என் மலர்tooltip icon

    வழிபாடு

    • திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் அலங்காரம், திருமஞ்சன சேவை
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-19 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : நவமி காலை 6.28 மணி வரை பிறகு தசமி நாளை விடியற்காலை 5.25 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : உத்திரட்டாதி பின்னிரவு 2.26 மணி வரை பிறகு ரேவதி

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில்களில் அலங்காரம், திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - நற்சொல்

    ரிஷபம் - முயற்சி

    மிதுனம் - இன்பம்

    கடகம் - செலவு

    சிம்மம் - சுகம்

    கன்னி - சுபம்

    துலாம் - வெற்றி

    விருச்சிகம் - உறுதி

    தனுசு - ஈகை

    மகரம் - தனம்

    கும்பம் - அன்பு

    மீனம் - சாந்தம்

    • பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம்.
    • ருத்ராட்சம் அணிந்தவர்களின் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் சொல்லும் வார்த்தைகளாகும்.

    ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1 கோடி முறை உச்சரித்த பலனைத்தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை' என்கிறார் மகா பெரியவா என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்.

    இன்று நம்மில் பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அது புனிதமானது. அதனை துறவிகள் மட்டுமே அணியவேண்டும். இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அணியக்கூடாது. பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம்.

    ஆனால் இயற்கையாகவே துளையோடு இருக்கும் ருத்ராட்சம், அனைவரும் அணிந்து கொள்வதற்காகவே அவ்வாறு இருக்கிறது. அதன் ஆண், பெண் பேதம் எதுவும் இல்லை என்பது ஆன்மிகத்தை நன்கு கற்றறிந்தவர்கள் கூறும் வாக்காகும். சிவபெருமான் கண்களில் இருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை ஈசன், கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் ஐந்து முகம் கொண்ட ஒரு ருத்ராட்சத்தையாவது அணிய வேண்டியது அவசியம். ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர்பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.


    சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் இந்த ருத்ராட்சத்தை அணிவதால், தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெறுவார்கள். அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றி கிடைக்கும். மேலும் ருத்ராட்சம் அணிந்தவர்களின் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் சொல்லும் வார்த்தைகளாகும்.

    அதிக விலைகொடுத்து அபூர்வ வகையிலான ருத்ராட்சத்தை வாங்கி அணியவேண்டும் என்று அவசியமில்லை. எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிந்தாலே போதுமானது. சிவபெருமானின் திருமுகம் ஐந்து. நமசிவாய மந்திரம் ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர்,நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் தான் இயற்கையே மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்சத்தை பூமிக்கு அருள்கிறது. எனவே ஐந்து முக ருத்ராட்சங்களை அணிவதே சிறப்பு. ஐந்து முக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.

    பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி. அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, அருணாசலபுராணம் விவரிக்கிறது. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்சம் அணியலாம். சிவ மகாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று ஈசனே வலியுறுத்தியிருக்கிறார்.

    பெண்கள் தங்களுடைய தாலிக்கொடியை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் அணிந்திருப்பதைப் போல, ருத்ராட்சத்தையும் அனைத்து நேரங்களிலும் அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சத்தை ஈசன் அருளியது மனிதன் வாழும் உடலுக்காக அல்ல.. உயிரின் ஆன்மாவிற்காக என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.


    நீத்தார் கடன் எனப்படும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, பெண்களின் தீட்டு காலம் எனப்படும் மாதவிலக்கு, கணவன்-மனைவி தாம்பத்திய நேரங்களில் கூட ருத்ராட்சம் அணியலாமா? என்ற கேள்வி எழலாம். இவை மூன்று விஷயங்களும் இயற்கையானதே தவிர, எதுவும் செயற்கையானது அல்ல. பித்ரு கடன் நிறைவேற்றும்போது ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம். இதனால் முன்னோர்களின் ஆன்மாக்கள் மகிழும். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

    நீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது பலரும் சொல்லும் வாக்கு. பாவங்களால் தான் நமக்கு துன்பங்கள் நிகழ்கின்றன. அதற்காக நாம் கங்கையைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. ருத்ராட்சத்தை அணிந்து கொண்டாலே கொடிய பாவங்களும் நீங்கும். நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் படிப்படியாக குறையும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக்கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்சம் அணிவதால் கொடியபாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும். ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.

