search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐடி ரெய்டு"

    • வரித்துறையினர் சுமார் 5 பேர் கொண்ட குழுவினர் ஒரு மணி நேரம் சோதனை.
    • வருமான வரித்துறையினரின் திடீர் சோதனையால் பரபரப்பு.

    சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள நடேசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி தேர்தல் பிரசாரம் மற்றும் பணிகளை கவனித்து வருகிறார்.

    இந்நிலையில், திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    வருமான வரித்துறையினர் சுமார் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 6.30 மணியளவில் முதல் சுமார் ஒரு மணி நேரம் தீடீர் சோதனை நடத்தினர்.

    பின்னர் வீட்டின் உரிமையாளருக்கு, கடலூர் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு இன்று (புதன்கிழமை) மதியம் 3 மணிக்கு வந்து ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்து விட்டு சென்றனர்.

    வருமான வரித்துறையினரின் திடீர் சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தொல்.திருமாவளவன் கூறுகையில்," எந்த முகாந்திரமும் இல்லாமல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது ஒரு மறைமுகமான அல்லது வெளிப்படையான அச்சுறுத்தல்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • கருப்பு பணம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
    • நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கருப்பு பணம் மீட்பு.

    காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகு-வுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் பணம் ரொக்கமாக மீட்கப்பட்டது. மேலும், தொடர் சோதனை ஒருபுறமும், மீட்கப்பட்ட பணத்தை எண்ணும் பணிகள் ஒருபுறமும் நடைபெற்றது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, இவரிடம் இருந்து மீட்கப்பட்ட ரொக்கம் மட்டுமே ரூ. 350 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இவைதவிர பல்வேறு பகுதிகளில் ரொக்கம் மற்றும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

     


    இந்த நிலையில் தனக்கு சொந்தமான பகுதிகளில் மீட்கப்பட்ட ரொக்கம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "இந்த பணம் முழுக்க என் குடும்பத்தார் நடத்தும் வியாபார நிறுவனங்களுக்கு சொந்தமானது என்று நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். வருமான வரித்துறை சார்பில் இது கருப்பு பணமா இல்லை வெள்ளை பணமா என்பதை தெரிவிக்கட்டும்."

    "நான் வியாபார துறையில் இல்லை. எனது குடும்ப உறுப்பினர்கள் இதற்கு பதில் அளிப்பார்கள். மக்கள் இந்த விஷயத்தை எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் இந்த பணத்திற்கும் காங்கிரஸ் மற்றும் இதர அரசியல் கட்சிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும்," என்று தெரிவித்தார். 

    • வருமான வரித்துறையினர் சோதனையில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியது.
    • 50 அதிகாரிகள், 40 மெஷின் மூலம் பணம் எண்ணப்பட்டன.

    ஒடிசாவின் பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான பல்தேவ் சாஹூ குழுமத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள், நிறுவனத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்படுகிறது.

    ஒடிசாவில் புவனேஸ்வர், சம்பல்பூர், ரூர்கேலா கந்தர்கர் மற்றும் மேற்கு வங்காளம், ஜார்க்கண்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் குறிப்பிட்ட மதுபான நிறுவனத்துடன் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் மேல்சபை எம்.பி. தீரஜ் சாஹூவுக்கு தொடர்பு இருந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு சொந்தமான வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    கடந்த புதன்கிழமை சோதனை தொடங்கியதில் நாள்தோறும் நடத்தப்பட்ட சோதனையில் பணக்குவியல்கள் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை வரை நடைபெற்ற சோதனையில் வருமானவரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 225 கோடி பணம் போலங்கிரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு எண்ணப்பட்டது. அதை தொடர்ந்து நாளுக்கு நாள் பணத்தின் எண்ணிக்கை உயர்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    நேற்று முன்தினம் வரை ரூ.290 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டில் வருமானவரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மிக அதிக தொகை இதுவாகும்.

    நேற்று நடத்தப்பட்ட 5-வது நாள் சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட தொகை ரூ.350 கோடியை தாண்டியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். 3 வங்கிகள், 50 அதிகாரிகள், 40 மெசின்கள் மூலம் பணம் எண்ணப்பட்டது.

    நேற்று நள்ளிரவிலும் பணத்தை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒடிசாவில் இந்த பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி மொத்தம் ரூ. 353.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.யிடம் இருந்து 350 கோடி ரூபாய் பறிமுதல்.
    • மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் எண்ணப்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 350 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பணத்தை கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் இவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் இலக்கான 400 இடங்களுடன், தற்போதைய ஊழலை மத்திய மந்திரி அனுராக் தாகூர் ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.

    இதுகுறித்து அனுராக் தாகூர் கூறுகையில் "மக்களிடம் இருந்து பா.ஜனதா தொடர்ந்து ஆதரவை பெற்று வருகிறது. இதற்கு பிரதமர் மோடியின் பொது நலத்திட்டம் கொள்கைதான் காரணம். அனைத்து துறைகளிலும் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது.

    நாங்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் தலைவர் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊழலில் ஈடுபட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதனால்தான் அக்கட்சி எப்போதுமே அமக்கலாக்கத்துறை மற்றும் சிபிஐ, பணமதிப்பு இழப்பு நடவடிக்கை ஆகியவற்றிற்கு எதிராக உள்ளது" என்றார்.

    • கருப்பு பணம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
    • நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கருப்பு பணம் மீட்பு.

    காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகு கடந்த ஆண்டு பதிவிட்ட கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி தீரஜ் சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், கருப்பு பணம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

    கடந்த சில நாட்களாக தீரஜ் சாகு-வுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கருப்பு பணம் மீட்கப்பட்டு இருக்கிறது. மேலும், தொடர் சோதனை ஒருபுறமும், மீட்கப்பட்ட பணத்தை எண்ணும் பணிகள் ஒருபுறமும் நடைபெற்று வருகிறது.


     

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, இவரிடம் இருந்து மீட்கப்பட்ட ரொக்கம் மட்டுமே ரூ. 350 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இவைதவிர பல்வேறு பகுதிகளில் ரொக்கம் மற்றும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில், இவர் கடந்த ஆண்டு எழுதிய எக்ஸ் பதிவில், "பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும், நாட்டில் இவ்வளவு கருப்பு பணம் மற்றும் ஊழல் இருப்பதை பார்க்கும் போது என் மனம் வருத்தம் கொள்கிறது. இவ்வளவு அதிகளவு கருப்பு பணத்தை எங்கிருந்து தான் குவிக்கின்றனர் என்றே தெரியவில்லை. நாட்டில் இருந்து ஊழலை வெளியேற்ற முடியும் என்றால், அதனை காங்கிரஸ் மட்டுமே செய்ய முடியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது ஊழல் குற்றச்சாட்டில் வசமாக சிக்கியிருக்கும் காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகு, ஊழல் மற்றும் கருப்பு பணம் குறித்து எழுதியிருக்கும் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

    • முற்றுகையிட வந்தவர்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாக குற்றச்சாட்டு.
    • வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை தகவல்.

    தமிழகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    அந்த வகையில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டனர். முற்றுகையிட வந்தவர்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில், சோதனையின் போது வீட்டின் வெளியே திரண்ட குமார் மற்றும் மேலும் சிலரை அதிகாரிகள் தாக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. அதிகாரிகள் மீது கையால் தாக்கியது, தகாத வார்த்தையால் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    • சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டனர்.
    • தாக்குதலில் காயமுற்ற நான்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    தமிழகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    அந்த வகையில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான தாக்குதலில் காயமுற்ற நான்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், அதிகாரிகளை தடுத்த மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கரூர் மாவட்ட காவல் துறை தெரிவித்து இருக்கிறது.

    வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்தவர்கள் மீது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அனுமதி இன்றி 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

    • கரூரில் சோதனை நடத்திய அதிகாரிகள் கார் கண்ணாடி உடைப்பு.
    • அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை.

    தமிழகம் முழுக்க வருமான வரித்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடரந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. தமிழகத்தின் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் தீவிர சோதனையை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடங்கினர்.

    கரூரில் சோதனை நடத்திய அதிகாரிகள் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது, அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

    இந்த நிலையில், நேற்று காலை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    • கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் நிறுத்தம்.

    தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ் நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனை துவங்கிய சில மணி நேரங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த திமுக-வினர் முற்றுகையிட முயன்றதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. முற்றுகையை தொடர்ந்து, அங்கு சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது வருமான வரித்துறை அதிகாரி திமுக பிரமுகரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அதிகாரிகளை திமுக-வினர் தாக்கினர். மேலும் அவர்களது வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். அதிகாரிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் கரூர் காவல் நிலையம் விரைந்தனர். இதே போல் கரூரில் மற்ற இடங்களிலும் வருமான வரி சோதனைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனன் கூறியதாவது.,

    "கரூரில் வருமான வரித்துறை சோதனைக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் காவல் படையினரையும் அழைத்து வரவில்லை. சோதனைக்கு வந்த அதிகாரிகள் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்."

    "சோதனை நடக்கும் இடங்களில் 150-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்யப்படும். ," என்று தெரிவித்தார். 

    • கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
    • சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கரூர்:

    தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கோவை, கரூர் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலம் ஐதராபாத் பகுதிகளில் இந்த சோதனையானது நடக்கிறது. டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.

    இந்நிலையில் கரூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இதேபோல் மற்ற இடங்களிலும் அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டு பணியை செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் கரூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறுத்தப்பட்டது. 8 வாகனங்களில் வந்திருந்த அதிகாரிகள் கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இனி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் கலந்துபேசி முடிவு செய்வார்கள்.

    • தமிழ் நாட்டின் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
    • அரசு ஒப்பந்ததார்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    தமிழகம் முழுக்க 40-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக், மின்துறை தொடர்பான அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    தமிழ் நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தின் கரூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் சில ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்தி வரும் அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். திமுக தொண்டர்களில் ஒருவரை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    எஸ்பிகே நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்தது குறித்து விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை’ என கூறியுள்ளார். #IncomeTaxRaid #EdappadiPalaniswami
    கோவை:

    தமிழக நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் எஸ்.பி.கே நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக நடந்த வருமான வரி சோதனையில் ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு நிறுவனம் தனது வருமானத்திற்கு வரியை கட்டாமல் இருக்கும் போது வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. தமிழக அரசு டெண்டரில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாக அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஸ்டாலின் லண்டன் சென்றதும் நன்றாக மழை பெய்து தமிழக அணைகள் நிரம்பி விட்டன. அவர் தமிழகம் திரும்பியதும் மழை நின்று விட்டது. எனது உறவினர்கள் வீடுகளில் ரெய்டு நடப்பதாக கூறுகின்றீர்கள். எனக்கு தமிழகம் முழுவதும் உறவினர்கள் இருக்கின்றனர்.

    திமுக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 15 சதவிகித லாபத்துடன் டெண்டர் ஒதுக்கப்பட்டது. முட்டை டெண்டர் உரிய முறையில் ஒதுக்கப்படுகிறது. இதில், எந்த முறைகேடும் இல்லை. 

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×