என் மலர்
வழிபாடு
- தீர்க்கசுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை.
- ஞாயிறு முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம்.
அம்பிகை மங்களாம்பிகை தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருளுகிறாள். இவளே இங்கு வரப்பிரசாதியாவாள். இவளது பெயரிலேயே கோவிலும் அழைக்கப்படுகிறது. அம்பிகையின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு, இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும், திருமணமான பெண்கள் நீண்டகாலம் தீர்க்கசுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை.
இந்த அம்பிகை தன்னை வேண்டுபவர்களுக்கு தாலி தரும் தாயாக இருந்து அருளுகிறாள். சுமங்கலிப்பெண்கள், அம்பிகையிடம் இருந்து தாலியை வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு, ஏற்கனவே அணிந்திருக்கும் தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜை செய்கின்றனர். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நவராத்திரியின்போது கோவில்களில் அம்பாள் உற்சவர் சிலைக்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்வர். ஆனால், இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் அம்பிகைக்கே அலங்காரம் செய்யப்படுகிறது.
அப்போது இவளது சிலைக்கு வஸ்திரம், ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தனக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது. அந்த சந்தனத்திலேயே பட்டுத் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ண சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்ததைப்போல அலங்கரிக்கின்றனர்.
சந்தனத்திலேயே, இவ்வாறு அம்பிகை சர்வ அலங்காரத்துடன் காட்சி தருவதை காண கண் கோடி வேண்டும். ஒவ்வொரு வருடமும் தை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் இந்த அலங்காரம் செய்யலாம்.
கோவில் அமைப்பு
கிழக்கு திசை நோக்கியுள்ள ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்தின் தல விருட்சம் வடமொழியில் கோங்கிலவம் எனப்படும் வெள்ளெருக்கு மரம். முன்மண்டபத்தில் அம்பாள் மங்களநாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
கருவறையில் கோவில் கொண்டிருக்கும் சிவபெருமான் நீண்டுயர்ந்த பாண வடிவில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சந்திரசேகரர், மயில் வாகனர், நால்வர், பிரதோஷ நாயகர் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூடர், பிரம்மா, துர்க்கைக்கு சந்நிதிகள் உள்ளன. உள் சுற்றில் விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி, பைரவர் சந்நிதிகளும், நடராஜ சபையும் உள்ளன.
சிவன் சன்னதிக்குச் செல்லும்போது முன் மண்டபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருவரும் துவாரபாலகிகள் போல இருபுறமும் காட்சி தருகின்றனர். இவ்விருவரும் இரு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது விசேஷமான தரிசனம். இதில் சரஸ்வதி வீணையில்லாமல் காட்சி தருகிறார்.
பிரகாரத்திலுள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். இதில் பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று சுவாமியின் நடனத் திற்கேற்ப இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது.
பிராணநாதர் கோவில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்களும் அருகருகில் இருக்கிறது. சிவனது இரண்டு கண்களாக இருக்கும் சூரிய, சந்திரர்களே இங்கு சிவனை குளிர் விப்பதற்காக தீர்த்தமாக இருப்பதாக சொல்வதுண்டு. சுவாமிக்கு இந்த இரு தீர்த்தத்தையும் சேர்த்தே அபிஷேகம் செய்கின்றனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை இருக்கிறாள்.
இதுதவிர, சிவதுர்க்கை சோமாஸ்கந்தர் சன்னதியின் பின்புறத்தில் காட்சி தருகிறாள். இவ்விருவரின் பாதங்களுக்கு கீழேயும் மகிஷாசுரன் கிடையாது. காவேரி, சிவன் கோஷ்டத்தில் துர்க்கைக்கு அடுத்து சிலை வடிவில் இருக்கிறாள். ஆடி பதினெட்டாம் பெருக்கின்போது இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.
காளி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர். சூரியன், அம்பாள் ஆகாசவாணி , பூமாதேவி ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம். இங்கு முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
சிறப்புக்கள்
அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். நவகிரக தோஷம், பெண்கள் திருமண பாக்கியம்,குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், சத்ருபயம்(எதிரிகள் பயம்) நீக்கம்பெறல், திருட்டுபயம் விடுபடுதல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.
- முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- குரங்கனி முத்துமாலையம்மன் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-24 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி இரவு 9.14 மணி வரை பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: கேட்டை இரவு 8.17 மணி வரை பிறகு மூலம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பிரதோசம். மாத சிவராத்திரி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். மதுரை செல்லாத்தம்மன் சப்பரத்தில் பவனி. குரங்கனி முத்துமாலையம்மன் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர். கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-செலவு
மிதுனம்-நற்செயல்
கடகம்-போட்டி
சிம்மம்-தெளிவு
கன்னி-வரவு
துலாம்- முயற்சி
விருச்சிகம்-தாமதம்
தனுசு- சந்தோஷம்
மகரம்-இன்பம்
கும்பம்-சிறப்பு
மீனம்-கடமை
- பிராணநாதேஸ்வரரை அப்பர், சம்பந்தர் போற்றி பாடியுள்ளார்கள்.
- சித்திரை வருடப்பிறப்பன்று பஞ்சாங்கம் வாசித்தால் நடைபெறும்.
1. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது திருமங்கலக்குடி மங்களாம்பிகை உடனான பிராணநாதேஸ்வரர் கோவில்.
2. பிராணநாதேஸ்வரரை அப்பர், சம்பந்தர் போற்றி பாடியுள்ளார்கள்.
3. பிராணநாதேஸ்வரரை காளி, சூரியன், பூமாதேவி, ஆகாசவாணி, விஷ்ணு, பிரம்மா, அகஸ்தியர், மங்களாம்பிகை முதலானோர் பூஜை செய்து இருக்கிறார்கள்.
4. ராமலிங்க அடிகளார் கருமங்கள் ஓடிபோய் காண்மங்கலக்குடி என்று பாடியுள்ளார்.
5. இவ்வாலயத்தில் சித்திரை வருடப்பிறப்பன்று பஞ்சாங்கம் வாசித்தால் நடைபெறும்.
6. ஆனி மாதம் ஸ்ரீநடராஜர் அபிஷேகமும் ஆடி மாதம் 18-ம் பெருக்கன்று காவிரியில் தீர்த்தம் கொடுத்தலும் நடைபெறும்.
7. புரட்டாசியில் ஸ்ரீமங்களாம்பிகைக்கு 10 நாட்கள் நவராத்திரி விழாவும், நிறை பணியும் கொண்டாடப்படுகிறது.
8.ஐப்பசியில் பவுர்ணமி அன்று அன்னாபிஷேகமும் சஷ்டி அன்று சூர சம்ஹாரமும் கார்த்திகையில் நான்கு சோம வாரமும், திருகார்த்திகை அன்று சொக்கபனையும் கொளுத்தப்படும்.
9. மார்கழி திருவாதிரையில் ஸ்ரீநடராஜர் அபிஷேகமும் செய்வது வழக்கம்.
10. தை முதல் தேதி மகர சங்கராந்தி அன்று காவிரியில் தீர்த்தம் கொடுத்தலும், மாசி சிவராத்திரியில் நான்கு காலம் சிறப்பு அபிஷேகமும் மேற்கொள்வார்கள்.
11. பங்குனியில் இக்கோவிலின் வருடாந்திர பங்குனி உத்திர உற்சவம் 10 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
12. பங்குனியில் தீர்த்த வாரி 10 நாள் உற்சவத்தில் 7-ம் நாள் அன்று பிராணநாதேஸ்வரருக்கும், மங்களாம்பிகைக்கும் திருக்கல்யாணம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாமும் மங்களாம்பிகையின் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்திட நம்மால் முடிந்த காணிக்கையை அலுவலகத்தில் செலுத்தி மங்களாம்பிகையின் திருமணம் கண்டு மாங்கல்ய தோஷங்கள் நீங்கி திருமணம் ஆகாதவர்கள் திருமணம் கைகூடி நல்வாழ்வு வாழ்வோமாக.
13. மதியம் 50 அடியார்களுக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் 100 அடியார்களுக்கும் 'உண்டி நாலு விதத்தில் ஆறு சுவை திறத்தில்' என்றபடி வடை, பாயாசத்துடன் அன்னம் படைப்பு நடைபெறுகிறது. பக்தர்கள் தங்களால் முடிந்த அளவில் அன்னதானத்திற்கு நிதியளிக்கலாம்.
14. கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவிலுக்குச் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து, சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள திருமங்கலக்குடியை அடையலாம்.
15. இவ்வூரில் இருந்து சூரியனார் கோவில் ½ கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் வழிபட்ட பின்னரே சூரியனார் கோவிலில் வழிபடச் செல்ல வேண்டும் என்பது மரபு.
