search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டாய திருமணம்"

    • தனக்கு திருமணம் நடந்துவிட்டது குறித்தும், தனது படிப்பை தொடர உதவ வேண்டும் என்றும் வார்டு கவுன்சிலர் சத்திய பாமாவிடம் சிறுமி கேட்டுள்ளார்.
    • பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் வெள்ளிமடு குன்று பகுதியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

    திருவனந்தபுரம்:

    மதுரையை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி கேரள மாநிலம் கோழிக்கோடு கிழக்குமலை பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளயில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் அந்த சிறுமிக்கும், மாங்காவு பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். பள்ளிக்கு சென்று படிக்கவேண்டும் என்ற சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக, வலுக்கட்டாயமாக அவருக்கு திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது.

    அவர் தனக்கு திருமணம் நடந்துவிட்டது குறித்தும், தனது படிப்பை தொடர உதவ வேண்டும் என்றும் வார்டு கவுன்சிலர் சத்திய பாமாவிடம் கேட்டுள்ளார். பள்ளி படிக்கும் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்திருப்பதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் சட்ட சேவைகள் ஆணைய தன்னார்வ தொண்டர் ஒருவரின் உதவியை நாடினார். அவர் மூலம் போலீசாரிடம் பாதிக்கப்பட்ட சிறுமியை புகார் அளிக்க செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்தபோது சிறுமிக்கு அவரது பெற்றோர் உள்ளிட்டோர் சேர்ந்து கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர், சிறுமியை திருமணம் செய்த வாலிபர், வாலிபரின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது இலத்தூர் போலீசார் வழக்கு பதிந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் வெள்ளிமடு குன்று பகுதியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

    மேலும் அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும், கவுன்சிலிங் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவை முடிந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சிறுமிக்கு கேரளாவில் கட்டாய திருமணம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி சமூக விரிவாக்க நல அலுவலர் ராஜேஸ்வரி. குழந்தை திருமணம் தொடர் பாக இவருக்கு புகார் வந்தது. இதுகுறித்து அவர் விசாரணை நடத்தினார்.அப்போது விருதுநகர் அருகே உள்ள ஒரு கிரா மத்தை சேர்ந்த சிறுமிக்கும், செங்கமலப்பட்டியை சேர்ந்த முனியசாமி என்பவ ருக்கும் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு உறவினர் முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சட்ட விரோதமாக திருமணம் நடந்தது தெரியவந்தது.

    இதற்கு முனியசாமியின் பெற்றோர் கருப்பசாமி, செல்லத்தாய், உறவினர் மற்றொரு கருப்பசாமி ஆகி யோர் உடந்தையாக இருந்து உள்ளனர். இதுகுறித்து சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி முனியசாமி உள்பட 4 பேர் மீதும் குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த கணவர்-உறவினர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • இதையடுத்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாரியம்மாள் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பெற்றோர் இறந்து விட்டதால் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்தாண்டு அக்டோபர் 30-ந்தேதி சிறுமிக்கு சாத்தூர் சுப்பி ரமணியபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவ ருக்கு சிறுமியை, அவரது சித்தி மாரீஸ்வரி என்பவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் கட்டாய திருமணம் செய்து வைத் துள்ளார்.

    அதன் பிறகு சிறுமியின் எதிர்ப்பையும் மீறி முருகன் அவரை கட்டாயப்படுத்தி பலமுறை உடல் உறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் முருகனின் பெற்றோர் சிறுமியை தகாத வார்த்தை களால் திட்டி கொடுமைப் படுத்தியதாக கூறப்படு கிறது. இதையடுத்து சிறுமி உதவி மையத்தை தொடர்பு கொண்டார். அவர்களது ஏற்பாட்டில் சிறுமி குழந்தை காப்பகத்தில் சேர்க்கப் பட்டார். மேலும் இதுகுறித்து சின்ன காமன்பட்டி சமூக நலத் துறை மகளிர் ஊர்நல அலுவலர் மாரியம்மாளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் காப்பகத்திற்கு சென்று சிறுமியிடம் விசா ரித்தார். அப்போது தனக்கு நேர்ந்த துயரம் குறித்து சிறுமி அவரிடம் கூறி உள்ளார். இதையடுத்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாரி யம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் சிறுமியின் கணவர் முருகன், சித்தி மாரீஸ்வரி, கணவரின் தந்தை பெருமாள், தாய் சரோஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவிக்கு அவரது தாய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
    • சம்பவம் குறித்து மாணவியின் தந்தை பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே பாகூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு அவரது தாய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

    இதுபற்றி மாணவியின் தந்தை பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்திய போது அந்த சிறுமிக்கு அவரது தாய், சித்தி, சித்தப்பா உள்ளிட்ட உறவினர்கள் சேர்ந்து கடப்பேரிகுப்பத்தை சேர்ந்த உறவுக்கார வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமியின் தாய் லட்சுமி, மணமகன் பூபதி மற்றும் சிறுமியின் சித்தப்பா மற்றும் சித்தி உள்பட 6 பேர் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 17 வயது சிறுமியுடன் கட்டாய திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிந்துள்ளனர்.
    • சிறுமி தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி ஊருக்கு வந்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே யுள்ள எஸ். கொடிக்குளத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு அவரது தாயார் பாண்டி யம்மாள் மற்றும் உறவி னர்கள் சேர்ந்து சிறுமியின் பெற்றோரை மிரட்டி கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

    பின்னர் சிறுமியை கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி யின் எதிர்ப்பையும் மீறி ஆனந்த் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் ஆனந்த் வெளியே சென்றிருந்த போது, சிறுமி தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி ஊருக்கு வந்துள்ளார். ஆனால் ஆனந்த் மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்ததால் திருமங்கலத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சிறுமி சென்றார்.

