என் மலர்tooltip icon

    வழிபாடு

    • தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.
    • ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-9 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி காலை 8.40 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 8.41 மணி வரை பிறகு உத்திரட்டாதி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் புஷ்பாங்கி சேவை. வடமதுரை ஸ்ரீ சவுந்தர ராஜப்பெருமாள் குதிரை வாகனத்தில் விடையாற்று உற்சவம். சோழவந்தான் சமீபம் குருவித்துறை குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-மகிழ்ச்சி

    மிதுனம்-தேர்ச்சி

    கடகம்-உயர்வு

    சிம்மம்-சுகம்

    கன்னி-செலவு

    துலாம்- வரவு

    விருச்சிகம்-முயற்சி

    தனுசு- பரிவு

    மகரம்-சிந்தனை

    கும்பம்-பாராட்டு

    மீனம்-வெற்றி

    • திருமணங்கள் செய்யக் கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை.
    • ஆடி மாதம் தெய்வீகப் பண்டிகைகள் அதிகம்.

    முந்தய காலங்களில் நம் முன்னோர்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்து வந்தனர். `ஆடிப்பட்டம் தேடி விதை' என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான வேலைகளில் ஈடுபடுவார்கள்.

    எனவே ஆடி மாதம் விவசாயத்திற்காக செலவு செய்யும் காலமாக இருந்ததால் அந்த சமயத்தில் வேறு செலவுகள் செய்ய பணம் இருக்காது. அதனால்தான் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறாமல் இருந்ததே ஒழிய, ஆடியில் திருமணங்கள் செய்யக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை.

    ஆடி மாதம் முழுவதுமே விசேஷம் தான். ஒரு வருடத்தை போக சம்பிரதாயம், யோக சம்பிரதாயம் என இரண்டாகப் பிரிப்பர். போக சம்பிரதாயம் என்பது தை மாதம் முதல் ஆனி வரை உள்ள காலம்.

    யோக சம்பிரதாயம் என்பது ஆடி முதல் மார்கழி வரை. போக சம்பிரதாயக் காலத்தில் கல்யாணம், விருந்து, விசேஷங்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கும் காலம். யோக சம்பிரதாயம் என்பது தபஸ், யாகம், யக்ஞம், பூஜைகள், பிரார்த்தனைகள் செய்யக்கூடிய காலம். யோக காலத்தில் முதல் மாதம் ஆடி என்பதால் தெய்வீகப் பண்டிகைகள் அதிகம்.

    ஆடி பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம் என்று மாதம் முழுவதுமே விசேஷமாக உள்ளது. ஆடி மாதத்தில் சந்திரன் சொந்ந வீட்டில் இருக்கிறார்.

    அந்த சொந்த க்ஷேத்திரத்தில், சூரியனுடன் சம்பந்தம் ஏற்படும் பொழுது, அதற்கு விசேஷம் அதிகம் உண்டு.

    • ஆடி கிருத்திகை வருகிற 9-ந் தேதி வருகிறது.
    • உற்சவங்களில் ஆடிக் கிருத்திகை விழா மிகவும் விசேஷமானது.

    உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடி கொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடி கிருத்திகை விழா மிகவும் விசேஷமானது. முக்கியத்துவம் வாய்ந்தது.

    கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷமானது.

    வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை: உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.

    இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    இந்த ஆண்டு ஆடி கிருத்திகை வருகிற 9-ந் தேதி வருகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பதவி உயர்வு தானாக வரும்.

    ஆடி கிருத்திகை விரதத்தை நாரதர் 12 ஆண்டுகள் மேற்கொண்டார். இதனால் அவருக்கு முனிவர்களில் முதன்மையான முனிவர் என்ற பதவி உயர்வு கிடைத்தது.

