என் மலர்tooltip icon

    வழிபாடு

    • இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருவிழாவையொட்டி கோவிலில் கடந்த 9 நாட்களும் காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    உடன்குடி:

    இந்தியாவில் தசரா பெருந்திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்தான் பிரசித்தியாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பல்வேறு தசரா குழுவினர் கோவிலுக்கு வந்து காப்பு கட்டி சென்றனர்.

    வேண்டுதல்கள் நிறைவேற கடும் விரதம் இருந்து காளி, அம்மன் போன்ற சுவாமி வேடங்கள், குரங்கு, சிங்கம், பெண் போன்ற 100-க்கு மேற்பட்ட வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

    மேலும் ஊர் பெயரில் தசரா குழு அமைத்து அதில் நையாண்டி மேளம், தாரை தப்பட்டை, செண்டை மேளம், கரகம், காவடி, டிஸ்கோ போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் பல்வேறு ஊர்களுக்கு சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

    தசரா குழுவினரின் கலை நிகழ்ச்சி மிகவும் அசத்தலாக இருந்தது. 10-ம் திருநாளான விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று இரவு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலையில் இருந்தே பக்தர்கள் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து வசூல் செய்த காணிக்கையை செலுத்த தொடங்கினார்கள். இன்று பிற்பகல் வரை சுமார் 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்.

    இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர். இரவில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

    இதற்காக 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம், பக்தர்கள் வரும் தனியார் வாகனங்ளை நிறுத்த 30 தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள் தயார் செய்யப்பட்டிருந்தது.

    மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, தீயணைப்பு துறை என மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறையினர் குலசையில் முகாமிட்டுள்ளனர்.

     

     9-ம் திருநாளான நேற்று இரவு அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் பவனி வந்த காட்சி

     9-ம் திருநாளான நேற்று இரவு அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் பவனி வந்த காட்சி

    திருவிழாவையொட்டி கோவிலில் கடந்த 9 நாட்களும் காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. முத்தாரம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வோறு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். மேலும் தினமும் கோவில் கலையரங்கத்தில் மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    இன்றும் காலை 6 மணி, 7.30 மணி, 9 மணி, 10.30 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவர் கோவில் முன்பாக எழுந்தருளி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவிலில் அம்மனுக்கு சாந்தாபிஷேக ஆராதனையும் தொடர்ந்து தேரில் எழுந்தருளி கோவில் கலையரங்கம் வந்தடைவார். அங்கு காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.

    காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதி உலாவும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்கிறார். பின்னர் கொடி இறக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு காப்பு களையுதல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. நாளை மறுநாள் (14-ந் தேதி) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடக்கிறது.

    தசரா திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் தாண்டவன் காடு கண்ணன், செயல் அலுவலர் ராம சுப்பிரமணியன் அறங்காவலர்கள் ரவிந்திரன் குமரன், மகராஜன், கணேசன், வெங்கடேஷ்வரி மற்றும் மாவட்ட அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் செய்துள்ளனர்.

    திருவிழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் டி.எஸ்.பி.வசந்தராஜன் தலைமையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தசரா உடை அணிந்த போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

    • இன்று விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம்.
    • ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவத் தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இக்கோவிலுக்கு கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் புதுவை மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தந்து சாமி கும்பிட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் நேற்று ஆயுத பூஜை மற்றும் இன்று விஜயதசமி விழாவை முன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த நிலையில் இன்று விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

    அந்த வகையில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய சாமி சன்னதிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும் அழைத்து சென்று பூஜை செய்து பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள். அதன்படி திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் எதிரே உள்ள அவுசதகிரி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையொட்டி ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, கருப்பு பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர்.

    பின்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஹயக்ரீவர் சன்னதி முன்பு தரையில் அரிசி அல்லது நெல்லை கொட்டி வைத்திருந்த அந்த நெல்லில் ஏடு படிக்கும் நிகழ்ச்சியான தமிழில் " அ..ஆ" என எழுதி தங்கள் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை ஆர்வத்துடன் தொடங்கினர். மேலும் மாணவர்களும் ஆர்வத்துடன் ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலிலும் மற்றும் மலையில் உள்ள ஹயக்ரீவர் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி கும்பிட்டனர்.

