search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shopping"

    • மாநகரில் உள்ள ரோடுகளில் வழக்கத்தை விட வாகனப்போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
    • பழங்காலம் முதல் பிரபலமான ஓலை வெடி தற்போது ஓல்டு இன் கோல்டு என்ற பெயரில் தங்க நிறத்தில் மின்னும் ஓலை வெடிகள் பாக்கெட்டுகளாக விற்பனைக்கு வந்துள்ளது.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திருப்பூரில் உள்ள கடைவீதிகளுக்கு மக்கள் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளனர். இதனால் துணி கடைகள், இனிப்பு கடைகள், அலங்கார ெபாருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள், மின்சாதன பொருள், நகை கடைகள் உள்பட பல்வேறு வியாபார நிறுவனங்களில் பண்டிகை கால விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    இதேபோல் ஓட்டல், சாலையோர கடைகளில் ஆடைகள் மற்றும் உணவு வகை, தின்பண்டங்களின் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடை வீதிகளில் பொதுமக்கள் குடும்பத்தோடு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். இதேபோல் வடமாநில தொழிலாளர்களும் அதிக அளவில் வருவதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது.

    இதேபோன்று மாநகரில் உள்ள ரோடுகளில் வழக்கத்தை விட வாகனப்போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதால் மாநகர போலீஸ் சார்பில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக புதுமார்க்கெட் வீதி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, முனிசிபல் வீதி, குமரன் ரோடு உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் மின்கம்பங்களில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் வகையிலான அறிவிப்புகளை ஒலிக்க செய்து வருகின்றனர். காலை முதல் இரவு வரை முக்கியமான நேரங்களில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    இதேப்போல் மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம் உள்பட பல்வேறு ஊர்களில் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தீபாவளி பண்டிகையின் பிரதானமாக பட்டாசு ரகங்கள் விற்பனையும் திருப்பூர் பகுதியில் துவங்கியுள்ளது. நிரந்தர பட்டாசு கடைகள், தற்காலிக பட்டாசு கடைகள், பட்டாசு நிறுவனங்களின் நேரடி விற்பனை நிலையங்கள் என திருப்பூர் பகுதியில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    பெரும்பாலான பட்டாசு ரகங்கள், கிப்ட் பேக் வகையில் விற்பனையாகிறது. இவை 10 முதல் 60 வகையான பட்டாசுகள் என்ற அடிப்படையில் பல்வேறு விலைகளில், அதாவது 500 ரூபாய் முதல் விற்பனைக்கு உள்ளது. இவை தவிர ரகம் வாரியாக சிறியது முதல் மிகப் பெரிய அளவிலான வெடிகள், சர வெடிகள், புஸ்வாணங்கள், மத்தாப்பு வகைகள், வானில் பறந்து சென்று வெடிக்கும் பட்டாசுகள், வண்ண மயமாக வெடித்து சிதறும் வாண வேடிக்கை பட்டாசுகள் என நூற்றுக்கும் மேற்பட்ட வகையில் விற்பனைக்கு வந்துள்ளன.

    நடப்பாண்டில் சிறுவர்களை ஈர்க்கும் விதமான பல்வேறு புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சாக்லெட் வெடி, சாக்லெட் மத்தாப்பு, கேன் மாடல் புஸ்வாணம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட உயர சென்று வெடிக்கும் வெடிகள், ெஹலிகாப்டர் மாடல் வெடி, மேஜிக் புஸ்வாணம் போன்ற பல ரகங்கள் விற்பனையாகிறது. பழங்காலம் முதல் பிரபலமான ஓலை வெடி தற்போது ஓல்டு இன் கோல்டு என்ற பெயரில் தங்க நிறத்தில் மின்னும் ஓலை வெடிகள் பாக்கெட்டுகளாக விற்பனைக்கு வந்துள்ளது. புஸ்வாண வகையில் மயில் வடிவத்திலான புஸ்வாணம் வெகுவாக கவருகிறது. சாக்லெட் மாடல் வெடி போன்று லாலி பாப் வடிவிலான ராக்கெட் பட்டாசும் உள்ளது. இரட்டைக்குழல் துப்பாக்கி என்பதோடு தற்போது இரட்டை துப்பாக்கியும் சிறுவர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது. 

    • பெண்களின் அன்றாட போக்குவரத்துக்கு அதிகமாக உதவுவது இருசக்கர வாகனங்கள்.
    • பல பெண்கள் பயந்த நிலையில் இருசக்கர வாகனம் ஓட்டுவதை பார்க்க முடியும்.

    ஷாப்பிங் செல்வது, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது மற்றும் அலுவகத்துக்கு செல்வது என பெண்களின் அன்றாட போக்குவரத்துக்கு அதிகமாக உதவுவது இருசக்கர வாகனங்கள். அதில் ஏறி உட்கார்ந்ததும் சிட்டாக பறக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதேநேரம், பல பெண்கள் சற்று பயந்த நிலையிலேயே இருசக்கர வாகனம் ஓட்டுவதையும் பார்க்க முடிகிறது.

    பல ஆண்டுகளாக வாகனம் ஓட்டிவந்தாலும் இந்த பய உணர்வு அவர்களுக்கு தொடர்கதையாகவே இருக்கும். உளவியல் ரீதியான இந்த பிரச்சினைக்கு 'மோட்டார்' போபியா' என்று பெயர். தொடர் முயற்சிகள் மூலம் இதை குணப்படுத்த முடியும். தற்போதைய காலத்தில், இருசக்கர வாகனங்களை ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. இருந்தபோதும், பல பெண்கள் ஒருவித பயத்துடனும், பதற்றத்துடனுமே வாகனத்தை ஓட்டுகிறார்கள்.