    ருத்ராட்சம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்சத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் ருத்ராட்சம் அணிந்து, தினமும் 108 முறை எழுத்தாலோ, மனதலோ பஞ்சாட்சரத்தைச் சொல்லி வந்தால், 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்கிறார் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்.

    • நாக தீபம் - உயர் பதவி விருட்ச தீபம் - அரசு பதவி கிடைக்கும்
    • கொடி தீபம் - செல்வ மேன்மை மயூர தீபம் - மக்கட் பேறு

    கோவில்களில் இறைவனுக்கு ஷோடச தீபாராதனை என்னும் 16 வகையான தீப- தூப ஆராதனைகளைச் செய்வார்கள். அந்த ஆராதனைகளையும், அவற்றால் கிடைக்கும் பலன்களையும் இங்கே பார்க்கலாம்.

    1. தூபம் - உற்சாகத்தை அளிக்கும்

    2. தீபம் - விழிப்பு தரும்

    3. மகா தீபம் - அரச போகம்

    4. நாக தீபம் - உயர் பதவி

    5. விருட்ச தீபம் - அரசு பதவி கிடைக்கும்

    6. புருஷாமிருக தீபம் - நோய் நீங்கும்

    7. சூல தீபம் - ரோக நிவர்த்தி

    8. ஆமை தீபம் - தண்ணீர் பயம் நீங்குதல்

    9. கஜ தீபம் - செல்வம் கிடைக்கும்

    10. வியாக்ர புயி தீபம் - துஷ்ட நிவர்த்தி

    11. சிம்ம தீபம் - ஆயுள் விருத்தி

    12. கொடி தீபம் - செல்வ மேன்மை

    13. மயூர தீபம் - மக்கட் பேறு

    14. பூரணகும்ப தீபம் - சாந்தி, மங்களம் உண்டாகும்

    15. நட்சத்திர தீபம் - உலகாளும் திறமை

    16. மேரு தீபம் - மேலான நிலையை அடையலாம்.

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, வைகாசி 18 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அஷ்டமி காலை 8.52 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம் : பூரட்டாதி நாளை விடியற்காலை 4.03 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - அமைதி

    ரிஷபம் - ஆர்வம்

    மிதுனம் - சுகம்

    கடகம் - முயற்சி

    சிம்மம் - பொறுமை

    கன்னி - பரிவு

    துலாம் - ஆதரவு

    விருச்சிகம் - உயர்வு

    தனுசு - வாழ்வு

    மகரம் - புகழ்

    கும்பம் - பண்பு

    மீனம் - பணிவு

    • வெள்ளியங்கிரி கோவிலுக்கு மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டது.
    • இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சென்று உள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. இங்குள்ள 7-வது மலையில் சுயம்புலிங்கம் கோவில் உள்ளது.

    சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் மலையேற்றம் செய்தால் இந்த கோவிலை அடையலாம். சுயம்புலிங்கத்தை தரிசிப்பதற்காக பக்தர்கள் மலையேற்றம் செய்வது வழக்கம்.

    ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மலையேற்றத்துக்கு வனத்துறையினர் அனுமதி அளிக்கிறார்கள்.

    இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி முதல் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேறி வந்தனர். சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.

    வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கு வனத்துறையினர் அளித்த அனுமதி நாளையுடன் (31-ந்தேதி) நிறைவுபெறுகிறது. அதன் பிறகு மலையேற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    இதுதொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மலை உச்சியில் அருள்பாலிக்கும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டது.

    அங்கு இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சென்று உள்ளனர்.

    இதற்கிடையே மேற்குதொடர்ச்சிமலையில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக அங்குள்ள 5,6,7-வது மலை உச்சியில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது.

    மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன.

    எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை முதல் வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

    மலையேற வருவோர் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் அவர்களிடம் ரூ.20 வைப்புத்தொகையாக பெறப்பட்டது. இருந்தபோதிலும் அவர்களில் 94 சதவீதம்பேர் வைப்பு தொகையை திரும்ப பெற்றுவிட்டனர்.

    மேலும் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் தூய்மை ப்பணியில் ஈடுபட்டபோது அங்கு சுமார் 6 டன் அளவில் பிளாஸ்டிக் பொருட்களும், ஈரத்துணிகளும் சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
    • தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-17 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சப்தமி காலை 11.22 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : அவிட்டம் காலை 7.11 மணி வரை பிறகு சதயம் நாளை விடியற்காலை 4.22 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகு காலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு திருமஞ்சன சேவை, தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைர வேல் தரிசனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - உழைப்பு

    ரிஷபம் - முயற்சி

    மிதுனம் - பொருமை

    கடகம் - சாந்தம்

    சிம்மம் - நிறைவு

    கன்னி - மேன்மை

    துலாம் - யோகம்

    விருச்சிகம் - உதவி

    தனுசு - உழைப்பு

    மகரம் - இரக்கம்

    கும்பம் - நட்பு

    மீனம் - பொறுப்பு

    • வெண்ணாற்றங்கரை நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.
    • நாளை மறுநாள் வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் காலை 9 மணியளவில் விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் ஆண்டுதோறும் ஒரே இடத்தில் 25 பெருமாள்கள் எழுந்தருளி கருடசேவை வைபவம் நடைபெறுவது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான கருடசேவை வைபவம் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் நடைபெறும் 90-வது ஆண்டு கருடசேவை விழாவானது நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகியது. வெண்ணாற்றங்கரை நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில் திவ்யதேச பெருமாள்களுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு 7 மணி முதல் 12 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜவீதிகளில் பெருமாள்கள் வீதிஉலா நடைபெற்றது.

    இதில் நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்பட 25 கோவில்களில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்கள் எழுந்தருளி ஒரே நேரத்தில் வலம் வந்து ராஜவீதிகளை அழகூட்டியது. தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு 25 பெருமாள்களையும் ஒரு சேர கண்டு தரிசித்து பரவசம் அடைந்தனர்.

    தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) காலை நவநீத சேவை நடைபெற உள்ளது. இதில் வெண்ணாற்றங்கரையில் காலை 6 மணியளவில் புறப்பட்டு காலை 7 மணி முதல் 10.30 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜவீதிகளில் வீதிஉலா நடைபெறும். இதில் 16 கோவில்களில் இருந்து பெருமாள் எழுந்தருளி ராஜவீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்க உள்ளனர்.

    தொடர்ந்து, நாளை மறுநாள் (31-ந்தேதி) வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் காலை 9 மணியளவில் விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. இதனிடையே ராஜராஜ சமய சங்கத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு திருவாய்மொழி தொடங்கி, நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு சாற்று முறை நடைபெற உள்ளது. 25 கோவில்களில் இருந்து பெருமாள்கள் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்ததால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம்.
    • புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது.

    புதன் கிழமையில், புதன் ஓரையில் மற்றும் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில், புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமை மிக்கது என்றும் தொழிலில் உயரலாம் என்றும் சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம். மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம்.

    புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர். சந்திரனின் மைந்தன் புதன். இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது ஸ்தல புராணம்.

    சந்திரன் நம் மனதை ஆள்பவன். மனதின் எண்ண ஓட்டத்துக்குக் காரணகர்த்தா சந்திர பகவான். புத்திக்கூர்மையைத் தருபவன் புதன் பகவான். நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு உரிய தலம் திங்களூர். புதன் பகவானுக்கு உரிய தலம் திருவெண்காடு.