    • சரஸ்வதி தேவிக்கு வெண்மை நிற ஆடை மற்றும் வெண்மை நிற மலர்கள் சமர்ப்பணம் செய்வது வழிபடுவது மரபாக இருக்கிறது.
    • நவராத்திரி என்ற கொலு வைத்து கொண்டாடப்படும் திருவிழா நாட்களில் பத்தாவது நாள் விஜயதசமி என்று சொல்லப்படுகிறது.

    சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகை நாட்கள் இந்திய அளவில் அனைத்து மாநில மக்களாலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சரஸ்வதி பூஜை தேசிய அளவில் இரண்டு முறை கொண்டாடப்படுகிறது.

    முதலாவது, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரக்கூடிய நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என்றும், அதற்கு அடுத்த பத்தாவது நாளில் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது. இந்த முறை தென்னிந்திய மாநிலங்களில் நடைமுறை வழக்கமாக அமைந்துள்ளது.

    இரண்டாவது, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வரக்கூடிய மாசி மாத சுக்கில பட்ச ஐந்தாம் நாளான வசந்த பஞ்சமி சரஸ்வதி பூஜையாக வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. அந்த நாள் சரஸ்வதி அவதாரம் செய்த தினம் என்பதால் சரஸ்வதியை வழிபட்டு கல்விச் செல்வத்தை பெறும் வகையில் வீடுகளிலும், கோவில்களிலும், பொது இடங்களிலும் சமுதாய திருநாளாக சரஸ்வதி பூஜை அனுசரிக்கப்படுகிறது.

     

    புராணங்களில்படி சரஸ்வதி தேவி மும்மூர்த்திகளில் முதலாவது மூர்த்தியாக சொல்லப்படும் பிரம்மாவின் மனைவியாக குறிப்பிடப்படுகிறார். உலகில் உள்ள அனைத்து வித ஞானங்களுக்கும், கல்விச்செல்வத்திற்கும் ஆதிபத்தியம் பெற்ற தெய்வ அம்சமாக சரஸ்வதி இருக்கிறார் என்பது ஐதீகம். சரஸ்வதி தேவிக்கு வெண்மை நிற ஆடை மற்றும் வெண்மை நிற மலர்கள் சமர்ப்பணம் செய்வது வழிபடுவது மரபாக இருக்கிறது.

    சரஸ்வதி தேவியை வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி ஆகிய பெயர்களில் அழைக்கிறார்கள். வசந்த பஞ்சமி நாளிலிருந்து அடுத்து வரக்கூடிய 40-வது நாளில் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையின் தொடக்கத்தை அங்கீகரிக்கும் வகையிலும் வசந்த பஞ்சமி வட இந்தியாவில் விமரிசையாக அனுசரிக்கப்படுகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை நவராத்திரி கொலு வைத்து பூஜைகள் செய்யப்படும் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் விஜயதசமி என்று சொல்லப்படும். அந்த நாளில் தான் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும், குழந்தைகளுக்கு அவர்களுடைய தந்தை, குடும்ப மூத்தவர்கள், ஆசிரியர்கள் கல்வி கற்றலுக்கான முதல் நாளை தொடங்கி வைக்கிறார்கள்.

    நவராத்திரி என்ற கொலு வைத்து கொண்டாடப்படும் திருவிழா நாட்களில் பத்தாவது நாள் விஜயதசமி என்று சொல்லப்படுகிறது. இந்த நாளை கர்நாடகா மற்றும் ஆந்திராவில் தசரா என்று குறிப்பிடுகிறார்கள். அந்த நாட்களில் எந்த ஒரு தொழிலையும், வித்தையையும் கற்பதற்கான நாளாக அனுசரிக்கிறார்கள்.

