என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்கள் போராட்டம்"

    • ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக மூவர் குழு விரைவில் அறிக்கை வெளியிட உள்ளது.
    • இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர்," மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு முதல்வர் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை கைவிடுங்கள்.

    இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக மூவர் குழு விரைவில் அறிக்கை வெளியிட உள்ளது.

    மூவர் குழுவின் அறிக்கையின்படி இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் 5,781 ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராடி வருகின்றனர்.
    • அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.

    அப்போது பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார்.

    * பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராடி வருகின்றனர்.

    * அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.

    * பணிக்காலத்தின் அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று கூறினார்.

    • சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சத்துணவு ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு தொழில் நுட்ப களப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கேட்டு இன்று 24-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். பாரிமுனை, ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் திரண்ட ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம், முதல்-அமைச்சர் அரசாணை வெளியிட வேண்டும் என்று கோஷமிட்டனர். பல்வேறு பகுதியிலிருந்து கோட்டை ரெயில் நிலையத்தில் ஒன்று சேர்ந்த அவர்கள் மொத்தமாக பாரிமுனை பகுதியில் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல பகுதி நேர ஆசிரியர்கள் இன்று 13-வது நாளாக கல்லூரி சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முகாமிட்டு அவர்கள் போராடி வருகிறார்கள். அரசின் ஊதிய உயர்வை ஏற்காமல் தொடர்ந்து போராடி வரும் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சத்துணவு ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.

    சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு தொழில் நுட்ப களப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு ஊழியர் மயக்கம் அடைந்தார். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மயக்கமடைந்த அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    • பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை.
    • மாதம் ரூ. 5000 என்ற மிகக்குறைந்த ஊதியத்தில் பணியில் சேர்ந்த அவர்களுக்கு 13 ஆண்டுகளாகியும் பணிநிலைப்பு வழங்கப்படவில்லை.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் அருகில் இன்று போராட்டம் நடத்திய பகுதிநேர சிறப்பாசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து தனி இடங்களில் அடைத்து வைத்துள்ளனர். உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடிய ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கூட கைது செய்து அடைத்து வைப்பது கண்டிக்கத்தக்கது.

    பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. மாதம் ரூ. 5000 என்ற மிகக்குறைந்த ஊதியத்தில் பணியில் சேர்ந்த அவர்களுக்கு 13 ஆண்டுகளாகியும் பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. ஆண்டுக்கு சராசரியாக ரூ. 576 என்ற அளவில் 13 ஆண்டுகளில் ரூ.7500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பணி நிலைப்புக் கோரி பல ஆண்டுகளாக போராடியும் பயன் இல்லாததால்தான் அவர்கள் மீண்டும் போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

    பகுதி நேர ஆசிரியர்களை அழைத்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அவர்களின் கோரிக்கையை ஏற்று பணி நிலைப்பு வழங்குவதற்கு பதிலாக ரூ.2500 ஊதிய உயர்வு வழங்குவதாக பேரம் பேசுகிறார். அதை ஏற்க மறுத்து ஆசிரியர்கள் போராட்டம் நட்த்தினால் அவர்களை கைது செய்து அடைத்து வைக்கிறார்கள்.

    இதன் மூலம் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறைகளையும், துரோகங்களையும் திமுக அரசு கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இதற்கு மன்னிப்பே கிடையாது.

    திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி ( எண் 181) அளித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்ய திமுக அரசு முன்வர வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    • ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.
    • மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம்.

    சமவேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.

    * பொங்கல் பண்டிகை தினத்தில் ஆசிரியர்கள் போராடுவது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

    * பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.

    * பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

    * கடந்த 12 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை.

    * மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெவ்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த டிசம்பர் 26-ந்தேதி காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது.

    கல்வித் துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம், சேப்பாக்கம் எழிலகம், கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என வெவ்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இடைநிலை மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    • ஆசிரியர் போராட்டம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
    • எது எப்படி இருந்தாலும் அவர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள்.

    சென்னை:

    சென்னை நந்தனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கலந்து கொண்டார்.

    அப்போது அவரிடம் நிருபர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்த கேள்விகளை சரமாரி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    ஆசிரியர் போராட்டம் 7 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. நான் அவர்களிடம் பேசி வருகிறேன். திருச்சியில் முதலமைச்சர் இதுபற்றி என்னிடம் கேட்டார். தேர்தல் வாக்குறுதியை கேட்கிறார்கள் என்றேன்.

    ஓய்வூதியம் சார்ந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் இடைநிலை ஆசிரியர்கள் சார்ந்த விவாதங்களை நிதித்துறை எங்களிடம் கேட்டுள்ளது. அதனை நாங்கள் தெளிவுபடுத்த இருக்கிறோம். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சம்பள கமிஷன்போது ஏற்பட்டது. நிதித்துறை அமைச்சர், செயலாளரிடம் பேசி நல்ல முடிவை எடுப்போம்.

    ஆசிரியர் போராட்டம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. கட்டாயம் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவோம். இதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்ட இருக்கிறார்கள் என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்.

    அவர்களின் உணர்வுகளை அந்த துறையின் அமைச்சர் என்ற அடிப்படையில் புரிந்து கொள்கிறேன். நல்ல முடிவை ஏற்படுத்தும் என்பது தான் ஆசை. கண்டிப்பாக பொறுமையாக இருந்தால் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    ஆசிரியர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர்கள் ஒரு கட்டத்தில் நிற்கிறார்கள். நாங்கள் ஒரு கட்டத்தில் இருக்கிறோம்.