    இந்த நாட்களில் காலையில் நீராடி வழிபட வேண்டும். அப்போது கந்த சஷ்டி கவசம் மற்றும் சண்முக கவசம் பாடுவது நல்லது. முருகனுக்கு அன்று பாலாபிஷேகம் செய்வது கூடுதல் நன்மை தரும்.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழனியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப் பொறிகள். சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறு முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.

    உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள். அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதி உலா என விமரிசையாக நடக்கிறது.

    காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பகாவடி, மச்சக்காவடி, செடில் காவடி, சேவல்காவடி, தீர்த்தக்காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர்.

    கோயில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்த புராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற பக்தி பாமாலைகள் பக்தி சிரத்தையுடன் பாடிவிரதத்தை முடிக்கின்றனர்.

    அறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலைகளில் சிறந்த மலையாக திருத்தணிகை மலையை கந்த புராணம் போற்றி புகழ்கிறது. திருத்தணி முருகனை இருந்த இடத்தில் இருந்தே மானசீகமாக வழிபட்டாலும் திருத்தணி என்ற பெயரை சொன்னாலும் நம் தீவினைகள் நீங்கும் என்பது அருளாளர்கள் வாக்கு.

    முருகப்பெருமான் இத்தலத்தில் ஞானசக்தியாகிய வேலைத் தாங்கி நிற்கிறார். முருகனின் பதினாறு வகையான திருவுருவங்களில் இங்கு ஞானசக்திதரர் என்னும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

    முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சனைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குருதிசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.

    • போட்டோ வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
    • ஆத்மார்த்த ஈடுபாடு மற்றும் வழிபாடு மிக முக்கியம்.

    ஆடி மாத வளர்பிறை செவ்வாய்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் வீட்டின் தென்மேற்கு பகுதியில் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த கன்னிப் பெண்களை மனதில் நினைத்து தலை வாழை இலையில் வடை, பாயாசத்துடன் உணவு, சர்க்கரை பொங்கல், அதிரசம் அல்லது பணியாரம் போன்ற இனிப்பு பண்டங்களை தேங்காய் வெற்றிலை, பாக்கு வாழைப்பழத்துடன் படைக்க வேண்டும்.

    மேலும் இறந்த கன்னியின் வயதுக்கு ஏற்ற உடை (பாவாடை, சட்டை, தாவணி, சேலை ) மஞ்சள் கிழங்கு, கண்ணாடி, சீப்பு, வளையல், பொட்டு, வாசனையான ஜாதி மல்லி, குண்டு மல்லி மரிக்கொழுந்து படைக்க வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும்.

    போட்டோ வைக்க வேண்டிய அவசியம் இல்லை. சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி கன்னியை பூஜையில் ஆவாகனம் செய்து உங்களின் கோரிக்கைகளை கூற வேண்டும்.

    பிரார்த்தனை நிறைவேற உங்களின் ஆத்மார்த்த ஈடுபாடு மற்றும் வழிபாடு மிக முக்கியம். இதை கூட்டாக பகை மறந்து அங்காளி, பங்காளிகளுடன் இணைந்து வழிபட பலன் இரட்டிப்பாகும். பிறகு பூஜையில் படைத்த உணவை பயபக்தியுடன் அனைவரும் உண்ண வேண்டும்.

    படைத்த ஆடை மற்றும் மங்கலப் பொருட்களை (மூங்கில் கூடை நார்ப்பெட்டியில்) வைத்து பின்னர் வீட்டின் தென்மேற்கு பகுதியான கன்னி மூலையில் உயரமான இடத்தில் இந்த பெட்டியை வைக்க வேண்டும். முதலாண்டு வைத்து படைத்த கன்னிப் பெட்டியை மறு ஆண்டுதான் எடுக்க வேண்டும்.

    கன்னி பெட்டி உள்ள அறைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் இடலாம். மறு வருடம் கன்னி வழிபாடு செய்யும் போது வீட்டை சுத்தம் செய்து விட்டு பெட்டியை திறக்க வேண்டும். பெட்டியை திறந்தவுடன் பூ வாசம் மணக்கும். பூ வாசம் மணந்தால் கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை.