    மேலும் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் பேனா ஆகியவற்றை பரிசாக வழங்கி அவர்களுக்கு நல்ல கல்வி செல்வம் கிடைப்பதற்கு ஆசிகளையும் வழங்குவது சமூக மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    • சரஸ்வதி தாயார் இங்கு கன்னியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருளை வழங்கி வருகிறார்.
    • நோட்டு, பேனா, புத்தகம், சிலேட்டு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கூத்தனூரில் கல்வி தெய்வம் சரஸ்வதி தேவிக்கு தனி கோவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு என்று இங்கு தான் தனி கோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சரஸ்வதி தாயார் இங்கு கன்னியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருளை வழங்கி வருகிறார். கருவறையில் வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் வீற்றிருந்து, வலது கீழ் கரத்தில் சின்முத்திரையும், இடது கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கியிருந்து ஜடா முடியுடன், ஞானச்சஸ் என்கிற மூன்றாவது கண்ணும் கொண்டு, கிழக்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார்.

    இவ்வாறு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழா விமர்சையாக நடைபெறும்.

     

    சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வெண்ணாடை உடுத்தி பாத தரிசனம் விழா நடைபெற்றபோது எடுத்தப்படம்.

    சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வெண்ணாடை உடுத்தி பாத தரிசனம் விழா நடைபெற்றபோது எடுத்தப்படம்.

    அந்த வகையில் இந்த வருட நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 3-ம் தேதி திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று சரஸ்வதி பூஜை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மகா சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வெண்ணாடை உடுத்தி பாத தரிசனம் விழா நடைபெற்றது.

    இன்று விழாவின் முக்கிய நிகழ்வாக விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயதசமியை முன்னிட்டு இன்று காலையில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். நோட்டு, பேனா, புத்தகம், சிலேட்டு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர். பின்னர் ஒரு தாம்பாளத்தில் நெல்மணிகளை பரப்பி அதில் தங்களது குழந்தைகளை தமிழ் உயிர் எழுத்தின் முதல் எழுத்தான 'அ' வை எழுத வைத்து வித்யாரம்பம் செய்தனர்.

    முன்னதாக குழந்தைகளின் நாக்கில் மூன்று முறை தேனை தொட்டு வைத்து பின்பு குழந்தைகள் காதுகளில் மந்திரங்களை சொல்லிய பிறகு நெல்மணிகளில் பிள்ளையார் சுழி எழுதி அதற்கு பின்பு தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதப்பட்டன.

    இந்த விழாவுக்கு திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • விஜயதசமி நாளில் என்ன செய்தாலும் அது மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
    • பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதிலும் பெற்றோர் ஆர்வம் காட்டினர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நேற்று ஆயுதபூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், ஆட்டோ நிலையங்கள் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்திலும் ஆயுத பூஜை விழா விமர்சையாக நடந்தது. இதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) விஜயதசமி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்வி, விளையாட்டு, தொழில் என எதை தொடங்குவதாக இருந்தாலும், அதற்கு நல்ல நாள் பார்த்து செய்வது வழக்கம். ஆனால் இந்த நாளில் செய்தால், அது மிகுந்த வளர்ச்சி அடையும் என கருதப்படும் நாள் தான் விஜயதசமி.

    நேற்று ஆயுதபூஜை கொண்டாடிய அனைவரும் பூஜையில் வைத்த தொழில் கருவிகள், புத்தகங்கள் போன்றவற்றை விஜயதசமி நாளான இன்று மீண்டும் பூஜை செய்து எடுத்து பயன்படுத்தினர். விஜயதசமி நாளில் என்ன செய்தாலும் அது மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.

    இதனை கருத்தில் கொண்டே பலரும் தங்கள் குழந்தைகளுக்கு இன்று தாம்பாளத்தில் வைக்கப்பட்ட அரிசி மற்றும் நெல்லில் எழுத்துக்களை எழுத கற்றுக்கொடுப்பார்கள். வித்யாரம்பம் என கருதப்படும் இந்த நிகழ்ச்சி இன்று கோவில்களிலும், வீடுகளிலும் நடைபெற்றது. குமரி மாவட்ட கோவில்களில் இன்று காலை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்து கோவில்களிலும் செய்யப்பட்டு இருந்தன.

    பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏராளமான பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். அங்கு தாம்பூலத்தில் வைக்கப்பட்டிருந்த அரிசியில் அ, ஆ எழுத வைத்தனர். தங்க ஊசியால் குழந்தையின் நாக்கில் அ எழுதப்பட்டது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதனால் அனைத்து கோவில்களிலும் இன்று காலையிலேயே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பார்வதிபுரம் வனமாலீஸ்வரர் கோவிலில் உள்ள சரசுவதி சன்னிதானத்தில் தங்க ஊசியாலும், பச்சரிசியிலும் அகர முதல எழுத்துக்களை எழுத செய்து குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைத்தனர்.

    இங்கு அதிக அளவில் குழந்தைகளுடன் பெற்றோர் கலந்து கொண்டனர். வழக்கமாக கேரளாவில் இருந்தும் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை இங்கு அழைத்து வருவார்கள். கேரளாவில் நாளை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறுவதால் கேரளாவை சேர்ந்தவர்கள் வருகை குறைவாக இருந்தது. இது தவிர இன்று பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதிலும் பெற்றோர் ஆர்வம் காட்டினர்.

    இதனால் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடந்தது. பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் பள்ளியில் சேர்த்தனர். பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் கோவிலிலும் இன்று காலை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.

    தேவிக்கு நடந்த சிறப்பு பூஜைக்கு பிறகு குழந்தைகளுக்கு எழுத்தறிவு சொல்லிக்கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி தொடங்கியது. குழந்தைகளின் நாவில் தங்க குச்சியாலும், தாம்பாள தட்டில் வைக்கப்பட்டிருந்த தானியத்தில் கைவிரல்களாலும் எழுத்துக்களின் வடிவங்களை எழுதி, எழுத்தறிவை சொல்லி கொடுத்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    • இன்று திருவோண விரதம்.
    • குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சூரசம்கார நிகழ்ச்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-26 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: நவமி காலை 6.08 வரை

    தசமி நள்ளிரவு கடந்து அதிகாலை 4.36 வரை.

    நட்சத்திரம்: திருவோணம் நள்ளிரவு 12.54 வரை.

    யோகம்: சித்தயோகம்

    ராகு காலம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

    சூலம்: கிழக்கு

    சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை

    நல்ல நேரம்: காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, நண்பகல் 12.15 மணி முதல் 1.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை

    இன்று திருவோண விரதம். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சூரசம்கார நிகழ்ச்சி, விஜயதசமி, குழந்தைகள் கல்வி தொடங்க உகந்த நாள்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - பாராட்டு

    ரிஷபம் - பரிவு

    மிதுனம் - நன்மை

    கடகம் - பகை

    சிம்மம் - யோகம்

    கன்னி - வரவு

    துலாம் - நலம்

    விருச்சிகம் - மேன்மை

    தனுசு - சிந்தனை

    மகரம் - கவனம்

    கும்பம் - பெருமை

    மீனம் - பயணம்

    • கோவில்பட்டி பஸ்நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பழமையான பூவநாத சுவாமி திருக்கோவில்.
    • இறைவன் பூவநாத சுவாமி என்ற பெயரிலும், அம்பாள் செண்பகவல்லித் தாயார் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பஸ்நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பழமையான பூவநாத சுவாமி திருக்கோவில். இந்த ஆலயத்தில் இறைவன் பூவநாத சுவாமி என்ற பெயரிலும், அம்பாள் செண்பகவல்லித் தாயார் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.

    இத்தல அம்மனுக்கு புடவை சாத்தியும், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும் வழிபாடு செய்தால், பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு, அந்தக் குறை படிப்படியாக சரியாகும் என்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆலயத்தில் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
    • ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில், திண்டல் திருத்தலம் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் என்ற இடத்தில் சிறிய குன்றின் மேல் முருகப்பெருமான் திருக்கோவில் அமைந்துள்ளது.

    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொல்மொழிக்கு ஏற்ப, இந்த ஆலயமும் முருகனின் அருள் ஆலயங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடிக்கிறது. இந்த ஆலயத்தில் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

    புத்திரப்பேறு இல்லாதவர்கள், இத்தல முருகனுக்கு அபிஷேகம் செய்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில், திண்டல் திருத்தலம் உள்ளது.

    • கலியுகத்தில் திருமால் எடுத்த அவதாரமே ‘அய்யா வைகுண்டர்’ அவதாரம் ஆகும்.
    • ஸ்ரீமன் நாராயணன், வைகுண்டராக அவதரித்து வந்தபோது சப்த மாதர்களை திருக்கல்யாணம் புரிந்தார்.

