search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanju Samson"

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக குமார் சங்ககாரா செயல்பட்டு வருகிறார்.
    • அவர் இலங்கையில் நடந்த உள்ளூர் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் பேட்டை வைத்து விளையாடி இருக்கிறார்.

    ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா செயல்பட்டு வருகிறார். அந்த அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் இலங்கையில் கிராம கிரிக்கெட்டில் சங்கக்காரா விளையாடும் போது சஞ்சு சாம்சனின் பேட்டை வைத்து விளையாடி உள்ளார். அதில் சங்கக்காரா இங்கிலாந்தில் சில கிராம கிரிக்கெட் விளையாட சாம்சனின் பேட்களைப் பயன்படுத்துவதாகக் கூறினார்.

    இதன் புகைப்படத்தை சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குமார் சங்கக்கார என் பேட்டை பயன்படுத்துகிறார்! ஹஹாஹா... இது ஒரு கனவு!!" என்று எழுதினார்.

    இது தொடர்பாக சங்ககாரா கூறியதாவது:- எனது கிராமத்து கிரிக்கெட்டில், சஞ்சுவின் இரண்டு பேட்கள் என்னிடம் உள்ளன. ஏனெனில் அவர் தனது இரண்டு பேட்களை எனக்குக் மிகவும் அன்பாக கொடுத்தார். எனக்கு நினைவுச் சின்னங்கள் இல்லை. வீட்டில் பேட் எதுவும் இல்லை. மற்றப்படி ஒன்றும் இல்லை.

    சாஹல், நீங்கள் இதைப் பார்க்கிறீர்கள் என்றால், நீங்களும் எனக்கு சில கிட்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காகவும் நான் காத்திருக்கிறேன் என கூறினார்.

    • இந்த தொடருக்கான அணியில் ருதுராஜ், அபிஷேக் சர்மா, சாம்சன் (ஒருநாள்) ஆகியோர் இடம் பெறவில்லை.
    • சாம்சன் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.

    இந்திய அணி இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலில் டி20-யும் அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.

    இதற்கான டி20 அணியையும் ஒருநாள் அணியையும் பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதன்படி டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவும் ஒருநாள் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர். இந்த தொடருக்கான அணியில் ருதுராஜ், சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியின் தேர்வுக்கு லோக் சபா எம்.பி.யும் கிரிக்கெட் ரசிகருமான சசி தரூர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் சுவாரசியமான அணி தேர்வு. சாம்சன், தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்தவர். ஆனால் அவர் ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

    அதேபோல அபிஷேக் சர்மா, ஜிம்பாப்வே தொடரில் நடந்த டி20 போட்டியில் சதம் அடித்தவர். அவரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த வீரர்களின் வெற்றி, தேர்வாளர்களுக்கு மிகவும் குறைவாகவே தெரிகிறது. எப்படியும் அணிக்கு வாழ்த்துக்கள் என கூறினார்.

    இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய டி20 அணி:

    சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.

    இந்திய ஒருநாள் அணி:

    ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

    • ருதுராஜ், குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.
    • சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த தொடரில் முக்கிய வீரர்களாக கருதப்படும் ஜடேஜா, குல்தீப் யாதவ், ருதுராஜ், அபிஷேக் சர்மா, சாம்சன்(ஒருநாள் தொடரில்) ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளனர். இதில் குல்தீப் யாதவ், ஜடேஜா உலகக் கோப்பையில் விளையாடினர். அதனால் அவருக்கு ஓய்வு கொடுப்பதற்காக கூட அவர்கள் அணியில் இடம் பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ், சாம்சன் இடம் பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவர்கள் இருவரும் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அபிஷேக் சர்மா ஒரு சதம் விளாசினார். ருதுராஜ் 3 போட்டிகளில் விளையாடி ஒரு அரை சதம் ஒரு போட்டியில் 49 ரன்கள் குவித்தார். இதை தவிர சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார். ஒருநாள் தொடரில் அவர் இடம் பெறவில்லை.

    இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை வருவார் செல்வார் என்பது போலவே இருக்கும். அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியில் இடம்பெறுவார். ஆனால் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறமாட்டார். அப்படி அணியில் இடம் பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அதற்கு அடுத்த தொடரில் அவர் இடம் பெறமாட்டார். இப்படி தான் இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை நகர்கிறது. அந்த வகையில் தற்போதும் அவரை கழற்றி விட்டுள்ளனர்.

    நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு பின்னர் ஒருநாள் இந்திய அணியில் சாம்சன் இடம் பிடித்தார். தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக விளையாடி சதமும் அடித்தார். அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இந்திய ஒருநாள் அணியில் அவர் இடம் பெறவில்லை. தற்போதும் அவரும் இடம் பெறாதது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    டி20 அணி விவரம் பின்வருமாறு:-

    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.

    ஒருநாள் அணி விவரம் பின்வருமாறு:-

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

    • இவரை நான் ஐபிஎல் தொடரில் பார்த்தேன். அவருக்கு கேப்டன்ஷிப்பை எப்படி செய்வது என்பது தெரியவில்லை.
    • அதற்கு முன்னாடி அவர் கேப்டனாக இருந்ததில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இதில் விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

    இதனால் சுப்மன்கில் கேப்டன்ஷிப் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து நடந்த 4 டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் வெளிநாடுகளில் தொடர்ந்து 4 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்ற 2-வது இந்திய கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

    இந்நிலையில் அவருக்கு கேப்டன்ஷிப் பன்ன தெரியாது என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- 

    இவரை நான் ஐபிஎல் தொடரில் பார்த்தேன். அவருக்கு கேப்டன்ஷிப்பை எப்படி செய்வது என்பது தெரியவில்லை. அது பற்றி எந்த யோசனையும் இல்லை. அதற்கு முன்னாடி அவர் கேப்டனாக இருந்ததில்லை. அவர் எதுக்கு கேப்டனாக நியமிக்கபட்டார் என்பது குறித்து தேர்வாளர்களை தான் கேட்க வேண்டும்.

    கடந்த 2 வருடங்களாக ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இந்திய அணிக்காக டி20 தொடரிலும் சிறப்பாக விளையாடி உள்ளார். பேட்டராக சிறப்பாக செயல்படுகிறார். எனவே பேட்டராக தகுதியானவர்.

    அவருக்கு கேப்டன் பதவியை வழங்கியது, அணி நிர்வாகம் அவருக்கு அந்த அனுபவத்தை வழங்க விரும்பியதால் தான் என்று நினைக்கிறேன்.

    என்னைப் பொறுத்தவரை சுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த பேட்டர். யாராவது சிறப்பாக செயல்பட்டால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நான் சுப்மன் கில் அல்லது அது போன்ற எதையும் வெறுப்பவன் அல்ல, எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும், ஆனால் ருதுராஜ் கடினமான சூழ்நிலையில் ரன்களை எடுத்ததால் ஒரு சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன்.

    டி20 உலகக் கோப்பையில் ருதுராஜ் ஒரு பேக்அப் பிளேயராக இருந்திருக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு முழுமையான வீரர். அவர் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடியும் - அவருடைய நுட்பம் அப்படிப்பட்டது. அவருடைய அணுகுமுறை அப்படித்தான் இருக்கிறது.

    இவ்வாறு மிஸ்ரா கூறினார்.

    • 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது.
    • 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையே 5 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 12 ரன்னிலும் சுப்மன் கில் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.அடுத்ததாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 14 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் - ரியான் பராக் சிறப்பாக விளையாடினார். நிதானமாக விளையாடிய சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    ரியான் பராக் 22 ரன்னிலும் சிவம் துபே 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழந்தது.

    இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக டியான் மியர்ஸ் 34 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும் சிவம் துபே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

    • நிதானமாக விளையாடிய சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அவுட்டானார்.
    • 168 ரன்கள் என்ற இலக்கை துரத்தி ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்து வருகிறது.

    நிதானமாக விளையாடிய சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அவுட்டானார்.ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையே 5 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 12 ரன்னிலும் சுப்மன் கில் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.அடுத்ததாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 14 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் - ரியான் பராக் சிறப்பாக விளையாடினார். நிதானமாக விளையாடிய சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    ரியான் பராக் 22 ரன்னிலும் சிவம் துபே 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது.

    168 ரன்கள் என்ற இலக்கை துரத்தி ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்து வருகிறது.

    5 போட்டிகள் டி20 தொடரில் 3 - 1 என்ற கணக்கில் ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • துபேயின் பந்துவீச்சை இந்தியா அதிகம் பயன்படுத்தப் போவதில்லை என்று நினைக்கிறேன்.
    • சஞ்சு சாம்சன் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடுவதில் அனுபவம் வாய்ந்து இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறக்கியுள்ள இந்திய அணியானது அயர்லாந்துக்கு எதிரான தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

    இதையடுத்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், உலகக்கோப்பை போட்டிகளில் சிவம் துபே பந்துவீச போவதில்லை என்றால் அவரது இடத்தை சஞ்சு சாம்சனிற்கு கொடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சிவம் துபே பந்துவீசப் போவதில்லை என்றால் அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனை பேட்டராக விளையாட வைக்க வேண்டும் என்பதே சரியான முடிவு. சஞ்சு சாம்சன் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடுவதில் அனுபவம் வாய்ந்து இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

    மேலும் சர்வதேச அளவில் சஞ்சு சாம்சன் இந்தியா அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். மேலும் துபேயின் பந்துவீச்சை இந்தியா அதிகம் பயன்படுத்தப் போவதில்லை என்று நினைக்கிறேன்.

