என் மலர்tooltip icon

    வழிபாடு

    • நாம் நினைக்கும்போது உதவி செய்யும் தெய்வமே குலதெய்வம் ஆகும்.
    • ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் இருக்கும்.

    நாம் நினைக்கும்போது உதவி செய்யும் தெய்வமே குலதெய்வம் ஆகும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் இருக்கும். குலதெய்வ வழிபாடு அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். நம்முடைய வீட்டில் எந்த சுப காரியங்கள் செய்தாலும், முதலில் குலதெய்வத்தை வணங்கி விட்டுதான் ஆரம்பிக்க வேண்டும். எந்தவொரு நல்ல காரியம் தொடங்கும்போதும் குலதெய்வத்தை வழிபட்ட பின்னர் தொடங்கினால், அது வெற்றியாக அமையும் என்பது நம்பிக்கை. ஆண்டுதோறும் குடும்பத்துடன் குலதெய்வத்தை வழிபடுவதால் வீட்டில் எப்பொழுதும் மகிழ்ச்சி தங்கும்.

    பங்குனி உத்திரம்

    பங்குனி உத்திரம் அன்று குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். எனவே அன்றைய தினம் குலதெய்வ கோவிலுக்கு மக்கள் தவறாது சென்று வழிபடுகின்றனர். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் அன்று பவுர்ணமி என்பதால், அந்நாளில் குலதெய்வத்தை வழிபடுவதற்கு மிகமிக உகந்ததாகும். அன்று குலதெய்வமான சாஸ்தா, அய்யனாரை மக்கள் தவறாது வழிபடுகிறார்கள்.

    தென் மாவட்டங்களில் சொரிமுத்து அய்யனார் கோவில், கற்குவேல் அய்யனார் கோவில், அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில், கைகொண்டார் சாஸ்தா, பூலுடையார் சாஸ்தா, சூட்சமுடையார் சாஸ்தா, பட்டமுடையார் சாஸ்தா என்று ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திரத் திருநாளில், சாஸ்தாவை வழிபட்டு விட்டு, அவருடைய காவல் தெய்வங்களான சங்கிலி பூதத்தார், கருப்பசாமி, சுடலை மாடசாமி உள்ளிட்ட பரிவார தேவதைகளை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

    காவல் தெய்வங்களில் மிகவும் முக்கியமானவராக சங்கிலி பூதத்தார் விளங்குகிறார். சங்கிலி பூதத்தார் அனைத்து சாஸ்தா கோவில்களிலும் காவல் தெய்வமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    பாற்கடலில் தோன்றினார்

    ஆதிகாலத்தில் தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதனை சிவபெருமான் உண்டு, உலகைக் காத்தார். அந்த கொடிய விஷத்திற்குப் பின்னர் கடலுக்குள் இருந்து பாரிஜாத மரம், காமதேனுப் பசு உள்பட பல அதிசய பொருட்களும், அற்புதம் மிகுந்த தேவதைகளும், தெய்வங்களும் வெளியே வந்தன. அப்படி அமிர்தத்தோடு பலதரப்பட்ட விஷயங்கள் வெளி வரும் நேரத்தில் சங்கொலி முழங்க விசித்திரமான, வீரியமான பலவிதமான பூதகணங்களும் வெளிப்பட்டன.

    தொடர்ந்து அந்த பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவான சுவாமி சங்கிலி பூதத்தார், தன் கையில் தண்டத்தை ஆயுதமாகவும், உடலின் மேல் கனத்த இரும்பு சங்கிலிகளை ஆபரணமாகவும் அணிந்தவாறு, பார்த்தாலே பதற வைக்கும் பிரமாண்ட ஆங்கார, ஓங்கார உருவத்தோடும், ஆரவார சத்தத்தோடும் ஆக்ரோஷமாக, பாற்கடலில் தோன்றி வெளியே வந்தார். இதனைக்கண்ட தேவர்கள், அசுரர்கள், முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் அஞ்சி நடுநடுங்கி, ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர்.

    அமிர்தத்தோடு பிறந்ததால் சங்கிலி பூதத்தாருக்கு `அமிர்த பாலன்' என்ற பெயரும் உண்டு. கையில் குண்டாந்தடியான தண்டத்தை ஆயுதமாக ஏந்தியுள்ளதால் `தண்டநாதன்' என்றும் கூறுவர். திருப்பாற்கடலில் பிரமாண்ட உருவத்தோடும், அனைவர் கண்களையும் பறிக்கும் முத்து போன்ற பிரகாசத்தோடும் தோன்றியதால் 'ராட்சச முத்து' என்றும் அழைக்கப்படுகிறார்.

    அண்டமெல்லாம் நடுங்கச்செய்த அதிபயங்கர ஆலகால விஷத்தை விழுங்கி அனைத்துலக ஜீவராசிகளையும் அழிவில் இருந்து காப்பாற்றிய சிவபெருமான், பூதகணங்களையும், பூத கணங்களுக்கு எல்லாம் ராஜாவான சங்கிலி பூதத்தாரையும் அமைதிப்படுத்தி, ஆசுவாசப்படுத்தி, அவர்கள் அனைவரையும் தன்னுடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு தன்னுடனேயே கயிலாயத்தில் வைத்துக்கொண்டார்.

