search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "viduthalai siruthai party"

    • தனியாா் வீட்டுமனைப் பிரிவு சாா்பில் தீண்டாமை சுவா் அமைக்கப்பட்டுள்ளது.
    • 18க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளன.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூா் அருகே அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெருமாநல்லூா் நான்கு வழிச் சாலை சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் கூறியதாவது: - ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட முட்டியங்கிணறு ஆதிதிராவிடா் காலனியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள தனியாா் வீட்டுமனைப் பிரிவு சாா்பில் தீண்டாமை சுவா் அமைக்கப்பட்டுள்ளது. இச்சுவற்றை ஒட்டிய பகுதியில் தனியாா் வீட்டுமனைப் பிரிவின் சாக்கடை நீா் வெளியேறுவதால் 18க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளன.

    இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காரணமானவா்கள் மீது வன்கொடுமை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றனா். இந்தப் போராட்டத்தில் பொறுப்பாளா்கள் ஏ.பி.ஆா். மூா்த்தி, தமிழ்வேந்தன், பழ.சண்முகம், ரேவதி, பட்டுரோஜா உள்பட பலா் கலந்து கொண்டனா். 

    • திருமாவளவன் முன்னிலையில் ஆர்.ஆர். முத்தையன் அந்தக் கட்சியில் இணைந்தார்.
    • திருமாவளவன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    திருப்பூர் :

    அகில இந்திய பிரியங்கா ராகுல் காந்தி பேரவையின் மாநில தலைவர் ஆர்.ஆர்.முத்தையன். இவர் நேற்று அந்த அமைப்பில் இருந்து விலகி, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார்.

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முன்னிலையில் ஆர்.ஆர். முத்தையன் அந்தக் கட்சியில் இணைந்தார். அவருடன் அகில இந்திய பிரியங்கா ராகுல்காந்தி பேரவை மாவட்ட நிர்வாகிகள் சிவஞானம், பார்த்தீபன் உள்ளிட்டோரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். ஆர்.ஆர்.முத்தையன் தலைமையில் கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களை தலைவர் திருமாவளவன் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் துரைவளவன், மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சி 25-வது மாநாடு நாளை நடக்கிறது.
    • ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    திருப்பூர்

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில 25-வது மாநாடு திருப்பூர் தாராபுரம் சாலை வித்யா கார்த்திக் திருமண மண்டப வளாகத்தில் நாளை நடக்கிறது.இதையொட்டி நாளை மாலை 4மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மற்றும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் தமிழ்வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., நாளை மாலை 4மணிக்கு திருப்பூர் வருகிறார். அவருக்கு திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும் திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    பின்னர் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.  

    திருமாவளவன் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #VCK
    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார்.

    தற்போது அந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    அவதூறு பரப்பிய இளைஞரை கைது செய்யக்கோரி அரூர் கச்சேரிமேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஜானகிராமன், சாக்கன்சர்மா, பாரதிராஜா, ராமச்சந்திரன், மூவேந்தன், சித்தார்த்தன், கேசவன் உள்பட பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவதூறு பரப்பிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #VCK #thirumavalavan
    ×