என் மலர்
நீங்கள் தேடியது "crops"
- நாட்டின் தேசியப்பறவையான மயில் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது.
- மலைப்பகுதிகளிலும், முட்புதர்களிலும் வாழ்ந்து வந்த மயில் இனம் தற்போது வாழ்விடத்தை இழந்து தவிக்கின்றன.
உடுமலை :
நாட்டின் தேசியப்பறவையான மயில் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது. மயில், கோழி இனத்தை சேர்ந்த பெரிய பறவையாகும். காடும், காடும் சார்ந்த பகுதிகளில் மயில் வாழ்ந்து வந்தது.இப்பறவை காடுகளில் கிடைக்கும் விட்டில் மற்றும் சிறு பூச்சிகள், பூரான், மண்புழு, சிறிய பாம்புகள் மற்றும் தானியங்களை உணவாக உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன.
மலைப்பகுதிகளிலும், முட்புதர்களிலும் வாழ்ந்து வந்த மயில் இனம் தற்போது வாழ்விடத்தை இழந்து தவிக்கின்றன. உணவுக்காக அவை விளை நிலங்களுக்கு படையெடுக்கின்றன. முதலில் மனிதர்கள் நடமாட்டம், வாகனங்கள் சப்தம் கேட்டாலோ ஓடியும், பறந்தும் மறையும் மயில்கள் தற்போது மனிதர்களை கண்டு அச்சப்படவில்லை. விவசாய நிலத்தில் நாட்டு கோழிகளை போன்று மயில்கள் உலா வருகின்றன.
இதனால் வயல்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ளிட்ட பகுதியில் கூட்டமாக சுற்றித்திரிவதை காண முடிகிறது. அதுவும் மாலை நேரத்தில் கூட்டமாக வரும் மயில்களுக்கு குடியிருப்பு வாசிகள், சிலர் தானியங்களை உணவாக கொடுக்கின்றனர்.வனப்பகுதியில் மட்டும் காணப்பட்ட மயில் இனங்கள், தற்போது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் போன்று மாறியுள்ளன. இவை மாலை நேரங்களில் வலம் வருவதை கண்டு மக்கள் ரசிக்கின்றனர்.ஆனால் விவசாய பகுதிகளில் நிலக்கடலை, தானியம், காய்கறி உள்ளிட்ட கீரை சாகுபடியை மயில்கள் மேய்ச்சல் நிலமாக மாற்றி விடுவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.கிராம ரோடுகளில் மயில்கள் பறந்து செல்லும் போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர்.இப்பிரச்னைக்கு, வனத்துறை அதிகாரிகளோடு மாவட்ட நிர்வாகம் பேச்சு நடத்தி மயில்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.
- வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னரம்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னையன் உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் சொந்த கிராமத்தில் 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.
எங்களுக்கு வேறு இடமோ, வீடோ இல்லை. பனைத் தொழில் தான் எங்களுக்கு வாழ்வாதாரம். இந்த இடத்திற்கு எங்களுக்கு 2சி பட்டா வழங்கப்பட்டுள்ளது. பனை மரங்களுக்கு வரியும் நிலத்திற்கு கந்தாயர் ரசிதும் செய்து வருகிறோம்.
ஆனால் தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகளை இடித்தும் விவசாயத்தை அழித்தும் எங்கள் இடத்தை காலி செய்ய சொல்லியும் மிரட்டி வருகின்றனர். எனவே 3 தலைமுறையாக எங்கள் அனுபவத்தில் மற்றும் எங்களின் வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
- சுமார் 60 அடி முதல் 78 அடி வரை வருவாய்த்துறை பதிவேட்டின் படி அகலம் கொண்டு செல்கிறது.