    காவல் தெய்வம்

    பின்னர் சிவபெருமான் `அனைத்து கோவில்களுக்கும் காவல் தெய்வமாக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும்' என்று கூறி சங்கிலி பூதத்தாரை, பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த சங்கிலி பூதத்தார், சொரிமுத்து அய்யனார் கோவிலில் காவல் தெய்வமாக இருந்து அங்கு வரும் பக்தர்களை பாதுகாத்து வருகிறார். அவருக்கு வடை மாலை சாத்தி, சைவ படையல் போட்டு பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

    சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆக்ரோஷத்துடன் வீற்றிருந்த சங்கிலி பூதத்தாரை சாந்தப்படுத்த வேண்டும் என்று நினைத்த பக்தர்கள், அதற்காக அகத்திய மாமுனிவரிடம் வேண்டினர். இதனை ஏற்ற அகத்திய முனிவர், சங்கிலி பூதத்தாரை சாந்தப்படுத்தினார்.

    இதனால் அங்கு அகத்திய மாமுனிவருக்கும் சிலை உள்ளது. அவரை வழிபட்ட பின்னரே பக்தர்கள் சங்கிலி பூதத்தாரை வழிபடுகின்றனர். சங்கிலி பூதத்தாரை வழிபடும் பக்தர்கள் இரும்பு சங்கிலியால் தங்களுடைய மார்பில் அடித்துக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

    திருச்செந்தூர் முருகன் கோவிலின் கோபுர வாசலில் இந்த சங்கிலி பூதத்தார், காவல் தெய்வமாக இருந்து மக்களை காத்து வருகிறார்.

    இதேபோன்று நெல்லையப்பர் கோவில், திருக்குறுங்குடி நம்பி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் இவர் காவல் தெய்வமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து பாதுகாத்து வருகிறார்.

    பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவாக விளங்கும் சங்கிலி பூதத்தார் சுவாமியை, `பூதராஜா' என்றும் அழைப்பார்கள். இந்த சங்கிலி பூதத்தாரை வழிபடும் பக்தர்கள், தங்கள் குடும்பத்தில் பிறக்கும் ஆண் வாரிகளுக்கு `பூதராஜா', `பூதராசு', `பூதத்தான்', `பூதப்பாண்டி' என்றும், பெண் பிள்ளைகளுக்கு 'பூதம்மாள்' என்றும், தற்போதைய நவீன காலத்திற்கேற்றார் போல் 'பூதராஜா'வை சுருக்கி 'பூஜா' என்றும் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.

    இந்த சங்கிலி பூதத்தாரை பங்குனி உத்திரம் நாளில், படையல் போட்டு வழிபட்டு வரும் மக்களை, அவர் என்றும் பாதுகாத்து அருள்செய்வார். குலதெய்வ வழிபாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, சங்கிலி பூதத்தார் வழிபாடாகும். பங்குனி உத்திரத்தன்று சாஸ்தாவை வழிபட்ட பின், சங்கிலி பூதத்தாரையும் வழிபட்ட பின்னர் மற்ற காவல் தெய்வங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். ஒவ்வொரு கோவிலிலும் சங்கிலி பூதத்தார், வெவ்வேறு பெயர்களில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    • பாவங்களை போக்கும் நோன்பு
    • பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும்பாவங்களைத் தவிர்த்திடுவீர்.

    பாவங்களை போக்கும் நோன்பு

    நன்மைகள் தீமைகளை அழித்துவிடும் படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரையாகும்.' (திருக்குர் ஆன் 11:114)

    ஒவ்வொரு மனிதனிடமும் அவன் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, சிறு சிறு பாவங்கள், தவறுகள், சில நேரங்களில் பெரும் பாவங்களும் நிகழ்ந்து விடுகின்றன. 'ஆதமுடைய ஒவ்வொரு குழந்தையும் தவறு செய்பவர்கள்தான். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள், பாவமீட்சி தேடுபவர்களே! என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்:திர்மிதி)

    'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும்பாவங்களைத் தவிர்த்திடுவீர்!' என நபி (ஸல்)கூறினார் கள். 'அவை எவை?' என்று கேட்கப்பட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள் 'இறைவனுக்கு இணை வைப்பது, சூனியம் செய்வது, உரிமையின்றி உயிரைக் கொல்வது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, வட்டியை உண்பது, போரின் போது புறமுதுகிட்டு ஓடுவது. இறைநம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவைதான் பெரும் பாவங்கள்' என்று கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    இது தவிர திருடுவது, கொள்ளையடிப்பது, பொது சொத்துக்களை மோசடி செய்வது, விபச்சாரம் புரிவது யாவும் பெரும் பாவங்களே. ஒருவரிடம் ஏற்படும் சிறுபாவங்கள் யாவும் அவர் செய்யும் நல்லறங்களின் மூலம் அழிக்கப்படுகிறது.

    'லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும், நன் மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன்பாவம் மன்னிக்கப்படுகிறது. மேலும், ரமலானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்பவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: ஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    ஆபூ 'ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜூம்ஆவில் இருந்து மறு ஜூம்ஆ, ஒரு ரமலானில் இருந்து மறு ரமலான் ஆகியன அவற்றுக் கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ் லிம்)

    'யாரேனும் என்னுடைய இந்த உளுவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங் களுக்கு இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுதால் அவர்முன் செய்த சிறுபாவங்களை இறைவன் மன்னிக்கின்றான் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி), நூல்:புகாரி)

    இமாம் ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஒருவர் கூறும் ஆமீன் வானவர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்துப்போனால் அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    'நபி (ஸல்) அவர்களிடம் அராபா நாளின் நோன்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அது கடந்தாண்டு மற்றும் வருமாண்டு நிகழும் பாவங்களுக்கு பரிகார மாக அமையும்' என்றார்கள்.' (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம்)

    இவ்வாறே பள்ளிவாசலை நோக்கி விரைவதும், தொழுகையை எதிர்பார்த்து இருப்பதும், ஐவேளைத் தொழுகைகளை பேணுதலாக தொழுவதும், ஹஜ் மற்றும் உம்ரா செய்வதும், தானதர்மம் செய்வதும், சாப்பிட்ட பிறகும், உடைமாற்றிய பிறகும் இறைவனை புகழ்வதும் ஆகிய செயல்பாடுகள் ஒரு மனிதனின் முன்செய்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு போதுமானதாகும். இவை சிறுபாவங்கள் நீக்கப்படுவதற்கு பரிகாரமாகவும், நிவாரணமாகவும் அமைந்துவிடுகின்றன.

    • புனித ரமலானில் சிறைபிடிக்கப்படும் ஷைத்தான்கள்.
    • அட்டூழியம் புரியும் ஷைத்தான்கள் ரமலான் மாதத்தில் விலங்கிடப்படுகின்றனர்.

    புனித ரமலானில் சிறைபிடிக்கப்படும் ஷைத்தான்கள்

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ரமலான் மாதம் வந்துவிட்டால் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எனது சமுதாயத்தினருக்கு ரமலான் மாதத்தில் ஐந்து விஷயங்கள் பிரத்தியேகமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை வேறு எந்த சமுதாயத்தினருக்கும் வழங்கப்படவில்லை.

    1) நோன்பாளியின் வாய் வாடை இறைவனிடம் கஸ்தூரியை விட அதிக நறுமணமுள்ளதாக அமைகிறது.

    2) நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை கடலிலுள்ள மீன்கள் அவர்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டுகிறது.

    3) ரமலானில் ஒவ்வொரு நாளும் சொர்க்கம் அலங்கரிக்கப்படுகிறது. எல்லாம் வல்ல இறைவன் அந்த சொர்க்கத்திடம் எனது நல்லடியார்கள் தங்களை விட்டும் உலகத்துன்பங்களை தூக்கியெறிந்து விட்டும் விரைவில் உன்னிடம் வர இருக்கிறார்கள்' என்று கூறுகிறான்.

    4) அட்டூழியம் புரியும் ஷைத்தான்கள் ரமலான் மாதத்தில் விலங்கிடப்படுகின்றனர். இதனால், ரமலான் அல்லாத மாதங்களில் எந்தத் தீமை கள் சம்பவித்ததோ அந்த விதமான தீமைகள் ரமலான் மாதத்தில் நடைபெறமுடிவதில்லை.

    5) ரமலான் மாதத்தின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது என நபி (ஸல்) கூறியபோது, 'அல்லாஹ்வின் தூதரே! பாவமன்னிப்பு வழங்கப்படும் அந்த இரவு லைலத்துல்கத்ர் இரவா?' என நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இல்லை, எனினும் ஒரு வேலைக்கார னுக்கு கூலி கொடுக்கப்படுவது, அவர் தம் வேலையை முடித்தபிறகுதான்' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: தர்கீப்)

    மேற்கூறப்பட்ட நபிமொழியில் 'அட்டூழியம் புரியும் பெரிய ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு, சிறைபிடிக்கப்படுகின்றனர், என்று வருகிறது. இதனால், மற்ற மாதங்களில் இஸ்லாமியர்களி டம் வெளிப்படும் பாவமான பல காரியங்கள் புனித ரமலான் மாதத்தில் வெகுவாக குறைந்து விடுகிறது.இதையும் மீறி சிறு சிறு தவறுகள் ரமலானில் நடைபெறுவதற்கு காரணம் சாதாரண ஷைத்தான்களின் ஆதிக்கத் தால் நிகழ்கிறது. அவர்கள் ரமலானில் உலா வருகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.

    மேலும், ரமலானில் பாவங்கள் குறைந்து காணப்படுவதற்கு மற்றொரு காரணம்; ஒருவர் நோன்பு நோற்பதினால் பசித்தவராக, தாகித்தவராக, பலவீனம் அடைந்தவராக இருப்பதால் அவரின் வீரியம் குறைகிறது. அவரின் தீவிர உடல் இயக்கமும் சற்று தடைப்படுகிறது. இதனால் அவரிடம் ஏற்படும் தவறுகளின் வீரியமும் குறைந்து விடுகிறது.

    'நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஒடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டு விடுவான் என நான் அஞ்சுகிறேன் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸபிய்யா (ரலி), நூல்: புகாரி)

    மனித ரத்த நாளங்களில் ஊடுருவி விட்ட ஷைத்தான்களை கட்டுப்படுத்தும் ஆயுதம் தான் புனித நோன்பு ஆகும். பசியின் மூலமாக ரத்த ஓட்டத்தை மிதமாக்கி, தவறான எண்ணத்தை அகற்றி, அவனை வென்றுவிடலாம். ஆக புனித ரமலானில் ஷைத்தானின் நடமாட்டத்தை ஒருபுறம் இறைவன் விலங்கிட்டும், மறுபுறம் நோன்பாளிகள் நோன்பிருந்தும் கட் டுப்படுத்துகின்றனர்.