16. திருமங்கலக்குடிக்கு மிக அருகில் இருக்கும் ரெயில் நிலையம் ஆடுதுறை.
17. இந்த தலத்தின் வழிபாட்டு நேரம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை.
18. இந்த தலத்தில் நாள்தோறும் 4 கால பூஜை நடைபெறுகிறது.
19. திருமங்கலக்குடி ஆலயத்தை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்.0435-2470480
20. இந்த தலத்துக்கு அருகில் சூரியனார் கோவில் திருவெள்ளியங்குடி, திருப்பனந்தாள், சஞ்சனூர், ஆலயங்கள் உள்ளன.

21. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 52 கி.மீ தொலைவில் திருமங்கலக்குடி உள்ளது. திருமங்கலக்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து இக்கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
22. இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். வழக்கமாக சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையார் (பீடம்) உயரத்தை விட சிறியதாக இருக்கும். ஆனால் இக்கோவிலில் சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட உயரமாக அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் மரகத லிங்கம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.
23. பிரகாரத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள் சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர்.
24. காளி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர், சூரியன், அம்பாள் ஆகாசவாணி, பூமாதேவி ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இதுவாகும்.
25. இத்தலத்தில் அம்மன் மங்களாம்பிகை என்கிற மங்களநாயகி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி வலது கையில் தாலிக்கொடியுடன் காட்சி தருகிறார்.
26. மாங்கல்ய தோஷமும், ராகு, கேது, சனி முதலிய கிரக தோஷங்களும் விலக தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் மங்களாம்பிகையை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
27. வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின் போதும் இக்கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது.
28. சத்ருபயம் நீங்க, நவகிரக தோஷம், பெண்கள் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம் ஆகியவற்றுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.
29. அம்மனுக்கு திருமாங்கல்யமும், புடவையும் சாற்றுகின்றனர். சுவாமிக்கு வஸ்திரம் சாற்றியும், அபிஷேகம் செய்தும், 5 சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் துணி, மஞ்சள், குங்குமம், பூ, வெற்றிலை, பாக்கு, சீப்பு, கண்ணாடி வளையல், மாங்கல்ய கயிறு, தட்சிணை வைத்து கொடுத்து ஆசி வாங்குவதை நேர்த்திக்கடனாக செய்கிறார்கள்.
30. சுவாமிக்கு நல்லெண்ணெய், மா பொடி, திரவிய பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பழவகைகள், இளநீர், சந்தனம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் செய்தும் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.

31. ஸ்ரீபிராணநாத சுவாமிக்கு 11 ஞாயிற்றுக்கிழமை அர்ச்சனை செய்வதாலும் 11 ஞாயிற்றுக்கிழமை தயிர் சாதம் அன்னதானம் செய்வதாலும் அஷ்டமசனி, ஏழரை ஆண்டு சனி தோஷம் நவக்கிரக தோஷம், பூர்வ ஜென்ம தோஷம், பித்ருக்கள் தோஷம், திசாபுத்தி, புத்திர தோஷம் நிவர்த்தியாகும்.
32. அமாவாசையில் அகஸ்தியருக்கு அபிேஷகம் செய்வதால் பித்துருக்கள் தோஷம் நிவர்த்தி ஆகும்.
33. ஜென்ம நட்சத்திரப்படி ஸ்ரீ மரகதலிங்கம் அபிஷேகம் செய்வதால் புத்திர தோஷம், பூர்வ ஜென்ம தோஷம் நிவர்த்தி ஆகும்.
34. மங்களாம்பிகை அம்மன் சந்நிதியில் திருமணம் செய்து கொள்வதால் மாங்கல்ய தோஷம் நிவர்த்தி பெறுவதோடு தீர்க்க சுமங்கலி பிராப்தமும் கிைடக்க பெறுகிறார்கள்.
35. ஸ்ரீ பிராணநாத சுவாமிக்கும் ஸ்ரீ மங்களாம்பிகை அம்மனுக்கும் அபிஷேகம் செய்வதால் ஆயுள் ஆரோக்கியம் கிடைக்க பெறுகிறார்கள்.
36. திருமணம் ஆன மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் ஸ்ரீமங்களாம்பிைக அம்மன் சந்நிதியில் மறு மாங்கல்யம் பரிகாரம் செய்து கொள்வது சிறப்பு.
