என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yoga guru"

    • 20 வருடங்களாக கோவாவில் கிராந்தி யோகா வகுப்புகளை கற்பித்து வந்தார்.
    • ஐந்து ஏக்கர் நிலத்தில் ஒரு புதிய ஆசிரமத்தைக் கட்டும் பணியைத் தொடங்கினார்.

    தனது ஆசிரமம் மூலம் கஞ்சா விற்பனை செய்ததற்காக பிரபல யோகா குரு கைது தருண் கிராந்தி அகர்வால் செய்யப்பட்டார்.

    தருண் கிராந்தி அகர்வால் கடந்த 20 வருடங்களாக கோவாவில் யோகா வகுப்புகளை கற்பித்து வந்தார். வெளிநாட்டினருக்கும் அவரை தேடி வந்து யோகா கற்றனர்.

    இறுதியாக அவர் கோவாவில் உள்ள ஆசிரமத்தின் செயல்பாடுகளை முடித்துக்கொண்டு சத்தீஸ்கருக்கு வந்தார். அங்கு ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் ஒரு புதிய ஆசிரமத்தை கட்டும் பணியை தருண் கிராந்தி அகர்வால் மேற்கொண்டு வந்தார்.

    ஐந்து ஏக்கர் நிலத்தில் ஒரு புதிய ஆசிரமத்தைக் கட்டும் பணியைத் தொடங்கினார். அதற்கு முன் அங்கு அவர் ஒரு தற்காலிக ஆசிரமத்தையும் அமைத்திருந்தார். இங்கு அண்மையில் வெளிநாட்டிலிருந்து சிலர் வந்திருந்தனர். அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.

    இறுதியாக, போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. NDPS பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு யோகா குரு தருண் கிராந்தி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

    கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #Ramdev
    லக்னோ:

    கர்நாடகா மாநில சட்டசபைக்கு கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதுவரை இந்த அளவுக்கு வாக்குகள் பதிவானதில்லை என்பதால் அங்கு ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. கர்நாடகாவில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 113 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த மேஜிக் நம்பரை எட்டப்போவது யார் என்பது பரபரப்பான சஸ்பென்சாக உள்ளது.



    இந்நிலையில், கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு தான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்படும்.

    இந்த தேர்தலில் பாஜக நிச்சயம் வென்று தென்னிந்தியாவில் ஆட்சி அமைக்கும். கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #Ramdev
    ×