    அங்கும் அவர்கள் தேடி வந்துள்ள னர். அங்கிருந்து தப்பிய சிறுமி திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிறுமியிடம் விசாரித்து போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை கூமாபட்டி போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

    அதன் பேரில் கூமாபட்டி போலீசார் ஆனந்த், அவரது தாயார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எஸ்.பி. ஆபீசில் புகார்
    • நடவடிக்கை எடுக்க தாய் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த மனுவில் கூயிருப்பதாவது:-

    ஆசனாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை என் மகன் காதலித்து வந்துள்ளார்.

    அப்போது காதலுக்காக 15 வயது சிறுமி எனது மகனின் காதலுக்கு தூது சென்றார்.

    இந்த நிலையில் 15 வயது சிறுமியின் தாயார் அந்த வாலிபர் சென்று எனது மகளை திருமணம் செய்துகொள் வாழ்க்கை சிறப்பாக அமையும், அதற்கு நான் வழிவகை செய்து தருகின்றேன் என 15 வயது சிறுமியின் தாயார் எனது மகனிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

    திருமணம் செய்துகொள் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன்பின் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் எனது சிறுமியை எனது மகன் என்பவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என புகார் மனு கொடுத்தார்.

    விசாரணையின் போது போலீஸ் நிலையம் வெளியே வந்து எனது மகனை மிரட்டி கட்டாய தாலிகட்டுமாறு கூறியுள்ளனர். அதனை மறுத்து அவர் உன் மகளுக்கு 15 வயது தான் ஆகின்றது.

    நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என கூறியுள்ளார். அதற்கு சிறுமியின் தாயார் தற்போது சும்மா கட்டு 18 வயது ஆனதும் என் மகளை உங்க வீட்டுக்கு அழைத்து போ என கூறி அவரை மிரட்டி அங்கே கையில் தயார் நிலையில் வைத்து இருந்த மஞ்சல் கயிற்றை கட்ட வைத்துள்ளனர். இதனையடுத்து புகாரை திரும்ப பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர்.

    எனது மகனை கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர்.

    இருப்பினும் எனது மகன் ஏதேனும் தவறு செய்து இருந்தால் விசாரித்து உரிய பரிசோதனை செய்து நடவடிக்கைகள் எடுக்கலாம், எனக்கும் என் குடும்பத்தாருக்கும் எவ்வித தடங்களும் இல்லை எனது மகனை காப்பாற்றி முழுமையாக என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 9-ம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் சமூக நல அதிகாரி முத்துலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கட்டாய திருமணம் நடத்தியதாக திருப்பரங்குன்றம் சமூக நல அதிகாரி முத்துலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.

    அவர் இதுதொடர்பாக சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது 9-ம் வகுப்பு மாணவியை சட்டவிரோத மாக கீழக்குயில்குடியை சேர்ந்த காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி மகன் செல்வகுமார் (23) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக தெரியவந்தது.

    இதுகுறித்து அதிகாரி முத்துலட்சுமி, திருப்ப ரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 

    • இந்த திருமணங்களை ‘ஜாப்ரிய விவாஹா’ என கூறுகின்றனர்.
    • பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த மணமகன் கடத்தல் அல்லது கட்டாய திருமணம் என்பது அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வு ஆகும்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் விலங்கு ஒன்றுக்கு உடல் நிலை சரியில்லை என கூறி கால்நடை மருத்துவராக பணிபுரியும் சத்யம் குமார் ஜாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அவரை மிரட்டி ஒரு பெண்ணின் கழுத்தில் சிலர் கட்டயா தாலி கட்ட வைத்துள்ளனர்.

    இதுகுறித்து மணமகனின் தந்தை போலீஸ் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த மணமகன் கடத்தல் அல்லது கட்டாய திருமணம் என்பது அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வு ஆகும். இதனை 'ஜாப்ரிய விவாஹா' என கூறுகின்றனர்.

    பொதுவாக அதிக ஊதியம், சொத்து, சமூக அந்தஸ்து வைத்திருக்கும் மணமாகாத ஆண்கள், மணமகளின் குடும்பத்தினரால் கடத்தப்பட்டு, துப்பாக்கி முனையில் இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இந்த வீடியோக்களும் சமூக வலைதங்களில் பிரபலமாக பகிரப்படு வருகின்றன.

    ×