என் மலர்
வழிபாடு
- கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
- அதிகாலை முதலே பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
திருத்தணி:
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நேற்று ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. இன்று ஆடி பரணியை முன்னிட்டு அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலில் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
வெளியூர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் மயில்காவடி, புஷ்பக் காவடி, பன்னீர் காவடிகள் சுமந்தும். உடலில் வேல், அம்பு அலகு குத்தியும் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

குழந்தைகள் முதல் முதியவர் வரை பம்பை உடுக்கை முழங்க கிராமியக் கலையோடு ஆடி பாடி சென்று முருகனை வழிபட்டனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காட்சி அளித்தது.
பக்தர்கள் காவடி செலுத்துவதற்கு தனி மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏற்கனவே காவடி செலுத்த கட்டணம் ரத்து செய்யப் பட்டு இருந்ததை பக்தர்கள் வரவேற்று உள்ளனர்.
பக்தர்கள் கூட்டத்தால் மலைக்கோவிலுக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக் கப்படவில்லை. கோவில் வாகனம் மட்டும் இயக்கப்பட்டது. பக்தர்கள் சரவணப் பொய்கை திருக்குளத்தில் புனித நீராடி படிக்கட்டுகளின் வழியாகவும் சென்று சுவாமியை தரிசித்தனர்.
வாகன நெரிசலை தவிர்க்க திருத்தணி நகரத்தின் நான்கு எல்லைகளிலும் அனைத்து பஸ்களும், வாக னங்களும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக அந்தந்த பகுதிகளில் இருந்து கோயில் சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தன.
ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு மலைக்கோயில், திருக்குளம், மலைப்பாதை, கோபுரம், உள்ளிட்ட அனைத்து பகுதி களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
பக்தர்கள் நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்வ தற்கு கோவில் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. பிரசாதம். குடிநீர். கழிப்பிட வசதிகள் சுகாதாரம் உள்ளிட்டவை சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
காவடி கொண்டு வரும் பக்தர்கள் திருக்குளத்தில் வீசி செல்லும் பூமாலைகளை அகற்றுவதற்கும், மலைக் கோயில். மலை பாதை பகுதிகளில் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் அகற்றவும் சுழற்சி முறையில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.
விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் இணை ஆணயர் அருணாச்சலம் (பொறுப்பு) அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ் பாபு, நாகன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் செய்து உள்ளனர்.
மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தமிழ்மாறன் மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முக்கிய இடங்களில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைத்தும், கண்காணிப்பு காமிராக்கள் அமைத்தும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
- சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் தலங்களில் திருமஞ்சன சேவை.
- நெல்லை ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, ஆடி 12 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: அஷ்டமி இரவு 11.11 மணி வரை பிறகு நவமி.
நட்சத்திரம்: அஸ்வினி பிற்பகல் 3.58 மணி வரை. பிறகு பரணி.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை.
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் தலங்களில் திருமஞ்சன சேவை. கிழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. நெல்லை ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம் -தாமதம்
மிதுனம்-திடம்
கடகம்- வரவு
சிம்மம்-விவேகம்
கன்னி-இரக்கம்
துலாம்- வெற்றி
விருச்சிகம்-புகழ்
தனுசு- பயணம்
மகரம்-ஆசை
கும்பம்-ஆர்வம்
மீனம்-சாந்தம்
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம்.
- வாஸ்து நாள் (காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை)
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-11 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி நள்ளிரவு 1.25 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: ரேவதி மாலை 5.27 மணி வரை பிறகு அசுவினி
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். வாஸ்து நாள் (காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை வாஸ்து செய்ய நன்று), தேவக்கோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில்களில் திருமஞ்சன அலங்கார சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன அலங்கார சேவை. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமி காலை சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மரியாதை
ரிஷபம்-லாபம்
மிதுனம்-சுபம்
கடகம்-கவனம்
சிம்மம்-சுகம்
கன்னி-தெளிவு
துலாம்- சிந்தனை
விருச்சிகம்-நிறைவு
தனுசு- தெளிவு
மகரம்-ஆர்வம்
கும்பம்-உறுதி
மீனம்-திடம்
- 442-வது ஆண்டு திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
- வருகிற 5-ந்தேதி தேரோட்டம்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும் 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், நடை பெற்றது. அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் 7 மணிக்கு சிறப்பு திருப்பலியும், 8.30 மணிக்கு பேராலயம் முன்பு உள்ள அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட கொடி மரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது.
அப்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பாட்டிருந்த படகில் இருந்து சைரன் ஒலி இசைக்கப்பட்டது. சமாதானபுறாக்கள் பறக்கவிடப்பட்டது.
விழாவில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகர் மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட ஆயிரகாக்கானோர் கலந்து கொண்டனர்.
பகல் 12 மணிக்கு முன்னாள் பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் பனிமய மாதா அன்னைக்கு பொன்மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை, ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது,
திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடிக்கு பல ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். வருகிற 5-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. திருவிழாவில், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது.
இந்த தேவாலயமானது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த தேவாலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி தூத்துக்குடி மக்கள் அனைவரும் கொண்டாடும் திருவிழா ஆகும். இந்த ஆண்டு 442-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த திருவிழா நாட்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவ-மாணவிகள் கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் மற்றும் நற்கருணை பவனி நடைபெறும்.
இந்த கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள்,5 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆங்காங்கே சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
- பிள்ளையாருக்கு ‘விக்னகர்த்தா’ என்ற பெயரும் உண்டு.
- `விக்னம்’ என்பதற்கு ‘இடையூறு’ என்று பொருள்.
விநாயகரை கும்பிட்டால் விக்கினம் தீரும் என்பது நம்பிக்கை. 'விக்னம்' என்பதற்கு 'இடையூறு' என்று பொருள். இந்த இடையூறுகளை நீக்குவதற்கு, விநாயகர் வழிபாடு முக்கியமான ஒன்று.

