search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crops"

    • ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • வீட்டில் இருந்த இடிபாடுகளில் சிக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

    திருப்பதி:

    மிக்ஜம் புயல் காரணமாக ஆந்திராவில் திருப்பதி, பாபட்லா, என்.டி.ஆர், கிருஷ்ணா, நெல்லூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் பல ஆயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. நெல், வாழை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியது.

    இதனால் ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பதி அடுத்த ஏர்பேடு மண்டலத்தில் உள்ள சிந்தேபள்ளி, எஸ் டி காலனியை சேர்ந்த சிறுவன் யஷ்வந்த் (வயது 4). கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் சிறுவனின் வீட்டு சுவர் நேற்று இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த இடிபாடுகளில் சிக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

    • களைக்கொல்லிகள், பூச்சி மருந்து இவைகளை மழைக்கு பிறகு பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
    • விவசாயிகள் தேவைப்படும் சந்தேகங்களை அரசு வேளாண் கல்லூரி விஞ்ஞானிகள் இடம் பெற்று பயன்பெற வேண்டும்.

    திருவோணம்:

    ஈச்சங்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் அரசு வேளாண் ஆராய்ச்சி மையம் சார்பில் விவசாயிகள் தாங்கள் பயிரிட்டு இருக்கும் நெல் பயிர்களில் கலைக்கொல்லி ரசாயன மருந்து , உரம் இவைகளை தவிர்த்து அரசு அறிவிக்கும் மழை குறித்த தகவல்களை கேட்டு அதன்படி மழைக்குப் பிறகு இந்த உரங்களை பயிர்களுக்கு ஈடுமாறு வேளாண்மை கல்லூரி முதல்வர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மேலும் கூறியதாவது :-

    கனமழையால் விவசாயிகள் கவனமாக தாங்கள் பயிரிட்டு இருக்கும் பயிர்களுக்கு உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சி மருந்து இவைகளை மழைக்கு பிறகு பயன்படுத்தி பயன்பெற வேண்டும். தங்களது விளை நிலங்களில் நீர் தேங்காமல் முறையாக வாய்க்கால் அமைத்து உடனடியாக பயிர்களை காப்பாற்ற வேண்டும். ஆடு, மாடுகளையும் கவனமாக பராமரித்து மேய்ச்சலில் விடாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    அரசு அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான ஆய்வு விஞ்ஞான ரீதியாக அரசு வேளாண் கல்லூரி ஆராய்ச்சி யாளர்கள் அளித்து கொ ண்டி ருப்பார்கள். விவசாயி கள் தேவைப்படும் சந்தேக ங்களை அரசு வேளாண் கல்லூரி விஞ்ஞானிகள் இடம் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தந்தையுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தார்.
    • மோட்டார் கொட்டகைக்கு சென்று மோட்டார் போட முயன்றார்.

    கடலூர்:

    புவனகிரி தாலுகா மருதூர் அருகே அம்பாள்புரம் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் விவசாயி. இவர் மகன் மாதவன் (வயது35) திருமணம் ஆகவில்லை. தந்தையுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தார். வயலில் மேற்கொள்ளப்பட்டுள்ள விதை நேர்த்தி பயிர்களை பார்ப்பதற்கு சென்றார்.

    அப்பொழுது தண்ணீர் இல்லாமல் இருந்ததைப் பார்த்து மோட்டார் கொட்டகைக்கு சென்று மோட்டார் போட முயன்றார். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் 2023-2024 -ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் சம்பா மற்றும் கோடை பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில் (www.pmfby.gov.in) நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-

    தமிழ்நாட்டில் 2023-2024 -ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் சம்பா மற்றும் கோடை பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் பியூச்சர் ஜெனரலி காப்பீடு நிறுவனத்தால் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாமக்கல் மாவட்டத்தில் நெல்-II, சிறியவெங்காயம்-II சம்பா (சிறப்பு) பருவத்திலும் உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், பருத்தி, கரும்பு, , வாழை, மரவள்ளி, மற்றும் தக்காளி பயிர்கள் கோடை (ரபி) பருவத்திலும் பிரிமியத் தொகை காப்பிடு செலுத்த வேண்டும்.

