search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருமங்கலக்குடி ஆலயத்தின் சிறப்பம்சம்
    X

    திருமங்கலக்குடி ஆலயத்தின் சிறப்பம்சம்

    • பிராணநாதேஸ்வரரை அப்பர், சம்பந்தர் போற்றி பாடியுள்ளார்கள்.
    • சித்திரை வருடப்பிறப்பன்று பஞ்சாங்கம் வாசித்தால் நடைபெறும்.

    1. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது திருமங்கலக்குடி மங்களாம்பிகை உடனான பிராணநாதேஸ்வரர் கோவில்.

    2. பிராணநாதேஸ்வரரை அப்பர், சம்பந்தர் போற்றி பாடியுள்ளார்கள்.

    3. பிராணநாதேஸ்வரரை காளி, சூரியன், பூமாதேவி, ஆகாசவாணி, விஷ்ணு, பிரம்மா, அகஸ்தியர், மங்களாம்பிகை முதலானோர் பூஜை செய்து இருக்கிறார்கள்.

    4. ராமலிங்க அடிகளார் கருமங்கள் ஓடிபோய் காண்மங்கலக்குடி என்று பாடியுள்ளார்.

    5. இவ்வாலயத்தில் சித்திரை வருடப்பிறப்பன்று பஞ்சாங்கம் வாசித்தால் நடைபெறும்.

    6. ஆனி மாதம் ஸ்ரீநடராஜர் அபிஷேகமும் ஆடி மாதம் 18-ம் பெருக்கன்று காவிரியில் தீர்த்தம் கொடுத்தலும் நடைபெறும்.

    7. புரட்டாசியில் ஸ்ரீமங்களாம்பிகைக்கு 10 நாட்கள் நவராத்திரி விழாவும், நிறை பணியும் கொண்டாடப்படுகிறது.

    8.ஐப்பசியில் பவுர்ணமி அன்று அன்னாபிஷேகமும் சஷ்டி அன்று சூர சம்ஹாரமும் கார்த்திகையில் நான்கு சோம வாரமும், திருகார்த்திகை அன்று சொக்கபனையும் கொளுத்தப்படும்.

    9. மார்கழி திருவாதிரையில் ஸ்ரீநடராஜர் அபிஷேகமும் செய்வது வழக்கம்.

    10. தை முதல் தேதி மகர சங்கராந்தி அன்று காவிரியில் தீர்த்தம் கொடுத்தலும், மாசி சிவராத்திரியில் நான்கு காலம் சிறப்பு அபிஷேகமும் மேற்கொள்வார்கள்.

    11. பங்குனியில் இக்கோவிலின் வருடாந்திர பங்குனி உத்திர உற்சவம் 10 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

    12. பங்குனியில் தீர்த்த வாரி 10 நாள் உற்சவத்தில் 7-ம் நாள் அன்று பிராணநாதேஸ்வரருக்கும், மங்களாம்பிகைக்கும் திருக்கல்யாணம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாமும் மங்களாம்பிகையின் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்திட நம்மால் முடிந்த காணிக்கையை அலுவலகத்தில் செலுத்தி மங்களாம்பிகையின் திருமணம் கண்டு மாங்கல்ய தோஷங்கள் நீங்கி திருமணம் ஆகாதவர்கள் திருமணம் கைகூடி நல்வாழ்வு வாழ்வோமாக.

    13. மதியம் 50 அடியார்களுக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் 100 அடியார்களுக்கும் 'உண்டி நாலு விதத்தில் ஆறு சுவை திறத்தில்' என்றபடி வடை, பாயாசத்துடன் அன்னம் படைப்பு நடைபெறுகிறது. பக்தர்கள் தங்களால் முடிந்த அளவில் அன்னதானத்திற்கு நிதியளிக்கலாம்.

    14. கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவிலுக்குச் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து, சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள திருமங்கலக்குடியை அடையலாம்.

    15. இவ்வூரில் இருந்து சூரியனார் கோவில் ½ கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் வழிபட்ட பின்னரே சூரியனார் கோவிலில் வழிபடச் செல்ல வேண்டும் என்பது மரபு.

    16. திருமங்கலக்குடிக்கு மிக அருகில் இருக்கும் ரெயில் நிலையம் ஆடுதுறை.

    17. இந்த தலத்தின் வழிபாட்டு நேரம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை.

    18. இந்த தலத்தில் நாள்தோறும் 4 கால பூஜை நடைபெறுகிறது.

    19. திருமங்கலக்குடி ஆலயத்தை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்.0435-2470480

    20. இந்த தலத்துக்கு அருகில் சூரியனார் கோவில் திருவெள்ளியங்குடி, திருப்பனந்தாள், சஞ்சனூர், ஆலயங்கள் உள்ளன.

    21. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 52 கி.மீ தொலைவில் திருமங்கலக்குடி உள்ளது. திருமங்கலக்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து இக்கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.