    இறைவன் அவதாரத்தின் முக்கிய நோக்கமே, அன்பான பக்தர்களை காப்பதுதான். இருப்பினும் அன்பரை காக்க அவதரிக்கும்போது வம்பரையும் (தீயவர்) அழிக்கிறான், இறைவன். அவ்வாறே அன்பான சான்றோர் மக்களை காத்து வம்பான கலியனை அழிப்பதற்காக, கலியுகத்தில் திருமால் எடுத்த அவதாரமே 'அய்யா வைகுண்டர்' அவதாரம் ஆகும்.

    இறைவன் தனது அவதாரத்தின்போது வாழ்ந்து காட்டுவதன் வாயிலாகவும், வழிகாட்டுவதன் மூலமாகவும் நாம் நல்வழியில் வாழ்வதற்கான உபதேசங்களை தருகின்றார். அவ்வகையில் பெற்றோரிடம் பிள்ளைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லியுள்ளார். பெற்றோரை மதித்து அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் சொல்படி நடப்பதால் கிடைக்கும் நன்மையையும் அகிலத்திரட்டு அம்மானை மூலமாக எடுத்துரைக்கிறார்.

    துவாபர யுகத்தின் முடிவில், இறந்த உறவினர்களுக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்யும்படி, பாண்டவர்களுக்கு பகவான் கிருஷ்ணர் உத்தரவிட்டார். இந்தநிலையில் கர்ணனுக்கு மோட்சம் அளிப்பதற்கான பணிகளும் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த வியாசர், "பாவிகளோடு இருந்த கர்ணனுக்கு மோட்சம் அளிப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டார்.

    அதற்கு கிருஷ்ணர், "திரேதா யுகத்தில் ராவணனை அழிப்பதற்காக, நான் ஸ்ரீராமனாக அவதரித்திருந்தேன். அந்த வேளையில் எனக்கு தொண்டு செய்வதற்காக வாலியாக படைக்கப்பட்டவன்தான் இந்த கர்ணன். ஆனாலும் ராவணனோடு வாலிக்கு இருந்த நட்பின் காரணமாக, நான் அவனை மறைந்திருந்து கொல்லும் நிலை உண்டானது. மார்பில் அம்பு பாய்ந்து உயிர் போகும் தருவாயில் என்னை உணர்ந்து கொண்ட வாலி என்னைப் பணிந்து, 'நன்றியுள்ள திருமாலே.. நான் உமக்கு ஏவல் செய்வதற்காகவே படைக்கப்பட்டவன். முன்பு அமிர்தம் கடையும்போது என்னை ஒரு புறத்தில் நிறுத்தி வேலை செய்ய வைத்து அழகு பார்த்தவர் நீங்கள். அப்படி இருக்கையில் நீங்கள் சொல்லியிருந்தால், ராவணனின் பத்து தலைகளையும் கொய்து, கொன்றிருக்க மாட்டேனா' என்று கேட்டான்.

    அப்போது நான், 'நீ எனக்கு ஏவல் செய்வதற்காகவே பிறந்தாய். இருப்பினும் எனக்கு ஆகாத பாவியான ராவணனுடன் நட்பு கொண்டிருந்தாய். அதோடு ராவணனிடம் 'உனக்கு எதிரி.. எனக்கும் எதிரி' என சபதமும் செய்திருந்தாய். நான் உன்னை மறைந்திருந்து தாக்காவிட்டால், ராவணனுக்கு நீ செய்த சத்தியத்தையும் மீறி, நீ என்னோடு நட்புகொண்டிருப்பாய். என் பக்தன் ஒருவன், அவனுடைய சத்தியத்தை மீறுவது சரியல்ல. எனவேதான் நீ என்னை அறியும் முன்பாக, நான் உன்னை மறைந்திருந்து வீழ்த்தினேன். அடுத்து வரும் யுகத்தில் கர்ணனாக பிறக்கப்போகும் நீ, தீயவனான துரியோதனனோடு இருந்தாலும் என் சொல்படி நடப்பாய். அப்போது உனக்கு மோட்சம் தருவேன்' என்று உறுதியளித்தேன்.

