search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanju Samson"

    • கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது.
    • டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் சேர்க்கபட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

     இது குறித்து அவர் கூறியதாவது:-

    யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் நிரந்தரமானது என்பதற்கு சான்றாகும். ஃபார்ம் தற்காலிகமானது. மேலும் கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் இடம் பெற வேண்டும். ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாக அவரை வளர்த்தெடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார். 

    • இவ்விரு அணிகளும் சூப்பராக விளையாடி வருவதால் யாருடைய கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
    • ஜோஸ் பட்லர், அஸ்வின் ஆகியோர் காயத்தால் பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் சூப்பராக விளையாடி வருவதால் யாருடைய கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    5 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா 4 வெற்றி (ஐதராபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோவுக்கு எதிராக) ஒரு தோல்வி (சென்னைக்கு எதிராக) என 8 புள்ளிகளுடன் உள்ளது. முந்தைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன் இலக்கை கொல்கத்தா 15.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது. அதில் விக்கெட் கீப்பர் பில்சால்ட் 89 ரன்கள் நொறுக்கினார். அந்த அணியில் சால்ட், சுனில் நரின், ஸ்ரேயாஸ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க்கும் நல்ல நிலைக்கு திரும்பி விட்டார். சொந்த ஊரில் ஆடுவது கொல்கத்தாவுக்கு கூடுதல் பலமாகும். இந்த சீசனில் உள்ளூரில் ஆடியுள்ள 2 ஆட்டத்திலும் கொல்கத்தா வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு தொடரில் 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. லக்னோ, டெல்லி, மும்பை, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகளை தோற்கடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்சுக்கு எதிராக மட்டும் தோல்வியை சந்தித்துள்ளது.

    ஜோஸ் பட்லர், அஸ்வின் ஆகியோர் காயத்தால் பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இன்றைய ஆட்டத்திற்கு திரும்புவார்களா என்பது குறித்து அணி நிர்வாகம் தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனாலும் சாம்சன், ரியான் பராக், ஜெய்ஸ்வால், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல் என்று நட்சத்திர வீரர்களுடன் ராஜஸ்தான் வலுவாகவே உள்ளது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 13-ல் ராஜஸ்தானும், 14-ல் கொல்கத்தாவும் வெற்றி கண்டுள்ளது. ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டில் வருமாறு:-

    கொல்கத்தா: பில் சால்ட், சுனில் நரின், ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல், ரிங்கு சிங் அல்லது ரமன்தீப்சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் ஆரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி.

    ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், தனுஷ் கோடியன் அல்லது பட்லர், சஞ்சு சாம்சன் (ேகப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ெஹட்மயர், ரோமன் பவெல், குல்தீப் சென் அல்லது ேகஷவ் மகராஜ், டிரென்ட் பவுல்ட், அவேஷ்கான், யுஸ்வேந்திர சாஹல்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் கடைசி பந்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, பராக் மற்றும் சாம்சனின் அதிரடியால் 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி, தொடக்கம் சிறப்பாக அமையவில்லை என்றாலும் ஃபினிஷிங் அற்புதமாக அமைந்தது. கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த ரஷித்கான் அதிரடியாக விளையாடி வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி தனது முதல் தோல்வியை பதிவு செய்தது.

    இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • நிச்சயம் குஜராத் அணியினரை பாராட்ட வேண்டும்.
    • நான் பேட்டிங் செய்யும் போது 180 ரன்கள் எடுத்தாலே, சவாலாக ஸ்கோராக நினைத்தேன்.

    ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 76, சஞ்சு சாம்சன் 68 ரன்கள் எடுத்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணியில் சுப்மன் கில் அரை சதம் விளாசினார். இறுதியில் ரஷித் கான் மற்றும் தெவாட்டியா அதிரடியாக விளையாடி குஜராத் அணியை வெற்றி பெற வைத்தனர்.

    இந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியதாவது:-

    இந்த ஆட்டத்தில் எங்கள் பிடி எப்போது தளர்ந்தது என்று கேட்டால், கடைசி பந்து தான் என்று சொல்ல வேண்டும். இந்த சூழலில் பேசுவதே கடினமாக உள்ளது. எனக்கு தெரிந்து, தோல்விக்கு பின் கேப்டனாக பேசுவதே இந்த தொடரில் கடினமாக விஷயம் என்று நினைக்கிறேன். கொஞ்சம் எமோஷனலாக உள்ளேன். சாதாரண நிலைக்கு வந்த பின், நிச்சயம் ஆட்டத்தில் எங்கு தோல்வியடைந்தோம் என்று சொல்ல முடியும்.