    அதற்குள் வைத்திருந்த துணியை குடும்பத்தில் உள்ள நிறைவேறாத பிரார்த்தனை உள்ள பெண்களுக்கு கொடுக்க வேண்டும். இதை பல குடும்பத்தினர் வீட்டு சாமி கும்பிடுதல் என்றும் கூறுவார்கள். இந்த வழிபாட்டை ஆடி மாதங்களில் கடை பிடிக்க முடியாதவர்கள் தை மாதங்களிலும் வழிபடலாம். கன்னி தெய்வத்தை வழிபட வெள்ளிக்கிழமையை விட செவ்வாய்கிழமை தான் ஏற்ற நாள்.

    சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் செய்வினை கோளாறு நீங்கும். நோய் நொடிகள் தீர்ந்து விடும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.

    • இன்று சங்கடஹர சதுர்த்தி.
    • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-7 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை காலை 11.01 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: சதயம் இரவு 10.17 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், திருச்சி உச்சி பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் கோவில்களில் காலை கணபதி ஹோமம், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் காலை அலங்கார திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-துணிவு

    மிதுனம்-ஆர்வம்

    கடகம்-பரிசு

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-தாமதம்

    துலாம்- தேர்ச்சி

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- அமைதி

    மகரம்-இன்பம்

    கும்பம்-மகிழ்ச்சி

    மீனம்-நன்மை

    • இந்த ஆண்டு ஆடிப்பூரம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • ஆடிப்பூரம் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது.

    ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம். ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள் என்கின்றன புராணங்கள். ஆண்டாள் அவதார நட்சத்திரமும் ஆடிப்பூரம்தான். இந்த ஆண்டு ஆடிப்பூரம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

    பொதுவாக ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். ஆடிப்பூரம் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது.

    இது அம்பாளுக்குரிய திருநாளாகும். இந்த நாளில்தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை தொடங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.

    அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். ஆனால் இதில் வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரமாகும். அன்னை உளம் மகிழ்ந்து அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம் ஆகும்.

    இந்த ஆடிப்பூரத்தில் அம்பாளின் அருளை பெற ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும் என்பது நம்பிக்கை.

    • வியாசரால் வழிபடப்பட்ட ஈசனே தவளகிரீஸ்வரர்.
    • இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் இந்திர தீர்த்தம்.

    திருமாலுக்கும், பிரம்மனுக்கும் திருவண்ணாமலையில், ஆதி அந்தம் இல்லாத பெருஞ்ஜோதியாக நின்று காட்சி கொடுத்தவர், சிவபெருமான். அவர் தனது மகன் முருகப்பெருமானுக்கு, ஜோதி ரூபமாக திருக்காட்சி கொடுத்த திருத்தலம் தான், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெண்குன்றம். இந்த ஊரை 'தவளகிரி' என்றும் அழைப்பார்கள்.

    உலக மக்கள் அனைவரும் அறிந்துணரும் வகையில், வேதங்களின் கருத்துக்களை மக்களிடையே பரப்பும்படி, வியாச மகரிஷிக்கு சிவபெருமான் உத்தரவிட்டார். அந்த பணியை செய்வதற்கு முன்பாக வியாசர், பூலோகத்தில் பல்வேறு புண்ணிய தலங்களை தரிசிக்க எண்ணினார்.

    அப்படி அவர் வந்த போது தென் திசையில் வெண்ணிற மலை ஒன்றைக் கண்டார். அங்கே சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, அந்த தீர்த்த நீரில் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார்.