- சுமார் 200 ஏக்கருக்கு மேல் நெல், கரும்பு, நிலக்கடலை, தானிய பயிர்களை விவசாயம் செய்கின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த குளிச்சப்பட்டு கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் வட்டம் சூரக்கோட்டை கிராம எல்லையில் ஓடும் வடிகால் குளிச்சப்பட்டு கிராம எல்லையில் உள்ள பொன்னேரியில் இருந்து வடியும் மழை நீரை தொடக்கமாகக் கொண்டு ரூ.18,00000 மதிப்பில் 5 கி.மீ. தூரம் ஜம்புகாபுரம் வடிகால் வாய்க்காலை தூர்வாரும் பணிகள் கடந்த 13-ந் தேதி நடைபெற்றது.
இந்த வடிகால் வாய்க்கால் சுமார் 60 அடி முதல் 78 அடி வரை 16.9 மீட்டர் முதல் 24 மீட்டர் வரை வருவாய்த்துறை பதிவேட்டின் படி அகலம் கொண்டு செல்கிறது.
இதில் சில பகுதிகள் ஆக்கிரமிப்பிலும், மேடு பகுதிகளாகவும் உள்ளது.
இதற்கு முன் இரு கரைகளும் வண்டியில் செல்லும் அளவுக்கு பாதியாக இருந்து பயன்பாட்டில் இருந்தன.
நாளடைவில் வயல் பகுதியாக ஆக்கிரமிப்பு உள்ளன.
தற்போது இந்த வடிகாலை வருவாய்த்துறை பதிவேட்டின் படி தூர்வாராமல் மிகக் குறைந்த அளவில் இருக்கும் படியே தூர்வாரும் பணி நடைபெற்றது.
அன்றைய தினமே குளிச்சப்பட்டு கிராம மக்கள் அந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தோம்.
அதன்படி அந்த அதிகாரிகள் சர்வே செய்த பிறகு தூர்வாரும் பணிகள் செய்கிறோம் என கூறிவிட்டனர்.
ஜம்புகாபுரம் வடிகால் பகுதியான வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் நெல், கரும்பு, நிலக்கடலை, தானிய பயிர்களை விவசாயம் செய்கின்றனர்.
இந்த பகுதிக்கு சாலை வசதி கிடையாது.
இந்த வடிகாலை வருவாய்த்துறை பதிவேடு படி தூர்வாரி கரையை உயர்த்தினால் அறுவடை செய்யும் அறுவடை இயந்திரங்கள், உழவு டிராக்டர்கள், விவசாய இடு பொருட்கள் கொண்டு செல்ல மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே இந்த வடிகால் தூர்வாரும் பணிகளை பொன்னேரி பாயிண்டில் இருந்து குளிச்சப்பட்டு சாலை அல்லது வாளமர் கோட்டை சாலை பகுதி வரை தூர்வாரும்படியும், கரைகளை உயர்த்த ஆவணம் செய்யும் படியும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- சுமார் 700 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களில் நெல் சாகுபடி செய்து வருகிறோம்.
- தண்ணீர் செல்வது தடைபட்டு மழை காலங்களில் பயிர்கள் மூழ்கி விடுகின்றன.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பூதலூர் தாலுகா சொரக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
எங்கள் கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களில் நெல் சாகுபடி செய்து வருகிறோம்.
வெண்டையம்பட்டி வருவாய் கிராமத்தில் ஊமத்தன் ஏரி உள்ளது.
இந்த ஏரியில் வடிகால் வாரியானது தூர்ந்து போய் புதர் மண்டி உள்ளது.
இதனால் தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது.
மழை காலங்களில் பயிர்கள் மூழ்கி விடுகின்றன.
எனவே வடிகால் வாரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீர் தட்டுப்பாடு காரணமாக ஏற்படும் தாக்கம் உடனடியாக தெரிந்துவிடுகிறது.
- தென்னை நார்கழிவுகள், கரும்புசோகை என கிடைக்கும் பொருட்களை வைத்து மூடாக்கு அமைக்கலாம்.
