search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏழைகள்"

    • லாட்டரி சீட்டு விற்பனை காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் அமோகமாக நடைபெற்று வருகிறது.
    • 3-ம் நம்பர் லாட்டரியும், காட்டன் சூதாட்டமும் எளிய மக்களின் வருவாய் அனைத்தையும் பிடுங்கி, அவர்களை நடுத்தெருவில் நிற்கச் செய்கிறது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

    பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஜார் பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து காட்டன் சூதாட்டத்தை நடத்தி வருகின்றனர். தினமும் கூலி வேலைக்கு செல்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறி, பூ, பழம் விற்கும் சிறு வியாபாரிகள், கட்டிட வேலை செய்பவர்கள் என இவர்களை குறிவைத்தே காட்டன் சூதாட்டம் நடத்தப்படுகிறது.

    இதில் நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகள் இருப்பதாகவும், இதில், பல கோடி ரூபாய் புரளுவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் காட்டன் ஜாக்பாட் என்ற பெயரில் நடத்தி வரும் சூதாட்டத்தை போலீசாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த காட்டன் சூதாட்டம் விற்பனை மதியம் 1.30 மணிக்கு மேல் தான் சூடு பிடிக்க தொடங்குகிறது.

    அந்த சமயத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் அவர்களது வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு அந்த சூதாட்டம் நடக்கும் தெருவில் சென்று லாட்டரி சீட்டுகளை அங்கு இருக்கும் ஏஜென்ட்கள் மூலமாக மாறி மாறி எழுதி விட்டு செல்கின்றனர்.

    சூதாட்ட கும்பல் தங்களிடம் எழுத வரும் நபர்களிடம் இருந்து பல ஆயிரம் ரூபாய் அளவிற்கு பணத்தை கட்டணமாக பெற்றுக் கொள்கின்றனர்.

    குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகளவில் காட்டன் சூதாட்டம் மூன்றாம் நம்பர் லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    "அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை விஷாரம் என மாவட்டம் முழுக்க காட்டன் குதாட்டமும், மூன்று நம்பர் லாட்டரியும் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்த காட்டன், 3-ம் நம்பர் லாட்டரி இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் கிடையாது. காட்டன் என்பது 2 எண்கள் எழுதித்தர வேண்டும். உதாரணமாக, ஒரு பெட்டிக்கடைக்கு சென்று 35 எனச்சொன்னால் 10 ரூபாய் வாங்கிக்கொண்டு அந்த எண்ணை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தந்துவிடுவார்கள் நாம் சொன்ன எண் தேர்வாகியிருந்தால் 700 ரூபாய் கிடைக்கும். ஒரு எண்ணுக்கு 10 ரூபாய் என்பதால் பலரும் 35, 44. 55 என 10 முதல் 20 விதமான இரட்டை இலக்க எண்களை எழுதி அதற்கான பணத்தைத் தந்துவிடுவார்கள்.

    இதில் ஒப்பன், குளோஸ் என மற்றொரு வகை உள்ளது. ஓப்பன் என்றால், 2 எண்களில் முதல் எண்ணை மட்டும் குறிப்பிடுவது. அதாவது 1 முதல் 9 வரை என ஏதாவது ஒரு எண்ணை சொல்லி பணம் கட்டுவது. உதாரணமாக 4-ம் எண் மீது பணம் கட்டியிருந்தால் இதில் 40, 41, 42 என வந்தாலும் முதலில் 4 வந்தால் அதற்கு பரிசு தருவார்கள்.

    அதாவது 10 ரூபாய் கட்டினால் 350 ரூபாய் கிடைக்கும். குளோஸ் டைப் என்பது, கடைசி எண் 1 முதல் 9 வரை ஏதாவது ஒரு எண்ணை குறித்துத் தர வேண்டும். உதாரணமாக 5 என வைத்துக் கொள்வோம் 45, 55, 65, 15 என எது வந்தாலும் கடைசியில் 5 என முடிந்தால் பாதித் தொகை கிடைக்கும்.

    நீங்கள் 10 ரூபாய்தான் கட்டவேண்டும் என்கிற கட்டாயமில்லை. 100. 500 கூட கட்டலாம். பரிசுத்தொகை அப்படியே 10 மடங்கு அதிகமாகத் தருவார்கள் 3-ம் நம்பர் லாட்டரி என்பது, ஒரு எண்ணுக்கு 10 ரூபாய் செலுத்த வேண்டும்.

    உதாரணமாக, 567 என எழுதித் தந்தால் 567 குலுக்கலில் வந்தால் அந்த எண்ணை எழுதித் தந்தவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 5 மட்டுமே வந்தது என்றால் 30 ரூபாய் தருவார்கள். S6 என 2 எண்கள் வந்திருந்தால் 500 ரூபாய் தருவார்கள்.