37. பத்மாசனத்தில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி தேவியையும், ஸ்ரீ சரஸ்வதி தேவியையும் வழிபடுவதால் லட்சுமி கடாட்சமும் கல்வி மேன்மையும் கிடைக்கும்.
38. நவக்கிரகங்கள் தங்களின் சாபம் நீங்க, வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் படைத்து இறைவனை வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. எனவே இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கி ழமைகளிலும் உச்சிகால பூஜையின் போது, உப்பில்லாத தயிர் சாதம் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
39. உடலில் சரும வியாதியுள்ளவர்கள் இங்கு வந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் சுவாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட்டு வந்தால் வியாதியில் இருந்து நீங்கப்பெருவர் என்பது வரலாறு.
40. மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், தீபாவளி, மகர சங்கராந்தி, தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்கள் சிறப்பு அபிஷேக, பூஜைகளுடன் அனுசரிக்கப்படுகிறது. அமாவாசை பதினைந்து நாட்களில் அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் அர்ப்பணிக்கப்படுகின்றன.
41. இறைவனுக்கு மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் சொந்த வடிவங்களைக் குறிக்கும் மூன்று முகங்கள் உள்ளன, இது மற்ற கோயில்களில் காணப்படவில்லை. இங்கு படைப்பாளர் பிரம்மா, பாது காவலர் விஷ்ணு உள்ளனர்.
- காயாம்பூ நிறத்தை உடைய கண்ணனே!
- உதய காலத்து வெளிச்சம் தோன்றியது.
திருப்பாவை
பாடல்
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்
விளக்கம்:
வீரமுடைய ஒரு சிங்கம் மழைக்காலத்தில் வெளியே வர முடியாமல் மலையில் உள்ள குகையில் நீண்ட காலம் படுத்து தூங்குகிறது. மழைக்காலம் முடிந்த பின் திடீரென விழித்தது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்க பிடரி சிலிர்த்து நான்கு புறமும் திரும்பிப்பார்த்து கர்ஜனை செய்து குகையில் இருந்து வெளியே புறப்படுகிறது. அந்த சிங்கத்தைப் போல் காயாம்பூ நிறத்தை உடைய கண்ணனே! நீயும் உன் திருக்கோவிலில் இருந்து நாங்கள் இருக்கும் இடத்துக்கு வந்து அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து எங்கள் குறைகளைக்கேட்டு அருள் செய்ய வேண்டும். எங்கள் வாழ்விற்கு வேண்டிய நல்லவை. கெட்டவை அறிந்து அருள்புரிவாயாக!
திருவெம்பாவை
பாடல்
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
விளக்கம்
அழகிய குயில்கள் கூவின. கோழிகள் கூவின. மற்ற பறவைகளும் ஒலி எழுப்பின. சங்குகள் முழங்கின. வானத்தில் ஒளி வீசிக் கொண்டிருந்த நட்சத்திரங்களின் ஒளி மறைந்தது. உதய காலத்து வெளிச்சம் தோன்றியது. தேவாதி தேவனே! திருப்பெருந்துறையில் வாழும் சிவபெருமானே! எமக்கு அன்புடன் உன் வீரக்கழல் அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டி அருள வேண்டும். யாராலும் அறிய முடியாத தன்மை உடையவனே! எளிமையானவனே! எம்முடைய தலைவனே! துயில் நீங்கி எழுவாயாக!
- தயிர் சாதம் பிரசாதமாக வெள்ளெருக்கு இலையில் தரப்படுகிறது.
- மாங்கல்ய சரடு பெண்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
* திருமங்கலக்குடி தலத்தின் இறைவியை வழிபட, திருமணத் தடை நீங்குகிறது.
* மாங்கல்ய பலம் நீடிக்கிறது. ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டுகிறது என்பது பக்தர்களின் அனுபவ உண்மை.
* கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, தொடர்ந்து பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் தயிர் சாதத்தை
வெள்ளெருக்கு இலையில் வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்து அதை உண்ண, நோய் குணமடை வதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு செய்து பிணிகள் விலகியோர் நிறைய உண்டாம். இத்தலத்தில் ஞாயிறு மதியம் உச்சிகால பூஜையில் தயிர் சாதம் பிரசாதமாக வெள்ளெருக்கு இலையில் தரப்படுகிறது.
