என் மலர்
வழிபாடு
- 16-ந்தேதி வரலட்சுமி விரதம்.
- 17-ந்தேதி சனிப்பிரதோஷம்.
13-ந்தேதி (செவ்வாய்)
* சேலம் செவ்வாய் பேட்டை மாரியம்மன் வசந்த உற்சவம்.
* குரங்கணி முத்து மாலை அம்மன் பவனி
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
14-ந்தேதி (புதன்)
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் வளையல் விற்ற திருவிளையாடல்.
* ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் தங்க கேடய சப்பரத்தில் பவனி
* இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு.
* திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
15-ந்தேதி (வியாழன்)
* சுமார்த்த ஏகாதசி.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்,
* சமநோக்கு நாள்.
16-ந்தேதி (வெள்ளி)
* சர்வ ஏகாதசி.
* வரலட்சுமி விரதம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் புட்டுக்கு மண் சுமந்தருளிய விலை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
17-ந்தேதி (சனி)
* சனிப்பிரதோஷம்
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிவில் விறகு விற்ற திருவிளையாடல்.
* திருவரங்கம் நம்பெருமான், பண்ணார்குடி ராஜ கோபாலசுவாமி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
18-ந்தேதி (ஞாயிறு)
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் ரத உற்சவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
19-ந்தேதி (திங்கள்)
* பவுர்ணமி
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜ பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்.
* மேல்நோக்கு நாள்.
- முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.
- மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் சட்டத் தேரில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-28 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அஷ்டமி காலை 6.11 மணி வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: விசாகம் காலை 8.29 மணி வரை. பிறகு அனுஷம்.
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். குறுக்குத்துறை ஸ்ரீமுருகப் பெருமான் புறப்பாடு. குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் சட்டத் தேரில் பவனி. வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், திருத்தணி, கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கழுகுமலை, மருதமலை கோவில்களில் ஸ்ரீமுருகப்பெருமான் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-சாந்தம்
மிதுனம்-பெருமை
கடகம்-மேன்மை
சிம்மம்-நிறைவு
கன்னி-தியாகம்
துலாம்- உதவி
விருச்சிகம்-உண்மை
தனுசு- உழைப்பு
மகரம்-இரக்கம்
கும்பம்-நட்பு
மீனம்-கடமை
- திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-27 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அஷ்டமி முழுவதும்
நட்சத்திரம்: சுவாதி காலை 6.39 மணி வரை பிறகு விசாகம்.
யோகம்: அமிர்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு. மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் தங்கக் குதிரையில் பவனி. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் மஞ்சள் நீராட்டு விழா. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-இரக்கம்
மிதுனம்-சோர்வு
கடகம்-சுகவீனம்
சிம்மம்-ஆதாயம்
கன்னி-தாமதம்
துலாம்- அனுகூலம்
விருச்சிகம்-நன்மை
தனுசு- சுபம்
மகரம்-நற்சொல்
கும்பம்-மாற்றம்
மீனம்-உறுதி
- பதிகம் பாடிய சுந்தரருக்கு, குரு பூஜை விழா.
- சுந்தரருடனே சிவபாதம் அடைந்தவர் சேரமான் பெருமான் நாயனார்.
சைவ சமயத்தில் போற்றப்படும் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், திருமணம் செய்ய முயன்ற போது, சிவபெருமான் கிழவன் வேடம் தரித்து சென்று, அதை தடுத்தார். சுந்தரரின் பிறவி நோக்கம், இறைவனை புகழ்ந்து பாடுவது என்பதை உணர்த்தி, சிவபெருமான் அவ்வாறு தடுத்தாட்கொண்டார்.
அதன்பின், பல கோவில்களுக்கு சென்று, சிவபெருமானை பாடியுள்ளார். திருமணத்தை தடுத்த சிவபெருமானே, இரண்டு பெண்களை சுந்தரரருக்கு திருமணம் செய்து வைத்தார். பன்னிரு திருமுறைகள் மற்றும் தேவாரத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

சிவபெருமான் மீது, பண்களுடன் 38 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். திருப்பூர், திருமுருகண்டி பூண்டியில் சுந்தரர் தங்கியிருந்த போது, சிவபெருமான், பூத கணங்களை அனுப்பி, பொருட்களை கவர செய்து, திருவிளையாடல் புரிந்தார்.