    வியாசரால் வழிபடப்பட்ட ஈசனே, 'தவளகிரீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். 'தவளம்' என்பதற்கு 'வெண்மை' என்று பொருள். வெண்மையான மலையில் வீற்றிருப்பதால், இத்தல இறைவனுக்கு இப்பெயர் வந்தது. வியாச முனிவரால் உருவாக்கப்பட்ட இங்குள்ள தீர்த்தம், 'வியாச தீர்த்தம்' என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

    ஒரு முறை கங்காதேவி இந்த ஆலயத்திற்கு வந்தாள். பலரும் தன் நதியில் நீராடுவதால் ஏற்பட்ட பாவத்தை போக்குவதற்காக கங்காதேவி இவ்வாலயம் வந்து, வியாச தீர்த்தத்தில் நீராடி, இத்தல சிவபெருமானை வழிபட்டு தூய நிலையை அடைந்ததாக சொல்லப்படுகிறது.

    இதுதவிர இந்திரன் மற்றும் தேவர்கள் ஆகியோரும் இங்கு வந்து தவளகிரீஸ்வரரை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம், 'இந்திர தீர்த்தம்' என்ற பெயரில் இங்கு உள்ளது.

    தாரகாசுரன் என்ற அசுரனை அழித்த பிறகு, முருகப்பெருமான் பல்வேறு தலங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தார். அதன்படி அருணகிரி எனப்படும் திருவண்ணாமலை வந்து ஈசனை வழிபட்டார்.

    பின்னர் அவரை ஜோதி வடிவில் வழிபட வேண்டும் என்ற எண்ணத்தில் ஈசனை நினைத்து தியானித்தார். அப்போது அங்கே தோன்றிய சிவபெருமான், "குமரா! முன்பொரு சமயம் திருமாலும், பிரம்மனும் காணுமாறு ஆதியந்தமில்லா பெருஞ்ஜோதியாக இங்கே நான் நின்றேன்.

    பின்பு கார்த்திகை பவுர்ணமி நாளில் இத்தலத்து அர்த்தநாரி ஆனோம். இதே தலத்தில் மீண்டும் ஜோதி வடிவை காட்டுவதற்கு பதிலாக, நீ தவளகிரியில் என்னுடைய ஜோதி வடிவத்தை காணலாம்" என்று கூறி மறைந்தார்.

    அதன்படி தவளகிரி சென்ற முருகப்பெருமான், அங்குள்ள தவளகிரீஸ்வரரை வழிபட்டு, தன்னுடைய கூரிய வேலால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, ஈசனுக்கு அபிஷேகம் செய்தார். அவ்வேளையில் குன்றின் மீது சிவபெருமான் ஜோதிரூபமாக தோன்றி காட்சி அளித்ததுடன், அங்கேயே சிவலிங்க ரூபமாக மாறிப்போனார்.

    முருகப்பெருமானுக்கு திருக்காட்சி நல்கிய அந்த சிவபெருமான், இன்றும் இவ்வாலயத்தில் 'அருணாசலேஸ்வரர்' என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    முருகப்பெருமானால் உண்டான தீர்த்தம் 'குமார தீர்த்தம்' என்று வழங்கப்படுகிறது. பல்வேறு ரிஷிகளும், சித்தர்களும் இத்தல தவளகிரீஸ்வரரை வழிபட்டிருக்கிறார்கள்.

    இவ்வாலயத்தில் இரண்டு பழங்கால கல்வெட்டுகள் உள்ளன. அவை பல்லவர் காலத்து கல்வெட்டுகளாகும். இவ்வாலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா அன்று அதிகாலை 4 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள கயிலாசநாதர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பிறகு முருகப்பெருமான் மலையடிவாரத்திற்கு எழுந்தருளுவார்.

