என் மலர்
நீங்கள் தேடியது "Vijaysethupathi"
மும்பையில் ஒரு சாதாரண மனிதனாக விஜய் சேதுபதி வாழ்ந்து வருகிறார். வாழ்க்கையில் தொடர்ந்து சந்திக்கும் இழப்புகள், பண நெருக்கடி, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு நடுவே அவர் பயணம் தொடங்குகிறது. மறுபக்கம் பெரும் பணக்காரரான அரவிந்த் சாமி, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு தனது சொத்துக்களை இழக்கிறார்.
இருவரும் ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். அதன்பின் இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? இவர்களின் நிலைமைக்கு என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விஜய் சேதுபதி பார்வை, உடல் மொழி, முகபாவனை மூலம் கவர்ந்து இருக்கிறார். எந்த டயலாக் இல்லாமலும் ஒரு மனிதனின் வலி, கோபம், குழப்பம், அமைதி ஆகிய அனைத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பு தான் முக்கிய பலம்.
அரவிந்த் சுவாமி, குறைந்த காட்சிகளில் வந்தாலும் கதைக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்கிறார். அதிதி ராவ், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் அமைதியான நடிப்பை கொடுத்துள்ளார். அனைவருமே வசனம் இல்லாத இந்த உலகத்துக்குள் நன்றாக பொருந்தி நடித்துள்ளனர்.
காந்தி டாக்ஸ் வழக்கமான வணிகப்படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான முயற்சி. வசனமே இல்லாமல், காட்சிகள், முகபாவனைகள், இசை மூலமாக மட்டுமே கதை சொல்லப்பட்டிருக்கிறது.
இயக்கம்
இயக்குனர் கிஷோர் பாண்டுரங்கா பெலேக்கர், ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை போராட்டத்தை மிக அமைதியாக சொல்ல முயற்சி செய்துள்ளார். சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், படம் தன் பாதையை விட்டு விலகவில்லை.
எல்லாவற்றையும் பார்வையாளரே உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையோடு படம் நகர்கிறது. காந்தி டாக்ஸ் எல்லோருக்குமான படம் அல்ல. வசனம், மாஸ் காட்சிகள், வேகமான திரைக்கதை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இது சவாலாக இருக்கலாம். ஆனால் வித்தியாசமான முயற்சி, நடிப்பை ரசிக்கும் பார்வையாளர்களுக்கு இது ஒரு புதிய அனுபவம்.
இசை
ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் உயிர். இவர் இசை இல்லாமல் இந்த படம் முழுமை பெறாது. ஒவ்வொரு காட்சிக்கும் தேவையான உணர்வை இசை மூலம் கொண்டு வந்துள்ளார்.
ஒளிப்பதிவு
கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவு படத்தின் மனநிலையை அழகாக பதிவு செய்துள்ளது.
ரேட்டிங்-3/5
- வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக காந்தி டாக்ஸ் உருவாகியுள்ளது.
- 'காந்தி டாக்ஸ்' படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் நடித்திருந்தனர். இதன்பின்னர் இந்த மூவர்கள் கூட்டணி இணைந்துள்ள படம் 'காந்தி டாக்ஸ்'.
வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக உருவாகியுள்ள காந்தி டாக்ஸ், டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கியுள்ள 'காந்தி டாக்ஸ்' படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
மேலும், 'காந்தி டாக்ஸ்' படம் காந்தி நினைவுதினமான வருகிற 30-ந்தேதி உலகளவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், காந்தி டாக்ஸ் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் நடித்திருந்தனர். இதன்பின்னர் இந்த மூவர்கள் கூட்டணி இணைந்துள்ள படம் 'காந்தி டாக்ஸ்'.
வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக உருவாகியுள்ள காந்தி டாக்ஸ், டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கியுள்ள 'காந்தி டாக்ஸ்' படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
மேலும், 'காந்தி டாக்ஸ்' படம் காந்தி நினைவுதினமான வருகிற 30-ந்தேதி உலகளவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், காந்தி டாக்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியாகியுள்ளது.
- நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார்.
- ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் பாலய்யா நடிக்கிறார்.
சென்னை:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது. 'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார். 'ஜெயிலர்' முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்த அவர், 2026, ஜூன் மாதம் 12-ம் தேதி 'ஜெயிலர் 2' வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.
ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகின்றனர்.
அதன்படி, இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, சந்தானம், ஃபஹத் பாசில், தமன்னா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது
இதற்கிடையே, 'ஜெயிலர் 2' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாகவும், கோவா படப்பிடிப்பின் போது அவர் படப்பிடிப்பு தளத்தில் இணைந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, ஜெயிலர் 2 படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, விஜய் சேதுபதி அளித்த பேட்டியில், எனக்கு ரஜினி சாரை பிடிக்கும். அதனால்தான் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறேன். அவருடன் இருக்கும்போது பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என தெரிவித்தார்.
