என் மலர்
நீங்கள் தேடியது "ஐசிசி"
- முதலில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மறுப்பு தெரிவித்தது.
- தவெக தேர்தல் சின்னம் விசில் என்பதால், விசில் கொண்டுசெல்ல அரசால் திட்டமிடப்பட்டு தடைவிதிக்கப்பட்டதாக விவாதங்கள் எழுந்தன.
ஐசிசி நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரின், நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விசில் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தடையானது ஐசிசி அல்லது பிசிசிஐ விதித்தது அல்ல என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை காவல்துறையினரால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்தது.
இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம் விசில் என்பதால், விசில் கொண்டுசெல்ல அரசால் திட்டமிடப்பட்டு தடை விதிக்கப்பட்டதாக பெரும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தன.
இந்நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பைத் தொடரின் மற்ற போட்டிகளுக்கும் விசில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்படும் பொருட்களின் பட்டியலில் தற்போது விசில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.
- பாகிஸ்தான் இந்தியாவுடன் உலகக் கோப்பையில் விளையாட பேச்சுவார்த்தை.
- பாகிஸ்தான் சில நிபந்தனைகள் ஐசிசி முன் வைத்தது.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் அணிகள் வருகிற 15-ந்தேதி கொழும்பில் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எச்சரித்து இருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
வங்க தேசத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே இந்தியாவுடன் விளையாட மறுக்கும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் ஐ.சி.சி. பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இந்தியாவுடனான போட்டி புறக்கணிப்பு முடிவை கைவிட ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில நிபந்தனையை விதித்தது, தற்போது பாகிஸ்தான் நிபந்தனைகளில் முக்கியமானதை ஐசிசி நிராகரித்துள்ளது.
பாகிஸ்தான் முன்வைத்த நிபந்தனையும், அதற்கு ஐசிசி அளித்த விளக்கமும் பின்வருமாறு:-
பாகிஸ்தானின் நிபந்தனை 1: வங்கதேசத்திற்கு நிதி தொடர்பாக அபராதம் விதிக்கக் கூடாது. உலகக் கோப்பையில் விளையாடவில்லை என்றாலும், ஐசிசி-யின் முழு வருவாய் பகிர்வு கிடைக்க வேண்டும்.
ஐசிசி பதில்: இது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு. வங்கதேச கிரிக்கெட் போர்டு தண்டிக்கப்படாது.
பாகிஸ்தானின் நிபந்தனை 2: வங்கதேசத்திற்கு அடுத்த சுற்று உலகக் கோப்பை அறிவிப்பில் கூடுதலாக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஐசிசி பதில்: 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை குறித்து பரிசீலனை செய்யப்படும்.
பாகிஸ்தானின் நிபந்தனை 3: இந்தியா- பாகிஸ்தான் இருதரப்பு தொடர்கள்.
ஐசிசி பதில்: இந்த கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இருதரப்பு தொடர் என்பது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விவகாரம். இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடங்கும்.
பாகிஸ்தானின் நிபந்தனை 4- இந்தியா- பாகிஸ்தான்- வங்கதேசம் இடையில் முத்தரப்பு தொடர் வேண்டும்.
ஐசிசி பதில்: அதிகார வரம்பு இல்லாததை சுட்டிக்காட்டி நிராகரிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் நிபந்தனை 5: இந்த வருடம் இந்தியா வங்கதேசம் சென்று விளையாட இருந்தது. இந்த தொடரை உறுதிப்படுத்தும் வகையில் ஐசிசி ஈடுபட வேண்டும்.
ஐசிசி பதில்: சுற்றுப் பயணங்கள் இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. அது தலையிட மறுக்கிறோம்.
இவ்வாறு பதில் அளித்த ஐசிசி, இன்னும் 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் பிரதமரிடம் பேசி முடிவு எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஐசிசி கால அவகாசம் வழங்கியுள்ளது.
- வருவாய் பகிர்வை அதிகரித்து தர வேண்டும் என்பது முதல் கோரிக்கையாகும்.
- இந்தியா-பாகிஸ்தான் இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது 2-வது கோரிக்கையாகும்.
இஸ்லாமாபாத்:
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வருகிற 15-ந்தேதி கொழும்பில் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எச்சரித்து இருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
வங்க தேசத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்தியாவுடன் விளையாட மறுக்கும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் ஐ.சி.சி. பேச்சுவார்த்தை நடத்தியது.
