என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சனிக்கிழமை வழிபாட்டில் பொதுவாக சனீஸ்வர பகவானையும்,பெருமாளையும் அனுமனையும் வழிபடுவது சிறப்பு.
    • ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவதும் வெற்றியைத் தரும்.

    சனிக்கிழமை வழிபாட்டில் பொதுவாக சனீஸ்வர பகவானையும், பெருமாளையும் அனுமனையும் வழிபடுவது சிறப்பு. சனிக்கிழமை இவர்களை வழிபட்டால் எல்லா வளமும் நலமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு சனிக்கிழமையும் எள் தீபம் ஏற்றுவது, விரதம் இருப்பது, மற்றும் குறிப்பிட்ட மந்திரங்களை சொல்வது என பக்தர்கள் சனிக்கிழமை வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.

    அந்தவகையில் சனிக்கிழமை வழிபாட்டில் கூடுதலாக என்னென்ன செய்தால் பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    * சனிக்கிழமை சனி பகவானின் அருளைப் பெற சாதம் வடிக்கும் போது அதில் சிறிதளவு கருப்பு எள், கெட்டித்தயிர் சேர்த்து பிசைந்து காகங்களுக்கு வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கி பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கை.

    * இப்படி 21 சனிக்கிழமை தொடர்ந்து செய்து வந்தால் உங்களை வாட்டி வதைக்கும் அனைத்து தீங்கும் அகன்று வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

    * சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சார்த்தி, நெய் விளக்கு ஏற்றிவர நினைத்த காரியம் நடக்கும்.

    * அதேபோல் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவதும் வெற்றியைத் தரும்.

    * சனிக்கிழமையன்று அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் இனிதே நடக்கும். எதிரிகள் மீதான பயம் விலகும்.

    • ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது.
    • ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள், எந்தக் கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை பெறுவார்கள்.

    படைப்புக் கடவுளான பிரம்மனிடம் இருந்த வேதங்கள் எழுதப்பட்ட சுவடிகளை, அசுரர்கள் திருடிச் சென்றனர். அவர்களிடம் இருந்து வேதங்களை மீட்பதற்காக திருமால் எடுத்த அவதாரமே, 'ஹயக்ரீவர்' அவதாரம் ஆகும். ஆகாயமும், பாதாளமும் அவருடைய காதுகளாகவும், கண்களைப் பறிக்கும் ஒளியுடன் கூடிய சூரிய ரேகைகள் பிடரி மயிர்களாகவும், பூமி நெற்றியாகவும், கங்கையும், சரஸ்வதியும் அழகிய புருவங்களாகவும். சந்திரனும் சூரியனும் இரு கண்களாகவும், சந்தியா தேவதை மூக்காகவும், பித்ரு தேவதைகள் பற்களாகவும், கோலோகம், பிரம்ம லோகம் இரண்டும் உதடுகளாகவும், காலராத்ரி கழுத்தாகவும் விளங்கும் சத்வ மூர்த்தியான ஹயக்ரீவர் குறித்த சில அரிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    • ஹயக்ரீவப் பெருமானின் பார்வை, அடியார்கள் அனைவரையும் குளிரச் செய்யும் ஆற்றல் கொண்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது. இந்த 33 துதிகளையும் பொருள் உணர்ந்து பாராயணம் செய்தால், அவர்கள் கலைகளில் தேர்ச்சி பெற முடியும்.

    • ஹயக்ரீவர் எழுப்பும் 'ஹலஹல' என்ற கனைப்பு சத்தம், எல்லை இல்லாத வேதாந்த உண்மைகளை உணர்த்துவதாகச் சொல்கிறார்கள்.

    • ஹயக்ரீவர் மூல மந்திரத்தை நாம் வாய்விட்டு சத்தமாகச் சொன்னால், ஹயக்ரீவர் நம் அருகில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்பது ஆன்றோர்களின் நம்பிக்கை.

    • ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள், எந்தக் கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை பெறுவார்கள்.