எந்த காரியத்தை தொடங்கும் போதும் பிள்ளையாரை வழிபட்டு தான் தொடங்குகிறோம். அப்படித்தான் தொடங்க வேண்டும் என்பது, இந்து சமயம் சொல்லும் ஆகம விதி. பிள்ளையாருக்கு 'விக்னகர்த்தா' (விக்னங்களை உண்டாக்குபவர்), 'விக்னேஸ்வரன்' (விக்னங்களை நீக்குபவர்) என்ற பெயரும் உண்டு.
நாம் ஒரு காரியத்தை தொடங்கும் போது அந்த காரியம் எந்த தடையும் இன்றி நன்கு நடைபெற வேண்டும் என்று நினைப்போம். அந்த நினைப்பை வணங்குதலாக, விநாயகரை நோக்கி வைக்க வேண்டும். விநாயகரை வழிபடாது தொடங்கும் காரியங்களில் இடையூறுகள் ஏற்படும் என்பதை பல புராணக் கதைகள் நமக்கு சொல்கின்றன.
வள்ளியை மணம் முடிக்கச் சென்ற முருகப்பெருமான் கதை நம்மில் பலருக்கும் தெரியும். வள்ளியை மணம் முடிக்கும் அவசரத்தில், அவர் தன் அண்ணனான விநாயகரை வணங்காமல் சென்று விட்டார். வள்ளியை மணம் முடிக்க அவர் வேடனாக, வேங்கை மரமாக, கிழவனாக என்று பல உருவங்கள் எடுத்தும் அவரது முயற்சி பலிக்கவில்லை.
அப்போது நாரதரின் மூலமாக தன் அண்ணனை வழிபடாமல் வந்த விஷயம் தெரியவர, உடனடியாக விநாயகரை நினைத்து வழிபட்டார் முருகப் பெருமான். அப்போது யானை வடிவில் வந்த விநாயகர், முருகப்பெருமானையும், வள்ளியையும் சேர்த்து வைத்தார்.
இதேபோல ஒவ்வொரு கடவுளரும், விநாயகரை வணங்க மறந்த போதெல்லாம் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டதை நமது புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