    மோட்டார்போபியா' உள்ளவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான பாதையையே போக்குவரத்துக்காக பயன்படுத்துகிறார்கள். தனக்கு அல்லது தான் அதிகமாக நேசித்தவருக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட விபத்து அல்லது காயம், இறப்பு போன்றவற்றால் ஏற்பட்ட மனஉளைச்சல், பரம்பரையாக உண்டாகும் மரபணு மாற்றம், வாகனம் ஓட்டுவது பற்றிய எதிர்மறையான தகவல்களை அதிகமாக கேட்டறிந்தது போன்ற பல்வேறு காரணங்களால் 'மோட்டார்போபியா' ஏற்படலாம்.

    இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்டும்போதும், மற்றவருடன் வாகனத்தில் சவாரி செய்யும் போதும், பதற்றம் மற்றும் பய உணர்வு அதிகரிக்கும் அத்தகைய சூழ்நிலையில் அதிகப்படியாக வியர்த்து கொட்டுவதால் உடல் குளிர்ந்து போவது, தலைச்சுற்றல், மயக்கம், இதயத்துடிப்பு அதிகரிப்பது. குமட்டல், மூச்சுத்தினறல், நடுக்கம், வயிற்று வலி மற்றும் செரிமானக்கோளாறு போன்ற அறிகுறிகள் உண்டாகும்.

    ''மோட்டார்போபியா' பிரச்சினை உள்ளவர்கள் வாகனத்தை ஒட்டுவதற்கு முன்னும், ஓட்டிய பின்னும் சுவாசப் பயிற்சி மேற்கொள்வது, மனம் மற்றும் உடல் தளர்வு நுட்பங்களை மேற்கொள்வது, வாகனங்கள் தொடர்பான திரைப்படங்கள் அல்லது வீடியோக்களை பார்த்து ஒவ்வொரு குழலையும் கணிக்க முயற்சி செய்வது போன்ற பயிற்சிகளை செய்யலாம்.

    முதலில் ஒரு வாகனத்தில் பயணம் செய்து பழகிய பின்னர், அந்த வாகனத்தை ஓட்ட முயற்சிக்கலாம். தொடக்கத்தில் அருகில் உள்ள இடங்களுக்கு மட்டும் பயணித்து பயத்தை போக்கிக்கொண்ட பிறகு, நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். "மோட்டார் போபியா' பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவாற்றல் நடத்தை சிகிச்சை, விர்ச்சுவல் ரியாகிட்டி எக்ஸ்போஷர் தெரபி மற்றும் பதற்றத்துக்கான எதிர்ப்பு மருத்துகளை உளவியல் நிபுணரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.

    • மாதம் 2 முறை கடையில் உள்ள நகைகளை சரி பார்ப்பது வழக்கம்.
    • நகை வாங்குவது போல் கடைக்கு வந்து, அரை பவுன் தங்க மோதிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் புதுத்துறையை சேர்ந்தவர் சித்ரா. இவர், காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். கடை உரிமையாளர் மற்றும் இவரது மகன் ஆகியோர் மாதம் 2 முறை கடையில் உள்ள நகைகளை சரி பார்ப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 10-ந் தேதி நகைகளை சரிபார்த்து விட்டு நேற்று முன்தினமும் சரி பார்த்தனர். அப்போது, அரை பவுன் தங்க மோதிரம் குறைவது தெரியவந்தது.

    மோதிரம் குறைவதால் கடையில் உள்ள சி.சி.டிவி கேமரா பதிவுகளை பார்த்தனர். அப்போது, கடையில் இருந்த சித்ராவிடம், 45 வயது மதிக்கத்தக்க நபரும், ஒரு பெண்ணும் நகை வாங்குவது போல் கடைக்கு வந்து, அரை பவுன் தங்க மோதிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து திருடி சென்ற நபர்களை தேடி வந்த நிலையில் மோதிரத்தை திருடிசென்ற திருவாரூர் அய்யம்பேட்டையைச் சேர்ந்த தனலட்சுமி (வயது 45) நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருசோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இவருடன் வந்த குபேரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஆன்லைன் ஷாப்பிங் உலகம் நம்மை கபளீகரம் செய்து விட்டது.
    • உங்கள் பணத்துக்கு உத்தரவாதம் கிடையாது.

    பொருட்களை ஒவ்வொன்றாக வாங்க அலைந்து திரிந்த காலம் போய், இன்று செல்போனில் விரல் நுனியை உரசினால் பாடம் செய்த கறிவேப்பிலை, புற்று மண் முதல் படம் பார்க்கும் டி.வி., கணினி வரை அனைத்து பொருட்களும் வீடு தேடி வந்து சேருகிறது.

    ஆன்லைன் ஷாப்பிங்

    ஆம். ஆன்லைன் ஷாப்பிங் உலகம் நம்மை கபளீகரம் செய்து விட்டது. கடை கடையாய் ஏறி இறங்கி பொருட்கள் வாங்கிய நாம் இன்று இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஆர்டர் செய்யலாம். நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த பொருள் உங்களுக்கு கிடைத்து விடுகிறது. ஆர்டர் செய்த பொருள் தாமதமாக கிடைத்தாலும் பெரிதுபடுத்துவதில்லை. ஆன்லைன் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான சலுகை, ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு பொருள் இலவசம், இலவச டெலிவரி என்று பொருட்களை வாங்கும் ஆர்வத்தை தூண்டிவிடுகிறது. எதற்கு அலைந்து திரிந்து கடைக்கு சென்று வாங்க வேண்டும்.போக்குவரத்து செலவு மிச்சம். அதிகபட்ச சலுகையில் விலை சற்று குறைவாக வேண்டிய பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம். அலட்டிக் கொள்ளாமல் வீட்டுக்கே வந்து கொடுக்கிறார்கள் .