    • பக்தர்கள் நல்வழி பெறுவதையே கடமையாகக் கொண்டுள்ள ஹயக்ரீவர் ஞான வடிவமாகவும், கருணைக் கடலாகவும் உள்ளார்.

    • உலகம் புகழும்படியான நூல்களை இயற்றிய வியாச முனிவருக்கு ஹயக்ரீவர் வழங்கிய அருளே காரணமாகக் கூறப்படுகிறது.

    • தேவர்களுக்கெல்லாம் குருவாக இருப்பவர் பிரகஸ்பதி. அந்த பிரகஸ்பதி தனக்கு ஏற்படும் சந்தேகங்களை ஹயக்ரீவரிடம் கேட்டு தெளிவு பெற்றார்.

    • ஹயக்ரீவர் 'ஓம்' எனும் பிரணவ சொரூபமாகவும், அதன் அட்சரங்களாகவும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

    • பிரபஞ்சத்தின் முதலும் முடிவுமாக ஹயக்ரீவர் இருப்பதாக வேதங்கள் போற்றிப் புகழ்கின்றன.

    • புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே ஹயக்ரீவப் பெருமானை தினமும் பூஜிக்க முடியும் என்கிறாாக்ள்.

    • ஹயக்ரீவப் பெருமானே கதி என்று கிடக்கும் பக்தர்களுக்கு மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.

    • ஹயக்ரீவரின் பாத கமலங்களைக் கெட்டியாக பிடித்துக்கொண்டால், அது பிரம்மன் நமக்கு எழுதிய தலையெழுத்தையே மாற்றி அமைத்து விடும்.

    • ஹயக்ரீவரை தினமும் மலர் தூவி வணங்கினால் நம்மிடம் உள்ள அஞ்ஞான இருள் விலகும் என்பது நம்பிக்கை.

    • திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் அலங்காரம்.
    • தேவக்கோட்டை ஸ்ரீசிலம்பணி விநாயகர் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-8 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தி நள்ளிரவு 1.43 மணி வரை. பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : அனுஷம் காலை 7.08 மணி வரை. பிறகு கேட்டை.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை

    இன்று சதுர்த்தி விரதம். திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் அலங்காரம். சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் வேணுகோபால திருக்கோலம் இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி. குமார வயலூர் ஸ்ரீமுருகப் பெருமான் கஜமுகாசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல். தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் பவனி. வள்ளியூர் ஸ்ரீமுருகப் பெருமாள் ஏக சிம்மாசனத்தில் புறப்பாடு. மிலட்டூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் புறப்பாடு. ஆறுமுகமங்கலம் ஸ்ரீஆயிரத்தொன்று விநாயகர் சிறப்பு அபிஷேகம். தேவக்கோட்டை ஸ்ரீசிலம்பணி விநாயகர் அபிஷேகம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர், திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர், திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-லாபம்

    கடகம்-பரிவு

    சிம்மம்-நன்மை

    கன்னி-தனம்

    துலாம்- அன்பு

    விருச்சிகம்-பணிவு

    தனுசு- ஆக்கம்

    மகரம்-அமைதி

    கும்பம்-சாதனை

    மீனம்-நற்செயல்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

    ரிஷபம்

    செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் வந்து உங்களை மகிழ்விக்கச் செய்யும்.

    மிதுனம்

    உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சியில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம்.

    கடகம்

    யோகமான நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்புச் செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    சிம்மம்

    கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.

    கன்னி

    வரவு திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொதுவாழ்வில் புகழ் கூடும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.

    துலாம்

    தனவரவில் இருந்த தடைகள் அகலும் நாள். தக்க சமயத்தில் உடன்பிறப்புகள் கைகொடுத்து உதவுவர். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

    விருச்சிகம்

    செல்வாக்கு உயரும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் கூடும்.

    தனுசு

    வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள்.வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள்..

    மகரம்

    வருமானம் திருப்தி தரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும். உங்கள் மணியான யோசனைக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும்.

    கும்பம்

    வளர்ச்சி கூடும் நாள். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நண்பர்கள் கடைசி நேரத்தில் கைகொடுத்து உதவுவர்.