    மனிதர்களை வழிகெடுக்கின்ற ஷைத்தானின் பிடியில் இருந்து நாம் விடுபட இந்த புனித ரமலான் மாதம் வழிகாட்டுகிறது. இதை நாம் பயன்படுத்திக்கொண்டு நோன்பிருந்து, நற்செயல்கள் புரிந்து, தொழுகையில் ஈடுபட்டு நம்மை நல்வழிப்படுத்திக் கொள்வோம். வாருங்கள்

    • ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை.
    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 9 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி காலை 7.16 மணி வரை. பிறகு திரயோதசி.

    நட்சத்திரம்: மகம் நாளை காலை 6.08 மணி வரை. பிறகு பூரம்.

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று பிரதோஷம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர், தோட்டம் ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி  திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங்களில் ஸ்ரீசுவாமி ஸ்ரீஅம்பாள் மாலை ரிஷப வாகனத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆசை

    ரிஷபம்-உயர்வு

    மிதுனம்-ஜெயம்

    கடகம்-சாந்தம்

    சிம்மம்-சுகம்

    கன்னி-நன்மை

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- உழைப்பு

    மகரம்-தேர்ச்சி

    கும்பம்-மேன்மை

    மீனம்-நிம்மதி

    • இறைவன் உலா வருவதற்கு பயன்படுத்தும் வாகனமாகும்.
    • பரங்கி நாற்காலி வாகனத்தில் அய்யா வைகுண்டர் உலா வருகிறார்.‌

    இன்று ஸ்ரீ வில்லிபுத்தூர், பங்குனி உற்சவத்தில் இரட்டை பரங்கி நாற்காலி வாகனத்தில் ரெங்கமன்னாரும் ஆண்டாள் நாச்சியாரும் பவனி வருகின்றனர். அது என்ன பரங்கி நாற்காலி சேவை? பரங்கி நாற்காலி என்பது வைணவ கோயில்கள் சிலவற்றில் இறைவன் உலா வருவதற்கு பயன்படுத்தும் வாகனமாகும்.

    இந்த வாகனம் 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்கள் பயன்படுத்திய பெரிய சதுர வடிவிலான பரங்கி நாற்காலியை போன்று செய்யப்பட்டது. தென் தமிழகத்தின் பல வைணவ ஆலயங்களில் இந்த வாகனம் உண்டு. குறிப்பாக, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இருக்கும் பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவத்தில் பரங்கி நாற்காலி வாகனம் பயன்படுத்தப்படுகிறது.

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா திருக்குறுங்குடி நம்பி கோவிலில் பங்குனி பிரமோற்சவம் திருவிழா முதல் நாள் இரவில் பெருமாள் பரங்கி நாற்காலியில் உலா வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஆவணித் திருவிழா இரண்டாம் நாள் இரவு பரங்கி நாற்காலி வாகனத்தில் அய்யா வைகுண்டர் உலா வருகிறார். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் – ஸ்ரீ ரெங்கமன்னார் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவின் ஆறாம் நாளில் ஆண்டாள் நாச்சியார், ரங்கமன்னார் இருவரும் இரட்டை பரங்கி நாற்காலி வாகனத்தில் உலா வருகிறார். அந்த சேவை இன்று.

    • வழிபாடுகளில், சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியம்.
    • நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.

    சிவனுக்குரிய வழிபாடுகளில், சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியம். மனிதர்களின் தோஷங்களையும் (குற்றங்களை) பாவங்களையும் நீக்குவதால், இந்த வழிபாடு பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சிவாலயங்களில், சுக்ரவாரமான இன்று, மஹாபிரதோஷம் நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் சிவன் கோயிலில் வழிபாடு செய்தால், பல கோடி புண்ணியத்தை தரும்.

    குறிப்பாக, ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இல்லாதவர்கள், பிரதோஷ நாளில் சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால், உங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் மாறும். அறிவு தெளிவாகும். மாலை 4.30 முதல் 6 மணி வரை என்பது பிரதோஷ நேரம் ஆகும். இந்த சமயத்தில், நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலான அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள்.

    அதேபோல், செவ்வரளி, வில்வம், அறுகம்புல் கொண்டு நந்தி தேவருக்குச் சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். பிரதோஷ காலத்தில், அபிஷேக பொருட்கள் வாங்கிக் கொடுக்க, நன்மைகள் நடக்கும். பால் வாங்கித் தர, நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் வாங்கித்தர, தன லாபமும் வளங்களும் உண்டாகும்.

    தேன் கொடுக்க குரல் வளம் இனிமையாகும். பழங்கள் வாங்கித்தர விளைச்சல் பெருகும். பஞ்சாமிர்தம் தர செல்வம் பெருகும். நெய் வாங்கிக் கொடுத்தால், முக்தி பேறு கிடைக்கும். இளநீர் கொடுக்க நல்ல மக்கட் பேறு கிட்டும். எண்ணெய் வாங்கித் தர, சுகமான வாழ்வும், சர்க்கரை தர எதிர்ப்புகள் மறையும். சந்தனம் வாங்கித்தர சிறப்பான சக்திகள் கிடைக்கும். மலர்கள் கொடுக்க தெய்வ தரிசனம் கிடைக்கும்.

    • ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.
    • ஆழித்தேரோட்ட விழாவில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவாரூர்:

    திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.

    இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த பிப்ரவரி 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று 21-ந்தேதி நடைபெற்றது.

    பிரசித்தி பெற்ற இந்த திருவாரூர் தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய தேராகும். இந்த தேரின் நிலை பீடம் 30 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்டது. நான்கு ராட்சத இரும்பு சக்கரங்களுடன் இதன் எடை 220 டன்னாக இருக்கிறது. இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த தேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணியும் அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம் அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் இந்த தேர் கட்டப்பட்டு துணியால் அலங்கரிக்கப்பட்டு குதிரைகள் பூட்டப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை 300 டன் ஆகும். முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருளினார்.

    இந்த ஆழித்தேரோட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் ஆரூரா! தியாகேசா!! என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தியாகராஜர் கோவிலின் கீழவீதியில் தொடங்கும் இந்த தேரோட்டம் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி என சுற்றி வந்து இன்று மாலை மீண்டும் நிலையடிக்கு தேர் வந்து சேரும். பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேரோட்டத்திற்கு முன்பு முருகர் தேர், விநாயகர் தேர் இழுத்து செல்லப்பட்டது.

    ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய தேர்களும் இழுத்து செல்லப்பட்டன. மொத்தம் 5 தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக வீதியில் அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த தேரோட்டத்தின்போது தேரை நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் 500 முட்டுக்கட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த முட்டுக்கட்டைகள் புளிய மரக்கட்டையில் செய்யப்படுகிறது.

    உலகப் புகழ்பெற்ற இந்த ஆழித்தேரோட்டத்தை பார்ப்பதற்காக லட்ச க்கணக்கான பொதுமக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்துள்ளனர். மக்கள் அதிகம் கூடுவதால் அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையின் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது. தேரோட்டத்தில் போக்குவரத்தை சீர் செய்தல், அசம்பாவிதங்கள் மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகள் நடைபெறாத வகையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • சென்னை ஸ்ரீ மல்லீஸ்வரர் புறப்பாடு.
    • ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 8 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி (முழுவதும்)

    நட்சத்திரம்: ஆயில்யம் பின்னிரவு 3.46 மணி வரை பிறகு மகம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் வெள்ளை யானை வாகனத்தில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் அம்ச வாகனத்திலும் ஸ்ரீ ரங்கமன்னார் கருட வாகனத்தலும் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவாரூர் ஆழித்தேரோட்டம். பழனி ஸ்ரீ ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. சென்னை ஸ்ரீ மல்லீஸ்வரர் புறப்பாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-புகழ்

    மிதுனம்-சாந்தம்

    கடகம்-உதவி

    சிம்மம்-நட்பு

    கன்னி-கடமை

    துலாம்- கவனம்

    விருச்சிகம்-தனம்

    தனுசு- இன்சொல்

    மகரம்-ஆக்கம்

    கும்பம்-ஆதரவு

    மீனம்-உண்மை

    • குலதெய்வ வழிபாடும் மிக முக்கியமான வழிபாடாகும்.
    • திருமணக்கோலத்தில் தெய்வங்களை தரிசித்தால் கல்யாண வைபோகம் தான்.

    பங்குனி உத்திரப் பெருவிழா தமிழ்நாடு முழுவதும் ஆலயங்களில் சீரும் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. வருகிற 5-ந்தேதி பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நன்னாளாகும்.

    ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவார்கள். விரதம் மேற்கொள்வார்கள். ஆனால், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவமும் முக்கியத்துவமும் உண்டு. அதற்கு முக்கிய காரணம் தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்பதுதான்.

    இன்னொரு சிறப்பு... தமிழில், 12-வது மாதம் பங்குனி. அதேபோல், நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரம் உத்திரம். அதாவது 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் அற்புதமான நாள் பங்குனி உத்திரம். இந்த தினத்தின் சிறப்புகள் அதிகம்.

    ஸ்ரீராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- சிருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம்.

    முருகப்பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். ஸ்ரீவள்ளி அவதரித்த தினமும் இதுதான் என்கிறது புராணம். தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள்.

    இந்த நாளில் விரதம் மேற் கொண்ட சந்திரன், அழகு மிக்க 27 பெண்களை மனைவியாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்கிறது புராணம்.

    இந்த நாளில் விரதம் மேற்கொண்ட ஸ்ரீமகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பாக்கியத்தைப் பெற்றாள். ஸ்ரீபிரம்மா, தன் நாவில் சரஸ்வதியை வரித்துக் கொண்ட தினம், பங்குனி உத்திரம் என்பர்.

    ஐயன் ஐயப்ப சுவாமியின் முந்தைய அவதாரமான சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில் என்கிறது சாஸ்தா புராணம். அர்ஜுனன் அவதரித்ததும் இந்த நாளில்தான்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாள் பங்குனி உத்திரம் என்கிறது ஆண்டாள் புராணம்.

    தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு மனமிரங்கிய சிவபெருமான், மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து அருளினார். அது பங்குனி உத்திர திருநாளில்தான் என்கிறது சிவபுராணம்.

    சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமேஸ்வரன் பார்வதிதேவியுடன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.

    காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார்.

    காஞ்சியில், பவுர்ணமி திதி கூடிய பங்குனி உத்திரத்தன்று, ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண விழா இனிதே நடைபெறும்.

    இந்த நாளில் காஞ்சி வரதராஜர் கோவில்- பெருந்தேவி தாயார் சந்நிதியில், தேவி-பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவி தாயார் சகிதம் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நவக்கிரக தலங்களில் ஒன்றான சந்திர பரிகாரத் தலம் திங்களூர் திருத்தலம்.

    இங்குள்ள சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும் மறுநாள் மாலை 6 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன என்பது இயற்கையின் அற்புதம். அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்கின்றனர் சிவாச்சார்யர்கள். மேலும் சந்திர தோஷம் யாவும் நீங்கிவிடும். சந்திர பலம் பெற்று, மனோபலம் கிடைக்கப் பெற்று மனத்தெளிவுடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்துமூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், திருப்பரங்குன்றத்தில் தெய்வானை கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் என பங்குனி உத்திர நாளில் விழாக்களின் சங்கமம் மிக மிக அதிகம்.

    சைவ வழிபாடுகளிலும், வைணவ வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இரு சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் போல வேறு எந்த மாதத்திலும் இவ்வளவு சிறப்பான விழா வருவது இல்லை.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா பங்குனி உத்திர திருவிழாதான். பெருமாளுக்கும், தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். எனவே பெருமாளும், தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிப்பர். இது ஆலய 5-வது திருச்சுற்றில், பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும்.

    பங்குனி உத்திரப்பெருவிழா தினத்தன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தை கண் குளிர தரிசித்தால் திருமணப்பேறு உண்டாகும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள் மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    பங்குனி உத்திரத்தன்று கன்னிப்பெண்கள் கல்யாண விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களில் திருமணக்கோலத்தில் தெய்வங்களை தரிசித்தால் அவர்களுக்கு கல்யாண வைபோகம் தான். அதுபோல திருமழபாடியில் நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்தான்.

    பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

    பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் சரி, எந்த ஆலய விழாவில் கலந்து கொண்டாலும் சரி மறக்காமல் குலதெய்வ வழிபாட்டையும் செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடும் மிக முக்கியமான வழிபாடாகும்.

    • திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம்.
    • அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரம்.

    திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். `மச்சம்' என்றால் `மீன்' என்று பொருள். வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த ஹயக்ரீவன் என்ற அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரம் இது.

    இந்த மச்ச அவதாரத்துடன் சம்பந்தப்பட்ட கோவில், கும்பகோணம் அருகே உள்ள தேவராயன் பேட்டையில் அமைந்திருக்கும் மச்சபுரீஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் பெயர் மச்சபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சுகந்த குந்தலாம்பிகை.

    மீன் உருவில் இருந்த மகாவிஷ்ணு, தன் சுய உருவத்தை அடைய இத்தலத்து சிவனை வழிபட்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    இந்த ஆலயம் மீன ராசிக்காரர்களின் பரிகாரத் தலமாக விளங்குகிறது. தல வரலாறு ஒரு சமயம் படைப்புக் கடவுளான பிரம்மா அசந்து தூங்கிவிட்டார். அப்போது ஹயக்ரீவன் என்ற அசுரன், பிரம்மனிடம் இருந்த படைப்புக்கு ஆதாரமான வேதங்களை திருடிச்சென்று விட்டான். இதனால் உலகம் ஸ்தம்பித்தது. பிரம்மன் செய்வதறியாது திகைத்தார். பரந்தாமனை துதித்து, வேதங்களை மீட்டு தரும்படி வேண்டி னார். அப்போது மகாவிஷ்ணுவை நோக்கி சத்யவிரதன் என்ற மன்னன் நீரையே உணவாக கொண்டு கடும் தவம் செய்து கொண்டிருந்தான்.

    ஒருமுறை அவன் தன்னுடைய தினசரி கடன்களை செய்து ஆற்றில் இரு கைகளாலும் நீரை அள்ளியபோது, சிறிய மீன் குஞ்சு ஒன்று கைகளில் வந்தது. அந்த மீன் அதிசயிக்கத்தக்க வகையில் பேசியது. அந்த மீன் மன்னனிடம், `மன்னா! என்னை மீண்டும் நீரில் விட்டுவிடாதீர்கள். பெரிய மீன்கள் என்னை விழுங்கி விடும்' என்றது. மீன் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், அந்த மீனை தன் கமண்டலத்தில் போட்டுக்கொண்டான். சிறிது நேரத்தில் அந்த கமண்டலம் அளவுக்கு மீன் வளர்ந்துவிட்டது.

    அதனால் அதை ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டான். அதற்கு மேலும் மீன் வளர்ந்து விட்டது. பிறகு குளத்தில் மீனை போட்டான்.

    என்னே அதிசயம்! சிறிது நேரத்தில் குளம் அளவுக்கு மீன் வளர்ந்து விட்டது. இறுதியில் படைவீரர்கள் உதவியுடன் மீனை தூக்கிக் கொண்டு போய் கடலில் விட்டான். மீன் கடலளவு வளர்ந்து பிரமாண்டமாய் நின்றது. இதைக் கண்ட மன்னன், தான் வழிபடும் திருமாலே இதுபோன்ற திருவிளையாடலை நடத்துவதாக அறிந்து கொண்டான்.