    மருந்து முதல் விருந்து வைக்கும் பொருட்கள் வரை அனைத்தும் ஆன்லைனில் கிடைத்தாலும் ஆன்லைன் ஷாப்பிங்கில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் வேறு பொருள் வருவது, பழுதான, உடைந்த செயல்படாத பொருட்கள் வருவது என்பது அடிக்கடி நிகழ்கிறது. இந்த பஞ்சாயத்துகள் கூட பல நுகர்வோர் கோர்ட்டுகளுக்கு சென்று விடுகின்றன. அதன் மூலம் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்கிறது.

    பிரபலமாகி மக்களை ஆட்கொண்டு வரும் ஆன்லைன் பற்றி பலருக்கு முழுவதுமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.வாருங்கள் அதைப்பற்றி இங்கே காண்போம்.

    ஆன்லைனில் 'புதிதாக சந்தையில் என்ன வந்திருக்கிறது'என்று தேடும்போது அது தற்போது உங்களுக்கு கட்டாயம் தேவையா? என்று யோசித்து விட்டு 'ஆம்' என்றால் மட்டுமே ஆர்டர் போடுங்கள். உங்களது கிரெடிட்,டெபிட் கார்டு குறித்த விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து வைக்க வேண்டாம். ஏதாவது ஒரு பொருளை வாங்க நீங்கள் ஆசைப்படும்போது கிரெடிட்,டெபிட் கார்டு குறித்த விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்து வைத்து இருந்தால் உடனே ஆர்டர் போட்டுவிடுவீர்கள். அதையே தேடி எடுத்து பதிவேற்றம் செய்வதற்கான நேரத்தில் தேவையற்ற பொருளை வாங்கலாமா? என யோசிக்க அவகாசம் கிடைக்கும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பல நிறுவனங்கள் தனது பொருளை விற்பனை செய்கின்றன.

    குறுந்தகவல் அவசியம்

    நீங்கள் வாங்கும் பொருளை விற்பனை செய்வது யார் என்பதிலும் கவனமாயிருங்கள். அவர்களை பற்றிய கருத்து பதிவுகளை கவனிப்பது முக்கியம். ஆன்லைனில் நிறைய சலுகை அறிவிப்பார்கள். விலை குறைவாக இருந்தாலும், அது உங்கள் கையில் கிடைக்கும் வரை ஆகும் செலவுகளை ஒப்பீடு செய்யுங்கள்.பொருளை பார்த்து விலை குறைவு என்றவுடன், 'அந்த பொருளை மற்றவர் வாங்கிவிட்டால்?' என்கிற வேகத்தில் ஆர்டர் போட வேண்டாம். அது பலரால் பயன்படுத்தப்பட்ட பொருளா? அது சிறப்பானதா? என்று பாருங்கள். பொருளை பற்றி உள்ள விளக்கத்தை முழுமையாக படிக்காமல் ஆர்டர் போடவே வேண்டாம். ஆர்டர் செய்யும்முன், பொருட்கள் கிடைக்கும் காலத்தோடு வர்த்தகம் நடைபெறும் நாட்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். விடுமுறை நாட்களில் பொருளை தருவார்களா? என்று கேட்டறிந்து கொள்வது நல்லது. ஆன்லைனில் ஆர்டர் போட்டவுடன் வரும் மெயில் மற்றும் செல்போன் குறுந்தகவல்களை பத்திரப்படுத்த வேண்டும். பொருள் கிடைப்பதில் குளறுபடி ஏற்பட்டால், இந்த தகவல்களை கொண்டே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்த குறுந்தகவல் இல்லாவிட்டால், எந்த நிவாரணத்தையும் பெற முடியாது.

    தவறாமல் படிக்கவும்

    செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் என எதை நீங்கள் ஆர்டர் செய்திருந்தாலும் பார்சல் கொண்டு வருபவர்களை கொஞ்ச நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு, நீங்கள் ஆர்டர் செய்த பொருள் அதுதானா? என்பதை சோதித்து பார்த்துவிட்டு, பெற்ற பிறகே அவர்களை அனுப்பவும்.நீங்கள் வாங்கிய பொருள் எலக்ட்ரானிக் பொருளாக இருப்பின், வாங்கியவுடன் அது செயல்படுகிறதா? என்பதை சோதிக்கவும். அதில் பிரச்சினை இருந்தால் உடனடியாக மாற்றி கொள்ள முடியும்.நேரில் பொருள் வாங்கும்போது ஆராய்ந்து வாங்குகிறோம். ஆன்லைனில் வாங்கும்போது அதற்கான வாய்ப்பில்லை. ஒரு பொருளை ஆர்டர் செய்யும்முன் அதை பற்றிய விவரங்களை முழுமையாக அறிந்து கொள்வது அவசியம். நேரில் வாங்கும்போது அடுத்தவரின் ஆலோசனை கேட்போம். ஆன்லைனில் வாங்கும்போது அந்த நிறுவனத்தின் ரேட்டிங் என்ன, ஏற்கெனவே பொருள் வாங்கியவர்களின் அனுபவங்களையும் தவறாமல் படிக்க வேண்டும்.