அப்போது, வெஞ்சிலை வடுக வேடுவர் எனும் பதிகம் பாடியதால், அகம் மகிழ்ந்த இறைவன், சுந்தரரின் பாடலுக்காக, கவர்ந்த பொருட்களை கோவில் முன் குவித்தார்.
சிவாலயங்கள் தோறும் பதிகம் பாடிய சுந்தரருக்கு, குரு பூஜை விழா, திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அர்த்த சாம பூஜை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் நடக்கும். பல்வேறு திரவியங்களில் அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
வெள்ளை யானை வாகனத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு, அருள்பாலித்தார்.

சுந்தரமூர்த்தி நாயனாரிடம் நட்பு கொண்டு, அவருடனே பல கோவில்களுக்கு சென்று இறைவனை வணங்கியவர்; சுந்தரருடனே சிவபாதம் அடைந்தவர், கழறிற்றறிவார் நாயனார் எனப்படும் சேரமான் பெருமான் நாயனார்.
அரசராக இருந்தாலும், சிவதொண்டையே பெரும் பாக்கியமாக கருதி, சுந்தரரோடு கயிலாயம் அடைந்த சேரமான் பெருமாள், குரு பூஜையும் இன்று.
- நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகியம்மன் மஞ்சள் நீராட்டு விழா.
- சேரமான் பெருமான் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-26 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி மறுநாள் விடியற்காலை 5.09 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: சுவாதி (முழுவதும்)
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகியம்மன் மஞ்சள் நீராட்டு விழா. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் புஷ்பப் பல்லக்கில் திருவீதியுலா. சேலம் செவ்வாய்ப் பேட்டை ஸ்ரீ மாரியம்மன் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி விமானத்தில் பவனி. சேரமான் பெருமான் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-நலம்
கடகம்-பாசம்
சிம்மம்-பக்தி
கன்னி-பாராட்டு
துலாம்- உதவி
விருச்சிகம்-போட்டி
தனுசு- ஆர்வம்
மகரம்-ஓய்வு
கும்பம்-பணிவு
மீனம்-கடமை
- திருநெடுங்களம் கோவிலை வணங்கினால் தீரா துயர் தீரும்.
- திருமணஞ்சேரி தலத்தில் வழிபட்டால் திருமண தோஷம் விலகும்.
சென்னை:
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. நமது ஊரில் உள்ள கோவில்களுக்குச் சென்று சாமியை தரிசனம் செய்து வரவேண்டும் என முன்னோர் வலியுறுத்தி உள்ளனர்.
அதன்படி, எந்த ஊருக்குச் சென்று எந்த சாமியை வணங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
திருக்கருக்குடி கோவிலை வணங்கினால் குடும்ப கவலை நீங்கும்.
திருக்கருவேலி கோவிலை வணங்கினால் குழந்தை பாக்கியம் பெறலாம். வறுமை நீங்கும்.
திருவழுந்தூர் கோவிலை வணங்கினால் முன்ஜென்ம பாவம் விலகும்.
திருப்பராய்துறை கோவிலை வழிபட்டால் கர்வத்தால் கெட்டவர்கள் நலம் பெறலாம்.
திருநெடுங்களம் கோவிலை வணங்கினால் தீரா துயர் தீரும்.
திருவெறும்பூர் கோவிலை வழிபட்டால் அதிகார மோகத்தால் வீழ்ந்தவர்கள் தெளிவு பெறலாம்.
திருப்பைஞ்ஞீலி கோவிலை வணங்கினால் எம பயம் விலகும்.
திருவையாறு கோவிலை வழிபட்டால் அக்னி தோஷம் விலகும்.
திருவைகாவூர் கோவிலில் வில்வ அர்ச்சனை செய்தால் பாவங்கள் விலகும்.