ஐ.சி.சி. துணை தலைவர் இம்ரான் குவாஜா அசோசியேட் உறுப்பினர் இயக்குநரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட்டின் பொதுச் செயலாளருமான முபாஷிர் உஸ்மானி ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின நக்வியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவா் அமினுல் இஸ்லாமும் மோசின் நக்வியுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஐ.சி.சி. பாகிஸ்தான் இடையே பேச்சுவாா்த்தை நடத்தும் முன்பாக நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.
இதே போல ஐ.சி.சி. துணைத் தலைவா், அமினுல் இஸ்லா முடனும் பேச்சுவாா்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.
இந்தியாவுடனான போட்டி புறக்கணிப்பு முடிவை கைவிட ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 3 நிபந்தனையை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
வருவாய் பகிர்வை அதிகரித்து தர வேண்டும் என்பது முதல் கோரிக்கையாகும். இந்தியா-பாகிஸ்தான் இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது நக்வியின் 2-வது நிபந்தனையாகும். மேலும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டும் என்று மற்றொரு கோரிக்கையாகும்.
அதே நேரத்தில் பாகிஸ்தான் அரசின் முடிவே இறுதியானது என்றும் ஐ.சி.சி.யிடம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மோசின் நக்வி இன்று பாகிஸ்தான் பிரதமரை சந்திக்கிறார். இந்த ஆலோசனைக்கு பிறகே முடிவு தெரிய வரும்.
- இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ரத்தானால் பெரும் பொருளாதார இழப்பு நேரிடும்
- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரை சந்தித்து ஐசிசி ஆலோசனை
பாகிஸ்தான், 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவோம் என்றும் ஆனால் பிப்.15-ல் கொழும்பில் நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
மறுபக்கம் இந்தியா பாகிஸ்தான் உடன் விளையாட தயாராக இருக்கிறது என அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் விளையாடுவதா? இல்லையா? என பாக்., கிரிக்கெட் வாரியம் 24 மணி நேரத்தில் முடிவெடுக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ரத்தானால் பெரும் பொருளாதார இழப்பு நேரிடும் என்பதால் லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரை சந்தித்து ஐசிசி தரப்பில் நேற்று சுமார் 5 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதையடுத்து பாகிஸ்தான் அரசை சுலந்தாலோசித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது முடிவை அடுத்த 24 மணி நேரத்தில் அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.
- வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும்.
- திகாரத்துடன் பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
பாகிஸ்தான், 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவோம் என்றும் ஆனால் பிப்.15-ல் கொழும்பில் நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
மறுபக்கம் இந்தியா பாகிஸ்தான் உடன் விளையாட தயாராக இருக்கிறது என அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டிற்கு, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான நாசர் ஹுசைனின் கருத்துகள் கவனம் ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் பல வசைபாடல்களுக்கும் உள்ளாகி வருகிறது.
பாகிஸ்தான் நிலைப்பாடு தொடர்பாக பேசியுள்ள நாசர் ஹுசைன்,
"இதுவே இந்தியா, தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, 'எங்கள் அரசு இந்த நாட்டில் விளையாட அனுமதிக்கவில்லை' என்று கூறியிருந்தால், ஐசிசி அதே உறுதியோடு, 'விதிகள் உங்களுக்கு தெரியும். மீறினால் தொடரில் இருந்து நீக்குவோம்' என சொல்லியிருக்குமா?. அனைத்து தரப்பினரும் கேட்பது நிலைத்தன்மைதான். வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும்.
இந்திய ரசிகர்கள் கூறலாம், 'இன்னும் நல்லா அழுங்க, எங்களிடம் பணம் இருக்கிறது' என்று. ஆனால் அதிகாரத்துடன் பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை தொடர்ந்து குறைமதிப்பீடு செய்வது அவர்களின் கிரிக்கெட்டை பாதிக்கிறது. அதனால்தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அல்லது இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான சிறந்த போட்டிகள் காலப்போக்கில் ஒருதலைப்பட்சமானவையாக மாறிவிட்டன." என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும், இது கிரிக்கெட்டின் தரத்தைக் குறைத்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இவரின் இந்த கருத்துக்கு இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து, இவரை ட்ரோல் செய்துவருகின்றனர்.