    ரிட்டன் பாலிசி

    நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு முன்னால் ஷாப்பிங் செய்யும் இணையதளத்திற்கு சென்று பொருட்களுக்கான தொகையை திரும்ப பெறும் ரிட்டன் பாலிசி, ரீஃபண்ட் பாலிசி போன்ற விவரங்களை முதலில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி ரிட்டன் பாலிசி இருந்தால் அதன் விதிமுறைகள் அனைத்தையும் படித்து பார்க்க வேண்டும். எத்தனை நாட்களில் பொருட்கள் ரிட்டன் செய்யப்படும், எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும் என்பன போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல, ரிட்டன் செய்ய வேண்டிய பொருட்களை வாங்க உங்கள் வீட்டுக்கே வருவார்களா அல்லது நீங்கள்தான் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டுமா? என்பதையும் பார்க்க வேண்டும்.நாம் ஒரு பொருளை கேட்க, நமக்கு அனுப்பப்படும் பொருள் வேறாக இருக்கலாம். ஆர்டர் செய்து பெறும் பொருள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கலாம். ஆர்டர் செய்த பொருள் வராமல்கூட போகலாம்.

    அதனால் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வோரே, சற்றும் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். அவ்வாறு இருந்துவிட்டால் உங்கள் பணத்துக்கு உத்தரவாதம் கிடையாது. அதனால் மிகவும் கவனம் தேவை.

    கேஷ்பேக் சலுகை

    ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது அப்பொருளுக்கு கேரண்டி - வாரண்டி என்ன? என்ற விவரங்களை பார்க்க வேண்டும். பொருளுக்கு ஏதாவது தள்ளுபடி வழங்கப்படுகிறதா? அதே பொருளுக்கு வேறு தளங்களில் அதிக தள்ளுபடி கிடைக்குமா? என்று பார்க்க வேண்டும். பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளை நீங்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கேஷ்பேக் போன்ற சலுகைகளையும் நீங்கள் பெற முடியுமா? என்று பார்க்க வேண்டும். ஒருவேளை நீங்கள் வாங்கும் பொருளை திரும்ப வழங்குவதாக இருந்தால் கேஷ்பேக் போன்ற சலுகைகள் திரும்ப பெறப்படுமா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    தவணை முறை ஆபத்தா?

    ஆன்லைனில் வாங்க விரும்பும் பொருள் அதிக விலை கொண்டதாக இருந்தால் பெரும்பாலும் தவணை (ஈ.எம்.ஐ.) முறையில் வாங்குவார்கள். இப்போதெல்லாம் குறைந்த விலை கொண்ட பொருளாக இருந்தால் கூட தவணை முறையில் வாங்க நினைக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் நீங்கள் குறைந்த பணம் செலுத்தினால் போதும் என்பது உங்களுக்கு சுலபமாக தெரிந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால் நீங்கள் பொருளின் அசல் விலையை விட அதிக பணம் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, நீங்கள் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும்போது, கிரெடிட் கார்டு மூலமாகவோ அல்லது டெபிட் கார்டு மூலமாகவோ வாங்கினால், அதற்கு வட்டி பிடிக்கப்படுகிறதா, எவ்வளவு வட்டி பிடிக்கப்படுகிறது என்ற விவரத்தை எல்லாம் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும்.பொருட்களை ஆர்டர் செய்யும்போது அதை டெலிவரி செய்வதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுமா என்பதை நீங்கள் ஆர்டர் செய்யும்போதே கட்டாயம் பார்க்க வேண்டும்.

    பொதுவாக, அதிக விலை கொண்ட பொருட்கள் வாங்கும்போது டெலிவரி கட்டணம் இருக்காது அல்லது குறைவாக இருக்கும். ஆனால் மிக நீண்ட தூரத்திலிருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டாலோ அல்லது பொருளின் பாதுகாப்பு தன்மையை பொறுத்து டெலிவரி கட்டணம் வசூலிக்கப்படும். எனவே பொருளின் விலை மற்றும் டெலிவரி கட்டணம் போன்றவற்றை கணக்கிட்டு அது கடையில் விற்பனை செய்யும் விலையை விட மிக அதிகமாக இருந்தால் நீங்கள் கடையில் அப்பொருளை வாங்குவதே சிறந்தது.

    • ஷாப்பிங் செய்வதும் கலை தான் என்பதை உணரமுடியும்.
    • நவீன சேமிப்பு திட்டங்களையும் ஷாப்பிங் செய்யலாம்.

    வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் பொருட்கள் உருவாக்கப்பட்டு சந்தையை நிறைத்து கொண்டிருக்கின்றன. நம் வீடு மற்றும் அலுவலக வேலை நேரத்தை மிச்சப்படுத்தும் நவீன பொருட்கள் சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளன. நாம் சந்தையை ஒவ்வொரு நாளும் கவனிக்க வேண்டும். போனிலும் சந்தை உள்ளது, வீட்டின் அருகிலும் சந்தை உள்ளது.

