என் மலர்

    நீங்கள் தேடியது "Dharmapuri accident"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மீது மோதியது.
    • சாலையில் விழுந்து ராஜா, ஸ்ரீஜா ஆகியோர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள ஓட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ஸ்ரீஜா (வயது9). இவர்கள் இருவரும் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் நாகனம்பட்டி ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில் சாலையில் விழுந்து ராஜா, ஸ்ரீஜா ஆகியோர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வரும் வழியிலேயே ராஜா, ஸ்ரீஜா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் அவரது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொப்பூர் கேன்டீன் பகுதியில் மற்றொரு லாரி வாகனம் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியதால் நிலை தடுமாறி அந்த வாகனம் மற்றும் விபத்தை ஏற்படுத்திய லாரி இரண்டும் சாலையிலேயே கவிழ்ந்தன.
    • போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தொப்பூர்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தருமபுரி மாவட்டம், பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேஷம்பட்டி பகுதியில் வந்த போது நள்ளிரவு முன்னால் சென்ற லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இந்நிலையில் தொப்பூர் கணவாய் அருகே ஆஞ்சநேயர் கோவிலை அடுத்த இரண்டாவது வளைவில் ராஜஸ்தானில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற வேன் மீது கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி மோதியது. இதில் வேனில் வந்த மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது.

    சரக்கு லாரியின் ஓட்டுநர் முரளி அதோடு நிற்காமல் மற்றொரு வாகனம் மீதும் மோதிவிட்டு மீண்டும் அதிவேகமாக சென்றுள்ளார்.

    அப்போது தொப்பூர் கேன்டீன் பகுதியில் மற்றொரு லாரி வாகனம் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியதால் நிலை தடுமாறி அந்த வாகனம் மற்றும் விபத்தை ஏற்படுத்திய லாரி இரண்டும் சாலையிலேயே கவிழ்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டு விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

    தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்கள் குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளி வேன் எதிர்பாராதவிதமாக அலமேலு, விஜயகுமார் ஆகியோர் மீது மோதியது.
    • சம்பவ இடத்திலேயே அலமேலு பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள காலப்பனஅள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு (வயது40). இவர் இன்றுகாலை அப்பகுதி பள்ளி அருகில் நடந்து சென்றார். அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார். இவரும் அந்த பள்ளி அருகில் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த பள்ளி வேன் எதிர்பாராதவிதமாக அலமேலு, விஜயகுமார் ஆகியோர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அலமேலு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மதியம் விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தொப்பூர் அருகே இன்று அதிகாலை இரும்பு கம்பி பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தர்மபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து இரும்பு கம்பி பாரம் ஏற்றி கொண்டு லாரி மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரியில் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் ரோடு பகுதியை சேர்ந்த பொன் ராஜ் (வயது41) என்பவர் டிரைவராகவும், மகாராஜன் கிளீனராகவும் இருந்தனர்.

    இன்று அதிகாலை தருமபுரி அடுத்துள்ள தொப்பூர் கணவாய் மத்திய நார்த்தங்கால் பகுதியில் சென்ற போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

    இதில் லாரி டிரைவர் பொன்ராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கிளீனர் மகாராஜனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான பொன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து விபத்தில் சிக்கிய லாரியை போலீசார் கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இதனால் தொப்பூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தொப்பூர் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    தருமபுரி:

    சென்னையில் இருந்து பருப்பு லோடு ஏற்றி கொண்டு லாரி சேலம் மாவட்டம் ஓமலூருக்கு சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரியில் திண்டுக்கல்லை சேர்ந்த ஜெயராஜ் (வயது35) என்பவர் டிரைவராகவும், ஸ்டாலின் என்பவர் கிளீனராகவும் இருந்தார்.

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் ஏற்பட்ட 2 பேரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தருமபுரி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பீனியா பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் (வயது 19). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யு.சி 2-ம் படித்து வந்தார்.

    இவர் தனது நண்பர்கள் கீர்த்தி (19), கன்னிகாராஜ் (20), நெல்வின், ஜான்வில்லியம், அரவிந்த், சம்பத் ஆகியோர் காரில் நேற்று கொடைக்கானலுக்கு செல்வதற்காக புறப்பட்டனர்.

    காரை வேலூர் மாவட்டம் கன்னியம்பட்டியைச் சேர்ந்த கோபிநாத் (31) என்பவர் ஓட்டி சென்றார்.

    அப்போது கார் இன்று அதிகாலை 3 மணியளவில் தருமபுரி அருகே சோகத்தூர் கூட்ரோடு வந்தபோது முன்னால் சென்ற பஸ் சென்றது. அந்த பஸ்சை கார் முந்த முயன்றபோது பஸ் திடீரென்று பின்னால் வந்த காரை கவனிக்காமல் சாலையின் வலது பக்கமாக ஏறி சென்றது. உடனே பஸ் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் திருப்பி உள்ளார். இதில் கார் நிலைத்தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் கவுரவ்வுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருடன் வந்த நண்பர்கள், டிரைவர் உள்பட 7 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கவுரவ்வை மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு நண்பர்கள் கொண்டு சென்றனர்.

    கவுரவ்வை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கவுரவ் பரிதாபமாக இறந்தார். உடனே உடலை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த டவுன் போலீசார் உடனே அங்கு வந்து கவுரவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கார் விபத்துக்குள்ளானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுற்றுலாவுக்கு சென்ற போது உடன் வந்த கல்லூரி மாணவர் இறந்தததால் உடன் வந்த நண்பர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். கவுரவ் இறந்த தகவலை அவரது பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தருமபுரிக்கு வந்து கொண்டிருகின்றனர். இந்த சம்பவம் கவுரவ் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தருமபுரி அருகே நிதி நிறுவன அதிபர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    தருமபுரி:

    தருமபுரி அடுத்துள்ள நாட்டாண்மை புரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48.) நிதி நிறுவன அதிபரான இவர் பைனான்ஷியல் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜோதி இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று மாலை கிருஷ்ணகிரி சாலையில் உள்ள சத்யா நகருக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பும்போது எதிரே வந்த கார் இவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டி வந்த டிரைவர் தலைமறைவாகி விட்டார். தர்மபுரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தருமபுரி அருகே விபத்தில் தாய் மற்றும் மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த உச்சியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவரது மனைவி சரோஜா (வயது45).

    இவர்களது மகன் காளியப்பன் (19). இவர் தருமபுரியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மாலை சரோஜாவும், காளியப்பனும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு கம்பைநல்லூருக்கு மாவு அரைக்க வந்தனர்.

    பின்னர் மாவு அரைத்துவிட்டு இருவரும் வீட்டிற்கு திரும்பி சென்றனர். அப்போது கம்பைநல்லூர் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து காளியப்பன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு காளியப்பன், சரோஜா ஆகிய 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கம்பைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×