    விவசாயிகள் பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்க ளிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ மற்றும் கடன் பெற விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில் (www.pmfby.gov.in) நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல், விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம்.

    இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ (www.pmfby.gov.in) அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவல ரையோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களையோ அல்லது இத்திட்டத்தை செயல்ப டுத்தும் காப்பீட்டு நிறுவனத்தையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏமப்பூரில் பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரக்கூடிய தண்ணீர் வாய்க்கால் வழியாக வந்து ஏரி நிரம்பியது. இதனால் தி.மழவராயனூர் கிராம விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் அமைச்சர் பொன்முடி, ஏமப்பூர் ஏரி நீர் தேங்கியுள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டு பின் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, நீர்வள த்துறை செயற்பொறியாளர் சோபனா மற்றும் அதிகாரி கள், விவசாயிகளிடம் ஆலோ சனை நடத்தினார். அதன் பிறகு விவசாய பயிர்களில் தேங்கியுள்ள நீரினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அப்போது அவருடன் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.புகழேந்தி, செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர், அய்யப்பன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், தி.மு.க.ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான விசுவநாதன், ஒன்றிய குழுதலைவர் ஓம்சிவ சக்திவேல், தாசில்தார் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநி பக்தவச்சலு, ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரதிமோகன்ராஜ், தேவிசெந்தில், தி.மு.க.நகர செயலாளர் பூக்கடை கணேசன்,பேரூராட்சி துணைத் தலைவர் ஜோதி, ஆவின் இயக்குனர் விஜயபா பு,நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ்,மாவட்ட மருத்துவர் அணி அமை ப்பாளர் காவியவேந்தன், சிறுமதுரை செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • விவசாயிகள் குறுவை சாகுபடியை ஆர்வத்துடன் தொடங்கினார்.
    • மேட்டூர் அணையில் நீர்மட்டம்குறைந்து போனதாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    திருவாரூர்:

    காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    பின்னர் அந்த காவிரிநீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்து, அங்கிருந்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது.

    இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடியை ஆர்வத்துடன் தொடங்கினார்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் உள்ள தோலி, உதயமார்த்தாண்டபுரம், வடசங்கந்தி, இடையூறு, குன்னலூர், பாண்டி போன்ற பகுதிக பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து வந்த நிலையில் பருவமழை பொய்த்து போனதாலும், மேட்டூர் அணையில் நீர்மட்டம்குறைந்து போனதாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இதனால் விவசாயிகள் மோட்டார் வைத்து தண்ணீர் இறைத்து பயிர்களை காப்பாற்றி வந்தனர்.

    இந்த நிலையில் முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் குறுவை நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது.

    இதனால் பயிர்கள் வயல்களில் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் வயல்களில் எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி தடைபட்டு உள்ளது பல போராட்டங்களுக்கு பிறகு அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களில், பருவம் தவறி பெய்த மழையால் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில், வயல்களில் தண்ணீர் தேங்கி கிடப்பதாலும், பயிர்கள் சாய்ந்ததாலும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • மானாவாரி பயிர்களில் மகசூலை அதிகரிக்க விதை கடினப்படுத்துதல் முக்கியமானது.
    • இந்த தகவலை ராமநாத புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரி வித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    மானாவாரியில் பயிரிடும் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் பருவ மழையை மட்டுமே நம்பி உள்ளது. மானாவாரி பயிர்க ளில் மகசூலை அதிகரித்திட விதை கடினப்படுத்துதல் என்பது முக்கியமான தொழில் நுட்பமாகும்.

    விதை கடினப்படுத்துதல் என்பது விதையினை சில மணி நேரங்கள் நீரில் ஊற வைத்து பின்னர் விதைகளை அதன் இயல்பான ஈரப்ப தத்திற்கு உலர வைத்தல் ஆகும். நீருடன் சில மருந்து களை கலந்து ஊறவைத்து விதைப்பதால் விதைகளின் வீரியம் அதிகரித்து வறட் சியை தாங்கி வளர்வதுடன் மிகக் குறைந்த செலவில் 10 முதல் 15 சதவீதம் மகசூல் அதிகரிக்கிறது.