    புதன் பகவானை வழிபடுவதற்கு உகந்த கிழமை புதன்கிழமை. புத பகவானுக்கு உரிய ராசி - மிதுனம், கன்னி. இதேபோல், புதன் பகவானுக்கான திசை வடகிழக்கு என்றும் புதன் பகவானின் அதிதேவதை மகாவிஷ்ணு என்றும் பிரத்யதி தேவதை ஸ்ரீமந் நாராயணன் என்றும் விவரிக்கிறது ஜோதிட சாஸ்திரம்.

    புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது. புதன் பகவானின் வாகனம் குதிரை. பச்சைப்பயறு புதன் பகவானுக்கு விருப்பமான நைவேத்தியம் என்றும் வெண்காந்தள் மலர் கொண்டு அர்ச்சிப்பது சிறப்பு என்றும் வஸ்திரம் பச்சை நிற வஸ்திரம் என்றும் அவருக்கான ஆபரணம் மரகதம் என்றும் அவருக்கு பாசிப்பருப்புப்பொடி கலந்த அன்னத்தால் நைவேத்தியம் செய்யவேண்டும் என்றும் புதன் பகவானுக்கான உலோகம் பித்தளை என்றும் விவரிக்கிறது திருவெண்காடு ஸ்தல புராணம்.

    ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே

    சுக ஹஸ்தாய தீமஹி

    தன்னோ புத : பிரசோதயாத் !

    எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபடுங்கள் என்கிறார் வைத்தியநாத குருக்கள்.

    புதன் பகவான் உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசியையும் ஆட்சி பெறும் மாதமாக ஆனி மாதத்தையும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வீட்டில் இருந்துகொண்டு, புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபடலாம்.

    இதேபோல், புதன் கிழமைகளில் புதன் ஓரையில் வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரவல்லது. புதன் கிழமையன்று புதன் ஓரை என்பது காலை 6 முதல் 7 மணி வரையும் பின்னர் இரவு 8 முதல் 9 மணி வரையும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    எனவே, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அத்தனை பெருமை மிக்க புதன் கிழமைகளில், புதன் ஓரைகளில், வீட்டில் விளக்கேற்றி, புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டால், கல்வியில் சிறந்துவிளங்கலாம். வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாறி, லாபம் பெருகும். திருமணத்தடைகள் நீங்கும். சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும் என்கிறார்கள் பக்தர்கள்.

    • திருத்தணி முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்.
    • காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு ஆலும் பல்லக்கில் தீர்த்தவாரி

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-16 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சஷ்டி நண்பகல் 1.26 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : திருவோணம் காலை 8.36 மணி வரை பிறகு அவிட்டம்

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம். காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு ஆலும் பல்லக்கில் தீர்த்தவாரி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் திருப்புளிங்குடி மூலவர் பூமிபாலகர், மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆக்கம்

    ரிஷபம்-ஆரோக்கியம்

    மிதுனம்-வரவு

    கடகம்-செலவு

    சிம்மம்-உதவி

    கன்னி-பரிவு

    துலாம்- பாசம்

    விருச்சிகம்-பண்பு

    தனுசு- உயர்வு

    மகரம்-பாராட்டு

    கும்பம்-பயணம்

    மீனம்-இன்பம்

    • அதிகம் சிரித்தால் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்வதை விட்டும் உள்ளம் மரணித்துவிடும்.
    • ஐந்து விஷயங்களை ஒவ்வொரு மனிதரும் பேணி நடந்தால் அவர்தான் உண்மையிலே உயர்ந்த பண்புள்ளவராவார்.

    இஸ்லாம் மனித வாழ்க்கையை இரண்டாக குறிப்பிடுகிறது. ஒன்று இம்மை எனப்படும் இந்த உலக வாழ்க்கை. அடுத்தது

    இறைவனின் நெருக்கத்தில் வாழும் மறுமை வாழ்க்கை. இந்த இரண்டில் மறுமை வாழ்க்கையே சிறந்தது என்று ஏக இறைவன் அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துகின்றான்.