* ஞாயிற்றுக்கிழமைகளில் தயிர்சாதம் அன்னதானம் செய்வதால் அஷ்டமச்சனி, ஏழரை ஆண்டுச்சனி, தசாபுத்தி தோஷம் ஆகியவை நிவர்த்தியாகும்.
* மங்களநாயகியின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடு பெண்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. மங்காளம்பிகைக்கு ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகியவை நீங்கப்பெற்று தீர்க்க சுமங்கலி பிராப்தமும். விரைவில் விவாக பிராப்தமும் கிடைக்க அம்பாள் அருள் புரிகிறாள் என்று அவ்வூரிலுள்ளோர் கூறக்கேட்டோம்.
* மேலும் இத்திருக் கோவிலுள்ள அகத்தீஸ்வரர் லிங்கத்திற்கு அமாவாசை தினத்தில் அபிஷேகம் செய்வதால் பூர்வ ஜென்ம தோஷம் பித்ருக்கள் சாபம் இருந்தால் நிவர்த்தியாகிறதாம்.
* சூரியன், திருமால், காளி, பிரம்மன், அகத்தியர் முதலானோர் இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டுப்பேறு பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.
* திருநாவுக்கரசர் தான் பாடிய இத்தலத்திற்கான பதிகத்தில் மூன்றாவது பாடலில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். மங்கலக்குடி ஈசனை மாகாளி வெங்கதிர்ச் செல்வன் விண்ணொடு மண்ணும் நேர் சங்குசக்கரதாரி சதுர்முகன் அங்கு அகத்தியனும் அர்ச்சித்தார் அன்றே.
* ஆமங்கலக்குடி இறைவனை மாகாளியும், சூரியனும், விண்ணும் மண்ணும் நிகராய சங்கு சக்கரதாரியாகிய திருமாலும் பிரமனும், அகத்தியனும் அர்ச்சித்தார்கள்.
தல அருமை
பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், அலைவாணர் என்பவர் அமைச்சராக இருந்தார். அவர் அரசனின் அனுமதி பெறாமல் வரிப் பணத்தை தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பச் செலவிட்டார்.
இதையறிந்த மன்னன் அவரை அழைக்க, அமைச்சரோ மன்னனைக் காண அஞ்சி உயிர் நீத்தார். இறக்கும்போது அவர் தனது மனைவியிடம் "நான் இறந்தவுடன் என் உடலை திருமங்கலக்குடிக்கு எடுத்துச் சென்று அங்கேயே அடக்கமும் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறு அவரது இறந்த உடலை எடுத்துச் செல்லும்போது, அமைச்சரின் மனைவி இறைவி மங்களாம்பிகையிடம் மாங்கல்ய பாக்கியம் அருளப் பிரார்த்தனை செய்தாள்.
ஊர் எல்லையருகே வந்ததும் உயிரற்ற மந்திரியின் உடல் மீண்டும் உயிர் பெற்று எழுந்தது. அனைவரும் திகைத்துப் போய் நிற்க, அமைச்சர் தான் எழுப்பிய சிவபெருமான் ஆலயத்திற்குச் சென்று, "பிராணனைக் கொடுத்த பிராண நாதா என்று போற்றி வழி பட்டார்.
அன்று முதல் பிராணனைக் கொடுத்ததால் இறைவன் பிராணநாதேஸ்வரர் என்றும், மந்திரியின் மனைவி மாங்கல்யம் பெற்றதால் இத்தல அம்பிகை மாங்கல்யம் கொடுத்த மங்களாம்பிகை யென்றும் போற்றப்படுகின்றனர்.
அப்போது அமைச்சரின் மனைவி தங்களுக்குக் காட்சி தந்த பிராணநாதர் மற்றும் மங்களாம்பிகையிடம், "எங்களுக்கு வரம் அளித்தபடி, இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடும் என் போன்ற மற்ற பெண்களுக்கும் மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டும்" என்று வேண்ட அவ்வாறே அருளினர். அதன்படி மாங்கல்ய தோஷத்தையும் நீக்கி சுமங்கலி பிராப்தம் தந்தருளும் திருத்தலமாக திருமங்கலக்குடி இன்றும் விளங்குகிறது.
- சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் எண்ணைக்காப்பு உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-23 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி இரவு 9.57 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: அனுஷம் இரவு 8.20 மணி வரை பிறகு கேட்டை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் எண்ணைக்காப்பு உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், லால்குடி பிரவிருத்த ஸ்ரீமதி என்கிற பெருதிருப்பிராட்டியார் சமேத சப்தரிஷீசுவரர், திருவிடை மருதூர் பிருகத்குசாம்பிகை சமேத மகாலிங்க சுவாமிக்கு காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வாழ்வு
ரிஷபம்-சுகம்
மிதுனம்-நட்பு
கடகம்-நலம்
சிம்மம்-ஊக்கம்
கன்னி-அன்பு
துலாம்- ஆக்கம்
விருச்சிகம்-பரிவு
தனுசு- முயற்சி
மகரம்-கவனம்
கும்பம்-பொறுமை
மீனம்-சுபம்
- கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
- பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா காலங்களை தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசை யில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.100 கட்டணம் தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் இன்று கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
- பிளாட்டில் சில வாஸ்து குறைகள் இருப்பதாக பலரும் நினைப்பதுண்டு.
- பிளாட்களில் கதவுகள் ஒன்றை ஒன்று எதிரெதிரே அமைத்திருக்கும்.
உயர்ந்து வரும் விலைவாசிகள் காரணமாக நகர்ப்புற வாழ்க்கையில் சொந்த தனி வீடு என்பது காஸ்ட்லியான ஒன்றாக மாறியிருக்கிறது. அதற்கு மாற்றாக அமைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் தனி வீடு லட்சியத்தை பலருக்கும் சாத்தியமானதாக ஆக்கியிருக்கிறது.
பல சிரமங்களுக்கு இடையில் அடித்து பிடித்து, கையில் உள்ள தொகையை முன்பணமாக போட்டு, மீதித்தொகைக்கு லோன் போட்டு, அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட் வாங்கியிருப்பது பலருக்கும் அனுபவமாக இருக்கும். பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்களின் கனவுகளை பிளாட் வீடுகள் நனவாக மாற்றி இருக்கின்றன.
அவ்வாறு வாங்கிய பிளாட்டில் சில வாஸ்து குறைகள் இருப்பதாக பலரும் நினைப்பதுண்டு. வீட்டின் நுழை வாசலுக்கு எதிராக வேறொரு வீட்டின் நுழைவாசல் இருப்பது, லிப்ட் அல்லது மாடிப்படிக்கட்டுகள் அமைந்திருப்பது போன்ற வாஸ்து குறைகள் பல இடங்களில் இருக்கும்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் தலைவாசல்கள், வெவ்வேறு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். நான்கு திசைகள் மற்றும் மற்ற கோண திசைகள் ஆகியவற்றிலும் தலைவாசல்கள் அமைவது உண்டு. மேற்கண்ட சிக்கல்களில் தலைவாயிலுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள குறைகளை சரி செய்வதற்கு வாஸ்து வல்லுனர்கள் தரும் டிப்ஸ் பற்றி காணலாம்.
அடுக்குமாடி வீடுகளின் தலைவாசலுக்கு எதிராக உள்ள லிப்ட் முன்னேற்றத்தை தடுப்பதாகவும், லிப்டின் கதவுகள் அடிக்கடி திறந்து மூடுவதன் காரணமாக, எதிர்மறை சக்திகள் எதிரில் உள்ள வீட்டை பாதிப்பதாக கருதப்படுகிறது.
மேற்கண்ட பாதிப்பை நிவர்த்தி செய்வதற்காக, தலைவாசல் கதவின் மேல்பகுதியில் குவியாடி ஒன்றை பொருத்த வேண்டும். கதவு நிலைக்கு வெளிப்புறமாக இரண்டு அங்குல அளவில் வாயில்படி போன்ற அமைப்பையும் பொருத்தலாம். அதன் காரணமாக, வீட்டுக்குள் நுழைபவர்கள் படியின்மீது ஏறி உள்ளே செல்வது போல இருக்கும்.
பல பிளாட்களில் கதவுகள் ஒன்றை ஒன்று எதிரெதிரே அமைத்திருக்கும். அப்போது இரண்டு கதவுகளும் ஒரே அளவில் இருந்தால் பெரிய பாதிப்புகள் இல்லை என்று சொல்லப்படுகிறது.
வீட்டுக்குள் உள்ள அறைக்கதவுகள் நேர் எதிராக இல்லாமல், சற்று விலகி இருக்கும் பட்சத்தில், கதவுகளுக்கு எதிரே உள்ள சுவரில் ஒரு நிலைக்கண்ணாடியை பொருத்துவது அவசியம்.