    ஒரு பேட்டாராக அவரை நீங்கள் பயன்படுத்து உள்ளீர்கள் எனில் அவரைவிட சிறந்த பேட்டிங் உக்தியை கொண்டுள்ள சாம்சனை நீங்கள் நிச்சயம் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். ஏனெனில் சிவம் துபே சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடினாலும், சஞ்சு சாம்சனால் பந்தை தாமதமாக விளையாடுவதுடன் டைமிங்குடனும் விளையாட முடியும்.

    மேலும் அவரால் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பான புல் ஷாட்டும் விளையாட முடியும் என்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான அவரை பயன்படுத்துவது சிறந்த உத்தியாக இருக்கலாம்.

    இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறினார்.

    • இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
    • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ராஜஸ்தான் அணி 13 ஆட்டங்களில் 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று இருக்கிறது. தனது முதல் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றிய ருசித்து கம்பீரமாக நடைபோட்ட அந்த அணி கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து சற்று தடுமாறுகிறது.

    ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ரியான் பராக் (531 ரன்), கேப்டன் சஞ்சு சாம்சன் (504) ஜெய்ஸ்வால் (348) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஜோஸ் பட்லர் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக இடம் பெற்ற டாம் கோலர் காட்மோர், துருவ் ஜூரெல், ரோமன் பவெல் ஆகியோர் சோபிக்க வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மா, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தனதாக்கி விட்டது. கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி கண்ட அந்த அணியின் முந்தைய ஆட்டம் (குஜராத்துக்கு எதிராக) மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது.

    கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் பில் சால்ட் (435 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங்கும், பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோராவும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர்களாக சுனில் நரின் (461 ரன், 15 விக்கெட்), ஆந்த்ரே ரஸ்செல் (222 ரன், 15 விக்கெட்) அசத்துகிறார்கள்.

    வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

    கொல்கத்தா அணி தனது வெற்றி உத்வேகத்தை தொடர முழு பலத்தையும் வெளிப்படுத்தும். கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்த ராஜஸ்தான் அணி நம்பிக்கையுடன் களம் காண்பதுடன், வெற்றிப் பாதைக்கு திரும்பி 2-வது இடத்தை தக்க வைக்க போராடும். எனேவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 14 வெற்றிகள் கண்டுள்ளன.

    இந்த ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • ஆடுகளும் கொஞ்சம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.
    • பஞ்சாப் அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.

    கவுகாத்தி:

    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப்பிடமும் வீழ்ந்து ராஜஸ்தான் அணி தொடர்ந்து 4- வது தோல்வியை தழுவியது.

    கவுகாத்தியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்னே எடுக்க முடிந்தது இதனால் பஞ்சாப் அணிக்கு 145 ரன் என்ற எளிதான இலக்கு இருந்தது.

    ரியான் பராக் 34 பந்தில் 48 ரன்னும் (6 பவுண்டரி ) , அஸ்வின் 19 பந்தில் 28 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த னர். சாம் கரண், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லீஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் சாம் கரண் 41 பந்தில் 63 ரன் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். அவேஷ் கான், சாஹல் தலா 2 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர்ச்சியாக 4- வது தோல்வியை தழுவியது. ஐதராபாத், டெல்லி, சென்னை ஆகியவற்றிடம் தோற்று இருந்தது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெற்ற அந்த அணி மொத்தத்தில் 5-வது தோல்வியை சந்தித்தது. 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் தொடர்ந்து 2- வது இடத்தில் உள்ளது.

    தொடர்ந்து 4 போட்டியில் தோற்றதால் பேட்ஸ்மேன் களை ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் சாடியுள்ளார்.இது தொடர் பாக அவர் கூறியதாவது:-

    இந்த ஆடுகளும் கொஞ்சம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 144 ரன்கள் போதுமானது கிடையாது. நாங்கள் 160 ரன்கள் எடுத்து இருக்க வேண்டும். பேட்டிங்கில் தான் தவறு செய்து விட்டோம். அங்கே தான் நாங்கள் தோற்று விட்டோம் என்று நினைக்கிறேன். பேட்ஸ்மேன்கள் முக்கியத்து வத்தை உணர வேண்டும்.