திருமங்கலங்குடி ஈசனை வணங்கினால் குழந்தை பாக்கியம் பெறலாம்.
திருமணஞ்சேரி தலத்தில் வழிபட்டால் திருமண தோஷம் விலகும்.
திருமுல்லைவாயல் ஈசனை வணங்கினால் சந்திர தோஷம் விலகும்.
திருவெண்காடு கோவிலை வழிபட்டால் ஊழ்வினை தோஷம் நீங்கும்.
திருநெல்வேலி நெல்லையப்பரை வணங்கினால் மகான்களுக்கு செய்த குற்றம் விலகும்.
திருக்குற்றாலம் குற்றால நாதரை வேண்டினால் முக்தி கிடைக்கும்.
திருவாலவாய் கோவிலை வணங்கினால் நட்சத்திர தோஷம் நீங்கும்.
திருப்பரங்குன்றத்தை வழிபட்டால் வாழத் தெரியாது தவிப்பவர்களுக்கு வழி கிடைக்கும்.
திருவாடானை தலத்தை வணங்கினால் தீராத பாவம் நீங்கும்.
திருமுருகநாத சுவாமி கோவிலை வழிபட்டால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலகும்.
திருப்பாதிரிபுலியூர் தலத்தை வணங்கினால் தாயை விட்டுப் பிரிந்திருக்கும் குழந்தைக்கு தோஷம் நீங்கும்.
திருவேற்காடு ஈசனை வணங்கினால் வாணிப பாவம் விலகும்.
திருமயிலாப்பூர் கபாலீஸ்வரரை வழிபட்டால் 3 தலைமுறை தோஷம் நீங்கும்.
- அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவது வழக்கம்.
- வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மூங்கில்பட்டி கிராமத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவில் உள்பிரகாரத்தில் வனவாராஹி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு தினமும் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவது வழக்கம்.
குறிப்பாக பஞ்சமி திதியில் அம்மனுக்கு அதிகாலை முதல் நடக்கும் சிறப்பு பூஜையில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி நேற்று நாகபஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
அப்போது பக்தர்கள் கொடுத்த பிரசாத பாலை நைவேதியம் செய்வதற்காக கரண்டியில் பாலை எடுத்துச் சென்றபோது அம்மன் அதனை குடித்தது. இதனை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
தொடர்ந்து கரண்டியில் பாலை எடுத்து அம்மன் வாய் அருகே எடுத்துச் சென்றபோது அது முற்றிலும் காலியானது. இதனை பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு பக்தராக தாங்கள் கொண்டு வந்த பாலை அம்மனுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். இதனால் அவர்கள் பக்தி பரவசத்தால் உற்சாகம் அடைந்தனர்.
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
- இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-25 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி பின்னிரவு 3.36 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: சித்திரை மறுநாள் விடியற்காலை 4.36 மணி வரை பிறகு சுவாதி
யோகம்: மரண அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. குறுக்குத்துறை முருகப்பெருமான் திருவீதியுலா. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கிளி வாகனத்தில் பவனி. பெருமழலைக் குறும்பர் நாயனார் குரு பூஜை. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-பரிவு
மிதுனம்-பண்பு
கடகம்-பதவி
சிம்மம்-யோகம்
கன்னி-வரவு
துலாம்- நலம்
விருச்சிகம்-சிந்தனை
தனுசு- மேன்மை
மகரம்-கவனம்
கும்பம்-பெருமை
மீனம்-திறமை
- கோ தானம் செய்தால் பித்ரு சாபம் நிவர்த்தி ஆகும்.
- தேன் தானம் செய்தால் இனிய குரல் கிடைக்கும்.
நாம் இல்லாதவருக்கு செய்யும் தானதர்மங்கள் நமக்கு பல்வேறு நன்மைகளை தரும். எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்.
பூமி தானம் - இகபர சுகங்கள்.
ஆடை தானம் - சகல ரோக நிவர்த்தி.
கோ தானம் - பித்ரு சாபம் நிவர்த்தி அடையும்.
தில தானம் (எள்) - பாப விமோசனம் அடையலாம்.