    தொடர்ந்து மலைக் கோவிலில் எழுந்தருளியுள்ள தவளகிரீஸ்வரருக்கும், ஆறுமுகப்பெருமானுக்கும், இதர மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெறும். பின்னர் மாலை 6 மணியளவில் தவளகிரி மீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

    பெரிய இரும்பு கொப்பரை முழுவதும் நெய் நிரப்பி ஏற்றப்படும் இந்த தீபம், சுற்றுவட்டாரத்தில் 10 கிலோமீட்டர் தூரத்துக்குத் தெரியும் என்கிறார்கள். 3 நாட்கள் தொடர்ந்து எரியும் இந்த தீபத்தை தரிசிப்பதன் மூலம் ஈசன் மற்றும் அவரது மகன் முருகனின் அருளையும் சேர்த்துப் பெறலாம்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், தவளகிரீஸ்வரரை வேண்டி விரதம் இருப்பதுடன், உப்பு, மிளகு எடுத்துச் சென்று மலையில் உள்ள குன்றின் உச்சியில் போட்டுவிட்டு நேர்த்திக்கடன் முடிப்பார்கள். குறிப்பாக தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

    அமைவிடம்

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வெண்குன்றம் கிராமம். இங்கே சுமார் 1,500 அடி உயரத்தில் தவளகிரி மலை உள்ளது. இந்த மலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    • சப்த ரிஷிகளில் முக்கியமானவர் பிருகு முனிவர்.
    • மகாலட்சுமியை பூஜிப்பவர்களுக்கு தரித்திரம் விலகும்.

    சப்த ரிஷிகளில் முக்கியமானவர், பிருகு முனிவர். ஒரு முறை 'மும்மூர்த்திகளில் யார் மிகச் சிறந்தவர்?' என்ற விவாதம் தேவர்களுக்கு இடையே ஏற்பட்டது. அப்போது தேவர்கள் அனைவரும் இதுபற்றி பிருகு முனிவரிடம் கேட்டனர். அவரோ நேராக பிரம்மலோகம் சென்றார்.

    அங்கிருந்து பிரம்மனை நோக்கி, "நீர் ஒரு பொய்யர். ஈசனின் திருமுடியை கண்டதாக பொய் கூறினீரே" என்று பலவிதமாக கேலி பேசினார். அதைக் கேட்டு பிரம்மன் வெகுண்டு எழ, அவரது கோபத்தை தாங்க முடியாமல் அங்கிருந்து கயிலாயம் சென்றார், பிருகு முனிவர்.

    கயிலாயத்தில் சிவபெருமானை சந்தித்த அவர், "உன்னை எல்லோரும் உலகிற்கெல்லாம் படியளக்கும் ஈசன் என்கிறார்கள். ஆனால் நீயோ பார்வதி தேவியின் சக்திக்கு உட்பட்டவர்" என்றார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், தன்னுடைய நெற்றிக் கண்ணை திறக்க, அங்கிருந்தும் தப்பித்து வைகுண்டம் வந்தடைந்தார், பிருகு முனிவர். அங்கு விஷ்ணு யோக நித்திரையில் இருந்தார்.

    அதைக் கண்ட பிருகு முனிவர், "உன் இல்லத்திற்கு வந்த (வைகுண்டத்திற்கு) விருந்தினரை கவனிக்காமல் இப்படி தூங்குவது சரியா? நீ இப்படி தூங்கிக் கொண்டிருந்தால் உலகத்தை எப்படி பரிபாலனம் செய்ய முடியும்?" எனக் கூறி மகாவிஷ்ணுவின் மார்பில் உதைத்தார்.

    இதைக் கண்டு எழுந்த மகாவிஷ்ணு, "நீங்கள் பெரிய முனிவர். நான் உங்களுக்கு தகுந்த மரியாதை அளிக்க தவறிவிட்டேன். என் மார்பில் உதைத்ததால், உங்கள் கால் வலிக்குமே" என்று கூறி, பிருகு முனிவரின் காலை பிடித்துவிட்டார்.