    அதன்படிதான் அவனை குந்தியின் மகனாக, பாண்டவர்களின் மூத்தவனாக பிறவிக்கச் செய்து, துரியோதனன் பக்கம் அனுப்பினேன். எனினும் இறைவனான என் புத்தியை உள்ளிருத்தி, அதன்படியே வாழ்ந்தான். தன் தாய்க்கு செய்த சத்தியத்தின்படி, ஒரு முறைக்கு மேல் நாகாஸ்திரத்தை எய்தாமல் சத்தியம் காத்தான். அதனால்தான், முன்பு கூறியபடியே அவனுக்கு மோட்சம் அருள்கிறேன்" என்று கூறினார்.

    ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கக்கூடிய உச்சபட்ச உயர்வு, மோட்சம்தான். அது தாய்- தந்தையர் சொல்லைக் கேட்டு நடப்பதால் ஒருவருக்கு கிடைக்கும் என்பதை அகிலத்திரட்டு அம்மானை மூலம் இறைவன் நமக்கு உணர்த்துகிறார். மேலும் 'ராமபிரான், மறைந்திருந்து வாலியைக் கொன்றது சரியா? தவறா?' என்று உலகில் நடக்கும் பட்டிமன்ற வினாவிற்கு சரி என்ற விடையை தருவதோடு, அதற்கான காரணத்தையும் அகிலத்திரட்டு அம்மானை மூலமாக அளிக்கிறார்.

    ஸ்ரீமன் நாராயணர் தனது கிருஷ்ண அவதாரத்தை நிறைவு செய்துவிட்டு, திருவரங்கம் செல்லும் வழியில் சப்த மாதர்கள் மூலமாக பிறந்தவர்களே சான்றோர்கள் ஆவர். சான்றோர்களை பெற்றெடுத்த பிறகு, சப்த கன்னியர்கள் தவம் செய்வதற்காக கானகம் சென்றனர். அவர்கள் முன்பாக தோன்றிய திருமால், சப்த கன்னியர்கள் பூலோகத்தில் பிறவி எடுக்கும்போது, தாம் வைகுண்டராக அவதரித்து அவர்களை திருமணம் செய்வதாக கூறினார். அதன்படியே ஸ்ரீமன் நாராயணன், வைகுண்டராக அவதரித்து வந்தபோது சப்த மாதர்களை திருக்கல்யாணம் புரிந்தார்.

    இந்த திருக்கல்யாணத்தின்போது சப்தமாதர்களின் பெற்றோரை அழைத்த அய்யா, கைப்பிடித்து தரும்படி கூறினார். அப்போது அவர்கள் அய்யாவிடம் "இதற்கு முன்பே இவர்கள் உமக்கு மனைவியர் தானே" என்று சொல்லிவிட்டு, "இருந்தாலும் நீர் சொன்னதால் நாங்கள் கைப்பிடித்து கொடுக்கிறோம்" என்று சொல்லி கைபிடித்துக் கொடுத்தனர். திருமணத்தின்போது கைப்பிடித்து கொடுக்கின்ற பெரிய பாக்கியத்தை பிள்ளைகள் தங்களின் பெற்றோருக்கு கொடுக்க வேண்டும் என்பதை, இந்த அவதார திருக்கல்யாண லீலை மூலம் அய்யா வைகுண்டர் நமக்கு உணர்த்துகிறார். அய்யா வைகுண்டரின் வாக்குப்படி பெற்றோரை மதித்தும், அவர்களுக்கு கட்டுப்பட்டும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்தும் வாழ்வதுதான் பிள்ளைகளின் கடமையாகும்.

    இப்படிப்பட்ட உயர்ந்த தத்துவத்தைக் கொண்டிருந்த அய்யா வைகுண்டருக்கு, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆலயங்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் சென்னை மணலிப் புதுநகரில் உள்ள 'அய்யா வைகுண்ட தர்மபதி' ஆகும். இந்த ஆலயத்தில் தினமும் மூன்று வேளை பணிவிடையும், மூன்று வேளையும் நித்திய அன்னதானமும், தினமும் மாலையில் வாகன பவனியும் நடைபெறுவது சிறப்புக்குரியதாகும். இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும் இந்த விழாவில், முக்கிய நிகழ்வாக 13-ந் தேதி காலை 11.30 மணிக்கு அய்யா வைகுண்டர் திருத்தேரில் பவனி வரும் நிகழ்வு நடைபெறுகிறது.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வழிபடுகின்றனர்.
    • தென்மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்களாகவே காட்சியளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.

