search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சி"

    மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் வட்டார அளவில் கற்பிக்கும் 1866 ஆசிரியர்களுக்கு நேரடிப்பயிற்சி வழங்க உள்ளனர்.

    திருப்பூர்:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1, 2, 3 ஆகிய வகுப்புகள்கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2022 - 23 ம் கல்வி ஆண்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 2022 - 23 ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் திறன் மேம்பாட்டு நாட்காட்டியின்படி எண்ணும் எழுத்தும் திட்ட மாநில அளவிலான பயிற்சி நடைபெற்று முடிந்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியினை திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் சங்கர் மற்றும் பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் ஆகியோர் தலைமை ஏற்றுத் தொடங்கி வைத்தனர்.

    பயிற்சி நிறுவன முதல்வர் தனது தலைமை உரையில், எண்ணும் எழுத்தும் பயிற்சியின் நோக்கம், குறிக்கோள்கள், கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்தல், வகுப்பறை செயல்பாடுகள் வடிவமைத்தல், கற்றல் மூலைகளின் பயன்பாடு, மதிப்பீட்டுப் பணியின் முக்கியத்துவம், வட்டார அளவில் நடைபெறும் பயிற்சி திட்டம் குறித்து விளக்கி கூறினார்.

    மாநில அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் கௌரி, மகேஸ்வரி, தெய்வானை, காளிதாஸ், நாகராஜன், சிந்துஜா, காசி, உமாதேவி, கார்த்திகேயன், தமிழ்செல்வி, ஸ்ரீதர், குமார், பாலசுப்பிரமணியம் ஆகியோர் மாவட்ட அளவில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சியினை வழங்கினர்.

    இப்பயிற்சியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கம், கையேடுகள் அறிமுகம், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், கதைக்களம், படைப்பாற்றல் களம், கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உருவாக்குதல், செயல்பாடுகளை வடிவமைத்து வழங்குதல், உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் மதிப்பீட்டு பணியை மேற்கொள்ளுதல் ஆகியவை செயல்படுத்தப்பட்டன. மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் வட்டார அளவில் கற்பிக்கும் 1866 ஆசிரியர்களுக்கு நேரடிப்பயிற்சி வழங்க உள்ளனர்.

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் விமலா தேவி, பாபி இந்திரா, முனைவர் சரவணகுமார், விரிவுரையாளர்கள் ராஜா, பிரபாகர், சுகுணா, கௌசல்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    சோழவந்தான் பேரூராட்சியில் குப்பைகள் தரம் பிரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களுடன் இணைந்து தூய்மையான, சுகாதாரமான பேரூராட்சியாக திகழ பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் குறித்து, வர்த்தகர்கள் சங்கம், குடியிருப்போர்கள் நலச்சங்கம் மற்றும் உணவகங்கள் நடத்துபவர்களுக்கும் பேரூ ராட்சி தலைவர்ஜெயராமன் தலைமையில், செயல் அலுவலர் சுதர்சன் முன்னிலையில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

    இதில் பொதுமக்கள் பயன்படுத்தி கழிக்கும் குப்பைகளை அறிந்து தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கும் பயிற்சி  அளிக்கப்பட்டது. 

    காதார ஆய்வாளர் முருகானந்தம்  பேசுகையில், பேரூராட்சி பகுதிகளில் உள்ள தெருக்கள், கடைவீதிகளில் நாள் தோறும் காலை, மாலை பொதுமக்கள் சேகரித்து தரும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தனித்தனியே தரும் குடும்ப தலைவிகளுக்கு அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பரிசு பொருட்கள் உள்ளாட்சி உறுப்பினர்கள் பங்களிப்புடன் வழங்கப்படும் என்றார். 

    குப்பைகள் எப்படி தரம் பிரிப்பது? என பயிற்சியுடன் விழிப்புணர்வில் காணொளி காட்சி மூலம் காட்டப்பட்டது, பேரூராட்சி தலைவர் ஜெயராமன் கூறுகையில், வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து தரும் பெண்களுக்கு உறுப்பினர்கள் சார்பில் பரிசு பொருட்கள் வழங்க வழங்கப்படும் இந்த திட்டம் நாளை முதல் வீடுகள் தேடி மக்களை உற்சாக படுத்தப்படும் என்றார்.

    துணைத்தலைவர் லதா கண்ணன், உறுப்பினர்கள் குருசாமி, சிவா, முத்துலட்சுமி, வர்த்தக சங்க தலைவர் ஜவஹர், பாண்டியன், உணவக உரிமையாளர்கள் விஜயகுமார், மணிகண்டன், குடியிருப்போர்கள் நல சங்கம் சார்பில் தங்கராஜ், கிரிராஜன், செல்வம், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தலைமை எழுத்தர் கண்ணம்மா நன்றி கூறினார்.
    ரெயில்வே ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் திறன் மேம்பட்டு பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.   இந்த  தொடக்கவிழாவில் சேலம் ெரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கிவைத்தார். 

    இந்த நிகழ்ச்சியில் ெரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் மற்றும் ெரயில்வே அதிகா–ரிகள் உடன் இருந்தனர். 

      டிக்கெட் பரிசோதகர்கள், பயணச்சீட்டு வழங்குப–வர்கள், ெரயில் நிலைய அதிகாரிகள், பார்சல் அலுவலகத்தில் பணி–புரியும் அலுவலர்கள், கூட்ஷெட்டில் பணிபுரியும் ெரயில்வே தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி வழங்கப்படுகிறது.

     இந்தப் பயிற்சியில்  ெரயில் பயணிகளுக்கு  சேவைகளை எப்படி சிறப்பாக செய்வது, ெரயில் பயணிகளின் குறைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது, பயணிகளுடன் கனிவாக நடந்து கொள்வதைப் பற்றி, பயணிகளின் தேவைகளை நன்றாக அறிந்து அவர்களுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும், கனிவான முறையில் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்வது என்பது  குறித்து பயிற்சி  அளிக்கப்படுகிறது.
    ×