search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் கேம்"

    • கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேமை ஊக்குவிப்பது போன்ற டீப் பேக் வீடியோ இணையத்தில் வைரல்
    • தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது கவலையாக இருக்கிறது என ஆதங்கம்

    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேமை ஊக்குவிப்பது போன்ற டீப் பேக் வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. அந்த டீப் பேக் வீடியோவில், ஒரு விளையாட்டு செயலி மூலம் சச்சின் டெண்டுல்கரின் மகள் பணம் சம்பாதித்ததாகவும், அந்த செயலியை அனைவரும் பயன்படுத்துமாறு அவர் கூறுவது போன்றும் எடிட் செய்யப்பட்டிருக்கும். இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்த சச்சின் டெண்டுல்கர், "இந்த வீடியோக்கள் போலியானவை. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது கவலையாக இருக்கிறது என்றார். இதுபோன்ற விளம்பரங்களை யாரெனும் பார்த்தால் உடனடியாக ரிப்போட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் டீப் ஃபேக் வீடியோக்களை தடுக்க, நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த கேமின் தாக்கங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க உள்ளதாக மத்திய மந்திரி கூறினார்.
    • ஆயுதங்களுடன் எதிரியை அழிக்க சண்டையிடும் வன்முறைகள் நிறைந்த ஆன்லைன் விளையாட்டு இது.

    புதுடெல்லி:

    தென் கொரியாவைச் சேர்ந்த ஆன்லைன் கேமிங் நிறுவனமான கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி கேம். இந்தியாவில் குறுகிய காலத்திலேயே பப்ஜி விளையாட்டு அதீத வரவேற்பை பெற்றது. எனினும், இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது 2020ம் ஆண்டு பல்வேறு சீன ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது.

    அதன்பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பிஜிஎம்ஐ (பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா) என்ற பெயரில் கிராப்டன் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதுவும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த ஆப்பை மத்திய அரசு தடை செய்தது. கிராப்டன் நிறுவனம் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சுமார் 10 மாதங்களாக இந்தியாவில் பிஜிஎம்ஐ விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பிஜிஎம்ஐ கேமை கிராப்டன் நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சர்வர் இருப்பிடங்கள் மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கு கேமிங் நிறுவனம் இணங்கிய பிறகு, மூன்று மாதத்திற்கு சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார். இந்த கேமுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு முன், அடுத்த 3 மாதங்களில் பயனருக்கு தீங்கு ஏதேனும் ஏற்படுகிறதா? பயனர்கள் அடிமையாகிறார்களா? என்பதுபோன்ற பிற விஷயங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

    ஒரே நேரத்தில் பல நூறு பேர் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டே இயர்போன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு, ஆன்லைனில் விளையாடும் விளையாட்டுதான் பப்ஜி. இது முழுக்க முழுக்க துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களுடன், தங்களை வீரர்களாக உருவகப்படுத்திக்கொண்டு தங்கள் எதிரியை அழிக்க தனியாகவோ நண்பர்களுடனோ சேர்ந்தோ சண்டையிடும் வன்முறைகள் நிறைந்த விளையாட்டு. துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளின் நுண்ணிய தகவல்களை தெரிந்துவைத்துக்கொண்டு விளையாட வேண்டும். பலர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. எனவே, ஆபத்தை விளைவிக்கும் இதுபோன்ற விளையாட்டு தேவையில்லை என்றே பலரும் கூறுகின்றனர்.

    ×