    குலசேகரன்பட்டினம்:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    தசரா திருவிழாவையொட்டி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரும்பாலான ஊர்களிலும் விரதம் இருந்து காப்பு கட்டி பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் வீதி வீதியாக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களின் அருகில் பிறை அமைத்து தங்கியிருந்து அம்மனை வழிபடுகின்றனர்.

    ஒவ்வொரு தசரா குழுவிலும் காளி, சிவன், பிரம்மன், விஷ்ணு, விநாயகர், முருகபெருமான், ராமர், கிருஷ்ணர், நாராயணர், அனுமர் உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்கள் அணிவகுத்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. அரசன், குறவன், கரடி, கிளி, புலி போன்ற வேடங்களையும் சில பக்தர்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வழிபடுகின்றனர்.

    தசரா குழுவினருடன் நாட்டுப்புற கலைஞர்களும் சென்று கரகாட்டம், சிலம்பாட்டம், மேற்கத்திய நடனம் போன்றவற்றை நடத்துகின்றனர். தென்மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்களாகவே காட்சியளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.

    குலசேகரன்பட்டினம் கோவிலில் தசரா திருவிழாவின் 9-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    • இன்று மகா நவமி. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை.
    • மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் சிவ பூஜை செய்தருளிய காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-25 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: அஷ்டமி காலை 7.22 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம்: உத்திராடம் நள்ளிரவு 1.42 மணி வரை. பிறகு திருவோணம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று மகா நவமி. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை. திருப்பதி ஏழுமலையப்பன் ரதோற்சவம். மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் சிவ பூஜை செய்தருளிய காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஏனாதி நாத நாயனார் குரு பூஜை. சிருங்கேசி ஸ்ரீசாரதாபீடம் ஸ்ரீஅம்பாள் சிம்ம வாகனத்தில் சாமுண்டி அலங்காரத்தில் காட்சியருளல். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-புகழ்

    மிதுனம்-வெற்றி

    கடகம்-தனம்

    சிம்மம்-ஆர்வம்

    கன்னி-ஆதரவு

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-செலவு

    தனுசு- மாற்றம்

    மகரம்-லாபம்

    கும்பம்-ஜெயம்

    மீனம்-பெருமை

    • சரஸ்வதியை ஜப்பானில் 'பென் சைட்டென்' என்று குறிப்பிடுகின்றனர்.
    • ஜப்பானை காக்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறாள்.

    இந்தியாவின் ஆன்மிக கருத்துக்கள் மற்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன. அப்படி ஒரு வழிபாடாக ஜப்பான் நாட்டில் சரஸ்வதி வழிபாடு உள்ளது. அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    சரஸ்வதியை ஜப்பானில் 'பென் சைட்டென்' என்று குறிப்பிடுகின்றனர். ஜப்பானில் வணங்கப்படும் ஏழு அதிர்ஷ்ட தேவதைகளில் இவரும் ஒருவர்.


    இந்தியாவில் எழுதப்பட்ட பவுத்த நூலான 'சுவர்ண பிரபாச சூத்திரம்' மூலம்,6-ம் நூற்றாண் டுக்கும் 8-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சரஸ்வதி வழிபாடு ஜப்பானில் பரவியதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் அந்த பவுத்த நூலில் சரஸ்வதி பற்றி விசேஷமாக சொல்லபட்டிருக்கிறது.

    ஜப்பான் நாட்டு வரலாறு மற்றும் புராணங்களின்படி சூரிய குலத்தில் தோன்றிய 'யமாடோ' வம்ச சக்கரவர்த்திகள், ஜப்பானை ஒரே நாடாக ஆட்சி புரிந்திருக்கின்றனர். அவர்கள் காலத்தில்தான், முன்னோர்கள் மற்றும் இயற்கை வழிபாடுகள், சடங்குகள் அதிகம் இருக்கும் ஷிண்டோ மதமும், புத்த மதமும் பரவின.