விநாயகரை திருப்திப்படுத்த ஒரு அச்சுவெல்லம், ஒரு கை பொரி, ஒரு பிடி அவல் மட்டுமே போதுமானது. இவற்றைக் கொண்டு விநாயகரை நினைத்து, தலையில் குட்டிக்கொண்டு 'சுக்லாம் பரதரம்..' என்ற சுலோகத்தை சொல்லி வழிபட்டால், அவர் உடனடியாக நம்மை தேடி வந்து நன்மைகளைச் செய்வார்.
- கலியுகத்தில் திருப்பாதம் பதித்து, திருக்காட்சி அளிப்பேன்.
- கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு மலைகளுக்கு நடுவில் இயற்கை எழில் சூழ சுயம்பு தேவியாக சொர்ண ரேகையுடன் வெளிப்பட்டவள், தேவி கருமாரி. இந்த தேவியை கருவாக வைத்து எழுப்பப்பட்டதே, தேவி கருமாரி அம்மன் ஆலயம். இது பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

தல வரலாறு
ஆதியும் அந்தமுமாகி அனைத்து உலகையும் காத்தருள்பவள், அன்னை ஆதிசக்தி. இவளே கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகங்களிலும் தாயாக நின்று உயிர்களை காத்தருளியவள். இதனையடுத்து, நான்காவது யுகமான, கலியுகம் மிகவும் கொடுமைகள் நிறைந்தது.
இந்த கலியுகத்தின் தீமைகளை உணர்ந்து அச்சம் அடைந்த தேவர்கள், இந்த யுகத்திலும் உலக உயிர்களைக் காத்தருள வேண்டுமென, மீண்டும் ஒருமுறை ஆதிசக்தியிடம் சரண் அடைந்தனர். குழந்தையின் அழுகுரலுக்கு ஓடோடி வரும் தாயான ஆதிசக்தி, அதற்கான வழியையும் கூறினாள்.
"யுகங்கள் தோன்றுவதற்கு முன்பே நான், என்னுடைய பரமனுடன் ஒன்றிணைந்து திருவடி பதித்து, எனக்கான இடத்தை தேர்வு செய்துள்ளேன். ஏழு மலைகளால் சூழ்ந்திருக்கும் எழிலார்ந்த அந்த வனத்தில், எம் வருகைக்காக அருவுருவமாக அமர்ந்து தவம் செய்யுங்கள். காலம் கனியும்போது அந்த புனித மண்ணிற்கு இக்கலியுகத்தின் நாயகியாக நான் வருகைபுரிவேன். அங்கே என் விஸ்வரூபக் காட்சியை தங்களுக்கு அருள் பாலிப்பேன்" என்றாள்.
மேலும் தேவி கூறுகையில், "அத்திருவடி அருட்கோட்டத்தில் நேரில் வந்து என்னை மனமுருகி வழிபட்டு செல்வோருக்கு, ருத்ரனின் திருநீற்று சாம்பலை நான் சிருஷ்டித்த தவசீலர்கள் மூலம் வழங்கி அனைவருக்கும் அருள் தருவேன். அதன் மூலம் அவர்களின் துயரங்களையும், துன்பங்களையும் அகற்றுவேன்" என்றாள்.
இக்கலியுகத்தில் திருப்பாதம் பதித்து, திருக்காட்சி அளிப்பேன் என தேவர்களுக்கு, ஆதிசக்தி அளித்த திருவாக்கின் காலம் கனிந்தது. அதன்படி, சிவபெருமானின் திருக்கர செங்கோலை தம் கரம் பற்றினாள்.