    நெல், கம்பு, பருத்தி விதைகளை கடினப்படுத்த 20 கிராம் பொட்டாசியம் குளோரை டினை 1 லிட்டர் தண்ணீ ரில் கரைக்க வேண் டும். இக்கரைசலில் 550 மில்லி லிட்டர் எடுத்து அதில் ஒரு கிலோ விதை யினை 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் நிழலில் உலர்த்தி இயல்பான ஈரப் பதம் வரும் வரை நிழலில் வைத்து பின்னர் விதைக்க வேண்டும்.

    சோளம்

    சோளம் விதையை கடினப்படுத்த 20 கிராம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் டினை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரைசலில் 650 மில்லி லிட்டர் எடுத்து அதில் ஒரு கிலோ விதை யினை 18 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் நிழலில் உலர்த்தி அதன் இயல்பான ஈரப்பதம் வரும் வரை நிழலில் வைத்த பின் விதைக்க வேண்டும்.

    உளுந்து, பாசிப்பயறு

    உளுந்து, பாசிப்பயறு விதைகளை கடினப்படுத்த 1 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் 1 கிராம் மாங்கனீசு சல்பேட்டினை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரை சலில் 350 மில்லி லிட்டர் எடுத்து அதில் 1 கிலோ விதையினை 3 மணி நேரம் ஊற வைத்து பின்னர் நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும். விதைக்க பயன்படுத்தும் விதையின் அளவை பொறுத்து கரைசலின் அளவினை கூட்டிக் கொள்ளலாம்.

    இந்த தகவலை ராமநாத புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    • டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகி வீணாகி விட்டன.
    • மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இரு மாநிலங்களையும் அழைத்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    விடுதலைத் தமிழ்ப்புலி கள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    காவிரியில் சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என கர்நாடக அரசு அடாவடித்தனம் செய்கிறது.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுகளை மதிக்காமல் கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பேசி வருவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தி ற்கு ஊறுவிளைவிக்கும் செயலாகும்.

    காவிரி பிரச்சினையை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்வு காண வேண்டும். தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    காவிரி ஆணையம் கொடுத்த உத்தரவை பின்பற்றி உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்.

    உரிய நீர் இல்லாமல் டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகி வீணாகி விட்டன.எஞ்சிய பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே எஞ்சிய பயிர்களை காப்பாற்ற முடியும். அடுத்து சம்பா சாகுபடியை தொடங்குவதே கேள்விக்குறியாக உள்ளது.

    தமிழ்நாடு அரசு கடந்த இரு தினங்களுக்கு முன்பு 40,000 ஏக்கருக்கு மட்டும் ஹெக்டேர் 1க்கு ரூ. 13,500 அதாவது ஏக்கருக்கு ரூ. 5400 மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது எந்த வகையில் பொருந்தும். இதை விவசாயிகள் ஏற்கக்கூடிய அறிவிப்பாகுமா?.

    எனவே,தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    காவிரி நீர் விவசாயிகள் வாழ்வாதர உரிமைகள் என்பதை உணர்ந்து மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இரு மாநிலங்களையும் அழைத்துப் பேசி நல்ல முடிவை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடனே காவிரி நீர் திறந்து விடக்கோரியும், பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் வரும் 14-ந் தேதி விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மற்றும் உழவர் உரிமை இயக்கம் ஒருங்கிணைப்பில் அனைத்து விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சையில் மட்டும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் 5-ந்தேதி நடக்கிறது.
    • காலை 10 மணிக்கு அமைப்பு செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    தஞ்சாவூர், அக்.4-

    தஞ்சாவூர் மத்திய, கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்டங்களின் அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடக அரசிடம் இருந்து உரிய காலத்தில் தண்ணீரை பெறமுயற்சி மேற்கொள்ளாத தி.மு.க.அரசை கண்டித்தும், குறுவை சாகுபடியை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காமல் துரோகம் செய்ததை கண்டித்தும், கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்தும், அ.திமு.க. சார்பில் டெல்டா மாவட்டங்களில் 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் தஞ்சையில் மட்டும் அ.தி.மு.க.ஆர்ப்பாட்டம் 6-ந்தேதிக்கு பதில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. தஞ்சை பனகல் கட்டிடம் எதிரே நாளை (வியாழக்கி ழமை) காலை 10 மணிக்கு அமைப்பு செயலா ளர்களும், முன்னாள் அமைச்சர்க ளுமான ஆர்.காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. எனவே மாவட்ட, ஒன்றிய, பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாய பெருங்குடி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
    • கருகும் பயிர்களை பாதுகாக்க கர்நாடகம் காவிரி நீரை‌ திறந்து விட வேண்டும்.

    பூதலூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட 24-வது மாநாடு செங்கிப்பட்டியில் கலிய பெருமாள், முத்துக்கண்ணு ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.

    மாநாட்டின் முதல் நிகழ்வாக அரங்கத்தின் வெளியே கடைத்தெருவில் அமைக்கப்பட்டிருந்த சங்க கொடியினை வீரப்பன் ஏற்றி வைத்தார்.

    மாநாட்டை வாழ்த்தி சங்கத்தின் மாநில பொதுச்செ யலாளர் மாசிலாமணி,தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாள சக்திவேல், மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் விஜயலெட்சுமி, நிர்வாகிகள் சேவையா, திருநாவுக்கரசு, பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சிசெயலாளர் முகில் உள்ளிட்டோர் பேசினர்.

    சங்கத்தின் மாவட்ட பொறுப்பு செயலாளர்.பாஸ்கர் வேலை அறிக்கை, வரவு செலவு அறிக்கை முன்வைத்து பேசினார்.

    மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் மாவட்ட தலைவராக ராமச்சந்திரன், செயலாளராக பாஸ்கர், பொருளாளராக சவுந்தர ராசன் உள்ளிட்ட 27 மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மாநாட்டில் நடப்பாண்டு பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர்களை பாதுகாக்க காவிரியில் கர்நாடகம் தொடர்ந்து நீரைதிறந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • ஆழ்துளை கிணறு அமைத்த போதும், விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.
    • அவிநாசி - அத்திக்கடவு திட்டம் துவக்கப்பட்டதில் இருந்து மூன்று ஆண்டுக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

     திருப்பூர்,செப்.26-

    தொடர் வறட்சியால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுள்ளது. ஆழ்துளை கிணறு அமைத்த போதும், விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது.

    விவசாயத்தையும், குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் உருவாக்கப்பட்டது. பவானி ஆற்று நீரை, குழாய்கள் மூலம் கொண்டு வந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்புவதற்கான திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன. குளம், குட்டைகளில் நீர் ஏற்றி சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாதது, விவசாயிகள், பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. திருப்பூர் கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம் அவிநாசி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதில் அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி விவசாயிகள் குரல் எழுப்பினர். கோரிக்கை மனுக்களும் அளித்துள்ளனர்.

    விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பருவமழை பொய்த்ததால், அவிநாசி, ஊத்துக்குளி தாலுகா பகுதிகளிலும் திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், தொரவலூர், மேற்குபதி, சொக்கனூர், பட்டம்பாளையம் ஊராட்சிகளில் வறட்சி நிலவுகிறது. இப்பகுதிகளில் விவசாயிகள், நடப்பு ஆண்டு வைகாசி பட்டத்தில் 10ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலக்கடலை பயிரிட்டிருந்தனர். கோடை மழை பெய்யாததால் கடலை செடிகள், பூ, பிஞ்சுடன் காய்ந்து போய்விட்டன. வறட்சியால் ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளது.

    பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். பொதுமக்களுக்கும் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவிநாசி - அத்திக்கடவு திட்டம் துவக்கப்பட்டதில் இருந்து மூன்று ஆண்டுக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த திட்டத்தை இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டுவராதது ஏமாற்றம் அளிக்கிறது.தமிழக அரசு அவிநாசி - அத்திக்கடவு திட்டம் மூலம், குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பி,மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற வேண்டும்.
    • தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து உழவர் உரிமை இயக்கம் விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனர் குடந்தை அரசன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பா ட்டத்தில் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தியும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் தமிழ்தேசப் பேரி யக்க தலைமை செயற்குழு உறுப்பினர் விடுதலை சுடர், தீந்தமிழன், அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் படிப்பு வட்ட தலைவர் லூர்துசாமி, சமூகநீதி பாதுகாப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் நந்திவனம் பாலா, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் சித்தாடி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×