    மீனம்

    சுபவிரயம் ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிய சிந்தனைமேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    • 3-ம் நாள் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது.
    • விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று இரவு சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரிவீதியுலா வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்

    3-ம் நாள் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 7 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை தொடங்கியது. 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.

    பகல் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் மேளதாளம் முழங்க சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

    மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்காரமாகி தீபாராதனைக்குப் பின் சுவாமி, அம்பாளுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோவிலை சேர்கிறார்.

    6-ம் திருவிழாவான 27-ந் தேதி (திங்கள்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனைக்குப் பிறகு சுவாமி, அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக கோவில் சேர்கிறார்கள். அங்கு இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 28-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) இரவு 11மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • வைணவ திருத்தலங்கள் 108 என்று தொகுத்து காட்டியவர் அழகிய மணவாள தாசர்.
    • திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

    மூவுலகையும் காப்பவர் பரம்பொருள் நாராயணன் எனும் திருமால். இவர் பெருமாள், மாயோன், விஷ்ணு, பரமாத்மா என பல்வேறு பெயர்களை கொண்டவர். 10 அவதாரங்களுக்கு சொந்தக்காரர். உலகத்தில் அதர்மம் அதிகரிக்கும்போது, தர்மத்தை நிலைநாட்ட பெருமாள் அவதாரங்கள் எடுப்பார் என்று வைணவம் கூறுகிறது.

    திருமால் பாற்கடலில் ஆதிசேஷன் என்ற பாம்பை படுக்கையாக கொண்டு பள்ளிகொண்டிருக்கிறார். திருமால் பள்ளிகொள்ளும் படுக்கையாகிய ஆதிசேஷன், ஆயிரம் வாய்களைக் கொண்டது. அந்த படுக்கையில் ஒரு மலையைப் போன்று திருமால் பள்ளிகொண்டுள்ளார். அங்கு சூரியனும், சந்திரனும் விளக்குகளாக உள்ளனர். கடல் அலைகள் விசிறிகளாகின்றன.

    திருவரங்கம் ராஜகோபுரம்

     

    வைணவ திவ்ய தேசங்கள்

    பாற்கடலை போல இந்த பாரெங்கும் வீற்றிருக்கிறார் பெருமாள். அவர் வீற்றிருக்கும் தலங்கள் எண்ணிலடங்காதவை என்றாலும், அவற்றில் 108 திருத்தலங்கள், திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற வைணவ திவ்ய தேச திருத்தலங்கள் இந்த 108 திருத்தலங்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதில் முதன்மையான தலம் திருவரங்கம் அரங்கநாதசாமி கோவில். வைணவ திருத்தலங்கள் 108 என்று தொகுத்து காட்டியவர் அழகிய மணவாள தாசர். இவர் திருமலை நாயக்கர் ஆட்சியில் அலுவலராக பணியாற்றியவர். இவர் தம் காலத்தில் சிறப்புற்று விளங்கிய வைணவ தலங்களை 108 என்று வரையறை செய்து, நாடு வாரியாக பிரித்து, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வெண்பா பாடியுள்ளார். அது 'நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி' என்னும் நூலாக வெளிவந்துள்ளது. திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

    காவிரி டெல்டா மாவட்டங்களில்...

    108 வைணவ திவ்ய தேசங்களில் 84 திருத்தலங்கள் தமிழ்நாட்டிலும், 11 திருத்தலங்கள் கேரளாவிலும், 2 திருத்தலங்கள் ஆந்திராவிலும், 4 திருத்தலங்கள் உத்தரப்பிரதேசத்திலும், 3 திருத்தலங்கள் உத்தராகண்டிலும், 1 திருத்தலம் குஜராத்திலும், 1 திருத்தலம் நேபாளத்திலும், 2 திருத்தலங்கள் வானுலகத்திலும் உள்ளன. இதில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள வைண தலங்களை பற்றி இங்கு காணலாம்.