    22. இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். வழக்கமாக சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையார் (பீடம்) உயரத்தை விட சிறியதாக இருக்கும். ஆனால் இக்கோவிலில் சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட உயரமாக அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் மரகத லிங்கம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

    23. பிரகாரத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள் சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர்.

    24. காளி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர், சூரியன், அம்பாள் ஆகாசவாணி, பூமாதேவி ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இதுவாகும்.

    25. இத்தலத்தில் அம்மன் மங்களாம்பிகை என்கிற மங்களநாயகி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி வலது கையில் தாலிக்கொடியுடன் காட்சி தருகிறார்.

    26. மாங்கல்ய தோஷமும், ராகு, கேது, சனி முதலிய கிரக தோஷங்களும் விலக தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் மங்களாம்பிகையை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    27. வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின் போதும் இக்கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது.

    28. சத்ருபயம் நீங்க, நவகிரக தோஷம், பெண்கள் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம் ஆகியவற்றுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.

    29. அம்மனுக்கு திருமாங்கல்யமும், புடவையும் சாற்றுகின்றனர். சுவாமிக்கு வஸ்திரம் சாற்றியும், அபிஷேகம் செய்தும், 5 சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் துணி, மஞ்சள், குங்குமம், பூ, வெற்றிலை, பாக்கு, சீப்பு, கண்ணாடி வளையல், மாங்கல்ய கயிறு, தட்சிணை வைத்து கொடுத்து ஆசி வாங்குவதை நேர்த்திக்கடனாக செய்கிறார்கள்.

    30. சுவாமிக்கு நல்லெண்ணெய், மா பொடி, திரவிய பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பழவகைகள், இளநீர், சந்தனம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் செய்தும் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.

    31. ஸ்ரீபிராணநாத சுவாமிக்கு 11 ஞாயிற்றுக்கிழமை அர்ச்சனை செய்வதாலும் 11 ஞாயிற்றுக்கிழமை தயிர் சாதம் அன்னதானம் செய்வதாலும் அஷ்டமசனி, ஏழரை ஆண்டு சனி தோஷம் நவக்கிரக தோஷம், பூர்வ ஜென்ம தோஷம், பித்ருக்கள் தோஷம், திசாபுத்தி, புத்திர தோஷம் நிவர்த்தியாகும்.

    32. அமாவாசையில் அகஸ்தியருக்கு அபிேஷகம் செய்வதால் பித்துருக்கள் தோஷம் நிவர்த்தி ஆகும்.

    33. ஜென்ம நட்சத்திரப்படி ஸ்ரீ மரகதலிங்கம் அபிஷேகம் செய்வதால் புத்திர தோஷம், பூர்வ ஜென்ம தோஷம் நிவர்த்தி ஆகும்.

    34. மங்களாம்பிகை அம்மன் சந்நிதியில் திருமணம் செய்து கொள்வதால் மாங்கல்ய தோஷம் நிவர்த்தி பெறுவதோடு தீர்க்க சுமங்கலி பிராப்தமும் கிைடக்க பெறுகிறார்கள்.

    35. ஸ்ரீ பிராணநாத சுவாமிக்கும் ஸ்ரீ மங்களாம்பிகை அம்மனுக்கும் அபிஷேகம் செய்வதால் ஆயுள் ஆரோக்கியம் கிடைக்க பெறுகிறார்கள்.

    36. திருமணம் ஆன மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் ஸ்ரீமங்களாம்பிைக அம்மன் சந்நிதியில் மறு மாங்கல்யம் பரிகாரம் செய்து கொள்வது சிறப்பு.

    37. பத்மாசனத்தில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி தேவியையும், ஸ்ரீ சரஸ்வதி தேவியையும் வழிபடுவதால் லட்சுமி கடாட்சமும் கல்வி மேன்மையும் கிடைக்கும்.

    38. நவக்கிரகங்கள் தங்களின் சாபம் நீங்க, வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் படைத்து இறைவனை வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. எனவே இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கி ழமைகளிலும் உச்சிகால பூஜையின் போது, உப்பில்லாத தயிர் சாதம் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

    39. உடலில் சரும வியாதியுள்ளவர்கள் இங்கு வந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் சுவாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட்டு வந்தால் வியாதியில் இருந்து நீங்கப்பெருவர் என்பது வரலாறு.

    40. மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், தீபாவளி, மகர சங்கராந்தி, தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்கள் சிறப்பு அபிஷேக, பூஜைகளுடன் அனுசரிக்கப்படுகிறது. அமாவாசை பதினைந்து நாட்களில் அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் அர்ப்பணிக்கப்படுகின்றன.

    41. இறைவனுக்கு மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் சொந்த வடிவங்களைக் குறிக்கும் மூன்று முகங்கள் உள்ளன, இது மற்ற கோயில்களில் காணப்படவில்லை. இங்கு படைப்பாளர் பிரம்மா, பாது காவலர் விஷ்ணு உள்ளனர்.

    Next Story
    ×