- பாகிஸ்தானின் ஆண்டு வருவாய் பகிர்வான ரூ.316 கோடியை ஐ.சி.சி. நிறுத்தி வைத்துள்ளது.
- ஐ.சி.சி.யின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாய்:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்தது. அதே நேரத்தில் 20 ஓவர் உலகக் கோப்பையில் ஆடுவோம் என்றும் தெரிவித்து இருந்தது.
இதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எச்சரிக்கை விடுத்தது. கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இதனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
பாகிஸ்தான் அரசின் முடிவுப்படி இந்தியாவுக்கு எதிராக விளையாட இயலாது என்ற முடிவில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. மீண்டும் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் ஒளிபரப்பு நிறுவனத்திடம் இருந்து சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானின் ஆண்டு வருவாய் பகிர்வான ரூ.316 கோடியை ஐ.சி.சி. நிறுத்தி வைத்துள்ளது. அந்த நிதியில் இருந்து ஒளிபரப்பாளர்களுக்கு ஐ.சி.சி. செலுத்த வாய்ப்புள்ளது. ஒளிபரப்பு நிறுவனம் தொடுக்கும் வழக்கில் பாகிஸ்தானுக்கு எந்த விதத்திலும் ஐ.சி.சி. உதவியாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. டி.ஆர்.சி. குழுவிடம் ஒளிபரப்பு நிறுவனம் மேல் முறையீடு செய்யலாம்.
இதற்கிடையே ஐ.சி.சி.யின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- புறக்கணிப்பு முடிவை எடுத்தால் பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை சந்திக்கும்.
- பாகிஸ்தான் அணி நாக் அவுட் சுற்றிலும் இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் என்று கூறப்படுகிறது.
துபாய்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இதற்கிடையே டி20 உலக கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் டி20 உலகக் கோப்பையில் ஆடுவோம் என்றும் தெரிவித்து உள்ளது. இந்தியாவுடனான போட்டியை எதற்காக புறக்கணிக்கிறோம் என்ற காரணத்தை பாகிஸ்தான் அரசு தெரிவிக்கவில்லை.
இதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்தது. கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இதனால் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இந்தியாவுடனான போட்டியை புறக்கணிப்பது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. பி.சி.பி.யின் முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ஐ.சி.சி. இன்னும் காத்திருக்கிறது.
பாகிஸ்தான் அரசின் முடிவுப்படி இந்தியாவுக்கு எதிராக விளையாட இயலாது என்ற முடிவில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புறக்கணிப்பு முடிவை எடுத்தால் பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை சந்திக்கும். பாகிஸ்தானுக்கு மற்ற நாடுகள் செல்வதற்கு தடை, வருவாய் பகிர்வு நிறுத்தம், பி.எஸ்.எல். போட்டியில் வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி மறுப்பு, அபராதம் என பல்வேறு வகையில் நடவடிக்கைகளை ஐ.சி.சி. எடுக்கும்.
இந்தியாவுடனான போட்டியில் விளையாட பாகிஸ்தான் மறுத்தால் இந்திய அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்.
திட்டமிடப்பட்ட நாளில் (15-ந்தேதி) இந்திய அணி கொழும்பு மைதானத்துக்கு சென்று விடும். டாஸ் போடும் நிகழ்வில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பங்கேற்பார். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா வரவில்லை என்றால் அந்த அணி வெளியேறியதாக தகுதி நடுவர்கள் இந்தியாவுக்கு 2 புள்ளிகளை வழங்குவார்கள். பாகிஸ்தான் அணி நாக் அவுட் சுற்றிலும் இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இலங்கை புறப்பட்டு சென்றது.
- இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது 10 வினாடிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.40 வரை விளம்பர கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது.
- இந்த ஆட்டம் ரத்தானால் முதலில் பாதிக்கப்படுவது ஒளிபரப்பு நிறுவனம் தான்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலேயே இந்தியா- பாகிஸ்தான் ஆட்டங்கள் தான் பெரும் வருவாயை ஈட்டி தருகின்றன. இரு நாட்டு பகைமை உணர்வு ஆட்டத்திலும் எதிரொலிப்பதால் கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த போட்டியை காண தவம் கிடப்பார்கள்.