அதன்பின் ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தொழில்களை தமதாக்கி, பக்தர்களை ஆட்கொள்ளும் தனித்துவத்துடன் கரிய நாகரூபம் கொண்டாள். தமது திருவிளையாடலுக்காக படைத்த புனிதமான பெண் மணியை தீண்டினாள்.
இறந்தவளின் சடலத்தில், தான் உள் ஒளியாய் வெளிப்பட்டாள். எரி மயானச் சுடலையில் உதித்தாள். பரம்பரை தெய்வமாய் கலியுக நாயகி கருமாரி என்னும் திருநாமத்தில் நடமாடி வரம் தரும் சக்தியாய், வட வேதாரண்யம் எனும் திருவேற்காடு திருத்தலத்தில் தம் பாதம் பதித்தாள்.
தம்பு சுவாமிகள் வழியாக திருவாய் மலர்ந்து, திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் தேவஸ்தானம் எனும் திருக்கோவில் கண்டாள்.
இந்த கருமாரி தேவியே, தன் அருளாணைப்படி, ஏழு சக்திகளும் ஏழு மலைகளாக காவல் புரியும், மகா ஆரண்யத் திருத்தலம் வந்தாள். அப்போது அங்கே விண்ணுக்கும், மண்ணுக்குமான உயரத்தில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள் ஒன்று சேர்ந்த ஒளி வெள்ளமாய் பிரகாசித்தாள்.
அங்கே தேவி விஸ்வரூபக் காட்சி தந்து, தன் திருவடி பதித்த முழு முதற் தலம் இதுவே என்பதை பிரகடனப்படுத்தினாள்.
ஆதிசக்தி மகாஜோதியாய் காட்சி தந்து அடையாளம் காட்டிய இடம், அன்றைய வேகவதி ஆற்றின் பழங்கால பயணப்பாதை என்பது புவியியல் வரலாறு.
அங்கே 13 அடி ஆழத்தில் ஆவுடையார் அமைக்க கடைக்காலுக்கு இயந்திரங்களைக் கொண்டு மண் தோண்டப்பட்டது. அப்போது, வேகவதியின் நீரோட்டத்தை உறுதி செய்யும் விதமாக, தோண்டி முடித்தவுடன் நன்னீர் நீரூற்று பொங்கி எழுந்தது. அதில் மற்றுமொரு அதிசயமும் நிகழ்ந்தது.
நீருற்றில் குருதியும் கொப்பளிக்க , மூன்று சுவர்ண ரேகைகள் கொண்ட சுயம்புத் திருமேனியாக தேவி தன் பக்தர்களின் கண்முன்னே வெளிப்பட்டாள். இந்த ஆதிசக்தியான, தேவி கருமாரியம்மனே, தன்னை நாடி வந்து வழிபடுவோரின் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி, வளத்தையும், நலத்தையும் தந்து கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள்.

கோவிலின் தனிச்சிறப்பு
இத்திருக்கோவிலின் தனிச்சிறப்பு, இங்கு பரிகார பூஜைகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. தேவி கருமாரியம்மனை நேரில் வந்து வேண்டிக் கொண்டாலே வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின்பு, அவசியம் மீண்டும் ஒரு முறை நேரில் வந்து அம்மனுக்கு நன்றி கூற வேண்டும்.