    தஞ்சை மாவட்டத்தில் கோவிலடி, கண்டியூர், திருக்கூடலூர், கபிஸ்தலம், புள்ளபூதங்குடி, ஆதனூர், கும்பகோணம், திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில், திருச்சேறை, நாதன்கோவில், திருவெள்ளியங்குடி, தஞ்சை ஆகிய இடங்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் திருக்கண்ணமங்கை, திருச்சிறுப்புலியூர், நாகை மாவட்டத்தில் திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, நாகை ஆகிய இடங்களிலும் 108 வைணவ திவ்ய தேச தலங்கள் அமைந்துள்ளன.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தேரழுந்தூர், தலைச்சங்காடு, திருஇந்தளூர், சீர்காழி, தாடாளன்கோவில், திருவாழி-திருநகரி ஆகிய இடங்களும் வைணவ திவ்ய தேச தலங்களாகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே திருநாங்கூர் பகுதியில் 11 வைணவ திவ்ய தேச தலங்கள் அடுத்தடுத்து அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள புராண வரலாற்று சிறப்புடைய இக்கோவில்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து பெருமாளையும், தாயாரையும் தரிசித்து செல்கிறார்கள்.

     

    திருநாங்கூர் வரதராஜ பெருமாள் கோவில்

    திருநாங்கூர் திருப்பதிகள்

    மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநாங்கூர் பகுதியில் 11 திருப்பதிகள் அமைந்துள்ளன. இதில் திருநாங்கூர் என்னும் ஊரில் உள்ள 6 திவ்ய தேசங்களையும், இந்த ஊரை சுற்றி அருகருகே அமைந்துள்ள 5 திவ்ய தேசங்களையும் சேர்த்து 'திருநாங்கூர் திருப்பதிகள்' என அழைக்கப்படுகின்றன. திருக்காவளம்பாடி, திருஅரிமேயவிண்ணகரம், திருவண்புருடோத்தமம், திருச்செம்பொன் செய்கோவில், திருமணிமாடக்கோவில், திருவைகுந்தவிண்ணகரம், திருத்தேவனார்த்தொகை, திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், திருப்பார்த்தன்பள்ளி, திருவெள்ளக்குளம் ஆகியவை திருநாங்கூர் திருப்பதிகளாகும்.

    ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் திருமணிமாடக் கோவில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னிதியில் கருடசேவை திருவிழாவுக்கு இந்த 11 கோவில்களின் உற்சவர் சிலைகளும் எடுத்துவரப்படும். இந்த 11 பெருமாள்களையும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தால் ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களாசாசனம் செய்வார்கள். அதன்பின் திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் பாசுரத்தால் மங்களாசாசனம் செய்வார்கள். இந்த கருட சேவையை காண்பதற்கு திரளான பக்தர்கள் ஒன்று கூடுவார்கள்.

    அமைந்திருக்கும் இடங்கள்

    108 திவ்ய தேசங்கள் அன்றைய காலகட்டத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன:-

    சோழநாட்டு திருப்பதிகள் - 40

    நடுநாட்டு திருப்பதிகள் - 2

    தொண்டைநாட்டு திருப்பதிகள் - 22

    வடநாட்டு திருப்பதிகள் - 11

    மலைநாட்டுத் திருப்பதிகள் - 13

    பாண்டியநாட்டுத் திருப்பதிகள் - 18

    நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் - 2

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-7 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திருதியை இரவு 11.49 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : அனுஷம் (முழுவதும்)

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கிளி வாகன சேவை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் காலை மோகனாவதாரம். இரவு தங்கமயில் வாகனத்தில் பவனி. மதுரை சமீபம் சோலைமலை ஸ்ரீ முருகப்பெருமான் யானை வாகன புறப்பாடு. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் சுவாமி ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு. குமாரவயலூர் ஸ்ரீ முருகப் பெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.

    திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம் அலங்காரம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மனுக்கு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சாந்தம்

    ரிஷபம்-உயர்வு

    மிதுனம்-வெற்றி

    கடகம்-உதவி

    சிம்மம்-தனம்

    கன்னி-முயற்சி

    துலாம்- களிப்பு

    விருச்சிகம்-உவகை

    தனுசு- உண்மை

    மகரம்-கவனம்

    கும்பம்-உழைப்பு

    மீனம்-நேர்மை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் நாள். குடும்ப பெரியவர்கள் உங்கள்மீது குறை கூறுவர். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம்.