    நடை பயிற்சி, தொலைதூர பயணம், மலையேறுதல், கடற்கரை செல்லுதல் போன்ற பழக்கத்தால் மன மாற்றத்தை அடைகிறோம். ஷாப்பிங் செய்வதும் அத்தகைய மன மாற்றத்தை தரக்கூடிய ஒரு பழக்கம் தான். இணைய தளம், கடை வீதி, ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்க்கெட் ஆகிய இடங்களில் புதிய பொருட்களை பார்ப்பதால் இருக்கமான மனம் லேசாகிறது நம் அறிவும் விரிவடைகிறது. வாரத்தின் 6 நாட்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பார்த்த பொருட்களையே பார்த்துப் பார்த்து மனம் சலித்திருக்கும். ஒரு நாள் குடும்பத்தோடு ஷாப்பிங் சென்று, மெதுவாக நடந்து, புதிய புதிய பொருட்களை கண்டு, அதன் பயன்பாட்டை அறிந்து, வாங்கி, பயன்படுத்தி மகிழும் கலை தான் ஷாப்பிங் ஆகும்.

    ஷாப்பிங் செய்வதற்கு முன் நமக்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பட்டியலிட்டு கொள்ள வேண்டும். அந்த பொருளை வாங்குவதற்கு முன் அந்த பொருள் புதிய பரிமாணத்தில் வந்துள்ளதா என்று சந்தையில் தேடிப்பார்க்க வேண்டும். அப்படி வந்திருந்தால் விலை கூடுதலாக இருந்தாலும் வாங்கலாம். காரணம் பழைய பொருளை விட புதிய நவீன பொருள் நம் வேலை நேரத்தை கூடுதலாக மிச்சப்படுத்தும். இந்த தேடுதலை நீங்கள் முழுமனதோடு செய்து பொருளை வாங்கும் போது மன நிறைவு உண்டாகும். ஷாப்பிங் செய்வதும் கலை தான் என்பதை உணரமுடியும்.

    மனமும் அறிவும் சூழ்நிலை காரணமாக மாற்றமும் வளர்ச்சியும் அடைகின்றன. வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதற்கும் திரையரங்கு சென்று படம் பார்ப்பதற்கும்; வீட்டில் குடும்பத்தினரோடு உணவு உண்பதற்கும் உணவு விடுதி சென்று உணவு உண்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. புதிய சூழல்; புதிய மனிதர்கள்; புது வகையான உணவுகள்; குடும்பத்தினர் முகத்தில் புது வகை மகிழ்ச்சியை காண்பது, அவர்களுடனான இணக்கம் உயர்வது; மற்ற மனிதர்களிடம் இருக்கும் நல்ல பண்பை காண்பது, கற்றுக்கொள்வது; இதனால் மனம் புத்துணர்வு பெறுகிறது, புரிந்து கொள்ளும் தன்மையில் சிறப்பான மாற்றம் பெறுகிறது, தன்னம்பிக்கை அடைகிறது. இவை கண்ணுக்கு தெரியாத மனம் செய்யும் ஷாப்பிங். வாழ்வதில் விருப்பத்தை அதிகரிக்க நவீன வாழ்க்கைக்கான ஷாப்பிங் ஆகும்.

    பாட்டி காலத்தில் அரிசி பானை, மரப்பெட்டி போன்றவற்றில் பணத்தை சேமித்தார்கள். அதற்கு வட்டி இல்லை; பணமதிப்பும் குறைந்து கொண்டே இருக்கும். ஆனால் இன்று நிதித்துறை சிறப்பாக வளர்ந்து உள்ளது. ஒவ்வொரு நாளும் பண மதிப்பை கூட்டும் பல நவீன சேமிப்பு திட்டங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. எதிர்கால ஒய்வு காலத்துக்கு பயன்படும் நவீன சேமிப்பு திட்டங்களையும் ஷாப்பிங் செய்யலாம். சேமிப்பு என்பதும் பயன்படும் ஒரு வகை பொருள் தான். ஷாப்பிங் என்றால் நிகழ்காலத்துக்கு பயன்படும் பொருட்களை வாங்குவதற்கு செலவு செய்வது மட்டும் அல்ல எதிர்காலத்துக்கு பயன்படும் பொருட்களை வாங்குவதற்கு செலவு செய்வதும் ஷாப்பிங் தான்.

    பணம் ஈட்டுவது நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள தான். மேலே கூறிய கருத்துக்களை மனதில் கொண்டு நவீன வாழ்க்கைக்கான ஷாப்பிங் செய்யுங்கள் மகிழ்ச்சியோடு வாழுங்கள்.

    • குழந்தைகளுக்கான ஷாப்பிங் விஷயத்தில் பொறுமை தேவை.
    • குழந்தைகளின் நலனை மனதில் கொண்டு ஷாப்பிங் செய்ய வேண்டும்.

    குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் செல்வதற்கு விசேஷ திறமை வேண்டும். தேவையற்ற பொருளை குழந்தை கை காட்டி கேட்டால் மறுப்பு தெரிவிக்காமல் வாங்கிக்கொடுத்தாக வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் அந்த இடத்திலேயே அடம் பிடித்து அழத் தொடங்கிவிடும். குழந்தைகளை சமாதானப்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. இப்போதெல்லாம் அத்தியாவசிய தேவைக்காக பொருள் வாங்குவது குறைந்துவிட்டது.

    தங்களின் மகிழ்ச்சிக்காக பொருட்களை வாங்குவதற்கு பலரும் பழகிவிட்டார்கள். அதிலும் குழந்தை ஒரு பொருளை விரும்பி கேட்கும்போது அதை வாங்கிக்கொடுக்காமல் தவிர்க்க முடியாது. பணம் செலவானாலும் பரவாயில்லை, குழந்தை மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்ற மன நிலையில் பலரும் இருக்கிறார்கள். விலையை கருத்தில் கொள்ளாமல் குழந்தைகள் விரும்பியதை வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். இதை தெரிந்து வைத்திருக்கும் பல நிறுவனங்கள் குழந்தைகளை கவரும் பொருட்களை கடையின் வாசலில் வைத்திருப்பார்கள்.

