ஏழைகளுக்கு உணவுப்பொருள்கள் தொகுப்பு

ஏழைகளுக்கு உணவுப்பொருள்களை தொகுத்து வழங்கினார். எம் .கே. இ. உமர் மற்றும் அவரது துணைவியார் ஹாரித் உமர் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
ஏழைகளுக்கு உணவுப்பொருள்கள் தொகுப்பு
Published on

கீழக்கரை

கீழக்கரையை சேர்ந்த மர்ஹூம் பி.எஸ். அப்துல் ரகுமான். மர்ஹூம் தாசிம் பீவி அப்துல் காதர் ஆகியோர்களின் நினைவாக புனித ரமலான் மாதத்தில் ஏழை எளியவர்களுக்காக ஒரு மாத காலத்திற்கான உணவுப் பொருள்கள் வழங்குவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் (ரூ. 4500 மதிப்புள்ள) 30 வகையான உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை அனைத்து ஜமாத் பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 ஏழை எளிய மக்களுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் செயலாளர் மற்றும் டிரஸ்டி மற்றும் தாசிம் பீவி அப்துல் காதர் அவர்களின் மகன்கள் ஹாலித் புகாரி. செய்யது முஹம்மது புகாரி ஆகியோர் பியேரல் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் கடந்த மூன்று நாட்களாக வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் எம் .கே. இ. உமர் மற்றும் அவரது துணைவியார் ஹாரித் உமர் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் பொது துணை மேலாளர் சேக் தாவுது மற்றும் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com