    ரிஷபம்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். இடம், வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். திருமணப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோக மாற்றம் உறுதியாகும்.

    மிதுனம்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

    கடகம்

    பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    சிம்மம்

    இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    கன்னி

    எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    துலாம்

    நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நன்மை உண்டு.

    விருச்சிகம்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிரபலஸ்தர்களின் சந்திப்பு உண்டு.

    தனுசு

    உள்ளத்தில் நினைத்தவை உடனடியாக நடைபெறும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். தொழிலில் புதியவர்கள் வந்திணைவர்.

    மகரம்

    அதிகாரிகளின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயம் தரும். உடல்நலம் சீராகும்.

    கும்பம்

    வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    மீனம்

    அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்துவர். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாமலிருப்பது நல்லது.

    • வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபடுவது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் பெருகச் செய்யும்.
    • தங்கம் சேர குரு மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் அருளும் வேண்டும்.

    தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ஏழை எளிய நடுத்தர மக்களால் தங்கம் வாங்க முடியுமா என்ற நிலை உள்ளது. சிலருக்கு தங்கம் வாங்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை இருக்கும் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருந்தாலே போதும் என்ற நிலை வந்துவிட்டது. இப்படி தங்கம் பற்றி பலவாறாக யோசித்து கவலைப்படாமல் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்தாலே போதும். தங்கத்தையும் வாங்கலாம், உங்களிடம் உள்ள தங்கமும் நிலைத்து நிற்கும்.

    * தங்கம் சேர, வெள்ளிக்கிழமை அன்று செல்வத்தின் தெய்வமான மகாலட்சுமியை வழிபாடு செய்வது மிகவும் முக்கியம்.

    * வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பதால், அன்றைய தினம் காலை எழுந்தவுடன் வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையில் மகாலட்சுமிக்கு விளக்கேற்ற வேண்டும்.

    * மகாலட்சுமியை மனதாரப் பிரார்த்தித்து, தாமரை மலர்கள் அல்லது செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    * காலை அல்லது மாலை வேளையில் மகாலட்சுமிக்கு உரிய சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் அல்லது பாயாசம் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து, விளக்கேற்றி, மந்திரங்கள் சொல்லி வழிபடலாம்.




    * மகாலட்சுமி பூஜையின் போது நம் மனதை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் வைத்திருக்க வேண்டும்.

    * வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபடுவது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் பெருகச் செய்யும்.

    * தங்கம் சேர குரு மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் அருளும் வேண்டும். ஆதலால், வெள்ளிக்கிழமை வழிபாட்டோடு சுக்கிர பகவானையும் குரு பகவானையும் சேர்த்து வழிபட வேண்டும்.

    * மகாலட்சுமிக்கு உரிய கிரகம் சுக்கிரன். அதனால் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் வெட்டிவேரை திரியாகத் திரித்து நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

    * தொடர்ந்து மூன்று வாரம் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இந்த விளக்கேற்றி வழிபட்டால் தங்கம் சேரும், செல்வ வளம் அதிகரிக்கும்.

    மேலும் மஞ்சள், குங்குமம், பூக்கள் போன்ற மங்கலப் பொருட்களைப் பயன்படுத்தி வழிபாடு செய்வது நன்மை தரும். மகாலட்சுமியின் அருளைப் பெற வழிபாட்டின் போது கிராம்பு பயன்படுத்தலாம். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை செல்வ செழிப்பிற்காக தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகள் வழிபாடு செய்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

    • சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் நாகா பரணக்காட்சி.
    • ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-6 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : துவிதியை இரவு 9.44 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம் : விசாகம் மறுநாள் விடியற்காலை 4.38 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்

    இன்று சந்திர தரிசனம். சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் நாகா பரணக்காட்சி. இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு. குமாரவயலூர் ஸ்ரீ முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி. வள்ளியூர் ஸ்ரீ முருகப் பெருமான் ஏக சிம்மாசனத்தில் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திராத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்.

    ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாராட்டு

    ரிஷபம்-பணிவு

    மிதுனம்-உதவி

    கடகம்-ஆசை

    சிம்மம்-அன்பு

    கன்னி-கடமை

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- நிறைவு

    மகரம்-உண்மை

    கும்பம்-இனிமை

    மீனம்-கண்ணியம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    துயரங்கள் விலக துணிந்து முடிவெடுக்கும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    ரிஷபம்

    தடைகள் தானாக விலகும் நாள். கைமாத்தாக கொடுத்த பணம் கைக்கு வந்து கிடைக்கலாம். பல நாட்களாக செய்ய நினைத்த வேலை ஒன்றை இன்று செய்துமுடிப்பீர்கள்.

    மிதுனம்

    கல்யாண கனவுகள் நனவாகும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

    கடகம்

    நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் வந்து சேரலாம். கொடுக்கல், வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும்.

    சிம்மம்

    கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும்.

    கன்னி

    சொன்ன சொல்லைக் கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும்.

    துலாம்

    நட்பால் நன்மை கிட்டும் நாள். பம்பரமாக சுழன்று பணிபுரிவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு.

    விருச்சிகம்

    நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் காணும் நாள். நாட்டுப்பற்றுமிக்கவர்கள் உங்கள் வீட்டு முன்னேற்றத்திற்கு உறுதுணை புரிவர்.

    தனுசு

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். சவால்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை.

    மகரம்

    சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படலாம். பயணத்தால் பலன் கிடைக்கும்.

    கும்பம்

    தொழிலில் புதிய கூட்டாளிகளை இணைக்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகம் சம்பந்தமாக பிரபலமானவர்களை சந்திப்பீர்கள்.

    மீனம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    • கந்தசஷ்டி விழா தொடக்கம்
    • நாக சதுர்த்தி

    இந்த வார விசேஷங்கள்

    22-ந் தேதி (புதன்)

    * கோவர்த்தன விரதம்.

    * கந்தசஷ்டி விழா தொடக்கம்.

    * சிக்கல் சிங்கார வேலவர் விழா தொடக்கம்.

    * ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    * மெய்கண்ட நாயனார் குருபூஜை.

    * சமநோக்கு நாள்.

    23-ந் தேதி (வியாழன்)

    * சிக்கல் சிங்கார வேலவர் நாகாபரணக் காட்சி.

    * திருப்பரங்குன்றம் முருகன் புறப்பாடு.

    * குமாரவயலூர் முருகன் சேஷ வானத்தில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந் தேதி (வெள்ளி)

    * சுபமுகூர்த்த நாள்.

    * சிக்கல் சிங்கார வேலவர் மோகன அவதாரம்.

    * ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    * பூசலார் நாயனார் குரு பூஜை.

    * சமநோக்கு நாள்.

    25-ந் தேதி (சனி)

    * நாக சதுர்த்தி.

    * தூர்வா கணபதி விரதம்.

    * சதுர்த்தி விரதம்.

    * குமார வயலூர் முருகன் கஜமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல்.

    * சிக்கல் சிங்காரவேலவர், வேணுகோபாலன் திருக்கோலம்.

    * சமநோக்கு நாள்.

    26-ந் தேதி (ஞாயிறு)

    * ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள், சிக்கல் சிங்கார வேலவர் தேர்.

    * குமாரவயலூர் முருகன், சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல்.

    * ஐயடிகள் காடவர்கோன் குரு பூஜை.

    * சமநோக்கு நாள்.

    27-ந் தேதி (திங்கள்)

    * சஷ்டி விரதம்.

    * சுபமுகூர்த்த நாள்.

    * குமாரவயலூர் முருக பெருமான் சக்திவேல் வாங்குதல்.

    * திருச்செந்தூர் உள்பட முருகன் தலங்களில் கந்த சஷ்டி - சூரசம்காரம்.

    * மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம்.

    * கீழ்நோக்கு நாள்.

    ×