    ஆடைகள்: குழந்தைகள் எப்போதும் வண்ணங்களை விரும்பும் குணம் கொண்டவர்கள். கண்கவர் வண்ணங்கள் குழந்தைகளை வெகுவாக ஈர்த்துவிடும். அதனால்தான் உடைகள் வாங்கும்போது அவை உடலுக்கு மென்மையாக இருக்குமா? என்பதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள். ஆடையின் நிறம் பிடித்துவிட்டால் அதைத்தான் எடுத்தாக வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அந்த ஆடை குழந்தைகளின் உடல் அமைப்புக்கு சவுகரியமாக இருக்கிறதா? என்பதை பெற்றோர்தான் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏராளமான டிசைன்களை கொண்ட உடை அசவுகரியத்தை தரக்கூடும். கனமாக இருக்கும் உடைகளையும் தவிர்க்க வேண்டும். நிறம் மட்டும் பிடித்தால் போதாது. அணிவதற்கும் வசதியாக இருக்க வேண்டும்

    . எந்த உடையாக இருந்தாலும் குழந்தைகள் கொஞ்ச காலமாவது அணிந்து மகிழ வேண்டும். குழந்தைகள் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பார்கள் என்பதால் ஆடை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிக விலை கொடுத்து ஆடையை வாங்கிவிட்டு, சில நாட்கள்கூட அணிய முடியாமலும் போகலாம். பண விரயம்தான் மிச்சம். பணத்தை செல வளிக்க தயங்கும் பெற்றோர் கூட குழந்தைகள் விஷயத்தில் ஏமாந்து விடுகிறார்கள். இவர்களுடைய பலவீனத்தை தெரிந்து கொண்டு விலை உயர்ந்த ஆடைகள் சந்தையை அலங்கரிக்கின்றன. அவ்வளவு விலை கொடுக்கும் அளவிற்கு அந்த ஆடையில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    காலணிகள்: பொதுவாக காலணிகள் தேர்வு விஷயத்திலும் குழந்தைகளின் கவனம் சிதறும். குழந்தைகளை கவரும் விதமாக ஏராளமான டிசைன்களில் காலணிகள் அணி வகுக்கின்றன. பெரியவர்களின் காலணிகளை விட அவற்றின் விலை அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட காலம் மட்டுமே அதனை அணிய முடியும். வளரும் குழந்தைகளுக்கு காலணி வாங்கும்போது காலுக்கு மென்மையான, தாராளமாக கால்களில் பொருந்தும் விதமாக இருக்கிறதா? என்று கவனிக்க வேண்டும்.

    பெரியவர்கள் காலணிகளை பல நாட்கள் அணிவதற்கு ஏற்ப பராமரிப்பார்கள். குழந்தைகளால் அவ்வாறு செய்ய முடியாது. சில நாட்களுக்குள்ளாகவே உடைகள், காலணிகளை உபயோகப்படுத்த முடியாமல் போக நேரிடலாம். அதனால் வளரும் குழந்தை களுக்கு அதிக விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    விளையாட்டு பொருட்கள்: குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு பயன்படும் விதமாக விளையாட்டு பொருட்களின் தேர்வு அமைய வேண்டும். அதனை மையமாக வைத்துத்தான் அவர்களின் கற்பனை திறன் வளரும். அதனால் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விளையாட்டு பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம். ஆண், பெண் குழந்தைகள் இருவருக்கும் இயல்பாகவே விருப்பங்கள் வேறுபடும். அதற்கேற்ப பொருட்களை தேர்வு செய்ய அனுமதிக்கலாம். கூடுமானவரை வன்முறையை தூண்டும் விளையாட்டு சாதனங்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம் என்று யுனிசெப் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. விளையாட்டு சாதனங்கள் வாங்கும்போது அது எந்த பொருளில் செய்யப்பட்டது என்பதை பார்த்து வாங்குங்கள். தரமற்ற பிளாஸ்டிக், அலர்ஜி ஏற்படுத்தும் ரசாயனங்கள் கலந்த விளையாட்டு பொருட்களை தவிருங்கள். எப்போதும் பொம்மைகளையே வாங்கிக்கொடுக்காமல் விதவிதமான பொருட்களை பரிசளியுங்கள். குழந்தைகள் அடம் பிடிக்கிறார்கள் என்பதற்காக தேவையற்ற பொருட்களை வாங்கிக் கொடுக்காதீர்கள். குழந்தைகளுக்கான ஷாப்பிங் விஷயத்தில் பொறுமை தேவை. அவர் களின் நலனை மனதில் கொண்டு ஷாப்பிங் செய்ய வேண்டும்.