குடிமங்கலம் :
கோடை காலத்தில் பயிர்களுக்கு ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பயிர் மேலாண்மை உத்திகள் குறித்து வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து கோவை வேளாண் பல்கலை பேராசிரியர்கள் ஆனந்தராஜா, குகன் ஆகியோர் கூறியதாவது:- கோடை காலங்களில் பயிர்களுக்கு ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் வெப்ப அயர்ச்சி உற்பத்தியிலும், பொருளாதார ரீதியாகவும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீர் தட்டுப்பாடு காரணமாக ஏற்படும் தாக்கம் உடனடியாக தெரிந்துவிடுகிறது. ஆனால் வெப்ப அயற்சியின் காரணமாக ஏற்படும் மாற்றம், இலைகளின் அளவு மற்றும் வடிவத்தின் வாயிலாகவும், மகசூல் குறைவதன் வாயிலாகவும் தெரிகிறது. நீர் தட்டுப்பாட்டை போக்க மேலாண்மை செய்ய, பயிர்களுக்கு மூடாக்கு முறைகளையும் வெப்ப அயர்ச்சியை குறைக்க நீராவிபோக்கை குறைக்கும் முறைகளையும் செயல்படுத்தினால் அதிக மகசூல் கொடுக்கும்.
நிலப்போர்வை அல்லது மூடாக்கு அமைப்பதன் வாயிலாக நீர் ஆவியாதலை குறைத்து கிடைக்கும் நீரை பயிர்களுக்கு பயன்படுத்தலாம். மூடாக்கின் அமைப்பதால் களை கட்டுப்பாடு மற்றும் நுண்ணுயிர் பெருக்கத்தை ஏற்படுத்தி மண்ணை உயிர்ப்போடு வைத்திருக்கலாம்.சில சமயம் துணை பயனாக களைக்கட்டுப்பாட்டு செலவு குறைவதால் நீர்பற்றாக்குறை இல்லாத இடங்களில் கூட நிலப்போர்வை முறை பின்பற்றப்படுகிறது.பயிர் எச்சங்களை 5 முதல் 10 செ.மீ., தடிமன் அளவுக்கு சராசரியாக பரப்பி விடுதல் வேண்டும். இதற்கு ெஹக்டேருக்கு 5 முதல் 10 டன் என்ற அளவிற்கு பயிர் எச்சங்கள் தேவைப்படலாம்.
தென்னை நார்கழிவுகள், ஓலைகள், கரும்புசோகை, கரும்புச்சக்கை என கிடைக்கும் பொருட்களை வைத்து மூடாக்கு அமைக்கலாம். இவற்றை கையாள்வதற்கும், பரப்புவதற்கும் ஏற்ப சிறிய துண்டுகளாக இருப்பது அவசியம்.
நெகிழி மூடாக்கில் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களினால் தாள்கள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் தடிமன் 20 முதல் 25 மைக்ரான் வரை இருக்கும். கருப்புநிறம் கொண்ட தாள்கள், மண்ணின் வெப்பநிலையை அதிகரிக்க செய்கிறது. வெள்ளை நிற நிலப்போர்வையில் கருப்பு நெகிழி மூடாக்கைவிட வெப்பநிலை குறைவாக இருக்கும்.
சொட்டுநீர் குழாய்களை சரியாக வரிசைப்படுத்தி அதன் மீது போர்வையை போர்த்திய பின் அதன் ஓரங்களில் மண் அணைக்க வேண்டும். பயிரின் இடைவெளிக்கு ஏற்ப சீரான இடைவெளியில் துளைகள் இட வேண்டும். அதன்பின் நாற்று விதைகளை நடலாம்.
வெப்ப அயர்ச்சியை தவிர்க்க நீராவி போக்கினை கட்டுப்படுத்தியும், இலைகளில் வெப்பநிலையை மாற்றக்கூடிய திரவங்களை தெளித்தும் கட்டுப்படுத்தலாம். வெப்ப அயர்ச்சியை கட்டுப்படுத்தும் திரவங்களை சமீப காலமாக மட்டுமே விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இதில் வெவ்வேறு வகையான செயல்திறன் கொண்ட திரவங்கள் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், அவற்றின் நோக்கம் வெப்ப அயர்ச்சியை கட்டுப்படுத்துவது மட்டுமே.