    இந்த சம்பவத்திற்கு பின்னர் தேவலோகம் சென்ற பிருகு முனிவர், அங்கிருந்த தேவர்களிடம், "மும்மூர்த்திகளில் மகாவிஷ்ணுவே உயர்ந்தவர். நான் காலால் உதைத்த போதிலும், மிகப் பொறுமையாக அந்த பிரச்சினையை கையாண்டதால் அவரே உயர்ந்தவர்" எனக் கூறினார். (இதில் பிருகு முனிவரின் காலில் ஒரு கண் இருந்ததாகவும், அந்தக் காலை பிடித்து விடுவதுபோல், அந்தக் கண்ணை மகாவிஷ்ணு பிடுங்கி விட்டதாகவும் ஒரு சிலர் சொல்வர்).

    அதே நேரத்தில் மகாவிஷ்ணுவின் மார்பில் மகாலட்சுமி வசிப்பதால், மகாலட்சுமி உதைத்த தோஷம் பிருகு முனிவருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து பிருகு முனிவர், மகாலட்சுமி தாயாரிடம் "நான் செய்த இந்த பெரும் பாவத்தை பொறுத்து, என்னை மன்னித்து அருள் செய்ய வேண்டும்" என்று வேண்டினார். அதற்கு மகாலட்சுமி, "நான் உனக்கு குழந்தையாகப் பிறந்து, என் கால்களால் உன்னை உதைப்பேன். அப்போது உன் பாவம் நீங்கும், கவலைப்படாதே" என்று கூறினார்.

    அதன்படியே மகாலட்சுமி தாயார், பிருகு முனிவருக்கு மகளாக பிறந்ததாகவும் புராணங்கள் சொல்கின்றன.

    மகாலட்சுமி அவதாரம்

    மகாலட்சுமி, பாற்கடலில் இருந்து தோன்றியவர். அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைவது என்று முடிவெடுத்தனர். கிடைக்கும் அமிர்தத்தை இருவரும் சமமாக பங்கிட்டுக் கொள்வது என்றும் தீர்மானித்தனர்.

    பாற்கடலை கடைவதற்கு மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் பயன்படுத்தினர். வாசுகி பாம்பின் தலை பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர்.

    ஆனால் மந்தார மலை, பாற்கடலில் நிற்காமல் சரியத் தொடங்கியது. அப்போது மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து மலையை தன்னுடைய முதுகில் தாங்கினார்.

    அப்படி மந்தார மலையை கடையும் போது முதலில் வெளிவந்தது, ஆலகாலம் என்னும் விஷம். இந்த விஷத்தின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் அனைத்து ஜீவராசிகளும் தவித்தன. அந்த விஷத்தை, சிவபெருமான் உண்டார். அந்த விஷம் அவரது கழுத்தில் நின்றதால், அவர் 'நீலகண்டர்' ஆனார்.

    இதற்கு பின் ஐராவதம் என்ற வெள்ளை யானை வெளிவந்தது. அதை இந்திரன் எடுத்துக் கொண்டான். ஐராவதத்திற்கு பின்னர் சந்திரன், காமதேனு, கற்பகத் தரு, மகாலட்சுமி, அமிர்த கலசத்துடன் தன்வந்திரி இப்படி ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்தது.

    அப்படி வெளிவந்த மகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் இதயத்தில் சரணடைந்தாள். இந்த மகாலட்சுமி சகலவிதமான செல்வத்திற்கும் அதிதேவதையாக விளங்கினாள்.

    இந்த மகாலட்சுமியை யார் பூஜிக்கிறார்களோ, அவர்களுக்கு தரித்திரங்கள் விலகும். ஆதிசங்கரர், ஒரு ஏழையின் வறுமையைப் போக்குவதற்காக மகாலட்சுமியின் மீது கனகதாரா துதியை பாடியதன் காரணமாக, அந்த வீட்டின் மீது நெல்லிக்கனி வடிவில் தங்க மழை பொழிந்தது.

    மகாலட்சுமியை வழிபட பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் உகந்தது. இந்த நாட்களில் திருவிளக்கு பூஜை செய்வதால், மகாலட்சுமியின் அருளைப் பெறலாம். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை வந்தாலும், ஆடி வெள்ளிக்கிழமைகளும், தை வெள்ளிக்கிழமைகளும் சிறப்புக்குரியவையாக பார்க்கப்படுகிறது.