    டெபிட் கார்டை ஒப்பிடுகையில் கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது முற்றிலும் மாறுபட்டது. கிரெடிட் கார்டு பெற்றுள்ளவர்களுக்கு வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை உச்ச வரம்பாக அறிவித்திருக்கும்.
    இந்தியாவில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஜன்தன் திட்டம் நடை முறைப் படுத்தப்பட்ட பிறகு டெபிட் கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. கணக்குகள் தொடங்கிய அனைவருக்கும் டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்-ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

    டெபிட் கார்டுக்கும், கிரெடிட் கார்டுக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. அவை குறித்து பார்ப்போம்:-

    வங்கியில் ஒருவர் சேமிப்பு கணக்கு ஒன்றை துவங்கும் போது, இக்கணக்குடன் இணைக்கப்பட்ட ஒரு டெபிட் கார்டை வங்கி அவருக்கு அளிக்கும். இந்த டெபிட் கார்டை பயன்படுத்தி செய்யப்படும் ஒவ்வொரு பரிமாற்றமும் கணக்கில் இருக்கும் நிலுவை பணத்தை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

    எனவே கணக்கில், பணம் இல்லையென்றால் டெபிட் கார்டு மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியாது. இதில் பண பரிமாற்றத்திற்கு வட்டி விகிதங்கள் முற்றிலும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. டெபிட் கார்டை ஒப்பிடுகையில் கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது முற்றிலும் மாறுபட்டது. கிரெடிட் கார்டு பெற்றுள்ளவர்களுக்கு வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை உச்ச வரம்பாக அறிவித்திருக்கும்.

    உதாரணமாக வங்கி கணக்கில் ஒருவருக்கு உச்சவரம்பு ரூ.1 லட்சம் என்றால் அந்த தொகை வரை பணம் எதுவும் செலுத்தாமலேயே பணத்தை எடுக்க முடியும். எனினும் இத்தொகைக்கான குறிப்பிட்ட வட்டி தொகையை வங்கிக்கு செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டி கட்டவில்லை எனில் அபராத தொகை செலுத்த நேரிடும்.

    எனவே பணம் கிடைக்கிறது என்பதற்காக தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் கிடைக்கும் வருமானம் வட்டி கட்டவே போய்விடும். இயன்றவரை டெபிட் கார்டை மட்டுமே பயன்படுத்த முயலுங்கள். அவசரமான சூழ்நிலையில் மட்டும் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது புத்திசாலித்தனமாகும். மேலும் கிரெடிட் கார்டில் செலவு செய்த தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கியில் செலுத்தி விட வேண்டும். அவ்வாறு செய்தால் வட்டி தொகையை சேமிக்கலாம்.
    ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவையில் நேரலை வீடியோ மூலம் ஷாப்பிங் செய்ய புது வசதியை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. #Facebook



    ஃபேஸ்புக் நிறுவனம் வியாபார நிறுவனங்களுக்கென நேரலை வீடியோ வசதியை சோதனை செய்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வசதியை கொண்டு வியாபார நிறுவனங்கள் தங்களது பொருட்களை நேரலை வீடியோ மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விளக்கி கூற முடியும். 

    நேரலை வீடியோக்களை பார்க்கும் பயனர்கள், அவர்களுக்கு விரும்பிய பொருட்களை அவர்களது சாதனத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொண்டு பின், அதை வாங்கலாம். பயனர்கள் எடுத்து வைத்திருக்கும் ஸ்கிரீஷாட் படத்தை மெசஞ்சர் வழியே விற்பனையாளருக்கு அனுப்பி, சாட் செய்து பின் பண பரிமாற்றம் செய்து பொருளை வாங்கிக் கொள்ளலாம். 

    புது ஷாப்பிங் அம்சம் தாய்லாந்தில் தேர்வு செய்யப்பட்ட சில ஃபேஸ்புக் பேஜ்களில் மட்டும் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. தாய்லாந்து ஃபேஸ்புக் பயனர்கள் நேரலை வீடியோ மூலம் விற்பனை செய்வது பயன் தரும் வகையில் இருந்தது என தெரிவித்து இருக்கிறன்றனர்.




    வீடியோ மூலம் பொருட்களை விளக்கும் போது அவற்றின் பயன்பாடு பற்றி, வாடிக்கையாளர்கள் மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும். ஃபேஸ்புக் தாய்லாந்து மார்கெட் பிளேஸ் அம்சத்தில் ஹோம் ரென்டல்ஸ் போன்ற அனுபவத்தை வழங்க திட்டமிட்டு வருவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

    ஃபேஸ்புக் தளத்தின் மார்கெட் பிளேஸ் அம்சம் உலகின் மற்ற பகுதிகளை விட தாய்லாந்தில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது என ஃபேஸ்புக் அம்சங்களுக்கான மேளாலர் மயான்க் யாதவ் தெரிவித்திருக்கிறார். லைவ் ஷாப்பிங் அம்சத்திற்கான சோதனை தற்சமயம் நடைபெற்று வருகிறது. லைவ் ஷாப்பிங் விவரத்தை ஃபேஸ்புக் பேஜஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியும். 

    இதன் மூலம் ஃபேஸ்புக் பேஜ்களில் இருப்பவர்கள் நேரலை வீடியோவை உடனுக்குடன் பார்த்து, குறிப்பிட்ட பொருட்களை வாங்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ள முடியும். தங்களுக்கு நேரலையில் வரும் பொருள் பிடித்திருக்கும் பட்சத்தில் மெசஞ்சரில் சாட் செய்து பொருளை வாங்கிக் கொள்ளலாம். #Facebook
    பெண்களுக்கான குண்டூசி முதல் காலணி வரை அனைத்தும் சென்ற ஆண்டை விட இந்தாண்டு தீபாவளிக்கு வேறுபட்ட வகையில் இருத்தல் வேண்டி கூடுதல் பொலிவுடன் தயாரிக்கப்படுகின்றன.
    இந்தியாவில் பண்டிகை நேர ஷாப்பிங் எனும் தீபாவளியின் போது மட்டுமே அதிகளவில் நடைபெறுகிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் தீபாவளி ஷாப்பிங் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக தீபாவளி தொடங்கும் முன்னரே அதற்கான ஆயத்தப்பணி ஏற்பாடு செய்யப்படுகிறது. தீபாவளி நேரம் ஷாப்பிங் என்பது பெரிய பொருளாதார சந்தை முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது.