    இறையச்சத்துடன், நற்பண்புகளுடன், உயர்ந்த சிந்தனைகளுடன், பிறருக்கு உதவும் உள்ளத்துடன் ஒருவன் இம்மையில் வாழ்ந்தால் மறுமையில் அவனுக்கு சொர்க்கம் கிடைக்கும். ஒரு மனிதன் உயர்ந்த பண்புள்ளவராக வாழ 5 முக்கிய அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும். இது குறித்த நபி மொழியை காண்போம்.

    ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் இவ்வாறு கூறினார்கள்:

    'நான் சில செய்திகளை கூறுகிறேன், அதை செயலாற்றுபவர் யார்?, அல்லது செயலாற்றும் நபருக்கு கற்றுக் கொடுப்பவர் எவரும் உண்டா?'.

    நபிகளார் இவ்வாறு கூறிய தும் நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள், 'நானிருக்கிறேன் நாயகமே' என்றார். உடனே நபிகள் நாயகம் அவ ரது கையை பிடித்து 5 விஷயங்களை கூறினார்கள். அவை வருமாறு:-

    1) இறைவன் எவற்றை தடை செய்துள்ளானோ அவற்றை விட்டு விலகி, பயந்து நடந்து கொண்டால் மிகப்பெரிய வணக்கம் புரிந்தவராகலாம்.

    இறைவனுக்கு இணை வைத்தல், மது அருந்துவது. வட்டி வாங்கி சாப்பிடுவது. கொள்ளை அடிப்பது, விபச் சாரம் புரிவது, சூனியம் செய்வது, கொலை செய்வது போன்றவை பெரும்பாவங்கள் ஆகும். இவை அனைத் தும் இறைவனால் தடுக்கப்பட்டவை. இது போன்ற எந்தப் பெரும் பாவமும் செய்யாத போதிலும் தொழுகை, நோன்பு நோற்பது, ஜகாத், ஹஜ் போன்ற நல்ல காரியங்களை ஒருவர் செய்வதில்லை என்றால் அவர் குற்றவாளி தான்.

    அதே போன்று இதற்கு மாற்றமாக எல்லா நல்ல காரியங்களையும் செய்கிறார், அதேபோல பாவங்களையும் செய்கிறார் என்றால் இவரும் குற்றவாளி தான். மனிதன் தான் செய்யும் நல்ல காரியங்கள் யாவும், பாவ மான காரியங்களை விட்டும் தடுப்பவையாக அமைய வேண்டும். இவ்விரண்டையும் ஒரு மனிதன் பேணி செயல்படும் போது அவர்தான் அதிக வணக்கமுடையவராக கருதப்படுகிறார்.

    2) இறைவன் எதை பங்கிட்டு வழங்கியுள்ளானோ அதை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ளும் பண்பு இருக்குமேயானால் அவர் தான் அதிகம் வசதி படைத்தவராவார்". இறைவன் ஒரு மனிதனுக்கு என்ன தேவை ஏற்படுமோ அதை அந்தந்த காலகட்டங்களில் வழங்கிக்

    வழங்கிக் கொண்டுதான் இருக்கிறான். அதில் எவ்வித குறையும் செய்யமாட்டான்.

    உயர்ந்த பண்புகள் முழுமையாக ஒரே நேரத்தில் வழங்குவதில்லை. உதாரணமாக, ஒரு மனிதன் 90 ஆண்டு வாழ்கிறான் என்றால், அவனுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள உணவு, குடிநீர் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டால் சேமித்து வைத்து உண்ணாமல் குடிக்காமல் திகைத்து விடுவான். அதுமட்டுமல்லாமல் சோம்பேறியாகி உடல் நலமே கெட்டுவிடும். கல்லுக்குள் இருக்கும் ஜீவராசிக்கு உணவு வழங்கும் வன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டான் என்ற நம் பிக்கை வரவேண்டும். அதே சமயம் வீட்டில் முடங்கிக் கிடப்பதும் கூடாது. கொடுப்பவன் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுப்பான் என்று எண்ணக் கூடாது. நம்மிடமிருந்தும் உழைப்பு வேண்டும், அதன் மூலம் கிடைப்பதை ஏற்றுக் கொண்டு, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற சொல்லுக்கேற்ப நடப் பது தான் பெரும் வசதி படைத்தவர் என்று எண்ணப்படும்.