- சூரியன் பயணம் செய்யும் காலம் உத்தராயண புண்ணிய காலம்.
- உத்தராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை:
சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூரியன் பயணம் செய்யும் காலம் உத்தராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலம் சிவாலயங்களில் விழாவாக கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், உத்தராயண புண்ணியகால உற்சவம், தட்சிணாயண புண்ணிய கால உற்சவம் ஆகியவற்றின் தொடக்கமாக சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி உத்தராயண புண்ணியகால உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து விநாயகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமி சன்னதியில் இருந்து மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க காலை 6.18 மணியளவில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்திகோஷங்கள் எழுப்பினர்.
இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். தினமும் காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர் மாட வீதிஉலா நடக்கும். விழாவின் நிறைவு நாளான வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற திருவூடல் உற்சவமும், 17-ந்தேதி (புதன்கிழமை) மறுவூடல் உற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- ஆத்யாயன உற்சவம் நிறைவுநாளில் ‘தண்ணீரமுது’ உற்சவம் நடந்தது.
- நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களை பாராயணம் செய்தனர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆத்யாயன உற்சவம் நிறைவுநாளில் 'தண்ணீரமுது' உற்சவம் நடந்தது. ஆகாசகங்கை தீர்த்தத்தால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 25 நாள் `ஆத்யாயன உற்சவம்' கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி தொடங்கியது.
அதையொட்டி தினமும் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்துக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கொண்டு வந்து ஜீயர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களை பாராயணம் செய்தனர்.
உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று முன்தினம், 'தண்ணீரமுது' உற்சவம் நடந்தது. இந்தத் தண்ணீரமுது உற்சவம் நடப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ராமானுஜரின் தாய் மாமனான பெரிய திருமலைநம்பி ஆவார்.
இவர், திருப்பதி ஏழுமலையானுக்கு செய்த சேவையின் நினைவாக ஆண்டுதோறும் ஆத்யாயன உற்சவம் நிறைவுநாளில், `தண்ணீரமுது' உற்சவம் நடத்தப்படுகிறது.
முன்னதாக நேற்று முன்தினம் மாலை கோவிலில் நடந்த சஹஸ்ர தீபலங்காரச் சேவைக்குப் பின், உற்சவர் மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து வாகன மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பெரிய திருமலைநம்பி வம்சத்தினர் கோவில் பிரகாரத்தில் ஒரு குடத்தில் பிடித்த 'ஆகாச கங்கை' தீர்த்தத்தை தலையின் மேல் வைத்து மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க வாகன மண்டபத்துக்குக் கொண்டு வந்தனர்.
அங்கிருந்து பெரியஜீயர், சின்னஜீயர் சுவாமிகள், ஆச்சாரியார்கள், பிரபந்த பண்டிதர்கள் புனிதநீர் நிரப்பப்பட்ட தீர்த்த குடத்தை கோவிலுக்குக் கொண்டு சென்றனர்.
வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க கோவில் அர்ச்சகர்கள் மூலவர் ஏழுமலையானுக்கு குடத்தில் கொண்டு வரப்பட்ட ஆகாச கங்கை புனிதத்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தனர். உற்சவத்தில் பங்கேற்றவர்கள் பெரிய திருமலைநம்பி எழுதிய 'திருமொழி பாசுரங்களை' பாராயணம் செய்தனர். உற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆத்யாயன உற்சவம் முடிந்ததும் மறுநாளான நேற்று உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி கோவிலின் தெற்கு மாட வீதியில் உள்ள பெரிய திருமலைநம்பி சன்னதிக்கு எழுந்தருளினர்.
- எங்கள் பாவங்கள் நீங்கும்படியாக அருள்புரிய வேண்டும்.
- அருளான செல்வத்தை எங்களுக்கு வழங்குகின்ற ஆனந்த மூர்த்தியே!