    ஆசிரியர்களின் போராட்டம் உணர்வின் வெளிப்பாடு. அதனை ஆர்ப்பாட்டமாக, போராட்டமாக நாங்கள் பார்க்கவில்லை. படித்தவர்கள், எந்த எல்லை வரை போராட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும், நாட்டு மக்களுக்கு முன் உதாரணமாக அவர்களை பார்க்கிறேன். எது எப்படி இருந்தாலும் அவர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள். கண்டிப்பாக கைவிட மாட்டோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் 8-ம் நாளாக இன்றும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் எட்டாம் நாளாக இன்றும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் நேற்றைய போராட்டத்தின் போது ஆசிரியர்கள் சிலரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.

    இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. 2009- மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம் தான் கிடைக்கிறது. இந்த அநீதியை இழைத்தது திமுக அரசு தான். அது தான் இந்த அநீதியைப் போக்க வேண்டும்.

    திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது இந்தக் கோரிக்கையை ஆதரித்தது. போராடிய ஆசிரியர்களை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களே நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி (எண். 311) அளித்தார். ஆனால், இப்போது அதிகாரம் கிடைத்ததும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார்.

    தங்களுக்கான நீதியைக் கேட்டு போராடும் ஆசிரியர்களை ஒவ்வொரு நாளும் கைது செய்து திமுக அரசு அலைக்கழிக்கிறது. கைது செய்யப்படும் போது பெண் ஆசிரியர்கள் மனிதநேயமின்றி கொடூரமாக நடத்தப்படுகின்றனர். சென்னையில் நேற்று போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர் சங்கத் தலைவர் வில்லியம் என்பவரை காவல்துறை அதிகாரி ஒருவர் பேருந்துக்குள் குண்டுக்கட்டாக தூக்கி வீசியதுடன் கன்னத்தில் அறையும் காணொலி சமூக வலைத்தலங்களில் வேகமாக பரவி வருகிறது.

    அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்ற ஆசிரியரின் கை உடைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இத்தகைய அடக்குமுறைகளை மன்னிக்க முடியாது. இத்தகைய அடக்குமுறைகளின் மூலம் போராட்டத்தை முடக்கிவிடவும் முடியாது. ஆசிரியர்களை தாக்கிய காவல்துறையினர் மீது தமிழக அரசு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு முக்கியப் பங்களிக்கும் ஆசிரியர்களை போராடும் நிலைக்கு தள்ளும் எந்த அரசும் நீடித்த வரலாறு இல்லை. திமுக அரசு அதையும் கடந்து ஆசிரியர்களைத் தாக்குதல் உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இதற்கான பாடத்தை திமுகவுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் புகட்டுவார்கள்.

    • கடந்த 28-ந்தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்.

    சென்னை:

    தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

    இந்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 26-ந்தேதி இடைநிலை ஆசிரியர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். 27-ந்தேதி எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த 28-ந்தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று முன்தினம் சென்னை எழிலகம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் ஆகிய 2 இடங்களில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். நேற்று எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி னார்கள். அதன்பிறகு பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு கல்லூரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். இருவழி சாலையில் ஒரு பகுதியில் முழுவதும் ஆசிரியர்கள் அமர்ந்ததால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போராட்டம் குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறியதாவது:-

    எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும். இதுவரை விடுமுறை நாட்களில் போராடி வந்தோம். இனி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. ஆனாலும் நாங்கள் வேலை நாட்களில் விடுமுறை எடுத்து போராட்டத்தை தொடருவோம். எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்தால் அமர்ந்து போராடுவோம். எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். புத்தாண்டு, பொங்கல் நாட்களிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆசிரியர்கள் மறியல் போராட்டம் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் பதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்திய ஆசிரியர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    • எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் 100-க்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • திடீரென்று அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த தேர்தலில் தி.மு.க. இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது.

    இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 1500 ஆசிரியர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    நேற்று இடைநிலை ஆசிரியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதற்காக காலையில் எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை அலுவலகம், எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் 100-க்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அவர்கள் சென்னை சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 11.15 மணியளவில் ஆசிரியர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போராட்டம் நடைபெறும் கலெக்டர் அலுவலகத்துக்கு சாரை சாரையாக வந்தனர். திடீரென்று அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 500-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    போராட்டத்தின்போது 3 ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது.
    • பள்ளிக் கல்வித்துறை தலைமை அலுவலகம் முன்பு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராட்டம்

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்று (டிச. 26) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை தலைமை அலுவலகம் முன்பு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

    இடைநிலை ஆசிரியர்களிடம் உள்ள ஊதிய முரண்பாட்டைக் கலைய வேண்டும் எனவும், 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக கொடுத்த 311வது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடவும் முயன்றனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர். 

    இந்நிலையில் ஆசிரியர்களின் இந்த கைதுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    "திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    "சம வேலைக்கு சம ஊதியம்" என்று வாய்கிழிய வாக்குறுதி அளித்துவிட்டு, நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லை எனில், அதனை ஒப்புக்கொள்ளுங்கள் ஸ்டாலின் அவர்களே!

    ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 


    • சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்டபோது ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வாளகத்தை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

    காவல் வாகனத்தை ஏற மறுத்து இடைநிலை ஆசிரியைகள் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    2009ம் ஆண்டுக்குப்பின் பணி வழங்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் தரப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டபோது ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×