பிரதான கோபுரத்தை சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும்.

    ஆனால், அந்த பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

    முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தை விட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.

    கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.

    அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

    • சஷ்டி என்றால் ஆறு என்று பொருள் ஆகும்.
    • ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

    கந்த சஷ்டிவிரதம்

    கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும்.

    சஷ்டி என்றால் ஆறு என்று பொருள் ஆகும்.

    ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.

    இந்த ஆறு நாளையும் பக்தர்கள் விரத நாட்களாக கடைபிடிக்கின்றனர்.

    செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர்.

    தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருப்பது வழக்கம்.

    இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது.

    ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

    தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பை அணிந்து 'காப்புக்கட்டல்' அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.

    பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர்.

    இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

    மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.

    • என்னவென்று சொல்ல முடியாத சாந்தி,மனஅமைதி, நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.
    • பாறணை பண்ணும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கி உட்கொள்ள வேண்டும்.

    இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் பாராயணம் செய்வதால், என்னவென்று சொல்ல முடியாத சாந்தி,மனஅமைதி, நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

    கந்த சஷ்டி விரத ஆறு நாட்களும் கந்தப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களில் எல்லாம் பூரண கும்பம் வைத்து விஷேட அபிஷேகமும், சண்முகார்ச்சனையும், கந்த புராண படனப்படிப்பும் நடைபெறும்.

    விரதம் முடிவுற்ற அன்று முருகன் ஆலயத்தில் சூரன் போர் நடைபெற்று, மறுநாள் விரதம் அனுஷ்டித்த அனைவரும் பாறணை பண்ணி விரத பூசையை நிறைவு செய்கின்றனர். பாறணை பண்ணும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கி உட்கொள்ள வேண்டும்.

    • ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.
    • ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும் துன்புறுத்தி அழித்து வந்தனர்.

    ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப *கந்தசஷ்டி* விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும் வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாகஎடுக்கப்படுகின்றது. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை பெருவாரியான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும்,குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

    ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும் துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப் பெருமான் இந்தச் சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட் பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்றுவந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக் கிடைத்தது.

    கந்த புராணக் கதையைச் சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார் என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையார் வழங்குவார். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் ஷஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனைக் கடிந்தார் என்பது இதன் பொருள். வெறும் கதை சொல்லும் புராணமாகக் கந்த புராணத்தை எண்ண முடியாது. சைவ சித்தாந்த பேருண்மைகளை உருவகப்படுத்திக் கதை வடிவில் சுவைபடத் தரும் அருமையான நூல் இதுவாகும்.

    • கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
    • மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது.

    கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே கந்த சஷ்டி விரத விழாவாகும். முருகன் கோவில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள்.

    கந்த விரத மகிமை

    முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக கந்தசஷ்டி விரதம் அமைகிறது. கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

    • கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து 6 வருடங்களும், கார்த்திகை விரதம் 12 வருடங்களும், வெள்ளிக்கிழமை விரதம் 3 வருடங்களும் ஆகும்.
    • மூலம் தேவர்களை வென்றதுடன் தனக்கு நிகரான எதிரி மூவுலகிலும் இல்லை என்ற ஆணவம் கொண்டிருந்தார்.

    பட்டீஸ்வரம்:

    தமிழ் கடவுளான திருமுருகப் பெருமானுக்கு உரிய விரதங்களில் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து 6 வருடங்களும், கார்த்திகை விரதம் 12 வருடங்களும், வெள்ளிக்கிழமை விரதம் 3 வருடங்களும் ஆகும். இவ்விரதங்கள் முருக பக்தர்களால் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதில் ஐப்பசித் திங்கள் சதுர்த்தசி திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் இருப்பதை சிறப்பாக ஞான புராணங்கள் எடுத்துரைக்கின்றன. சூரபதுமன் என்ற அரக்கன் இறைவனிடம் கடும் தவம் புரிந்து அரிய வரங்களை பெற்றார். அதன் மூலம் தேவர்களை வென்றதுடன் தனக்கு நிகரான எதிரி மூவுலகிலும் இல்லை என்ற ஆணவம் கொண்டிருந்தார். சூரபதுமனின் அட்டகாசங்களை தாங்க முடியாத தேவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். உடன் சிவபெருமான், முருகப்பெருமானை சிருஷ்டித்தார்.

    அதனை தொடர்ந்து அன்னை மகாசக்தியின் அருளாசியுடன் அவரிடம் வேலாயுதம் பெற்று முருகப் பெருமான் சூரபதுமனுடன் போர் புரிந்து தனது ஞான வேலால் சூரபதுமனை இரண்டாகப் பிளந்து ஒரு பாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றி மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் குமரவேள் கொண்டு தேவர்களை காத்து அருளினார் என்பது கந்த புராணமாகும். இதனையே அனைத்து முருகன் கோயில்களிலும் உலகை ஆட்டிப் படைக்கும் ஆசை எனும் இச்சைகளை அழித்து நற்குணங்களை நல்கும் கந்தசஷ்டி விழாவாக இக்காலம் வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

    விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் நீராடி காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, விபூதி பூசி கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படிப்பது கூடுதல் சிறப்பை தரும் என்பது திண்ணம்.

    சரியான விரத முறை என்பது 25-ம் தேதி முதல் விரதம் தொடங்கி 31-ம் தேதி திருக்கல்யாணம் முடியும் வரை அவரவர் தேக நலத்திற்கு ஏற்றாற்போல் இருப்பதே இன்றைய காலத்தில் சிறப்பு.

    மகத்துவம் நிறைந்த கந்தசஷ்டி நாளில் நல்லருள் நல்கும் திருமுருகப் பெருமானை வணங்கி வழிபட்டு, விரதம் மேற்கொண்டு வந்தால் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பது ஐதீகம்.திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி திருவிழா இந்த ஆண்டு திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவானது அக்.25-ல் தொடங்கி 30-ம் தேதி சூரசம்ஹாரம் விழா நடைபெறும்.

    அக். 25-ம் தேதி கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் அதனை தொடர்ந்து 2 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கும் ஸ்ரீஜெயந்தி நாதா் யாகசாலைக்கு புறப்படுதலைத் தொடா்ந்து, காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனைகள், மற்ற கால பூஜைகள் வழக்கம்போல நடைபெறும்.

    2ஆம் நாள்முதல் 5ஆம் நாள்வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.அக். 30-ம் தேதி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4 மணிக்கு மேல் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

    31-ம் தேதி திருக்கல்யாண வைபவத்தையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தவசுக் காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு சுவாமி-அம்மன் தோள்மாலை மாற்றுதல், இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

    இதே தினங்களில் புகழ் பெற்ற மற்ற முருகன் கோவில்களிலும் சஷ்டி திருவிழாவானது சில கால நேர மாறுதல்களுடனும், சில நிகழ்ச்சிகள் மாற்றங்களுடனும் மிக சிறப்பாக நடைபெறும்.

    ×