வெல்லம் தானம் - குலம் அபிவிருத்தி அடையும்.
நெய் தானம் - வீடுபேறு அடையலாம்.
தேன் தானம் - இனிய குரல் கிடைக்கும்.
சொர்ண தானம் - கோடி புண்ணியம் உண்டாகும்.
வெள்ளி தானம் - பித்ருகள் ஆசி கிடைக்கும்.
தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்.
கம்பளி தானம் - துர்சொப்பனம், துர்சகுன பயம் நிவர்த்தி அடையும்.
பால் தானம் - சவுபாக்கியம்
சந்தனக்கட்டை தானம் - புகழ் கிடைக்கும்.
அன்ன தானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்ட வாயால் போதும் என சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே. தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.
திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது. திருவண்ணாமலையில் யார் ஒருவர் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறார்களோ அவர்களது கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
- வண்டி வேடிக்கை கோலாகலமாக நடைபெற்றது.
- கடவுள் போன்று வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.
மேட்டூர்:
சேலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 22 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோட்டை மாரியம்மன் கோவிலை மையமாக வைத்து அதனை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழா களைகட்டும்.
ஆடி பண்டிகையின் போது பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துவர். இதன் ஒரு பகுதியாக வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் பக்தர்கள் கடவுள் போன்று வேடமிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் சேலம் குகை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று வண்டி வேடிக்கை கோலாகலமாக நடைபெற்றது.
இதில் மேச்சேரி சந்தைப்பேட்டையில் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று இரவு அக்னி கரகம், அலகு குத்துதல், பொய்க்கால் குதிரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
இதையடுத்து வண்டிவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இக்கோவிலில் பெண்கள் மட்டுமே அம்மன் வேடம் அணிந்து வலம் வரும் வண்டிவேடிக்கை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
பிரமாண்ட வண்டியில் மின்னொளி ஜொலித்தபடி பெண்கள் கடவுள்களைப் போல் வேடம் அணிந்து வண்டிகளில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அகிலாண்டேஸ்வரி, உலகநாயகி, காமாட்சி, காலபைரவி, சத்திய சொரூபி, சரஸ்வதி தேவி, ஞானரூப தேவி, தாட்சாயணி தேவி, துர்க்கை, பகவதி, பார்வதி தேவி, மீனாட்சி, பத்ரகாளியம்மன், வேப்பிலைக்காரி, உமா தேவி, காயத்ரி தேவி, பெரிய நாயகி உள்ளிட்ட பல்வேறு அம்மன் சாமிகள் வேடம் அணிந்து அசத்தினர்.

இப்பெண்கள் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதுபோல் காட்சி தந்தனர். இது கடவுள் விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு வந்து ஆசி வழங்குவது போல் இருந்தது. இதிகாசங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.
வண்டியின் முன்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொய்க்கால் குதிரை நாட்டியம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். பொய்க்கால் குதிரை நாட்டியம் காண்போரை கவரும் வண்ணம் இருந்தது.
இவ்விழாவில் ஓமலூரான் தெரு, கோல்காரனூர், அழகா கவுண்டனூர் உள்ளிட்ட 12 பட்டி கிராம மக்கள் பங்கேற்றனர்.
- இறைவியின் திருநாமம், மருவார் குழலி.
- தீர்த்தத்தில் நீராடினால், சகல பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் திருச்செம்பொன்பள்ளி என்னும் செம்பனார்கோவில் திருத்தலத்தில் இருக்கிறது மருவார்குழலி உடனாய சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோவில். தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென் கரைத் தலங்களில், இது 42-வது திருத்தலமாகும். புராண காலத்தில் இந்த ஊர், லட்சுமிபுரி, இந்திரபுரி, கந்தபுரி என்று அழைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு
பிரம்மாவின் மானச புத்திரராக பிறந்தவர், தட்சன். இவருக்கு பார்வதிதேவியே, மகளாகக் கிடைத்திருந்தாள். அவளுக்கு தாட்சாயிணி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பின்னர் மகள் விருப்பப்படியே அவளை, சிவ பெருமானுக்கு மணம் முடித்தார்.
