search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரமம்"

    • மதுரை ஆசிரமத்தில் மனைவி சேர்ந்ததால் கடை உரிமையாளரை, வாலிபர் தாக்கினார்.
    • இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி நடுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 32). இவர் அதே பகுதியில் பெயிண்ட் கடை வைத்துள்ளார்.

    இவரது கடையில் தென்காசி மாவட்டம் ராயகிரி நடுத்தெருவை சேர்ந்த கண்ணன்(42) என்பவரின் மனைவி ஜெய பிரபா(35) வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி ஜெயபிரபா திடீரென மாயமானார். தனது மனைவியை கண்ணன் பல இடங்களில் தேடினார். மேலும் பலரிடம் விசாரித்தார்.

    அப்போது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு ஆசிர மத்தில் ஜெயபிரபா தங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற கண்ணன், தன்னுடன் வருமாறு மனைவியை அழைத்தார்.

    ஆனால் ஆசிரமத்திலேயே இருக்க விரும்புவதாக கூறி அவருடன் செல்ல ஜெ யபிரபா மறுத்துவிட்டார்.மனைவி ஆசிரமத்தில் சேர்ந்ததற்கு அவரது கடை உரிமையாளர் கதிரேசன் தான் காரணம் என நினைத்து கண்ணன் அவர் மீது ஆத்திரமடைந்தார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று பெயிண்ட் கடைக்கு சென்ற அவர், மனைவி ஆசிரமத்தில் சேர்ந்ததற்கு கதிரேசன்தான் காரணம் எனக்கூறி கதிரேசனுடன் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கண்ணன் அவரை அடித்து உதைத்தார்.

    இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் கதிரேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1982-ம் ஆண்டு மண்டைக்காட்டில் ஏற்பட்ட கலவரம் மதத்தின் அடிப்படையில் ஏற்பட்டது அல்ல.
    • 8-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார்.

    நாகர்கோவில்:

    தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர் கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தா மகராஜ் மண்டைக்காடு கோவிலில் நடைபெறுகின்ற சமய சொற்பொழி தொடர் பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். அவருக்கு எனது கண்டனத்தை தெரி வித்துக் கொள்கிறேன். 1982-ம் ஆண்டு மண்டைக் காட்டில் ஏற்பட்ட கலவரம் மதத்தின் அடிப்படையில் ஏற்பட்டது அல்ல. அது ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டது. இப்போது கன்னியாகுமரி மாவட்டம் அமைதி பூங்காவாக உள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 20 மாதத் தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வழிகாட்டுதலின் பேரில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் குடமுழுக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அதிக நிதியை தமிழக முதல்வர் குமரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.

    இந்து சேவா சங்கம் என்ற பெயரில் அறநிலை யத்துறை கோவில்க ளில் உள்ள கட்டிடங் களை கையகப்படுத்தி கோவிலில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் இந்து சேவா சங்கம் நடத் தியது என கூறி வந்தனர். புகாரின் பேரில் தமிழக முதல்வர் நிகழ்ச்சிகளை அறநிலையத்துறை நடத்தும் என அறிவித்துள்ளார்.

    மண்டைக்காட்டில் ஹைந்தவ சேவா சங்கம் நடத்தும் சமய மாநாட்டில் உள்ள போஸ்டரில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் பெயரை போட்டுள்ளனர். இதனால் இந்து சமய மாநாடா? அரசியல் மாநாடா? என்று தெரிந்து கொள்ள வேண் டும். மார்ச் 5-ந் தேதி மாசி கொடைவிழா சிறப்பாக நடக்கும்.

    நிகழ்ச்சிக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தருகிறார். அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடக்கும். 8-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார். உங்கள் பேச்சை குறைத் துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அன்பு ஜோதி ஆசிரமம் கடந்த 17 ஆண்டுகளாக லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்டு வந்ததும் வருவாய்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • ஆசிரமத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கும் ஆதரவற்றோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூர் என்ற இடத்தில் 'அன்பு ஜோதி' என்ற பெயரில் ஆதரவற்றோர் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆசிரமத்தில் மர்மமான முறையில் பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோரில் பல பெண்களும் இங்கு தங்கி இருந்துள்ளனர்.

    இந்நிலையில் ஆசிரமத்தில் தங்கி இருந்த பெண்கள் பலர் போதை மருந்து கொடுத்து கற்பழிக்கப்பட்டிருப்பதாக பரபரப்பான புகார்கள் கூறப்பட்டுள்ளன.