    இந்த இரண்டு மதங்களும் இந்தியாவில் இருந்து சென்ற துறவிகளால், ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஜப்பானிய ஆன்மிக இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.

    ரிக் வேதத்தில் 'விரித்திரன்' என்ற பாம்பு வடிவ அசு ரனை, சரஸ்வதி அழித்த தகவல் உள்ளது. அதேபோல் ஜப்பானில் பாம்புகள் மற்றும் டிராகன் ஆகியவற்றுடன் தொடர்புடையவராக சரஸ்வதி கருதப்படுகிறார்.

    டோக் கியோ நகரில்இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எனோஷிமா தீவு உட்பட, ஜப்பான் முழுவதும் நூற்றுக்கணக்கான சரஸ்வதி கோவில்கள் உள்ளன. டோக்கியோ நகர கோவிலில் உள்ள சரஸ்வதி, ஜப்பானிய உடை அணிந்து, தாமரைப்பூவின் மீது அமர்ந்திருக்கிறார்.

    நான்கு கரங்களைக் கொண்ட இந்த தேவி, தன் கைகளில் ஒரு இசைக் கருவியை தாங்கியிருக்கிறார். எனோஷிமா தீவில் உள்ள கோவில்களை பற்றிய நூலில், 'அநவதப்தம்' என்ற ஏரியில் உள்ள டிராகன் அரசனின் மூன்றாவது மகள் சரஸ்வதி என்றும் சொல்லப்பட்டுள்ளது.


    'பென்சைட்டென்' என்ற சரஸ்வதி சக்தி பெற்ற தெய்வமாகவும், ஜப்பானை காக்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறாள். அதற்கு காரணம்,ஜப்பான் நீரால் சூழப்பட்ட தீவு நாடாக உள்ளது. அதை காப்பதற்கு நீரோடு தொடர்பு கொண்ட சரஸ்வதி துணை நிற்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

    மேலும், இனி மையான குரல், அதிர்ஷ்டம், அழகு, மகிழ்ச்சி, ஞானம், சக்தி ஆகியவற்றை அருளும் தெய்வமாகவும் அவள் போற்றப்படுகிறாள்.

    கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனிதநதிகள் நமது நாட்டில் மதிக்கப்படுவதைப்போல ஜப்பானி லும் நீர்நிலைகள், குளங்கள் ஆகிய வற்றை சரஸ்வதியாக பாவித்து வணங்குகிறார்கள். ஜப்பான் மீனவர்கள்.

    கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது, 'பென்சைட்டெனை வணங்கிய பின்னரே புறப்படுகிறார்கள். அங்கு உள்ள பிள்ளையார் ஷோட்டன்' எனவும், கருடன் 'கருரா' எனவும் அழைக்கப்படுகிறார்கள். மேலும், வாயு, வருணன் உள்ளிட்ட தேவர்களுக்கும் ஜப்பானில் சிலைகள் உள்ளன.

    கல்விக் கடவுளான சரஸ்வதி தேவி புத்த மதத்தில் ஞானம் அருளும் பெண் தெய்வமாக வழிபடப்படுகிறாள். இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்ட சரஸ்வதி வழிபாட்டை இன்றும் அங்கு உள்ள மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.


    நமது நாட்டின் சரஸ்வதி கையில் வீணை வைத்திருப்பதை போலவே, ஜப்பானிய பென்சைட்டெனும், தந்திகள் கொண்ட இசைக்கருவியை வைத்திருக்கிறாள். அந்த நாட்டு மக்கள், தங்களின் பிள்ளைகள் கல்வி, கலைகளில் சிறக்கவும், முக்கிய தேர்வுகளில் வெற்றி பெறவும் சரஸ்வதி கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.

    ஜப்பான் பாரம்பரிய விழாக்களில் 'பென்சைட்டென்' தெய்வத்திற்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபடுகின்றனர். கல்கத்தா நகரில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில், ஜப்பானின் இந்து கடவுள் வழிபாடு தொடர்பான புகைப்படங்கள் நிறைய வைக்கப்பட்டு உள்ளன.

    ×