    3) 'பக்கத்து வீட்டினரிடம் உபகாரமுடன் நடந்து கொள்ள வேண்டும்'. அப்படி நடந்தால் தான் உண்மையான முறையில் விசுவாசங்கொண்டவராக முடியும். அண்டை வீட்டாரிடம் எந்த அளவுக்கு உபகாரமுடன் நடக்க வேண்டும் என்றால், சொந்தங்களிடம் நடப்பதைப் போல் நடக்க வேண்டும் என்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

    4) தனக்கு எதை விரும்புவாரோ அதையே பிறருக்கும் விரும்பவேண்டும். அப்பொழு துதான் முழுமையாக வழிபட்டவராக முடியும். மனிதனின் இயல்பு தனக்கு பிடிக்காத பொருளை அடுத்தவருக்கு பிடிக்கும் என்று வழங்குவதுதான். ஆனால், நபிகள் (ஸல்) அப்படிக் கூறவில்லை. மாறாக தனக்கு விருப்பமான பொருளைத்தான் அடுத்தவருக்கும் வழங்க வேண்டும். அப்பொழுதுதான் நன்மை உண்டு. கெட்டுப்போன உணவுகளைக் கூட மற்ற உயிரினங்களுக்கு போடக்கூடாது என்பது ஷரீஅத் சட்டமாகும்.

    5) அதிகமாக சிரிப்பது கூடாது'. அப்படி சிரித்தால் உள்ளம் மரணித்துவிடும். அதாவது சந்தோஷமான நேரத்திலும் கூட நடுநிலையை கடைப்பிடிக்க வேண்டும். அதிகம் சிரித்தால் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்வதை விட்டும் உள்ளம் மரணித்துவிடும். அதிகமாக சிரிப்பதால் ஆபத்துக்கள் கூட ஏற்படலாம்.

    இந்த ஐந்து விஷயங்களை ஒவ்வொரு மனிதரும் பேணி நடந்தால் அவர்தான் உண்மையிலே உயர்ந்த பண்புள்ளவராவார். நாமும் முயற்சி செய்வோம், முன்னேற்றப் பாதையில் வெற்றி காண்போம்.

    • நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர், எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை யாரும் கண்டறியாத ஒன்றாக இருக்கிறது.
    • ஒரு குளத்தைச் சுற்றிய நிலையில் இந்த ஆலயம் முழுமை அடைந்து விடும்.

    இந்தியாவில் பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளதோடு, வியக்க வைக்கும் பல கட்டிடக் கலை கொண்ட கோயில்கள் ஏராளம். அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள ஒரு நந்தி கோயிலில், நந்தியின் வாயிலிருந்து தொடர்ச்சியாக நீர் வடியும் அதிசயம் நிகழ்ந்து வருகின்றது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ளது. ஸ்ரீ தக்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயில்.

    இந்த கோயிலின் சிறப்பே அங்கு அமைந்துள்ள நந்தியின் வாயில் இருந்து எப்போதும் நீர் ஊற்றாக ஊறி கொட்டிக் கொண்டிருப்பது தான். அதே போல் எல்லா சிவாலயங்களிலும், நந்தி சிவபெருமானுக்கு எதிராக தான் அமைக்கப்பட்டிருப்பார். ஆனால் இந்த ஸ்ரீ தக்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயிலில், நந்தி பெருமானோ சிவ லிங்கத்திற்கு மேல் உள்ள தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


    அதோடு அந்த நந்தியிலிருந்து வடியும் தீர்த்தம், சிவ லிங்கத்தின் தலையில் விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிவனை அபிஷேகம் செய்வது போன்று அந்த தீர்த்தம் விழுந்து பின்னர் அந்த நீர், அங்குள்ள தெப்பக்குளத்தில் சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நதியின் வாயில் எப்படி நீர் ஊறுகின்றது என்பது இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. சேற்றில் புதைந்து கிடந்துள்ளது. அதனை, சில தன்னார்வலர்கள் 1997ம் ஆண்டு கண்டுபிடித்து கோயிலை மீட்டெடுத்துள்ளனர்.