இந்த வளாகத்தில், ஒரே கல்லினால் உருவான 51 அடி உயர தேவி கருமாரியின் சிலை, ஒரே இடத்தில் 108 திவ்ய தேசக்கோவில்கள், பய உணர்வுகளைப் போக்கும் பைரவர், நாக தோஷங்கள் நீக்கும் சர்வ கரிய நாக சொரூபிணி ஆலயம் ஆகியவையும் அமைந்துள்ளன. இதுதவிர தற்போது, 163 அடி உயர கோடி லிங்கமும் எழுப்பப்பட்டு வருகிறது.
இவ்வாலயத்தில் சித்ரா பவுர்ணமி மூன்று நாட்கள், வைகாசியில் மும்முடிசேவை, ஆடி ஞாயிறுக்கிழமை வழிபாடு, நவராத்திரி போன்றவை குறிப்பிடத்தக்க விழாக்களாக உள்ளன. இந்த கோவில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.
அமைவிடம்
செங்கல்பட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும், திருப்போரூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், பசுமையான ஏழு மலைகளுக்கு நடுவில் இத்திருக்கோவில் அமைந்திருக்கிறது. பேருந்தில் வருவோர் திருவடிசூலம் என்ற இடத்தில் இறங்கி, 2 கிலோமீட்டர் உள்ளே வர வேண்டும். திருவடிசூலம் தேவாரத்தலத்தினை அடுத்து இக்கோவில் அமைந்துள்ளது. திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் நேரடி பஸ் வசதி உள்ளது.
- திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, ஆடி 10 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: பஞ்சமி காலை 6.10 மணி வரை. பிறகு சஷ்டி பின்னிரவு 3.28 மணி வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 7 மணி வரை. பிறகு ரேவதி.
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: ேமற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் பவனி. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தர குசாம்பிகை புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. லால்குடி ஸ்ரீபிரலிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியர் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம் -சாந்தம்
மிதுனம்-முயற்சி
கடகம்- அமைதி
சிம்மம்-இரக்கம்
கன்னி-நலம்
துலாம்- உயர்வு
விருச்சிகம்-இன்பம்
தனுசு- நன்மை
மகரம்-புகழ்
கும்பம்-பரிசு
மீனம்-போட்டி
- பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா பெருந்திருவிழாவாகும்.
- அக்னி குண்டத்தில் கால்நடைகள் இறங்குவது தனிச்சிறப்பாகும்.
* பண்ணாரி அம்மனுக்கு தங்கத்தேர் ஒன்று உள்ளது. தங்கத்தேர் புறப்பாடு சாயரட்சை பூஜை நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிட தங்கத்தேர் புறப்பாட்டில் கலந்துகொள்வார்கள்.

* இக்கோவிலில் நடைபெறும் பங்குனி குண்டம் பெருவிழா அறிவிக்கப்பட்ட திருவிழாவாகும்.
* குண்டத்தில் பக்தர்கள் இறங்கிய பிறகு கால்நடைகள் இறங்குவது இங்கு காணப்படும் தனிச்சிறப்பாகும்.

