என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை.
    • இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் அலங்காரம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-19 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பஞ்சமி பிற்பகல் 3.16 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம் : திருவாதிரை இரவு 6.40 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவள்ளூர் வீரராகவர் உற்சவம் ஆரம்பம்-சிம்ம வாகனத்தில் பவனி.

    இன்று ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருந்தூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் உற்சவம் ஆரம்பம். சிம்ம வாகனத்தில் பவனி.

    மதுரை ஸ்ரீ சுந்தரரேஸ்வரர் தங்கப் பல்லக்கில் பவனி. சீர்காழி சட்டை நாதர் கோவிலில் ஸ்ரீ திருநிலை நாயகி அம்பாள் ஸ்ரீ திருஞான சம்பந்தருக்கு தங்கக் கிண்ணத்தில் ஞானப்பால் தங்கும் நிகழ்ச்சி. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அலங்காரம். திருமாலிருஞ்சோலை. ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் அலங்காரம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-உறுதி

    மிதுனம்-நிறைவு

    கடகம்-தெளிவு

    சிம்மம்-இன்பம்

    கன்னி-சாந்தம்

    துலாம்- பக்தி

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- களிப்பு

    மகரம்-உற்சாகம்

    கும்பம்-நலம்

    மீனம்-நட்பு

    • விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா வருவது வழக்கம்.
    • சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 9-ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சங்கர நாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவ தலங்களில் ஒன்று.

    இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா வருவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று பெருங்கோட்டூரில் அமைந்துள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலில் கோவில் யானை கோமதி பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் இரவு 63 நாயன்மார்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், 7-ந்தேதி (புதன்கிழமை) இரவு சுவாமி, அம்பாள், நடராஜர், முதல் மூவர்கள் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும், நள்ளிரவில் நடராஜர் வெள்ளை சாத்தி அலங்காரத்திலும், 8-ந்தேதி (வியாழக்கிழமை) காலை நடராஜர் பச்சை சாத்தி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

    சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நகர செயலாளர் பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் முப்பிடாதி, வக்கீல் காளிராஜ், ஜெய குமார், ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கைலாச காமதேனு வாகன புறப்பாடு.
    • சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-18 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தி மாலை 4.49 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : மிருகசீர்ஷம் இரவு 7.26 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கைலாச காமதேனு வாகன புறப்பாடு. திண்டுக்கல் ஸ்ரீ பத்மகிரீஸ்வரர் பவனி. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அலங்காரம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அலங்காரம்.

    இன்றைய ராசி பலன்

    மேஷம்-பரிசு

    ரிஷபம்-தனம்

    மிதுனம்-தேர்ச்சி

    கடகம்-செலவு

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-கடமை

    துலாம்- இரக்கம்

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- உண்மை

    மகரம்-சலனம்

    கும்பம்-உயர்வு

    மீனம்-மேன்மை

    • உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
    • பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    தஞ்சாவூர்:

    உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கட்டிட கலையில் சிறந்து விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி புறப்பாடும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதனையொட்டி தஞ்சை மேல வீதியில் உள்ள பெரிய கோவில் தேர் நிலையில் பந்தக்கால் முகூர்த்தம் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது. முன்னதாக பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரில் பந்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் சத்யராஜ், கண்காணி ப்பாளர் ரவி, ஆய்வாளர் பாபு மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • பித்ரு கடன் தீர்க்க உகந்த நாள்.
    • திருதியை திதியின் அதிதேவதை கவுரி என்பதால் பார்வதி தேவியை வழிபட்டால் திருமணத் தடை அகலும்.

    அட்சய திருதி நாளில் செய்ய வேண்டிய சுப காரியங்கள்:

    அட்சய திருதியை நாளான இன்று புதுக்கணக்கு தொடங்க, புதிய தொழில் துவங்க வீடு கட்ட ஆரம்பிக்க, கிணறு தோண்ட, நெல் விதைக்க, கல்வி கற்க ஆரம்பித்தல், பெண் பார்க்க, திருமணம் நிச்சயித்தல் போன்றவற்றிற்கு சிறந்த நாளாகும்.