    நிச்சயம் குஜராத் அணியினரை பாராட்ட வேண்டும். இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று, அடுத்த போட்டிக்கு நகர வேண்டும். நான் பேட்டிங் செய்யும் போது 180 ரன்கள் எடுத்தாலே, சவாலாக ஸ்கோராக நினைத்தேன். நிச்சயம் 196 ரன்கள் என்பது வெற்றிக்கான இலக்கு தான்.

    பெரிதாக பனிப்பொழிவு இல்லாத போது, எங்கள் பவுலர்கள் செய்து முடித்திருக்க வேண்டும். நிச்சயம் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடுவது எளிதல்ல. 197 ரன்கள் இலக்கு, அதிலும் பனிப்பொழிவு வராது என்றால், அந்த ஸ்கோரை நாங்கள் தாராளமாக எடுத்துக் கொள்வோம். பவுலிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

    இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறினார்.

    • லக்னோ அணிக்கு எதிராக ராஜஸ்தான் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • சந்தீப் சர்மா அந்த 3 ஓவர்களை சிறப்பாக பந்து வீசாமல் போயிருந்தால் நான் ஆட்டநாயகனாக வந்திருக்க மாட்டேன்.

    ஐபிஎல் தொடரின் 4-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 82 ரன்கள் எடுத்தார். லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    அதைத்தொடர்ந்து ஆடிய லக்னோ 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை போராடிய பூரான் 64* (41) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசி சந்தீப் சர்மா தான் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எப்போதும் களத்தில் நேரத்தை செலவிடுவது வேடிக்கையாக இருக்கும். அதில் வெற்றி பெறுவது இன்னும் ஸ்பெஷலாக இருக்கும்.

    எங்களிடம் சற்று வித்தியாசமான கலவை இருப்பதால் இம்முறை எனக்கு வித்தியாசமான வேலை கொடுக்கப்பட்டுள்ளது. சங்ககாரா சில பரிந்துரைகளை பின்பற்றுவதற்கு கொடுத்தார். 10 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடும் எனக்கு சில அனுபவங்கள் வந்துள்ளது. தற்போது சூழ்நிலைகளை புரிந்து கொள்ள நான் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று கருதுகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியதும் எனக்கு உதவியது.

    இவை அனைத்தும் உங்களுடைய பலம் பலவீனத்தை புரிந்து கொள்வதாகும். நான் எப்போதும் பந்தை பார்த்து ரியாக்சன் கொடுக்கும் பேட்ஸ்மேன். அது முதல் பந்தாக இருந்தாலும் கடைசி பந்தாக இருந்தாலும் கவலையில்லை. இந்த விருதை நான் சந்தீப்புக்கு கொடுக்க வேண்டும். அவர் அந்த 3 ஓவர்களை சிறப்பாக பந்து வீசாமல் போயிருந்தால் நான் ஆட்டநாயகனாக வந்திருக்க மாட்டேன். அழுத்தமான நேரங்களில் திறமை மட்டுமல்ல கேரக்டரரும் முக்கியம் என்று அஸ்வின் பாய் சொல்லி கேட்டுள்ளேன்.

    இவ்வாறு சாம்சன் கூறினார்.

    • லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுக்கெடுகளை கைப்பற்றினார்.
    • ராஜஸ்தான் வீரர் சாம்சன் 80 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ஜெய்ஸ்வால் - ஜாஸ் பட்லர் களமிறங்கினர். பட்லர் 11 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனையடுத்து கேப்டன் சாம்சன் மற்றும் பராக் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் அரை சதம் விளாசினார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பராக் 29 பந்தில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஹெட்மயர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. சாம்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் சேர்த்தார்.

    • வரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது
    • இதற்கான ஜெர்சியை ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றும் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    வரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.

    இந்தியா முழுவதும் உள்ள மகளிரை கௌரவிக்கும் வகையில் பிங்க் நிற ஜெர்சியில் விளையாட உள்ளோம் என ராஜஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தான் முழு பிங்க் நிற ஜெர்சியில் ராஜஸ்தான் அணி விளையாடுகிறது.

    இதற்கான ஜெர்சியை ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றும் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    • சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த கேரளா வீரர் என்ற வரலாற்று சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார்.
    • பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் கிரேடு C-ன் ஒரு பகுதியாக இருக்கும் 11 வீரர்களில் சாம்சனும் ஒருவராக உள்ளார்.

    சஞ்சு சாம்சன் கேரளாவில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, அவருடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    கடந்த டிசம்பரில், சஞ்சு சாம்சன் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்தார் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 108 ரன்கள் விளாசினார் சஞ்சு சாம்சன். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த கேரளா வீரர் என்ற வரலாற்று சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார்.

    பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் கிரேடு C-ன் ஒரு பகுதியாக இருக்கும் 11 வீரர்களில் சாம்சனும் ஒருவராக உள்ளார். இவருக்கு ஆண்டுக்கு ₹ 1 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இன்னமும் இந்திய அணியில் உரிய இடம் கிடைக்க சஞ்சு சாம்சன் போராடி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் விளாசினார்.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை சஞ்சு சாம்சன் பதிவு செய்துள்ளார்.

    பார்ல்:

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பார்ல் நகரில் நேற்று பகல்-இரவாக நடந்தது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை நிறைவு செய்தார். அவர் 108 ரன்களில் (114 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். இதனையடுத்து 297 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா 45.5 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த கேரளா வீரர் என்ற வரலாற்று சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். கேரளாவை சேர்ந்த மற்றொரு வீரரான கருண் நாயர் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி அரைசதம் அடித்தது இல்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் ஒரு போட்டியில் 300 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 26-ந்தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.

    • சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் மிகச் சிறப்பான வீரராக இருந்து வருகிறார்.
    • சர்வதேச போட்டியில் துரதிர்ஷ்டவசமாக பல்வேறு காரணங்களுக்காக டாப் ஆர்டரில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

    பார்ல்:

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பார்ல் நகரில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் (108 ரன்) சதம் அடித்தார்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 45.5 ஓவ ரில் 218 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக டோனிபூ ஜோர்ஜி 81 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 4 விக்கெட்டும், அவேஷ்கான், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் கூறியதாவது:-

    இளம் வீரர்களை கொண்ட அணியாக தொட ரை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின்னர் மீண்டும் தற்போது வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இளம் வீரர்களுடன் நான் ஐபிஎல்லில் நிறைய விளையாடியிருக்கிறேன்.தற்போது அவர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை பார்க்கவும் நன்றாக இருக்கிறது.

    இந்த தொடரில் நான் அணி வீரர்களிடம் ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் கூறினேன். மகிழ்ச்சியுடன் உங்களது திறமையை களத்தில் வெளிப்படுத்துங்கள். முடிவுகளை பற்றி யோசிக்காமல் உங்களது திறனை வெளிப்படுத்தினால் நிச்சயம் நல்லதே நடக்கும் என்று கூறினேன். அந்த வகையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் இளம்வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

    சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் மிகச் சிறப்பான வீரராக இருந்து வருகிறார். ஆனால் சர்வதேச போட்டியில் துரதிர்ஷ்டவசமாக பல்வேறு காரணங்களுக்காக டாப் ஆர்டரில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மிகச்சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியை வீரர்களுடன் கொண்டாடிவிட்டு ஓரிரு நாட்களில் மீண்டும் டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இத்தொடரில் 10 விக்கெட் கைப்பற்றி அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகன் விருது பெற்றார்.

    இந்த வெற்றி மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிகாவும் வெற்றி பெற்றன.

    • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
    • சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி களம் இறங்க உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், அணியில் சேர்க்கப்பட்டதைவிட, புறக்கணிக்கப்பட்ட சம்பவம்தான் அதிகம்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடருக்கான அணியில் சீனியர் வீரர்கள் இடம் பெறாத நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சூர்யகுமார் யாதவ் கேப்டனான நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சஞ்சு சாம்சனை அணியில் எடுக்காதது குறித்து ரசிகர் ஒருவர், அவரின் சாதனையை குறிப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதை ஷேர் செய்து, அதற்கு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர்" இது உண்மையிலேயே விவரிக்க முடியாதது. சஞ்சு சாம்சனை அணியில் மட்டும் எடுத்திருக்கக் கூடாது. இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்திருக்க வேண்டும். சூர்யகுமாரை விட கேரள அணிக்கு, ராஜஸ்தான் அணிக்கு அவர் கேப்டனாக பணியாற்றி அனுபவம் அதிகம்.

    கிரிக்கெட்டை விரும்பும் மக்களுக்கு தேர்வுக்குழு இதுகுறித்து விளக்கம் அளிப்பது அவசியம். மேலும், சாஹலை ஏன் தேர்வு செய்யவில்லை?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த பதிவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
    • இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 390 ரன்கள் எடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடர், எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலகக்கோப்பை என எந்தவொரு தொடரிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் இது குறித்து சஞ்சு சாம்சன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "நான் தொடர்ந்து முன்னோக்கி நகர்வேன்"என பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 390 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 55.71 என்பது குறிப்பிடத்தக்கது. 24 டி20 போட்டிகளில் விளையாடி 374 ரன்களும் எடுத்துள்ளார்.


    ×