உதாரணமாக திரவ நுண்ணுயிரான மெத்தைலோபாக்டீரியாவை காலை அல்லது மாலை வேளைகளில் இரண்டு சதவீத கரைசலை ஒரு லிட்டர் நீரில் 20 மில்லி அளவில் தெளித்து பயன்படுத்தலாம். அப்போது பச்சையத்தை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம். இதனால் மகசூல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும்.இதனை பூ மற்றும் காய் பிடிக்கும் போதும், வறட்சியான நேரங்களிலும் பயன்படுத்துவது சிறந்தது. அதேபோல் கயோலின் என்ற மருந்து, களி மண் கலந்தது போன்று இருக்கும். இதை தண்ணீரில் 5 சதவீதம் என்ற அளவில் தெளிக்கும் போது வெப்ப நிலை மற்றும் நீராவிப்போக்கு ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டு வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நேற்று இரவு ஜெயக்குமார், பிரகாஷ் ஆகியோரின் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
- சேதமான பயிர்களின் மதிப்பு ரூ.1 ½ லட்சம் என கூறப்படுகிறது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது.
அதில் அவர்கள் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளனர். தற்போது அவை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு ஜெயக்குமார், பிரகாஷ் ஆகியோரின் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுவதும் அனைக்கப்பட்டது. எனினும் அவர்களது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. சேதமான பயிர்களின் மதிப்பு ரூ.1 ½ லட்சம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெயக்குமார் கயத்தாறு போலீசில் புகார் செய்தார். அதில், தனக்கு வேண்டாத சிலர் தோட்டத்தில் உள்ள மக்காச்சோள பயிர்களுக்கு தீவைத்து சென்றுள்ளனர். எனவே இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
- தண்ணீர் இன்றி பல கிராமங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
- சாலை மறியல் செய்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பூதலூர்:
காவேரி டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணை வழக்கமான ஜூன் 12க்கு பதிலாக மே மாதம் 24 ம் தேதி திறக்கப்பட்டது.
பருவம் தப்பிய மழையால் நடவு பணிகள் சற்று தாமதம் ஆகியது இதனால் கல்லணையில் தலைப்பு பகுதியான பூதலூர் தாலுகா பகுதிகளில் பல இடங்களில் இன்னும் சில வாரங்களுக்கு வயல்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.
இந்நிலையில் ஜனவரி 28ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டது.
இதனால் தண்ணீர் இன்றி பல கிராமங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது
இதனால் உடனடியாக மேலும் சில வாரங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரி இன்று காலை பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் விவசாயிகள் சங்கத்தினர், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் தஞ்சை மாவட்ட விவசாய சங்க செயலாளர் கண்ணன், தஞ்சை மாவட்ட அனைத்திந்திய மாத சங்க செயலாளர் தமிழ்ச்செல்வி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முக்கியமான இடத்தில் சாலை மறியல் நடைபெற்றதால் இரண்டு புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துநின்றன. பூதலூர் தாசில்தார் பெர்ஷியா திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் சாலை மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்து சாலை மறியல் செய்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதை அடுத்து சாலை மறியல் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.
இதனால் இந்த தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீர்வள த்துறை அதிகாரி உடன் பேசி நடவடிக்கை எடுக்க ப்படும் என்று உறுதி கூறியது அடிப்படையில் சாலை மறியல் போரா ட்டம் தற்காலிகமாக கைவி டப்பட்டது.