    இந்த கோயில் அமைந்துள்ள இடம் அப்பகுதியிலேயே மிக தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால், அங்கிருந்து வரும் நீரூற்று, நந்தி வாயின் வழியே வெளியேறும் வண்ணம் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த நீர் கீழே உள்ள லிங்கத்தின் மீது விழுந்து, பின்னர் குளத்தில் கலப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிசயம் நிகழ்வாதாக கூறுகின்றனர்.

    நந்தி தீர்த்தம் விழும் சிவலிங்கத்திற்கு என்று தனி சன்னதியோடு, இந்த கோயிலில் விநாயகருக்கு என்று தனி சன்னதியும், நவகிரகத்திற்கு என்று சன்னதிகள் உண்டு.

    • 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஏசாயா என்னும் தீர்க்கதரிசி தான்.
    • ஏசாயா தீர்க்கதரிசியின் காலம் கி.மு.740 முதல் 680 வரை எனப்படுகிறது.

    அன்பானவர்களோ ஜவேதாகமதியா கோரேஸ் 1 (சைரஸ்) என்ற ராஜாவைப் பற்றி ஏசாயா என்னும் தீர்க்கதரிசி கூறிய தீர்க்கதரிசன வார்த்தைகள் எவ்வாறு நிறைவேறியது என்பது பற்றி பார்ப்போம்.

    பெர்சியப் பேரரசின் முக்கியமான ராஜாவான சைரஸ் கி.மு.539-ல் உலக சரித்திரத்தில் தன் முத்திரையைப் பதித்தார் என்று வரலாற்றின் மூலம் அறியலாம். ஏனெனில் கி.மு.539-ல் தான் மகா பாபிலோனிய அரசை கோரேஸ் (சைரஸ்) வீழ்த்தி, அதுவரை கோலோச்சிக் கொண்டிருந்த பாபிலோனிய அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    ஆனால் இப்படி ஒரு ராஜா வரப் போகிறார் என்றும், அவர் பாபிலோனிய அரசை வீழ்த்துவார் என்றும், இஸ்ரவேல் மக்களுக்கு ஆதரவாக இருப்பார் என்றும் முன்னறிவித்தது யார் தெரியும்?

    150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஏசாயா என்னும் தீர்க்கதரிசி தான்.

    இப்படி இந்த ராஜாவினுடைய பெயரை 150 ஆண்டுகளுக்கு முன்பாக குறிப்பிட்டது மட்டுமல்ல, அவர் செய்யப் போகிற ஒவ்வொரு காரியங்களைப் பற்றியும் முன்னறிவிக்கிறார் ஏசாயா.


    கிமு 558-ல் பெர்சியா எனப்பட்ட இன்றைய ஈரானை ஆண்ட பேரரசரான சைரஸ் (கி.மு.590-529) இஸ்ரவேல் மக்களுக்கு ஆதரவாக இருந்தார். மேதிய பெர்சிய ராஜியம் எனப்படும் பாரசீகப் பேரரசை நிறுவிய இவர், பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்டிருந்த யூதர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பவும், எருசலேமில் தேவாலயத்தை மீண்டும் கட்டவும் இவர் கொடுத்த ஆதரவு இஸ்ரவேல் வரலாற்றில் மிக முக்கிய சம்பவங்களாக கருதப்படுகின்றன.

    ஏசாயா தீர்க்கதரிசியின் காலம் கி.மு.740 முதல் 680 வரை எனப்படுகிறது. இந்த நாட்களில் பாபிலோனிய பேரரசே உருவாகவில்லை. ஏசாயாவின் காலத்திற்கு பின்பு தான், அது ஆரம்பிக்கிறது (கி.மு.645 முதல் 539). ஆனால் அதற்கு முன்பாகவே அந்த பாபிலோனிய பேரரசை வீழ்த்துகிற கோரேஸ் (சைரஸ்) பற்றின துல்லியமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளது எத்தனை ஆச்சரியம் பாருங்கள்.