    இந்த நாட்களில் திருவிளக்குப் பூஜை செய்து மகாலட்சுமியை வணங்கினால், நிறைந்த செல்வமும், மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும். மேலும் கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மகாலட்சுமியை, 'ஷோடச லட்சுமி' என்று 16 வகையான லட்சுமிகளாக வழிபடும் வழக்கமும் உள்ளது.

    தீபம், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், ஸ்ரீ சூரணம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, கோலம், ஸ்வஸ்திகா சின்னம், யானை, கண்ணாடி ஆகியவற்றில் மகாலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது.

    திருவிளக்குப் பூஜை செய்வதற்கு வாழை இலை, வெற்றிலை, பாக்கு, பழம், அவல், பொரி, கற்கண்டு, திருநீறு, குங்குமம், சந்தனம், உதிரிப்பூ, ஊதுபத்தி, துளசி, கற்பூரம், கலச நீர், அரிசி, மஞ்சள், எண்ணெய், திரி, விளக்கு போன்ற பொருட்கள் தேவைப்படும்.

    மகாலட்சுமியை வழிபாடு செய்வதால், ராஜ பதவி, மக்கட்செல்வம், சுற்றம், பொன், நவரத்தினங்கள், நெல் முதலான தானியங்கள், பல்லக்கு, பணியாட்கள் ஆகிய அஷ்ட ஐஸ்வரியங்கள் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.

    • 24-ந்தேதி சங்கடஹர சதுர்த்தி
    • 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேய்பிறை அஷ்டமி

    23-ந்தேதி (செவ்வாய்)

    * குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நாராயண தீர்த்தம்.

    * வடமதுரை சவுந்திரராஜர் வசந்த உற்சவம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    24-ந்தேதி (புதன்)

    * சங்கடகர சதுர்த்தி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    * திருத்தணி முருகப்பெருமா னுக்கு பால் அபிஷேகம்.

    25-ந் தேதி (வியாழன்)

    * வடமதுரை சவுந்திரராஜர் குதிரை வாகனத்தில் விடை யாற்று உற்சவம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    26-ந்தேதி (வெள்ளி)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.

    * திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    27-ந்தேதி (சனி)

    * திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆகிய திருத்தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * திருவரங்கம் நம்பெருமாள். தேவகோட்டை ரங்கநாதர் புறப் பாடு கண்டருளல்.

    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (ஞாயிறு)

    * தேய்பிறை அஷ்டமி.

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.

    * ஆலயங்களில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    29-ந்தேதி (திங்கள்)

    * திருப்போரூர் முருகப்பெருமான் கோவிலில் பால் அபிஷேகம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.
    • வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் வசந்த உற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆடி 7 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: துவிதியை நண்பகல் 1.13 மணி வரை. பிறகு திருதியை.

    நட்சத்திரம்: அவிட்டம் இரவு 11.47 மணி வரை. பிறகு சதயம்.

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமி மலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் வசந்த உற்சவம். முத்துப் பல்லக்கில் அருளிய லீலை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை தலங்களில் காலை சிறப்பு அபிஷேகம். சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம். குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-நிறைவு

    மிதுனம்-வரவு

    கடகம்- செலவு

    சிம்மம்-நட்பு

    கன்னி-நலம்

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-மாற்றம்

    தனுசு- ஆர்வம்

    மகரம்-சுபம்

    கும்பம்-முயற்சி

    மீனம்-கவனம்

    • 3 கருட சேவை உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • பக்தர்கள் பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், ஆனி மாதம், ஆடி மாதம் என ஆண்டுக்கு 3 கருட சேவை உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    பெருமாளை வணங்கு வதற்காக குளத்தில் இருந்து தாமரைப் பூவை பறித்த யானையான கஜேந்திரனின் காலை, முதலை பற்றிக் கொண்ட நிலையில், கஜேந்திரன் அலறியபடி பெருமாளை அழைத்தார். பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்து முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்ததாக கூறப்படுகிறது.