- 4 ஆயிரம் ஏக்கர் உளுந்து மற்றும் பச்சை பயறு பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- பயறு வகை பயிர்களை பயிரிடுவதன் மூலம் மண்வளம்மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
வேதாரண்யம்:
தலைஞாயிறு பகுதியில் நெல் அறுவடைக்குப்பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
5 ஆயிரம் ஏக்கர் இலக்கு தலைஞாயிறு வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் 4 ஆயிரம் ஏக்கர் உளுந்து மற்றும் பச்சை பயறு பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உளுந்து மற்றும் பச்சைபயறு பயிரிடுவதற்கு தேவைப்படும் உயர் விளைச்சல் தரும் சான்று விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை ஆகியவை மானிய விலையில் கொத்தங்குடி, நீர்முளை, பனங்காடி, தலைஞாயிறு ஆகிய வேளாண்மை கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
குறைந்த நாட்களில் அதிக மகசூல் விவசாயிகள் நெல் அறுவடைக்கு பின் பயறு வகை பயிர்களை பயிரிடுவதன் மூலம் மண்வளம்மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
இதை சாகுபடி செய்வதால் குறைந்த நாட்களில் விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கிறது. தலைஞாயிறு பகுதியில் தற்போது நெல் அறுவடை பணிகள் நிறைவு பெறும் நிலையில், உளுந்து, பயறு சாகுபடி செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அபிராமம் பகுதியில் காட்டுப்பன்றி, மான்கள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள அச்சங்குளம், பாப்பனம், நகரத்தார் குறிச்சி, பள்ளபச்சேரி, உடையநாதபுரம், விரதக்குளம், காடனேரி, பொட்டகுளம் உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களில் நெல், பருத்தி, மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த பயிர்களை காட்டுப் பன்றி, மான்கள் சேதப்படுத்தி நாசம் செய்து வருகிறது. இது குறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்து சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர்.
பி்ன்னர் வன விலங்கு களிடம் பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அப்போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
இதுகுறித்து விவசாயி விரதக்குளம் கர்ணன் கூறுகையில், மான், காட்டுப்பன்றி, முயல், நரி போன்ற வன விலங்குகளால் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான கிராமங்களில் நிலக்கடலை, பயிறு வகைகள், கேப்பை போன்ற பயிர்களை சாகுபடி செய்யாமல் விட்டுவிட்டனர். வனத்துறையினர் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதுடன் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்க்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- 10 முதல் 15 நிமிடங்களில் ஒரு ஏக்கரிலும் மருந்து கலவையை தெளிக்கலாம்.
- சரியான அளவு சீராக மருந்து கலவை தெளிக்கப்படுவதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம் திருவதேவன் கிராமத்தில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் நானோ யூரியா தெளிப்பது மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்த செயல் விளக்கம் விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் மூலம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உழவர் பயிற்சி நிலைய தஞ்சை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பால சரஸ்வதி தலைமை வகித்து பேசியதாவது, விவசாயத்தில் ட்ரோனின் பயன்பாடு அடுத்த தொழில்நுட்ப அலையாகும்.
விவசாயத்தில் ட்ரோன்களை பயன்படுத்துவதால் காலநிலை மாற்றங்களை சமாளித்து எதிர்கால வேளாண் உற்பத்தி தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது.
ட்ரோன் பயன்படுத்து–வதால் மருந்து கலவைத்–துளிகள் பயிர்களின் இலைகள் மீது நேரடியாக படுகிறது. மேலும் 90 சதவீத தண்ணீர் உபயோகத்தையும் 40 சதவீதம் மருந்தின் அளவையும் கணிசமாக குறைக்க முடிகிறது என்றார்.
சேதுபாபாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி பேசும் போது, ஒரு நாளைக்கு 30 முதல் 40 ஏக்கர் வரை ட்ரோன் மூலமும், 10 முதல் 15 நிமிடங்களில் ஒரு ஏக்கரிலும் மருந்து கலவையை தெளிக்கலாம்.
நிலத்தில் ரசாயனங்களை சரியான அளவு முறையாக பயன்படுத்துவதால் விவசாயிகளின் உற்பத்தி செலவு குறைகிறது.
லாபம் அதிகரிக்கிறது. பயிர்களின் மேல் சரியான அளவு சீராக மருந்து கலவை தெளிக்கப்படுவதால் பயிர்களின் வளர்ச்சியை நன்றாக இருக்கிறது.
இந்த ஆளில்லா குட்டி விமானம் 3 கிலோ மீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது என்றார்.
நிகழ்ச்சியில் சேதுபாவா–சத்திரம் வட்டாரத் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரமணியன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ், உதவி வேளாண்மை அலுவலர் பிரதீபா, அட்மா திட்ட தொழில்நுட்ப உதவி மேலாளர்கள் தமிழழகன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.