    நேபுகாத்நேச்சாரின் காலத்தைபாபிலோனிய பேரரசின் உன்னதமான காலங்கள் ஆரம்பிக்கிற வருஷங்களாக எடுத்துக் கொண்டால் பாபிலோனின் சிறப்பான காலம் என்பது கி.மு.624-ல் இருந்து ஆரம்பிக்கிறது.

    நேபுகாத்நேச்சாரின் காலத்தை பாபிலோனிய பேரரசின் உன்னதமான காலம் எனலாம். அதன் வல்லமை, பராக்கிரமம், அதிகரித்துக் கொண்டே போன காலம். பல வகைகளிலும் பாபிலோன் புகழ் பெற்றது. குறிப்பாக ராணுவ பலம், அதன் தலைநகர், முக்கிய நதியான யூப்பி ரட்டீஸ் நதியோரம் அமைந்திருந்ததால் செழிப்பான நகரமாக இருந்தது. சைரசின் ஆட்சிக்காலத்தில் அவர் பல வெற்றிவாகைகளை சூடிக்கொண்டிருந்தபோது கி.மு. 539-ம் ஆண்டில் பாபிலோன் அரசு அவர் போரிடாமலேயே சைரஸ் பேரரசரிடம் சரணடைந்தது.

    ஏசாயா தனக்கு பின் தோன்றுகிற கோரேஸ் (சைரஸ்) மகாராஜாவைப் பற்றி கூறுகிறார்:

    'கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும். அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும் படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலது கையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது: நான் உனக்கு முன்னே போய், கோணலான வைகளைச் செவ்வையாக்குவேன். உன்னைப் பெயர் சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவ னாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள் களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல் களையும் உனக்குக் கொடுப்பேன், நான் என் தாசனாகிய யாக்கோபி , நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித் னிமித்தமும் தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை என்று அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்' கூறுகிறார்.

    வரலாற்றில் நீங்கள் முதலாம் சைரசை பற்றி படித்து பாருங்கள். இவர் சென்ற இடமெல்லாம் வெற்றிபெற்று சிறந்த பராக்கிரமம் நிறைந்த ராஜாவாக இருந்தார்.

    பிரியமானவர்களே, இன்றைக்கு உங்களைப் பார்த்து கர்த்தர் சொல்லுகிறார். நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்".


    ஆம் அன்பானவர்களே, எந்த காரியங்கள் உங்களுக்கு தடையாக இருக்கிறதோ, அந்த காரியங்களில் நிச்சயமாக ஜெயம் பெறுவீர்கள். தடைகளை மாற்றுகிற தேவன் உங் களுக்கு முன்னே சென்று, தடைகளை மாற்றுவார். நீங்கள் எதிர்பார்க்கும் விஷயத்தில் வெற்றியைத் தருவார்.

    அன்றைக்கு கோரேஸ் மகாராஜாவுக்கு (சைரஸ்) உலக சாம்ராஜ்யமாக திகழ்ந்த பாபிலோனை திறந்து கொடுத்த தேவன், இன்றைக்கு உங்கள் வாழ்க்கையிலும் எதைக் கண்டு நீங்கள் அஞ்சி பயப்படுகிறீர்களோ, அந்த காரி யத்தில் வெற்றி தர போதுமானவராய் இருக்கிறார். திறக் கப்படாத வாசல்கள் எல்லாம் உங்களுக்கு திறக்கும்.

    நீங்கள் சிலுவையில் அறையப்பட்டு, உயிரோடு எழுந்த கர்த்தராகிய இயேசுவை நோக்கி பாருங்கள், அவர் உங்கள் காரியங்களில் ஜெயத்தை தருவார், பதிலைத் தருவார், தாமதித்தாலும் காத்திருங்கள், நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் நிச்சயமாக கைகூடும், ஆமேன்.

    ×