அந்த வகையில் விரைவில் தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல் தான் உச்சபட்ச எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. இந்த ஆட்டத்தின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.4,500 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. இதில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம், விளம்பர வருவாய், டிக்கெட் விற்பனை, இதர வர்த்தக நடவடிக்கைகள், அதிகாரபூர்வ பெட்டிங் ஆகியவையும் அடங்கும். வேறு எந்த தனிப்பட்ட ஆட்டத்துக்கும் இந்த அளவுக்கு வருவாய் மதிப்பு கிடையாது.
ஒருவேளை இந்த ஆட்டம் ரத்தானால் முதலில் பாதிக்கப்படுவது ஒளிபரப்பு நிறுவனம் தான். இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது 10 வினாடிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.40 வரை விளம்பர கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. எனவே இந்த ஆட்டம் நடக்காவிட்டால் விளம்பர வருவாயில் மட்டும் ரூ.250 முதல் ரூ.300 கோடி வரை 'வெட்டு' விழும். அதை ஈடுகட்ட ஐ.சி.சி.யிடம் ஒளிபரப்பு நிறுவனம் நிச்சயம் இழப்பீடு கோரும்.
ஐ.சி.சி,.க்கு வரும் வருவாயில் பெரும் பகுதி இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மூலம் கிடைக்கிறது. இந்த வருவாய் குறைந்தால், ஐ.சி.சி. உறுப்பு நாடுகளுக்கு பிரித்து வழங்கும் நிதியின் அளவும் கணிசமாக குறைந்து விடும். இதனால் ஐ.சி.சி. நிதிைய மட்டுமே நம்பி இருக்கும் சிறிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.
மேலும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு தலா ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும். இந்திய கிரிக்கெட் வாரியம் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதால் இந்த இழப்பை சமாளித்து விடும். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடங்கும் அபாயம் உள்ளது.
அத்துடன் ஐ.சி.சி.யின் மொத்த வருவாயில் பாகிஸ்தானுக்கு ஏறக்குறைய 5.75 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு ரூ.315 கோடியாகும். ஒப்பந்த விதியை மீறி உலகக் கோப்பை ஆட்டத்தை புறக்கணித்தால், ஐ.சி.சி. இந்த நிதியை நிறுத்தி வைப்பதோடு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
- டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம்.
- ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்தது.
வங்கதேசத்திற்கு ஆதரவாக டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்பதாக எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எச்சரித்துள்ளது.
அவ்வாறு செய்யாவிட்டால் பாகிஸ்தானை சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து மொத்தமாக தடை விதிக்கவும் பாகிஸ்தானின் அணியின் நிதி ஆதாரங்களை முடக்கவும் ஐ.சி.சி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 'சி' பிரிவில் வங்காளதேச அணி இடம் பிடித்து இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்த வங்கதேச அணி, உலகக்கோப்பைத் தொடரிலிருந்து நீக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாற்று அணியாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வங்கதேசத்திற்குத் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது.
இலங்கையில் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.
இலங்கையில் வரும் 15-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.
- நீங்கள் முன்னதாகவே விலகினால் அது முற்றிலும் வேறுபட்டது.
- இதில் பல்வேறு நாட்டு வாரியங்களும் சம்பந்தப்பட்டுள்ளன, எனவே இது ஒரு தனிநபரின் முடிவாக மட்டும் இருக்காது.
புதுடெல்லி:
20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மறுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கடைசி நேரத்தில் நீங்கள் (பாகிஸ்தான்) விலகினால், அது ஒரு பிரச்சினை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் முன்னதாகவே விலகினால் அது முற்றிலும் வேறுபட்டது.
போட்டியின் கடைசி நேரத்தில் விலகினால், நிச்சயமாக ஐ.சி.சி. தலையிட்டு சில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இதில் பல்வேறு நாட்டு வாரியங்களும் சம்பந்தப்பட்டுள்ளன, எனவே இது ஒரு தனிநபரின் முடிவாக மட்டும் இருக்காது.
ஐ.சி.சி. எடுக்கும் நடவடிக்கை எதிர்காலத்தில் வேறு எந்த அணியும் இதுபோன்று செய்யத் துணியாத வகையில் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அரசியல் காரணங்களுக்காக விளையாட்டைப் புறக்கணிப்பது வாடிக்கையாகி விடும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
- இந்தியா - –பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அணி அறிவித்தது.
- பாகிஸ்தான் அரசால் எடுக்கப்பட்ட முடிவை ஐசிசி கவனத்தில் எடுத்துள்ளது.