திருப்பாவை
பாடல்
அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,
அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்
விளக்கம்
இந்த பூமியை ஆட்சி செய்த பல அரசர்கள், நீ பள்ளிகொண்டிருக்கும் கட்டில் அருகே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் போன்றே நாங்களும் உன் அருளை நாடி வந்து நிற்கிறோம். கிங்கிணி வாயைப்போல மலர்ந்திருக்கும் தாமரைப் பூ மெதுவாக மலர்வதைப் போல உன் சிவந்த கண்களை சிறுகச்சிறுக திறந்து எங்களைப் பார்த்து அருளக்கூடாதா? சூரியனையும், சந்திரனையும் இருவிழிகளாக கொண்டவனே! சூரியனைக் கண்டவுடன் மலரும் தாமரை போல உன் திருக்கண் பார்வையால் எங்களைப் பார்த்தால் எங்கள் பாவங்கள் நீங்கும்படியாக அருள்புரிய வேண்டும்.
திருவெம்பாவை
பாடல்
அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல் அங்கண்ணாம்
திரள் நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தரு ளாயே
விளக்கம்
சூரியனின் தேரோட்டியான அருணன் கிழக்கு திசையில் வந்துவிட்டான். இருள் விலகி ஒளி பரவிவிட்டது. சிவபெருமானே! உன் திருமுகத்தில் தோன்றும் கருணையைப் போல் சூரியன் மெல்ல மெல்ல மேலே எழுகின்றான். உன் தோட்டத்து மலர்கள் எல்லாம் உன் அழகிய இதழ் விரிவதைப்போல மலர்கின்றன. வண்டுகள் இசை பாடு கின்றன. அந்த வண்டுகள் மலரில் உள்ள தேனை பரிசாகப்பெறும் அடியார்களும் உன்னைப்பாடி துதிக்கிறோம். அருள்நிதியை அருள வேண்டும். திருப்பெருந்துறையில் வாழ்கின்ற சிவபெருமானே! அருளான செல்வத்தை எங்களுக்கு வழங்குகின்ற ஆனந்த மூர்த்தியே! எல்லை இல்லாத அலைகள் வீசும் பெருங்கடல் போன்றவனே! உனது திருப்பள்ளியில் இருந்து எழுந்து வருவாயாக!
- முதலில் அனுமன் கோட்டைக்கு சென்று அனுமரை வழிபட வேண்டும்.
- அதிகளவில் குரங்குகள் இருக்கின்றன.
அயோத்தி நகரை ராம ராஜ்ஜியம் என்று சொன்னாலும் கூட, அங்கு கடவுள் அனுமனுக்கு தான் எப்போதும் முதல் மரியாதை. அயோத்தி ராமரை வழிபடுவதற்கு முன்பு அனைவரும் ஸ்ரீ அனுமன் கர்கி மந்திர் என்று அழைக்கப்படும் அனுமன் கோட்டைக்கு சென்று அனுமரை வழிபட வேண்டும். இந்த அனுமன் கோட்டை 76 படிக்கட்டுகளை கொண்டது.
இந்த கோவிலில் அனுமனின் தாயார் அஞ்சைனயும், மடியில் இளம் அனுமனும் வீற்றிருக்கின்றனர். ராவணனை வென்று ராமர் அயோத்தி திரும்பிய போது, அனுமன் இங்கு தான் வசித்தார் என்ற அடிப்படையில் இந்த அனுமன் கோவில் கடந்த 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
பொதுவாக கோவில்களுக்கு சென்றால் அங்கு பக்தர்களுக்கு பிரசாதம் தருவார்கள். ஆனால் அனுமன் கோட்டைக்கு செல்பவர்கள் அங்குள்ள கடைகளில் லட்டு பிரசாதத்தை வாங்கி கோவிலில் உள்ள அனுமனுக்கு கொண்டு போய் கொடுப்பார்கள்.
அயோத்தியை பொறுத்தவரை அதிகளவில் குரங்குகள் இருக்கின்றன. இந்த குரங்குகளால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. இருப்பினும் அயோத்தி மக்கள் குரங்குகளை, அனுமன் வடிவில் பார்ப்பதால் அதனை விரட்டுவது இல்லை. மாறாக அயோத்தியை காக்கும் கடவுள் என்று அதனை வணங்குகின்றனர்.
கடந்த 1998-ம் ஆண்டு கூட அயோத்தி அனுமன் கோவிலில் ஒரு வெடிகுண்டு வைக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த ஒரு குரங்கு வெடிகுண்டு வயரை கடித்து கீழே துப்பி விட்டது. அந்த வெடிகுண்டை கண்டுபிடிக்க உதவியதும், நகர மக்களை காப்பாற்றியதும் குரங்கு வடிவில் வந்த அனுமன்தான் என்று அயோத்தி மக்கள் நம்புகிறார்கள்.






