என் மலர்
நீங்கள் தேடியது "tag 115471"
திருப்பூர்:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1, 2, 3 ஆகிய வகுப்புகள்கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2022 - 23 ம் கல்வி ஆண்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 2022 - 23 ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் திறன் மேம்பாட்டு நாட்காட்டியின்படி எண்ணும் எழுத்தும் திட்ட மாநில அளவிலான பயிற்சி நடைபெற்று முடிந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியினை திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் சங்கர் மற்றும் பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் ஆகியோர் தலைமை ஏற்றுத் தொடங்கி வைத்தனர்.
பயிற்சி நிறுவன முதல்வர் தனது தலைமை உரையில், எண்ணும் எழுத்தும் பயிற்சியின் நோக்கம், குறிக்கோள்கள், கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்தல், வகுப்பறை செயல்பாடுகள் வடிவமைத்தல், கற்றல் மூலைகளின் பயன்பாடு, மதிப்பீட்டுப் பணியின் முக்கியத்துவம், வட்டார அளவில் நடைபெறும் பயிற்சி திட்டம் குறித்து விளக்கி கூறினார்.
மாநில அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் கௌரி, மகேஸ்வரி, தெய்வானை, காளிதாஸ், நாகராஜன், சிந்துஜா, காசி, உமாதேவி, கார்த்திகேயன், தமிழ்செல்வி, ஸ்ரீதர், குமார், பாலசுப்பிரமணியம் ஆகியோர் மாவட்ட அளவில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சியினை வழங்கினர்.
இப்பயிற்சியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கம், கையேடுகள் அறிமுகம், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், கதைக்களம், படைப்பாற்றல் களம், கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உருவாக்குதல், செயல்பாடுகளை வடிவமைத்து வழங்குதல், உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் மதிப்பீட்டு பணியை மேற்கொள்ளுதல் ஆகியவை செயல்படுத்தப்பட்டன. மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் வட்டார அளவில் கற்பிக்கும் 1866 ஆசிரியர்களுக்கு நேரடிப்பயிற்சி வழங்க உள்ளனர்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் விமலா தேவி, பாபி இந்திரா, முனைவர் சரவணகுமார், விரிவுரையாளர்கள் ராஜா, பிரபாகர், சுகுணா, கௌசல்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 237 வாக்குச்சாவடி மையங்கள், ஈரோடு மேற்கு தொகுதியில் 298 வாக்குச்சாவடி மையங்கள், மொடக்குறிச்சி தொகுதியில் 275 வாக்குச்சாவடி மையங்கள், பெருந்துறை தொகுதியில் 263 வாக்குச்சாவடி மையங்கள், பவானி தொகுதியில் 289 வாக்குச்சாவடி மையங்கள், அந்தியூர் தொகுதியில் 261 வாக்குச்சாவடி மையங்கள், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 296 வாக்குச்சாவடி மையங்கள், பவானிசாகர் தொகுதிக்கு 294 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
அங்கு பணியாற்ற 2 ஆயிரத்து 656 தலைமை அதிகாரிகள், நிலை-1, நிலை-2, நிலை-3 அலுவலர்கள் 7 ஆயிரத்து 968 பேர் என மொத்தம் 10 ஆயிரத்து 624 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு பற்றி 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதில் முதல்கட்ட பயிற்சி கடந்த மாதம் 24-ந் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி நேற்று நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்திலும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையத்திலும் நடந்தது. அங்கு வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் கருவிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், வாக்காளர்களை உள்ளே அனுமதிக்கும் முறை, அவர்களுடைய அடையாள அட்டையை சரிபார்த்தல், வாக்குப்பதிவு செய்ததன் அடையாளமாக விரலில் மை வைத்தல், ஓட்டு போட அனுமதித்தல் போன்ற செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிதம்பரம் தனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதில் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 297 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள 1,445 அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 290 வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றவுள்ள 1,409 அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது. இதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பினை அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி பார்வையிட்டார்.
இதில் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி, தாசில்தார் குமரய்யா, மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் (இடைத்தேர்தல்) நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து 20,271 பேர்கள் தேர்தல் பணி அலுவலர்களாக தெரிவுசெய்து அவர்களுக்கு தேர்தல் பணிக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அவர்களது பணி நியமனம் குறித்து குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது.
இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் 24.3.2019 (ஞாயிற்றுக்கிழமை), 7.4.2019 (ஞாயிற்றுக்கிழமை), 14.04.2019 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 17.4.2019 (புதன்கிழமை) அன்றும் நடைபெற உள்ளது. தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பயிற்சி நடைபெறும் வகுப்புகளுக்கு மேற்கூறிய நாட்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் அனைவருக்கும் அவர்களது விவரங்கள் அடங்கிய தகவல் குறிப்பு படிவம் வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்து விடுபட்ட விவரங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். இந்தப் படிவங்கள் 24.3.2019 அன்று பயிற்சி மையங்களிலேயே வழங்கப்படும்.