சில காலம் கழித்து தட்சன் ஒரு யாகத்தை நடத்தினான். அப்போது அகந்தையால், அந்த யாகத்திற்கு சிவபெருமானை அழைக்க மறுத்தான். இதையறிந்த தாட்சாயிணி, தன் தந்தையை நல்வழிபடுத்தும் எண்ணத்தில் யாகம் நடந்த இடத்திற்கு வந்தாள்.
ஈசனுக்கு அழைப்பு விடுக்காதது பற்றி மகள் கேட்டதில், தட்சன் கோபம் கொண்டான். ஆணவத்தின் உச்சத்தில் இருந்த அவன், தாட்சாயிணியையும், சிவனையும் கடும் வார்த்தைகளால் வசைபாடினான். இதனால் கோபம் கொண்ட தாட்சாயிணி, தட்சனின் யாகம் அழிந்து போகட்டும் என்று சாபமிட்டாள்.
பின்னர் சிவபெருமானிடம், தட்சனுக்கு தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொண்டாள். சிவபெருமான் தன்னுடைய அம்சமாக வீரபத்திரரையும், அவருக்கு துணையாக பத்ரகாளியையும் அனுப்பிவைத்தார். அவர்கள் தட்சனின் யாகத்தை அழித்தனர்.
இந்த நிலையில் சிவனை நிந்தித்த தட்சனுக்கு மகளாகப் பிறந்தது, தட்சனுக்கு சாபம் அளித்தது ஆகியவற்றை பாவமாக கருதிய தாட்சாயிணி, அந்த பாவம் நீங்க இத்தலத்தில் பஞ்சாக்னி வளர்த்து அதன் நடுவில் அமர்ந்து தவம் புரிந்தாள்.
சிவபெருமான், தாட்சாயிணிக்கு காட்சி கொடுத்து, பார்வதியாக தன்னுடன் சேர்த்துக்கொண்டார். மேலும் 'நீ இந்த தலத்தில் மருவார் குழலியம்மை என்ற திருநாமத்துடன் என்னருகில் இருந்து அருள் செய்வாய்' என்று கூறியதாக தல வரலாறு எடுத்துரைக்கிறது.
இவ்வாலயத்தின் அமைப்பு முறை மற்றும் இங்குள்ள ஜேஷ்டா தேவி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்த ஆலயம் கி.பி 879 முதல் கி.பி. 907 வரை ஆட்சி செய்த ஆதித்த சோழன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
கோச்செங்கண் சோழனும் இவ்வாலயத்தில் திருப்பணி செய்திருக்கிறான். இவ்வாலயத்தில் மூன்றாம் குலோதுங்கச் சோழன், ராஜராஜ சோழன், பிற்காலத்தில் தஞ்சையை ஆட்சி செய்த சரபோஜி மன்னர் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன.
தட்சனை மகனாகப் பெற பிரம்மாவும், திருமாலை கணவனாக அடைவதற்கு லட்சுமிதேவியும், லட்சுமியை மனைவியாக அடைந்ததற்கு திருமாலும், விருத்திராசுரனை வெல்ல வஜ்ஜிராயுதம் வேண்டி இந்திரனும், தாருகாசுரனை வதம் செய்ய முருகனும் இவ்வாலயத்தில் உள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி, இவ்வாலய இறைவனை வழிபாடு செய்துள்ளனர். இவர்களைத் தவிர, குபேரன், வசிஷ்டர், அகத்தியர் ஆகியோரும் இத்தல இறைவனை வணங்கி இருக்கிறார்கள்.

ஆலய அமைப்பு
இவ்வாலயம் கிழக்கு நோக்கிய திருவாசலுடன் மாடக்கோவிலாக அமைந்துள்ளது. பலிபீடம், நந்தி மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறத்தில் தெற்கு நோக்கிய நிலையில் அம்மன் சன்னிதி உள்ளது.