    இதனை குறிக்கும் வகையில் கஜேந்திர மோட்சம் அருளும் ஆடி மாத கருட சேவை உற்சவம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்றது.

    இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மஞ்சள் நிற பட்டு உடுத்தி, செண்பகப்பூ, மனோரஞ்சித பூ, மல்லிகைப்பூ, பஞ்சவர்ண பூ மலர் மாலைகள், திருவா பரணங்கள் அணிவித்து, மஞ்சள் பட்டு உத்திய தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் அனந்த சரஸ் திருக்குளத்தின் அருகே எழுந்தருளி கஜேந்திர மோட்சம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து மேள, தாள வாத்தியங்கள் முழங்க கோவிலில் ஆழ்வார் பிரகாரத்தில் உலா வந்து கோபுர தரிசனம் தந்தார்.

    இதையடுத்து பெருமாள், நான்கு மாட வீதிகளிலும் தங்க கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்க கருட வாகனத்தில் வலம் வந்த வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர். 

    • சோழ மன்னர் தனது தங்கைக்கு சீதனமாக கொடுத்த நகரம் தான் சமயபுரம்.
    • சமயபுரம் மாரியம்மனின் சகோதரிகளில் கடைசி தங்கை வீரசிங்கம்பேட்டை மாரியம்மன்.

    1. சமயபுரம் முத்து மாரியம்மன்

    திருச்சி மாவட்டம் சமயபுரத்திலேயே இந்த முத்து மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. சோழ மன்னர் ஒருவர் தனது தங்கைக்கு சீதனமாக கொடுத்த நகரம் தான் இந்த சமயபுரம் என சொல்லப்படுகிறது.

    2. புன்னை நல்லூர் மாரியம்மன்

    தஞ்சை மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அம்மன் காட்சி தரும் தலமாகும். மூலவர் சிலை புற்று மண்ணால் ஆனதால் இந்த அம்மனுக்கு அபிஷேகங்கள் ஏதும் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு மட்டுமே நடைபெறும்.

    3. அன்பில் மாரியம்மன்

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள அன்பில் கிராமத்தில் அமைந்துள்ளது இக்கோவில். சுமார் 700 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் வீற்றிருக்கும் அம்மனின் திருமேனி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது வேப்ப மரத்தடியில் கரை ஒதுங்கியதாக சொல்லப்படுகிறது.

    4. தென்னலூர் மாரியம்மன்

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. தென்னலூர் கிராமத்தின் அதிதேவதையாக இந்த மாரியம்மன் விளங்குகிறாள். ஆரம்பத்தில் எளிமையாக கூரையில் இருந்த அம்மனுக்கு பிறகு கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படு கிறது

    5.நார்த்தமலை முத்துமாரியம்மன்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தமலை என்ற ஊரில் இந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மலைகளால் சூழப்பட்டதாக இந்த கோவில் அமைந்துள்ளது.

    6. கொன்னையூர் மாரியம்மன்

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி அருகே உள்ளது கொன்னையூர் கிராமம். இந்த கோவில் ஊர் மத்தியில் அமைந்து உள்ளதால் நான்கு திசைகளிலும் உள்ள மக்களை இந்த மாரி யம்மன் காத்து வருவ தாக ஐதீகம்.


    7. வீரசிங்கம்பேட்டை மாரியம்மன்

    திருவையாறு அருகே உள்ள குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது வீரசிங்கம்பேட்டை என்ற ஊர். இங்கு தான் இந்த மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. சமயபுரம் மாரியம்மனின் சகோதரிகளில் கடைசி தங்கை இவர் தான் என சொல்லப்படுகிறது.

    ×