    `பரந்தாமா! தாங்கள் இந்த உருவம் பெற்றதற்கும், என்னிடம் வந்ததற்கும் காரணம் என்ன?' என்றான். அப்போது மீன் வடிவில் இருந்த மகாவிஷ்ணு, `மன்னா! வருகிற ஏழாவது நாளில் பிரளயம் ஏற்பட்டு உலகமே வெள்ளத்தில் மூழ்கப்போகிறது.

    அச்சமயம் பெரிய படகு ஒன்று இங்கே வரும். அதில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் ஏற்றிவிடு. பிரளய வெள்ளத்தில் அந்த படகு மிதக்கும். மச்ச அவதாரம் எடுத்து, நான் அந்த படகை சுமந்து கவிழ்ந்து விடாதவாறு காப்பா ற்றுவேன். அப்போது நீங்கள் அதன் காரணத்தையும், என் மகிமையையும் அறிவீர்கள்' என்று கூறிவிட்டு மறைந்தார்.

    மகாவிஷ்ணு கூறி யபடி ஏழாவது நாளில் பெரிய பிரளயம் ஏற்பட்டு வெள்ளம் சூழ்ந்தது. அப்போது பெரிய படகு ஒன்று அங்கே வந்தது. மன்னனும் உயிர்களை காப்பாற்ற அவற்றை படகில் ஏற்றிக்கொண்டு சென்றான். பலத்த காற்றால் படகு அலைக்கழிக்கப்பட்டது. அப்போது மகாவிஷ்ணு மச்ச அவதாரத்தில் தோன்றி படகை சுமந்து சென்று பிரளயம் முடிந்ததும் நிலத்தில் விட்டு, அனைத்து உயிர்களையும் காப்பாற்றினார்.

    மகாவிஷ்ணு, மன்னனுக்கு மச்ச புராணத்தை உபதேசித்தார். பின்னர் பரந்தாமன் வேகமாக வெள்ளத்தினுள் சென்று, அசுரனுடன் போரிட்டு அவனை அழித்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் ஒப்படைத்தார்.

    இறை வன் மீன் வடிவம் தாங்கி, உலகையும் காத்து, வேதங்களையும் மீட்ட பெருமை உடையது இத்தலம். மச்ச அவதாரத்தில் இருந்து சுய உருவம் அடைய பரந்தாமன் முயற்சித்தபோது, அசுரனை கொன்ற தோஷம் காரணமாக அவரால் சுய உருவத்தை அடைய முடியவில்லை. இதனால் அவர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவனருளால் மகாவிஷ்ணு சுயஉருவம் அடைந்ததாக தலபுராணம் கூறுகிறது. மகாவிஷ்ணுவுடன் தேவர்கள், பிரம்மா ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலைக்கு உறைவிடமாக விளங்குகிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது. இங்கு 55 கல்வெட்டுகள் உள்ளன. மகாவிஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு சிவனை வழிபட்ட சின்னம் கோவில் முகப்பில் கருங்கல்லால் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

    மச்சபுரீஸ்வரர் ஆலயம் வேதங்களை மீட்ட தலம் என்பதால், கல்வி கற்று வரும் மாணவர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய தலம் இது. மாணவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து மச்சபுரீஸ்வரரையும், சுகந்த குந்தலாம்பிகையையும் வணங்கி தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். குலதெய்வ வழிபாடு செய்யாமல் விட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டு மீண்டும் தங்கள் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்தால் குலதெய்வத்தை வழிபடாததால் வந்த தோஷம் விலகும்.

    அமைவிடம்

    தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் பண்டாரவாடை என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் மச்ச புரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பாபநாசத்தில் இருந்தும், பண்டாரவாடையில் இருந்தும் பஸ், ஆட்டோ வசதி உண்டு.

    • ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • ரெங்கநாதருக்கு தயிர் சாதம், மாவடு, கீரை படைக்கப்பட்டது.

    ஜீயபுரம்:

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் கருட மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    3-ம் நாளான நேற்று ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னொரு காலத்தில் ரெங்கநாதரின் பக்தையான மூதாட்டியின் பேரன் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, பேரன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதனால் மூதாட்டி ரெங்கநாதரை நோக்கி அழுதுள்ளார்.

    மூதாட்டியின் பக்தியால் மனம் உருகிய ரெங்கநாதர் பேரனாக தானே மூதாட்டியின் வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் மூதாட்டியின் கையால் தயிர் சாதம், மாவடு வாங்கி சாப்பிட்டதாக ஐதீகம். இந்த நிகழ்ச்சி தேரோட்ட திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில் நடத்தி காண்பிக்கப்படும்.

    இதற்காக நேற்று அதிகாலையில் ரெங்கநாதர் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஜீயபுரம் சென்றார். அங்கு ரெங்கநாதருக்கு தயிர் சாதமும், மாவடுவும், கீரையும் வைத்து அமுது படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ரெங்கநாதர் பல்லக்கில் அமர்ந்து அந்தநல்லூர், அம்மன்குடி, திருச்செந்துறை, போன்ற பகுதிகளில் உள்ள தெருக்களில் வீதிஉலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பின்னர் நண்பகலில் மீண்டும் ஆஸ்தான மண்டபத்தின் அருகில் உள்ள புன்னாகம் தீர்த்த குளத்தின் அருகில் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீர்த்தவாரி மண்டபத்தில் சர்க்கரை பொங்கல் இட்டு அமுது படைத்தனர்.

    பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு சொந்தமான ஆஸ்தான மண்டபத்தில் பாண்டியன்கொண்டை, அடுக்கு பதக்கம், நீலநாயகம், காசுமாலை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குஅருள்பாலித்தார். இதில் ஜீயபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் மாலையில் பல்லக்கில் அமர்ந்து காவிரி ஆற்றின் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார்.

    4-ம் நாளான இன்று (புதன்கிழமை) தங்க கருட வாகனத்திலும், நாளை (வியாழக்கிழமை) காலை சேஷ வாகனத்திலும், மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 22-ந்தேதி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் மகாஜன மண்டபத்தில் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளுகிறார்.

    23-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 24-ந் தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பங்குனி ரதம் முன் வையாளி கண்டருளுகிறார். 25-ந்தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. 27-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுனையில் குளித்தால் தீராத நோய்கள் விலகும்.
    • அய்யனாரை வழிபட்டால் கடன் தொல்லை தீரும்

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் உள்ள சுனையில் குளித்தால் தீராத நோய்கள் விலகு வதாகவும், அய்யனாரை வழிபட்டால் கடன் தொல்லை தீரும் என்றும், எந்த துயரில் இருந்தும் நீங்கலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    கோவில் வரலாறு

    சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டத்தை தலைமையிடமாக கொண்டு சிங்கராஜன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அப்பகுதியில் இருந்த தடாகத்தில் உள்ள நீர் பன்னீர் போன்று தெளிந்தும், சுவை மிக்கதாகவும் இருந்தது. ஒரு முறை இதில் இருந்து கனகமணி என்ற கன்னிப்பெண் குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சென்றபோது கல்லால் கால் தவறி விழுந்தார்.

    அவர் கொண்டு சென்ற குடத்து நீர் அவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் மீது கொட்டியது. ஆத்திரமடைந்த அவர், அந்த பெண் கையால் நீர் வாங்குபவர் இறப்பார் என்றும், அந்த பெண் இறக்கும் தருணத்தில் சொல்வது எல்லாம் பலிக்கும் என்றும், மரணத்திற்கு பிறகு அவர் சொர்க்கம் செல்வார் என்றும் சாபமிட்டார்.

    அவ்வூரில் தினமும் ஒரு கனி காய்க்கும் மரத்தில் இருந்து கனியை எடுத்து மன்னன் உண்டு வந்தான். இதனால் அம்மரத்திற்குக் காவல் போடப்பட்டிருந்தது. ஒரு முறை முனிவரிடம் சாபம் பெற்ற பெண் தண்ணீர் எடுத்துவரும் போது குடத்திற்குள் அந்த மரத்தில் இருந்த கனி விழுந்து விட்டது. அவர் வரும் வழியில் 21 தேவாதி தேவதைகள் எதிரில் தண்ணீர் கேட்க, அந்த பெண் கொடுக்க மறுத்துவிட்டார். அப்போது மரத்தில் இருந்த கனி திருடப்பட்டதாக எண்ணினர்.

    மேலும் அந்த கனியை சாபம் பெற்ற பெண் எடுத்து சென்றதாக கருதினர். இதைத்தொடந்து கனகமணி வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு மரத்தில் இருந்து விழுந்த கனி இருந்தது. இதனால் மன்னரின் காவலர்கள் அந்த பெண்ணை அழைத்து சென்று மன்னன் முன் நிறுத்தினர். அப்போது கனகமணியின் குடத்தில் இருந்த நீருக்குள் கனி இருந்தது என காவலர்கள் கூறினர்.

    தேவதைகளும் தாங்கள் தண்ணீர் கேட்ட போது கனி வைத்திருந்ததால் தண்ணீர் தர மறுத்தார் என கூறினர். எனவே கனகமணி தான் கனியை திருடியிருக்க வேண்டும் என கூறினர்.

    இதைத்தொடர்ந்து கனகமணிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவர் இறக்கும் தருவாயில் தன் தெய்வமான அரிகரபுத்திரனை அழைக்க, அவர் உயிர்ப்பிக்க முயலும் போது அவள் இனி எவரும் தண்ணீருக்காக அலைந்து சாபம் பெறக்கூடாது என்று கூறி அவ்விடத்தில் சுனையாக மாறி இருக்க விரும்புவதாகக் கூறினார். அப்போது அருமையான சுனையாக மாறும் அவளைக் காத்தருளுவதாக என்று அய்யன் சாஸ்தா கூறினார்.

    இதனால் தான் அருஞ்சுனை காத்த அய்யனார் என்றழைக்கப்பட்டார். பின்னர் உண்மையறிந்த மன்னன் தான் தவறிழைத்ததாக கருதி உயிரை மாய்த்துக்கொண்டான். இதேபோல் தேவதைகள் அய்யனாரிடம் மன்னிப்பு கோர, அவர்களைத் தனது கண்காணிப்பில் வைத்துக்கொண்டார் அய்யனார்.

    ×