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்ததற்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசின் அறிவுறுத்தலின் பேரில், பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா - –பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அணி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தது. இருப்பினும், தொடரில் பாகிஸ்தான் பங்கேற்கும் என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இந்த முடிவு உலக கிரிக்கெட்டின் நேர்மை, போட்டித் தன்மையை பாதிக்கும் என்றும், நீண்டகாலத்தில் விளையாட்டிற்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கும். இந்த முடிவு தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் (PCB) இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை," என்று தெரிவித்துள்ளது.

மேலும், "2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகளில் மட்டும் பங்கேற்குமாறு பாகிஸ்தான் அரசால் எடுக்கப்பட்ட முடிவை ஐசிசி கவனத்தில் எடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவலை ஐசிசி எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஆனால், உலகளாவிய விளையாட்டு நிகழ்வில் அனைத்து தகுதி பெற்ற அணிகளும் அட்டவணைப்படி சமமாக போட்டியிட வேண்டும் என்ற அடிப்படை கொள்கையுடன், இத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பு பொருந்தாததாக உள்ளது."
"ஐசிசி போட்டிகள் நேர்மை, போட்டித்தன்மை, தொடர்ச்சி மற்றும் நியாயத்தின் அடிப்படையில் அமைந்தவை. தேர்ந்தெடுத்த போட்டிகளில் மட்டும் பங்கேற்பது, இந்த போட்டிகளின் புனிதத்தையும் பாதிக்கிறது. தேசிய கொள்கை விவகாரங்களில் அரசுகளின் பங்கை ஐசிசி மதிக்கிறது. ஆனால், இந்த முடிவு உலக கிரிக்கெட்டுக்கும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் நலனுக்கும், பாகிஸ்தானில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் சாதகமானதல்ல."

"இந்த முடிவு, பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட்டுக்கும், உலக கிரிக்கெட் சூழலுக்கும் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, PCB இதனை மீண்டும் பரிசீலிக்கும் என ஐசிசி நம்புகிறது. 2026 டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவது ஐசிசியின் முதன்மை இலக்கு. அதற்காக, PCB உட்பட அனைத்து உறுப்பினர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அனைத்து தரப்பினரின் நலனையும் பாதுகாக்கும் வகையில், பரஸ்பர தீர்வை PCB ஆராய வேண்டும்," என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா (USA) ஆகிய அணிகளுடன் 'A' பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் இணைந்து இலங்கை இந்த தொடரை இணைந்து (co-host) நடத்துகிறது. பாகிஸ்தானின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறவுள்ளன.
பாகிஸ்தான், பிப்ரவரி 7ஆம் தேதி தொடரின் முதல் நாளில் நெதர்லாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. அதன் பின்னர் பிப்ரவரி 10ஆம் தேதி அமெரிக்காவையும், பிப்ரவரி 18ஆம் தேதி நமீபியாவையும் எதிர்கொள்கிறது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தால், இரண்டு புள்ளிகளை இழக்கும் நிலை உருவாகும். மேலும், ஐசிசி விளையாட்டு விதிகளின்படி, அந்த போட்டி 'forfeit' ஆக அறிவிக்கப்பட்டால், பாகிஸ்தானின் நெட் ரன் ரேட்டும் பாதிக்கப்படும்.
- 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் வங்கதேசத்தை நீக்கி ஸ்காட்லாந்தை ஐசிசி சேர்த்தது.
- பாகிஸ்தான் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலக போவதாக மிரட்டல் விடுத்து இருந்தது
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடக்கிறது.
பாதுகாப்பு காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாட இந்தியா செல்லமாட்டோம் என்று வங்கதேசம் அறிவித்தது. இதனால் வங்கதேசத்தை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்தை சேர்த்து ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முடிவு எடுத்தது.
இதற்கிடையே வங்காளதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலக போவதாக மிரட்டல் விடுத்து இருந்தது. இந்நிலையில் வங்காள தேசத்துக்கு ஆதரவாக உலக கோப்பையில் பங்கேற்பது குறித்து சந்தேகத்தை கிளப்பி அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக தனிமைப்படுத்தப்படும் என்று எச்சரித்தது.
இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடருக்கு சல்மான் அகா தலைமையில் 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்தது. பாகிஸ்தான் அணி அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
2026 டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:
சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் ஆசம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், கவாஜா முகமது நஃபே, முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான், சாஹிப்சாதா, ஷாஹிம்ஹானி ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.