இறைவியின் திருநாமம், மருவார் குழலி. இவருக்கு புஷ்பாளகி, தாட்சாயிணி, சுகந்த குந்தளாம்பிகை, சுகந்தவன நாயகி என்ற பெயர்களும் உண்டு. மகாமண்டபத்தில் சூரிய மகா கணபதி, சூரிய லிங்கம், சந்திர லிங்கம், சுப்பிரமணியர், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி உள்ளனர்.
கருவறையில் மூலவர் சுவர்ணபுரீஸ்வரர், மேலும் கீழும் தலா 16 இதழ்களைக் கொண்ட தாமரை போன்ற ஆவுடையில் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இவர் தேவப்பிரியர், சுவர்ண லட்சுமீசர், செம்பொன் பள்ளியார் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
கோஷ்டத்தில் கோஷ்ட கணபதி, தட்சிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இங்குள்ள பிட்சாடனத் திருக்கோலம் மிகப் பழைமையானது. அருகே சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது.
திருச்சுற்றில் மேற்கில் தலவிநாயகரான, `பிரகாசப் பிள்ளையார்' உள்ளார். தவிர வன துர்க்கை, விசுவநாதர், சீனிவாசப் பெருமாள், சிபிகாட்சிநாதர் எனப்படும் மான் மழு ஏந்திய சிவபெருமான், ருத்ராட்ச மாலையும், சக்தி ஆயுதமும் தரித்த நான்கு கரங்களைக் கொண்ட பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, வீரபத்திரர், சூரியர், பைரவர் ஆகிய மூர்த்தங்களும், சேத்ரகால பைரவர் மற்றும் நவக்கிரக சன்னிதிகளும் காணப்படுகின்றன.
தென்மேற்கில் பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, சாமுண்டி, வைஷ்ணவி, வராகி, மகேந்திரி ஆகிய சப்த மாதர்களுடன் விநாயகர் மற்றும் சாஸ்தா உள்ளனர். கோவிலுக்கு அருகில் ஆலயத்தின் தல தீர்த்தமான சூரிய தீர்த்தமும், காவிரியும் உள்ளன. இவ்வாலய தல விருட்சமாக வன்னி மரமும், வில்வ மரமும் உள்ளன.

இவ்வாலய தீர்த்தத்தில் நீராடினால், சகல பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். நவக்கிரக தோஷத்திற்கு சிறந்த பரிகாரத்தலமாக இந்த ஆலயம் திகழ்கிறது. இங்கு துர்க்கை வழிபாடும் மிகவும் விசேஷம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயத்தில் சித்திரை மாதம் 7-ம் நாளில் இருந்து 18-ம் நாள் வரை, பன்னிரண்டு நாட்கள் சூரிய பூஜை திருவிழா நடத்தப்படுகிறது.
ஆறுகால பூஜை நடைபெறும் இவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
மயிலாடுதுறையில் இருந்து ஆக்கூர் செல்லும் சாலையில் செம்பனார்கோயில் திருத்தலத்தின் வடக்கு பகுதியில் சுவர்ண புரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
- இன்று கருட பஞ்சமி.
- இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, ஆடி 24 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: பஞ்சமி நள்ளிரவு 1.44 மணி வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: அஸ்தம் பின்னிரவு 2.09 மணி வரை. பிறகு சித்திரை.
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று கருட பஞ்சமி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் இரட்டைத் தோளுக்கினியானில் தீர்த்தவாரி. மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் விருஷப சேவை. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன், திருவாடனை ஸ்ரீசிநேகவல்லியம்மன் கோவில்களில் திருக்கல்யாணம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் தேரோட்டம். இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் உற்சவம் ஆரம்பம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தர குசாம்பாள் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மாற்றம்
ரிஷபம்-மகிழ்ச்சி
மிதுனம்-போட்டி
கடகம்- பொறுமை
சிம்மம்-வளர்ச்சி
கன்னி-உவகை
துலாம்- உண்மை
விருச்சிகம்-செலவு
தனுசு- தெளிவு
மகரம்-இன்பம்
கும்பம்-முயற்சி
மீனம்-நற்செயல்