* இக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நாள்தோறும் அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ராகிலட்டு, வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், ரவா கேசரி மற்றும் சர்க்கரைப்பொங்கல் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் அடுத்தடுத்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் குண்டத்திற்கு கிழக்குப்புறம் உள்ள மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது.
* தெப்பக் கிணற்றுக்கு வடக்குப் பக்கத்தில் ஆண்கள் குளிக்கும் வரிசைக் குழாய்களுக்கு அருகில் ஒரு தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். பகல் காலங்களில் மேய்ச்சலுக்கு வனத்திற்கு வரும் மாடுகள் தண்ணீர் குடிக்க அத்தொட்டிக்கு வருவது வழக்கம். இங்கே இரவுக் காலங்களில் குறிப்பாக கோடை காலங்களில் யானைகள் தண்ணீர் குடிக்கத் தொட்டிகளுக்கு வரும். இரவுக் காலங்களில் தனித்தோ, வெளிச்சமின்றியோ தெப்பக் கிணற்றுப் பக்கமாகச் செல்வது விரும்பத்தக்கதல்ல.
* மாடு தானாக பால் சொரிந்த இடத்தில் புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்க உருவமாக வேங்கை மரத்தின் அடியில் பண்ணாரி அம்மனும் தோன்றியதால் பண்ணாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
* இக்கோவிலுக்கு கிழக்குபுறம் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது, நாளிதழ்கள் மற்றும் ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள் பக்தர்கள் படிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது.
* முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சாமி சன்னதி சென்றடைய ஆறு இருக்கைகள் கொண்ட மின் ஊர்தி ஒன்று பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
* இக்கோவிலுக்கு கைகுழந்தைகளோடு வருகைதரும் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் அறை இருக்கை வசதிகளுடன் மேற்கு நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது.
* முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக 3 சக்கர நாற்காலிகள் உள்ளன. நுழைவு வாயிலில் இருந்து சன்னதியை எளிதில் சென்றடையும் வகையில் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
* இக்கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பாக 12 முடிநீக்கும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக முடி எடுக்கப்பட்டு வருகிறது.
* இக்கோவிலின் மேற்குபகுதியில் பவானிசாகர்-பண்ணாரி சாலையில் மருத்துவ மையம் துவங்கப்பட்டு அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகிறது. இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள் மற்றும் இரண்டு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் சுழற்சிமுறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
* முடிகாணிக்கை மண்டபத்திற்கு அருகில் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக குளியலறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முடிகாணிக்கை செலுத்தும் குழந்தைகளுக்கு முடி காணிக்கை மண்டபத்தில் சுடுநீர் எந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
* நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தேங்காயைப் போல உருண்டு திரண்டு உள்ளன. தேங்காய் சிதறுவது போல நமது பாவங்களும் சிதறுண்டு போகவே நாம் பண்ணாரி அம்மன் கோவிலில் சிதறுகாய் உடைத்து வழிபடுகிறோம்.
* இறைவன் கல்பகாலம் முடிந்து மீண்டும் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும்போது முதன் முதலில் தண்ணீரையே தோற்றுவிக்கிறான். அதனை நினைவு படுத்தும் வகையில் கொண்டாடப்படுவதே தெப்ப உற்சவம்.
- அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாக இருப்பது பராசக்தியாகும்.
- நான்கு பக்கங்களாலும் இத்தலம் வனத்தால் சூழப்பட்டுள்ளது.
அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாக இருப்பது பராசக்தியாகும். அப்பராசக்தியே பல்வேறு பெயர்களுடன் பல்வேறு தலங்களிலும் குடிகொண்டுள்ளாள். அச்சக்தியே கொங்கு நாட்டின் வடமேற்கு எல்லை அருகில் மைசூர் செல்லும் பாதையில் பிரதானமாக வீற்றிருக்கும் பண்ணாரி மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும்.
இத்தலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனத்தினிடையே அமைந்துள்ளது. நான்கு பக்கங்களாலும் இத்தலம் வனத்தால் சூழப்பட்டுள்ளது.

அடர்ந்த காட்டுப் பகுதியில் யானைகளும், காட்டுப்பன்றிகளும், மான்களும், நரிகளும், வண்ண மயில்களும், குரங்குகளும், முயல்களும், கரடிகளும் மற்றும் மிகக் கொடிய விஷ ஜந்துகளும் சர்வ சாதாரணமாக உலாவும். இத்தலத்தில் தெற்குப் பார்த்த வண்ணமாக எழுந்தருளியுள்ள பண்ணாரி மாரியம்மன் சுயம்பு லிங்க வடிவமாக உள்ளாள்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இவ்விடத்தில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும். காட்டாற்றின் பெயரோ தோரணப்பள்ளம் என்பதாகும். இக்காட்டாறு இத்தலத்தின் மேற்குப்புறத்தில் உள்ளது.
திம்பம் மலையின் அடிவாரம் அன்னை பண்ணாரி அம்மனின் அவதாரம் இவ்விடத்தில் நிகழப்போகிறது என்பதை உலகிற்கு அறிவிக்கவோ என்னவோ இக்காட்டாற்றின் துறையில் பசுவும், புலியும் ஒரே இடத்தில் நீர் குடிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