    100 ரூபாய்க்கு டோக்கன் எழுதினால். எழுதும் புரோக்கருக்கு 30 ரூபாய் கிடைப்பதால், தொழிலாளர்கள் அதிகம் புழங்கும் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், பஸ் நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் தனி அறைகளை எடுத்தும் பலர் எழுதுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    3-ம் நம்பர் லாட்டரியும், காட்டன் சூதாட்டமும் எளிய மக்களின் வருவாய் அனைத்தையும் பிடுங்கி, அவர்களை நடுத்தெருவில் நிற்கச் செய்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • வாடிப்பட்டியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • அரிசி, காய்கறி, சேலை, இனிப்புகளை மாநில இணைத்தலைவர், மாநில பொருளாளர் வழங்கினர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார். தென்மண்டல இளைஞரணி துணை செயலாளர் செந்தில், மாவட்ட தலைவர் எம்.கே.கணேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் கே.என்.கணேசன் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி ஒன்றிய தலைவர் கருப்பையா வரவேற்றார். இதில் ஏழைகளுக்கு அரிசி, காய்கறி, சேலை, இனிப்புகளை மாநில இணை தலைவர் ஆறுமுகநாட்டார், மாநில பொருளாளர் கே.என்.நாகராஜன் ஆகியோர் வழங்கினர்.

    இதில் விவசாய அணி ஒன்றிய தலைவர் வையாபுரி, மகளிரணி நிர்வாகிகள் வள்ளி, மல்லிகா, மதுரை நகர தலைவர் காளி, மாவட்ட செயலாளர்கள் மருது, திண்டுக்கல் ராமு தேவர், அந்தோணி, தொழிற் சங்க செயலாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் மருதுபாண்டி நன்றி கூறினார்.

    • ஏழைகளுக்கு உணவுப்பொருள்களை தொகுத்து வழங்கினார்.
    • எம் .கே. இ. உமர் மற்றும் அவரது துணைவியார் ஹாரித் உமர் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    கீழக்கரையை சேர்ந்த மர்ஹூம் பி.எஸ். அப்துல் ரகுமான். மர்ஹூம் தாசிம் பீவி அப்துல் காதர் ஆகியோர்களின் நினைவாக புனித ரமலான் மாதத்தில் ஏழை எளியவர்களுக்காக ஒரு மாத காலத்திற்கான உணவுப் பொருள்கள் வழங்குவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் (ரூ. 4500 மதிப்புள்ள) 30 வகையான உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை அனைத்து ஜமாத் பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 ஏழை எளிய மக்களுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் செயலாளர் மற்றும் டிரஸ்டி மற்றும் தாசிம் பீவி அப்துல் காதர் அவர்களின் மகன்கள் ஹாலித் புகாரி. செய்யது முஹம்மது புகாரி ஆகியோர் பியேரல் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் கடந்த மூன்று நாட்களாக வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் எம் .கே. இ. உமர் மற்றும் அவரது துணைவியார் ஹாரித் உமர் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் பொது துணை மேலாளர் சேக் தாவுது மற்றும் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா ஆகியோர் செய்திருந்தனர்.

    • மொடச்சூர் வாரச்சந்தையில் வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதி செயல்பட்டு வரு கிறது
    • விடுதியை பராமரித்து நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பி க்கலாம்

    கோபி,

    கோபிசெட்டி பாளையம் மொடச்சூர் வாரச்சந்தையில் வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதி செயல்பட்டு வரு கிறது. இந்த விடுதியை பராமரித்து நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பி க்கலாம்.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் மொடச்சூர் வார சந்தை பகுதியில் உள்ள வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதியை வழிகாட்டு தலுக்கிணங்க பணப் பயன் ஏதுமின்றி நடத்துவதற்கு அரசு சார்பி ல்லா விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பங்கள் அனுப்ப லாம்.

    ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் கோபிசெட்டி பாளையம் நகராட்சி ஆணையர் என்ற முகவரிக்கு வரும் 15-ந் தேதிக்குள் எழுத்து பூர்வமாக விண்ணப் பிக்க வேண்டும்.

    தொண்டு நிறுவனங்கள் இது வரை ஈடுபட்டுள்ள முன் அனுபவ சேவை விபரங்களை உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும்.

    விண்ணப்பங்களை நக ராட்சி மூலம் ஆய்வு செய்து தகுதியான தொண்டு நிறு வனங்களை தேர்வு செய்ய ப்படும்.

    மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி தேர்வு செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்திடம் விடுதி ஒப்டைக்கப்படும் என நகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    ×