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆசிரமத்தில் நான் தங்கி இருந்தபோது என்னை சங்கிலியால் கட்டி வைத்து போதை பொருள் கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என்கிற அதிர வைக்கும் குற்றச்சாட்டை கூறியதை தொடர்ந்துது அதிகாரிகள் அதிரடி விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் ஆசிரமத்தில் பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வந்தது வெட்ட வெளிச்சமானது.

    ஒடிசாவைச் சேர்ந்த பெண் தனது மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளார். விழுப்புரத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்த அவரை மீட்பு குழு ஒன்று மீட்டு அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்துவிட்டுள்ளது. இதன் பின்னர் 5 ஆண்டுகள் அந்த ஆசிரமத்திலேயே தங்கி இருந்த அப்பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது உறுதியானது. இதையடுத்து ஆசிரம உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதையடுத்து ஆசிரமத்தை நடத்தி வந்த நபரான பிஜூ அவரது மனைவி உள்பட 8 பேர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    வெளி மாநில பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அன்பு ஜோதி ஆசிரமம் கடந்த 17 ஆண்டுகளாக லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்டு வந்ததும் வருவாய்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் தனியாக ஒரு வழக்கும் போடப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக ஆசிரமம் நடத்திய குற்றத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    ஒடிசா பெண்ணை போன்று மேலும் பல பெண்கள் ஆசிரமத்தில் சிறை வைக்கப்பட்டு வலுக்கட்டாயமாக கற்பழிக்கப் பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது.

    இந்த ஆசிரமத்தில் மொத்தம் 150 பேர் வரை தங்கி இருந்துள்ளனர். இவர்களில் சிலர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மற்ற அனைவரும் மீட்கப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆசிரமத்தில் குரங்குகளை கூண்டில் அடைத்து வைத்திருந்ததும், பல நேரங்களில் குரங்குகளை வெளியில் திறந்து விட்டு கடிக்க வைத்திருக்கும் திடுக்கிடும் தகவலும் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.

    இதனால் மீட்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்றோரின் உடல்களில் காயங்கள் தடிப்பு தடிப்பாக இருந்துள்ளன. இவைகளை எல்லாம் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த காயங்கள் குரங்குகள் கடித்ததால் மட்டும் ஏற்பட்டதா? இல்லை வேறு வகையில் சித்ரவதை செய்யப்பட்டதால் நிகழ்ந்ததா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த ஆசிரமத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கும் ஆதரவற்றோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூருக்கு 15 பேர் வரை அனுப்பப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக முறையான பதிவேடுகளும் ஆசிரமத்தில் இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆசிரமம் தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, "மர்ம தேசம் போல ஆசிரமம் செயல்பட்டு வந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சிவானந்தா ஆசிரமத்தில் அன்னதானம் நடந்தது.
    • சித்த சமாஜ ஸ்தாபகர் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தினமாகிய திருக்கார்த்திகையை முன்னிட்டு நடந்தது.

    ராஜபாளையம்

    சித்த சமாஜ ஸ்தாபகர் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தினமாகிய திருக்கார்த்திகையை முன்னிட்டு ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அய்யனார் கோவிலில் அருகே உள்ள சிவானந்தா ஆசிரமத்தில் மகா அன்னதானம் நடந்தது.

    ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சித்தவித்தியார்த்திகள் கலந்து கொண்டு சுவாமி சிவானந்த பரமஹம்சரின் அருளுரைகளை எடுத்துக் கூறினர்.

    விழா ஏற்பாடுகளை கார்த்திகை விழா கமிட்டி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் இருந்த சன்சாய் என்பவரை ஒப்படைத்தனர்.
    • சன்சாய் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி :

    சுசீந்திரம் அருகே உள்ள கோழிக்கோட்டு பொத்தையில் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 9-ந் தேதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் இருந்த சன்சாய் (வயது 36) என்பவரை ஒப்படைத்தனர்.

    நேற்று முன்தினம் சன்சாய் உணவு அருந்தாமல் சோர்வாய் இருந்தவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சன்சாய் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன் பேரில் ஆசிரம நிர்வாகி இக்னேசியஸ் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ் பெக்டர் ஆஷாஜெபகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன சன்சாய் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    ×