இச்சுற்று வட்டார கிராம மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு இவ்வனப்பகுதிக்குச் செல்வது வழக்கம். இம்மக்கள் மாடுகளுக்குப் பட்டிகள் அமைத்து வனப் பகுதியிலேயே தங்கிக் கொள்வார்கள். தினசரி காலையில் மாடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்வார்கள்.
பின்னர் மாலையில் மாடுகளை ஓட்டி வந்து பட்டியில் அடைப்பார்கள். காலையிலும், மாலையிலும் பாலைக் கறந்து மாட்டின் உரிமையாளருக்குக் கொடுப்பார்கள்.
ஒரு பட்டியிலிருந்து காரம்பசு (மாடு) ஒன்று கறக்கச் சென்றால் கறப்பதற்கு நில்லாமல் தன் கன்றுக்கும் கொடுக்காமல் இருப்பதை மாடுகளை மேய்ப்பவன் அறிந்தான். மறுநாள் மாட்டினைப் பின்தொடர்ந்து சென்று கவனித்தான்.

அப்பசு தினந்தோறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணங்கு புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாகப் பொழிவதை மறைவில் இருந்து பார்த்தான்.
இந்நிகழ்ச்சியை பார்த்த அவன் மறுநாள் சுற்றுவட்டார கிராம மக்கள் ஊர்ப் பெரியவர்களிடமும் விவரத்தைச் சொல்லி அனைவரையும் அழைத்துக்கொண்டு மாட்டினைப் பின்தொடர்ந்து சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் காரம்பசு பால் சொரிவதைக் காண்பித்தான்.
அனைவரும் இவ்வரிய நிகழ்ச்சியினைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றார்கள். இதுதெய்வத்தின் திருவிளையாடல் என்று எண்ணிக் கைகூப்பித் தொழுதார்கள்.

மக்கள் அனைவரும் அவ்விடத்தை சுத்தம் செய்யும் போது கணங்கு புற்கள் சூழ்ந்த ஒரு புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்கத் திருவுருவும் வேங்கை மரத்தின் அடியில் இருப்பதைக் கண்டார்கள்.
அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு தெய்வ அருள் உண்டாகி தான் கேரளா மாநிலம் வண்ணார்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரிலிருந்து பொதிமாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித் துணையாக வந்தேன் என்றும் எழில் மிகுந்த இவ்வியற்கை சூழலில் தான் தங்கி விட்டதாகவும் தன்னை இனிமேல் பண்ணாரி அம்மன் எனப்போற்றி வழிபட்டு வாருங்கள் எனவும் அருள்வாக்கில் கூறினார்.

அன்னையின் அருள்வாக்கின்படி அவ்விடத்தில் கணங்குப்புற்கள் கொண்டு ஒரு குடில் அமைத்துக் கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அன்னையை வழிபட்டு வந்தனர். பின்பு ஊர் மக்கள் அன்னையின் சிறப்பு கருதி அன்னைக்கு விமானத்துடன் கூடிய சிறு கோவில் அமைத்து பத்மபீடத்துடன் திரு உருவம் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.
- ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-9 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தி காலை 8.40 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 8.41 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் புஷ்பாங்கி சேவை. வடமதுரை ஸ்ரீ சவுந்தர ராஜப்பெருமாள் குதிரை வாகனத்தில் விடையாற்று உற்சவம். சோழவந்தான் சமீபம் குருவித்துறை குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-போட்டி
ரிஷபம்-மகிழ்ச்சி
மிதுனம்-தேர்ச்சி
கடகம்-உயர்வு
சிம்மம்-சுகம்
கன்னி-செலவு
துலாம்- வரவு
விருச்சிகம்-முயற்சி
தனுசு- பரிவு
மகரம்-சிந்தனை
கும்பம்-பாராட்டு
மீனம்-வெற்றி
- திருமணங்கள் செய்யக் கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை.
- ஆடி மாதம் தெய்வீகப் பண்டிகைகள் அதிகம்.
முந்தய காலங்களில் நம் முன்னோர்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்து வந்தனர். `ஆடிப்பட்டம் தேடி விதை' என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான வேலைகளில் ஈடுபடுவார்கள்.

