search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mangalya Bhakyam"

    • தயிர் சாதம் பிரசாதமாக வெள்ளெருக்கு இலையில் தரப்படுகிறது.
    • மாங்கல்ய சரடு பெண்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

    * திருமங்கலக்குடி தலத்தின் இறைவியை வழிபட, திருமணத் தடை நீங்குகிறது.

    * மாங்கல்ய பலம் நீடிக்கிறது. ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டுகிறது என்பது பக்தர்களின் அனுபவ உண்மை.

    * கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, தொடர்ந்து பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் தயிர் சாதத்தை

    வெள்ளெருக்கு இலையில் வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்து அதை உண்ண, நோய் குணமடை வதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு செய்து பிணிகள் விலகியோர் நிறைய உண்டாம். இத்தலத்தில் ஞாயிறு மதியம் உச்சிகால பூஜையில் தயிர் சாதம் பிரசாதமாக வெள்ளெருக்கு இலையில் தரப்படுகிறது.

    * ஞாயிற்றுக்கிழமைகளில் தயிர்சாதம் அன்னதானம் செய்வதால் அஷ்டமச்சனி, ஏழரை ஆண்டுச்சனி, தசாபுத்தி தோஷம் ஆகியவை நிவர்த்தியாகும்.

    * மங்களநாயகியின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடு பெண்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. மங்காளம்பிகைக்கு ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகியவை நீங்கப்பெற்று தீர்க்க சுமங்கலி பிராப்தமும். விரைவில் விவாக பிராப்தமும் கிடைக்க அம்பாள் அருள் புரிகிறாள் என்று அவ்வூரிலுள்ளோர் கூறக்கேட்டோம்.

    * மேலும் இத்திருக் கோவிலுள்ள அகத்தீஸ்வரர் லிங்கத்திற்கு அமாவாசை தினத்தில் அபிஷேகம் செய்வதால் பூர்வ ஜென்ம தோஷம் பித்ருக்கள் சாபம் இருந்தால் நிவர்த்தியாகிறதாம்.

    * சூரியன், திருமால், காளி, பிரம்மன், அகத்தியர் முதலானோர் இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டுப்பேறு பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.

    * திருநாவுக்கரசர் தான் பாடிய இத்தலத்திற்கான பதிகத்தில் மூன்றாவது பாடலில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். மங்கலக்குடி ஈசனை மாகாளி வெங்கதிர்ச் செல்வன் விண்ணொடு மண்ணும் நேர் சங்குசக்கரதாரி சதுர்முகன் அங்கு அகத்தியனும் அர்ச்சித்தார் அன்றே.

    * ஆமங்கலக்குடி இறைவனை மாகாளியும், சூரியனும், விண்ணும் மண்ணும் நிகராய சங்கு சக்கரதாரியாகிய திருமாலும் பிரமனும், அகத்தியனும் அர்ச்சித்தார்கள்.

    தல அருமை

    பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், அலைவாணர் என்பவர் அமைச்சராக இருந்தார். அவர் அரசனின் அனுமதி பெறாமல் வரிப் பணத்தை தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பச் செலவிட்டார்.

    இதையறிந்த மன்னன் அவரை அழைக்க, அமைச்சரோ மன்னனைக் காண அஞ்சி உயிர் நீத்தார். இறக்கும்போது அவர் தனது மனைவியிடம் "நான் இறந்தவுடன் என் உடலை திருமங்கலக்குடிக்கு எடுத்துச் சென்று அங்கேயே அடக்கமும் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறு அவரது இறந்த உடலை எடுத்துச் செல்லும்போது, அமைச்சரின் மனைவி இறைவி மங்களாம்பிகையிடம் மாங்கல்ய பாக்கியம் அருளப் பிரார்த்தனை செய்தாள்.

    ஊர் எல்லையருகே வந்ததும் உயிரற்ற மந்திரியின் உடல் மீண்டும் உயிர் பெற்று எழுந்தது. அனைவரும் திகைத்துப் போய் நிற்க, அமைச்சர் தான் எழுப்பிய சிவபெருமான் ஆலயத்திற்குச் சென்று, "பிராணனைக் கொடுத்த பிராண நாதா என்று போற்றி வழி பட்டார்.

    அன்று முதல் பிராணனைக் கொடுத்ததால் இறைவன் பிராணநாதேஸ்வரர் என்றும், மந்திரியின் மனைவி மாங்கல்யம் பெற்றதால் இத்தல அம்பிகை மாங்கல்யம் கொடுத்த மங்களாம்பிகை யென்றும் போற்றப்படுகின்றனர்.

    அப்போது அமைச்சரின் மனைவி தங்களுக்குக் காட்சி தந்த பிராணநாதர் மற்றும் மங்களாம்பிகையிடம், "எங்களுக்கு வரம் அளித்தபடி, இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடும் என் போன்ற மற்ற பெண்களுக்கும் மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டும்" என்று வேண்ட அவ்வாறே அருளினர். அதன்படி மாங்கல்ய தோஷத்தையும் நீக்கி சுமங்கலி பிராப்தம் தந்தருளும் திருத்தலமாக திருமங்கலக்குடி இன்றும் விளங்குகிறது.

    ×