    எனவே சிறு தொழில் முதல் பெரிய தொழில் வரை அனைத்தும் தீபாவளி நேர விற்பனையை வைத்தே பெரிய லாபத்தை அடைய வேண்டியுள்ளது. அனைத்து விதமான பொருட்களும் தீபாவளி ஷாப்பிங்கின் போது விற்பனையாகின்றன. அதாவது ஆடைகள், பட்டாசு, தங்கம், வெள்ளி, மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், பாலணிகள், அனைத்துவிதமான அலங்காரப் பொருட்கள், விளக்குகள், பேன்சி உலோக நகைகள் என்றவாறு அனைத்துமே தீபாவளி நேர ஷாப்பிங்ல் இடம்பெறுகின்றன.

    எத்தனை முறை ஷாப்பிங் செய்தாலும் வீட்டிற்கு வந்தவுடன் எதையோ மறந்துவிட்டோம் என மீண்டும் கடைக்கு செல்வோம். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் கூட நாம் இன்னும் அதிக பொருட்களை வாங்கி தீபாவளியை கொண்டாடி இருக்கலாம் என்றே தோன்றும். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு என தயாராகும் பொருட்களின் அணிவரிசை நீண்டு கொண்டே போகும்.

    தீபாவளிக்கு ஏற்ற தயாரிப்பு பணிகள்:-

    தீபாவளிக்கு எற்றவாறு புதிய டிசைன்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆடைகள் முதல் நகைகள் வரை அனைத்தும் தனிப்பட்ட கவனத்துடன் உருவாக்கப்படுகிறது. பெண்களுக்கான குண்டூசி முதல் காலணி வரை அனைத்தும் சென்ற ஆண்டை விட இந்தாண்டு வேறுபட்ட வகையில் இருத்தல் வேண்டி கூடுதல் பொலிவுடன் தயாரிக்கப்படுகின்றன. அதுபோல் ஆண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் ஆடைகள், அணிகலன்கள் போன்றவையும் இந்த தீபாவளிக்கு புதுசு என்றவாறே தயாரிக்கப்படுகின்றன. டிசைனர் பேக், பர்ஸ், கலர்புல் காலணி, புதிய ஹேர்ஸ்டைல் என தங்கள் உருவமைப்பையே தீபாவளிக்கு என புதியதாய் மாற்றி விடுகின்றனர்.

    ஓராண்டு தயாரிப்பு ஒரு சிலநாளில் விற்பனை:-

    தீபாவளிக்கு என ஆடைகள், பட்டாசு மற்றும் உபயோகப்பொருட்கள் தயாரிப்பு என்பது ஓராண்டு அதிக வேலையாட்கள் கொண்டு தயாரிக்கப்படும். பின்னர் அதனை அந்தந்த பிராந்திய விருப்பத்திற்கு ஏற்ப கடைகளுக்கு பிரித்தளித்து அதன் விற்பனையை கண்காணிப்பர். தீபாவளி நெருங்க நெருங்க தான் அதன் மவுசும், தெரியவரும். பட்டாசு என்பது அதிக பாதுகாப்புடன் நிறைய பணியாளர்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதனை தீபாவளிக்கு சில நாள் முன்பு வாங்கி மகிழும் போது தயாரிப்பாளர்களின் மகிழ்வும் வெளிப்படும்.

    மின்னணு பொருட்களும் விலையுயர் ஆபரணங்களும்

    தீபாவளி ஷாப்பிங்-யில் தற்போது ஏராளமான மின்னனு பொருட்கள் இடம்பெறுகின்றன. அன்றாட பயன்பாட்டு பொருள் முதல் பொழுது போக்கு சாதனங்கள் வரை எண்ணற்ற புதிய புதிய பொருட்களை தீபாவளி சமயத்தில் வாங்குகின்றனர். அதுபோல் தங்கம், வைர, பிளாட்டின நகைகள் என்பதுடன் வெள்ளி பொருட்கள் போன்றவாறு விலையுயர்ந்த பொருட்களும் தீபாவளி ஷாப்பிங்-யில் இடம் பெறுகின்றன. இதற்கான தயாரிப்பு பணிகள் என்பது ஆண்டு தோறும் நடைபெற்றாலும் தீபாவளி சமயத்தில் தான் அதிகளவில் இதன் விற்பனை அதிகரிக்கிறது எனலாம்.

    பணப்பெருக்கமும் வாங்கும் தன்மை அதிகரிப்பும்:-

    ஆண்டு முழுவதும் உழைத்த உழைப்பிற்கு ஏற்றவாறு ஒவ்வொரு நிறுவனமும் அவர்களின் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குகின்றன. இந்த தீபாவளி போனஸ் தான் மக்களின் வாங்கும் தன்மையையும் அதிகரிக்கச் செய்கிறது. சம்பளத்தை தவிர கூடுதலாக இந்த வருவாய் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் குடும்பத்தினர் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதுடன், அதனை அதிக மகிழ்ச்சி படுத்தும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டமும் இணைந்து விடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களும் தங்களால் இயன்ற சிறு ஷாப்பிங் செய்தாவது தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியில் மனதார இணைந்துவிடுகின்றனர்.

    ×