எனவே ஆடி மாதம் விவசாயத்திற்காக செலவு செய்யும் காலமாக இருந்ததால் அந்த சமயத்தில் வேறு செலவுகள் செய்ய பணம் இருக்காது. அதனால்தான் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறாமல் இருந்ததே ஒழிய, ஆடியில் திருமணங்கள் செய்யக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை.
ஆடி மாதம் முழுவதுமே விசேஷம் தான். ஒரு வருடத்தை போக சம்பிரதாயம், யோக சம்பிரதாயம் என இரண்டாகப் பிரிப்பர். போக சம்பிரதாயம் என்பது தை மாதம் முதல் ஆனி வரை உள்ள காலம்.

யோக சம்பிரதாயம் என்பது ஆடி முதல் மார்கழி வரை. போக சம்பிரதாயக் காலத்தில் கல்யாணம், விருந்து, விசேஷங்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கும் காலம். யோக சம்பிரதாயம் என்பது தபஸ், யாகம், யக்ஞம், பூஜைகள், பிரார்த்தனைகள் செய்யக்கூடிய காலம். யோக காலத்தில் முதல் மாதம் ஆடி என்பதால் தெய்வீகப் பண்டிகைகள் அதிகம்.
ஆடி பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம் என்று மாதம் முழுவதுமே விசேஷமாக உள்ளது. ஆடி மாதத்தில் சந்திரன் சொந்ந வீட்டில் இருக்கிறார்.
அந்த சொந்த க்ஷேத்திரத்தில், சூரியனுடன் சம்பந்தம் ஏற்படும் பொழுது, அதற்கு விசேஷம் அதிகம் உண்டு.
- ஆடி கிருத்திகை வருகிற 9-ந் தேதி வருகிறது.
- உற்சவங்களில் ஆடிக் கிருத்திகை விழா மிகவும் விசேஷமானது.
உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடி கொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடி கிருத்திகை விழா மிகவும் விசேஷமானது. முக்கியத்துவம் வாய்ந்தது.

கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷமானது.
வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை: உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.
இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
இந்த ஆண்டு ஆடி கிருத்திகை வருகிற 9-ந் தேதி வருகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பதவி உயர்வு தானாக வரும்.
ஆடி கிருத்திகை விரதத்தை நாரதர் 12 ஆண்டுகள் மேற்கொண்டார். இதனால் அவருக்கு முனிவர்களில் முதன்மையான முனிவர் என்ற பதவி உயர்வு கிடைத்தது.
இந்த நாட்களில் காலையில் நீராடி வழிபட வேண்டும். அப்போது கந்த சஷ்டி கவசம் மற்றும் சண்முக கவசம் பாடுவது நல்லது. முருகனுக்கு அன்று பாலாபிஷேகம் செய்வது கூடுதல் நன்மை தரும்.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழனியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப் பொறிகள். சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறு முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.
உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள். அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதி உலா என விமரிசையாக நடக்கிறது.

காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பகாவடி, மச்சக்காவடி, செடில் காவடி, சேவல்காவடி, தீர்த்தக்காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர்.
கோயில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்த புராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற பக்தி பாமாலைகள் பக்தி சிரத்தையுடன் பாடிவிரதத்தை முடிக்கின்றனர்.
அறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலைகளில் சிறந்த மலையாக திருத்தணிகை மலையை கந்த புராணம் போற்றி புகழ்கிறது. திருத்தணி முருகனை இருந்த இடத்தில் இருந்தே மானசீகமாக வழிபட்டாலும் திருத்தணி என்ற பெயரை சொன்னாலும் நம் தீவினைகள் நீங்கும் என்பது அருளாளர்கள் வாக்கு.
முருகப்பெருமான் இத்தலத்தில் ஞானசக்தியாகிய வேலைத் தாங்கி நிற்கிறார். முருகனின் பதினாறு வகையான திருவுருவங்களில் இங்கு ஞானசக்திதரர் என்னும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சனைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குருதிசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.