    கூடுதலாக ஒரு பந்து வீச்சாளர் இருந்திருந்தால் கொஞ்சம் நெருக்கடி கொடுத்து இருக்கலாம்.

    நாங்கள் தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறோம். மேலும் ஒரு அணியாக என்ன தவறு செய்கிறோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த தொடரில் தற்போது முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம். இந்த சமயத்தில் ஏதேனும் ஒரு வீரர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து அணிக்காக நான் வெற்றியை தேடி தருவேன் என்ற உணர்வில் விளையாட வேண்டும்.

    இதை செய்யக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவருமே சேர்ந்து செய்தால்தான், வெற்றி பெற முடியும். ஏனென்றால் இது தனிப்பட்ட வீரர்கள் விளையாடும் போட்டி கிடையாது. ஒரு அணியாக சேர்ந்து விளையாடும் போட்டியாகும் . ஆனாலும் இது போன்ற நெருக்கடியான கட்டத்தில் தனிப்பட்ட ஒரு வீரர் அனைவருக்காகவும் போராட வேண்டும்

    இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

    பஞ்சாப் அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது. ஏற்கனவே ராஜஸ்தானிடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது.

    • ராஜஸ்தான் அணி புள்ளிபட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
    • ராஜஸ்தான் அணி அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியை நாளை எதிர் கொள்கிறது.

    ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் கொல்கத்தா அணி மட்டும் அதிகாரபூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டது. மற்ற 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி போட்டு வருகின்றனர்.

    2-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நடப்பு தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தி உள்ளார்.

    இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் உருவத்தை கேரள ரசிகர் ஒருவர் அவரது வீட்டின் மொட்டை மாடியில் தத்துருவமாக வரைந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை ராஜஸ்தான் நிர்வாகம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 

    • டெக்னாலஜியை பயன்படுத்தி தவறு செய்யும் போது, ஏன் டெக்னாலஜியை பயன்படுத்த வேண்டும்.
    • டெக்னாலஜியை பயன்படுத்துவதை ஸ்டாப் பண்ண வேண்டும்.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 221 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி கேபிடல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு நடுவர்கள் கொடுத்த தவறான முடிவால் தான் ராஜஸ்தான் அணி தோல்வி தழுவியது என ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு அவுட் கிடையாது. நடுவர்கள் தவறான முடிவு எடுத்துள்ளனர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேட்ச் பிடிக்கும் போது பீல்டர் பவுண்டரி லைனை 2 முறை தொட்டுவிட்டார். ரிப்ளேவில் சில வினாடிகள் மட்டுமே பார்த்துவிட்டு மூன்றாவது நடுவர் முடிவை எடுத்துவிட்டார். பல கோணங்களில் பீல்டரின் கால் பவுண்டரி ரோப்பை தொட்டதா இல்லையா என்பதை தெளிவாக பார்த்திருக்க வேண்டும்.

    டெக்னாலஜியை பயன்படுத்தி தவறு செய்யும் போது, ஏன் டெக்னாலஜியை பயன்படுத்த வேண்டும். டெக்னாலஜியை பயன்படுத்துவதை ஸ்டாப் பண்ண வேண்டும். 

    • டெல்லிக்கு எதிரான போட்டியில் சாம்சன் 86 ரன்கள் குவித்தார்.
    • இதில் 8 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் அடங்கும்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் குவித்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் கேப்டன் சாம்சன் 86 ரன்கள் குவித்தார்.

    இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் இந்த போட்டியில் 6 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் குறைந்த ஐபிஎல் போட்டியில் 200 சிக்சர்களை விளாசி இந்திய வீரர் என்ற வராலாற்று சாதனையை சாம்சன் படைத்துள்ளார்.

    இந்த பட்டியலில் முதல் இடத்தில் டோனி இருந்தார். அவர் 165 போட்டிகளில் 200 சிக்சர்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. அதனை சாம்சன் முறியடித்துள்ளார். இவர் 159 போட்டிகளிலே 200 சிக்சர்களை விளாசி அசத்தி உள்ளார்.

    இந்த வரிசையில் விராட் கோலி 180 போட்டிகளிலும் ரோகித் 185 போட்டிகளிலும் சுரேஷ் ரெய்னா 193 போட்டிகளிலும் 200 சிக்சர்களை விளாசி உள்ளனர்.

    ×