கார்த்திக் சுப்பராஜின் பேட்ட (2019) படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இதுவாகும்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 80 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் கடைசி விளையாட்டில் காரில் இருந்து சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.
இந்த நடவடிக்கைக்காக இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கவேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இந்த வார வீக்கெண்ட் எபிசோடில் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை கேட்டு பிக்பாஸ் ரசிகர்கள் சந்தோஷமாகியுள்ளனர். இந்நிலையில், விஜய் சேதுபதி கொடுத்த ரெட் கார்ட் தீர்ப்புக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரங்களில் வெளியேறிய கனி வரவேற்பு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,"தெய்வம் நின்று கொல்லும்" என குறிப்பட்டு பகிர்ந்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான திரைப்படம் "விடாமுயற்சி". இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்தாண்டு தொடக்கத்தில் வெளியாய இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், விமாமுயற்சி படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, மகிழ் திருமேனி தனது அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். வில்லனாக நடிக்க சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இப்படம் குறித்த மேற்கொண்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான படம் 'தக் லைஃப்'. திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானது.
இயக்குநர் மணிரத்னம் தக்லைஃப் படத்தை தொடர்ந்து, தனது அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் தனது கதையை சிம்பு, விஜய் சேதுபதியிடம் கூறியதாகவும், இதில், சிம்பு அரசன் மற்றும் அஷ்வத்தின் படத்தில் பிஸியாக இருக்கும் நிலையில் விஜய் சேதுபதியை வைத்து எடுக்க முடிவு செய்துள்ளார்.
விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ருக்மிணி வசந்திடம் பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- ரேஜ் திரைப்படத்தை டைரக்டர் சிவனேசன் இயக்கியுள்ளார்.
- நடிகர் ஷான், இயக்கி தயாரிப்பு நிறுவனம், ரேஜ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றார்.
சென்னை:
நடிகர் ஷான் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிக்கும் 'ரேஜ்' திரைப்படத்தின் டைட்டில் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார்.
நடிகர் ஷான், இயக்கி தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரேஜ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரேஜ்' திரைப்படத்தில் ஷான், ஷெர்லி பவித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
எம்.எஸ்.நவீன் குமார் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்திற்கு விபின் .ஆர் இசையமைக்கிறார். லவ் வித் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை இயக்கி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் டைட்டில் லுக்கில் 'இயல்புக்கு மீறிய காதல் கதை' என்ற டேக் லைன் இணைக்கப்பட்டிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
- 'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வௌியிட்டது. இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிடப்பட்டது.
இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
மேலும், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 'தலைவன் தலைவி' படத்தின் ரிலீஸ் தேதி நாளை காலை 11.11க்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
- திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
- விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே.
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வௌியிட்டது. இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிடபட்டது.
இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
மேலும், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
அதன்படி, தலைவன் தலைவி திரைப்படத்தின் முதல் பாடலான 'பொட்டல முட்டயே' பாடல் வெளியானது.
- விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்
- இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் 50 - வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். படத்தின் முதல் பாடலான உருகுது உருகுது பாடல் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது. வெளியிட்ட போஸ்டரில் விஜய் சேதுபதி கடும் கோபத்துடன் கையில் துப்பாக்கி வைத்தபடி இருக்கிறார். அவருக்கி பின்னால் சீட்டுக்கட்டு இடம் பெற்றுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை’.
- இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விடுதலை
இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.

விடுதலை
இந்நிலையில், 'வட சென்னை' படத்தில் நடிப்பதை மிஸ் பண்ணிட்டேன் என்று நடிகர் விஜய் சேதுபதி வருத்தமாக கூறியுள்ளார். 'விடுதலை' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, "வட சென்னை படத்தில் நடிப்பதை மிஸ் பண்ணிட்டேன். வட சென்னை பார்ட் 2 எழுதிகிட்டு இருக்காரு, கதை அருமையாக இருக்கிறது விரைவில் வரும்.

விஜய் சேதுபதி - வெற்றிமாறன்
யாரோ யூடியூப்ல எது எதோ சொல்றாங்க. அதுனால நான் இதை சொல்லிக்கிறேன். வட சென்னை படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு மிகவும் வருந்தியிருக்கிறேன். அதனால் படத்தை பார்த்தால் ரொம்ப வருத்தப்படுவேன் என்று அந்தப் படத்தை நான் பார்க்கல. பாட்டு மட்டும்தான் பார்த்தேன். இதப்பத்தி வெற்றிமாறான் சார்கிட்டையும் கூறியுள்ளேன்" என்று பேசினார்.