புகைப்படம் ஒட்டத்தவறிய அலுவலர்களுக்கு உதவிடும் வகையில் அந்தந்தப் பயிற்சி மையங்களில் வெப்கேமரா மூலம் புகைப்படங்கள் எடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் பயிற்சி கையேடுகள் இவ்வகுப்புகளில் வழங்கப்படும். அலுவலர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் நகலினை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளும் அலுவலர்களுக்கு உதவிடும் வகையில் 16 மருத்துவக் குழுக்கள் அந்தந்தப் பயிற்சி மையங்களில் பணியாற்றவுள்ளனர்.
பயிற்சியில் கலந்து கொள்ளத் தவறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்தால் மட்டுமே இறுதி ஆணை பிறப்பிக்க இயலும். இதுதொடர்பாக அவர்களது பணிப்பதிவேடுகளிலும் பதிவு மேற்கொள்ளப்படும். எனவே, அனைவரும் மேற்கண்ட பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LSPolls
பெரம்பலூரில் மதன கோபாலபுரத்தில் அமைந்துள்ள ஐ.ஓ.பி. கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் காகிதப்பைகள் தயாரிக்கும் இலவச பயிற்சி 2 வாரங்கள் நடைபெற்றது. இந்த பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற 34 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பைகள் உபயோகத்திற்கு அரசு தடைவிதித்துள்ளது.
பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் முற்றிலும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாற்று வழி முறையான காகிதப்பைகளை வியாபாரிகள் அதிகளவு பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் காகிதப்பை தயாரிப்பை அனைவரும் ஊக்கப்படுத்திட முன்வர வேண்டும் என்று கூறினார். இதில் வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையை அடுத்த சிட்லப்பாக்கம் சாந்தி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மகன் சாய்ஸ்ரீவத்சன் (வயது 15). இவர், தாம்பரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
சாய்ஸ்ரீவத்சன், மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் தங்க பதக்கம் பெற்று உள்ளார். தற்போது மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த சில தினங்களாக கிண்டி வேளச்சேரி சாலையில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்து வந்தார்.
நேற்று காலை தந்தை ஸ்ரீதருடன் சாய்ஸ்ரீவத்சன், கிண்டியில் உள்ள நீச்சல் குளத்துக்கு வந்தார். சாய்ஸ்ரீவத்சன் தனியாகவும், அவரது தந்தை ஸ்ரீதர் தனியாகவும் நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென சாய்ஸ்ரீவத்சனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் நீச்சல் குளத்தில் இருந்து கரையேறி வந்த அவர், மயங்கி விழுந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தை ஸ்ரீதர் மற்றும் அங்கு நீச்சல் பயிற்சிக்கு வந்தவர்கள் சாய்ஸ்ரீவத்சனை மீட்டு கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சாய்ஸ்ரீவத்சன் பரிதாபமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான அலுவலர்களுக்கு தேர்தல் கல்விக்குழு தொடர்பான பயிற்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது;-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி, தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக 67 பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது.
18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். வாக்காளர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், தொடர்பு அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும், கட்டுப்பாட்டு எந்திரம், வாக்குப்பதிவு எந்திரம் செயல்பாடுகளை தெரிந்து கொண்டு, இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்விக்குழுவின் செயல்பாடுகளை தொடர்பு அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் கண்காணித்து குழுவின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். எதிர்வரும் தேர்தலில் தகுதிவாய்ந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு விழிப்புணர்வுகள் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவினை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், தேர்தல் தாசில்தார் நாகராஜன், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநகராட்சி உதவி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பள்ளிக்கல்லூரி தேர்தல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக அரசின் 9-ம் வகுப்பு புதிய பாட புத்தகம் திட்டம் குறித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமை மாவட்ட கல்வி அதிகாரி செல்வம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பாடத்தின் எளிமை, பெருமை, அட்டை படம், கியு ஆர் கோடு மற்றும் அதன் 6 இலக்க நம்பர் ஆகியவற்றை குறித்து ஆசிரியர் களுக்கு விளக்கி எடுத் துரைக்கப்பட்டது. இது ஆன் லைன் மற்றும் ஆப் லைன் மூலம் எவ்வாறு பயன்படுத்தலாம் எனவும் ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. புத்தகம் எடுத்து செல்லாமல் ஆசிரியர்கள் பாடம் நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஆசிரியர்கள் மாணவர்கள் கியுஆர் கோடு மூலம் காணொலி மூலம் பாடத்திட்டத்தை அறிந்து படித்தல் மூலம் அதனை புரிந்து, அறிந்து படிக்க முடியும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த பயிற்சி முகாம் தமிழ், ஆங்கிலம், கணிதம் என ஒவ்வொரு படத்திற்கும் இரண்டு நாட்கள் வீதம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
6-வகுப்பு ஆசிரியர்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 11-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு கீழப்பழுவூர் சாமி பள்ளியிலும் பாட புத்தகம் குறித்த ஆசிரியர்களுக்கு விளக்க பயற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூறுகையில், தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாட திட்டங்கள் மாணவர் களின் திறனானது மேம்படுத்தப்படும். மாணவர்கள் தங்களை அனைத்து விதத்திலும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களிடம் போட்டி போட முடியும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்தின் எளிமை, பெருமை, அட்டை படம், கோடு மற்றும் அதன் 6 இலக்க நம்பர் ஆகியவற்றை குறித்து ஆசிரியர் களுக்கு விளக்கி கூறினார்.