    பித்ரு கடன் தீர்க்க உகந்த நாள்.

    திருதியை திதியின் அதிதேவதை கவுரி என்பதால் அன்று பார்வதி தேவியை வழிபட்டால் திருமணத் தடை அகலும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.

    பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து செந்தாமரை மலர்களால் வழிபட்டால் தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.

    • தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வியில் மேன்மை கிட்டும்.
    • தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் உண்டாகும்.

    நமது நாட்டில் பெரும்பான்மையான பண்டிகைகள் பஞ்சாங்கத்தின் முக்கிய அம்சங்களான திதி மற்றும் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு அனுசரிக்கப்படுகின்றன. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிப்பிடுவது திதியாகும். பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை. சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் வளர்தல் என்று பொருள்.

    அட்சய திருதியை நாளான இன்று செய்ய வேண்டிய தான தர்மங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    * கோடை வெயில் தாக்கம் தீர குடை, விசிறி, காலணி, பாய், போர்வை வழங்கினால் இன்ப வாழ்வு உண்டாகும்.

    * ஆடை தானம் செய்ய மன நிம்மதி கிட்டும்.

    * தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வியில் மேன்மை கிட்டும்.

    * தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் உண்டாகும்.

    * தீராத நோயால் அவதிப்படுபவர்கள், உடல் நிலை மோசமானவர்களுக்கு மருந்து வாங்கித் தருவதால், உடல் ஆரோக்கியமாகும்.

    * பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து பசுவிற்கு உணவளித்தால் சகலபாவமும் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.

    * பெண்கள் புடவை, ஜாக்கெட் மற்றும் மங்களப் பொருட்களை தானமாக வழங்க சுமங்கலித்தன்மை கூடும்.

    * படிக்கும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

    • அட்சய திருதியை நாளில் ஆதிசங்கரருக்கு ஏழை பெண் வறுமையிலும் நெல்லிக்கனியை தானம் தந்தார்.
    • கிருஷ்ணன் தனது நண்பர் குசேலர் அன்புடன் கொடுத்த அவலை அட்சயம் என்று கூறி மூன்று பிடி உண்டு கோடி கோடியாக செல்வங்களை அள்ளிக் கொடுத்து குசேலனை குபேரனாக்கினார்.

    அட்சய திருதியை நாளில் நடந்த வரலாற்று சம்பவங்கள்

    * படைத்தல் தொழிலை நடத்தி வரும் பிரம்மா அட்சய திருதியை நாளில் உலகத்தை படைத்தார். அதனால் தான் உலக மக்களுக்கு தேவையான வளங்கள் உற்பத்தியாகிக் கொண்டு இருக்கிறது. மக்கள்தொகை உபரியாகிக் கொண்டு இருக்கிறது.

    *அட்சய திருதியை நாளில் ஆதிசங்கரருக்கு ஏழை பெண் வறுமையிலும் நெல்லிக்கனியை தானம் தந்தார். மனம் குளிர்ந்த ஆதிசங்கரர் ஏழைப் பெண்ணின் வறுமை நீங்கும் எனக்கூறி, செல்வத்துக்கு அதிதேவதையான ஸ்ரீமகாலட்சுமி தேவியாரை மனதால் நினைத்து தியானம் செய்து "கனகதாரா" ஸ்தோத்திரத்தைப் பாடி ஏழை பெண்ணின் வறுமையை போக்க தங்க நெல்லிக் கனிகளை மழையாக பொழியச் செய்தார்.

    * இதே நாளில் கிருஷ்ணன் வறுமையில் வாடிய தனது நண்பர் குசேலர் அன்புடன் கொடுத்த அவலை அட்சயம் என்று கூறி மூன்று பிடி உண்டு கோடி கோடியாக செல்வங்களை அள்ளிக் கொடுத்து குசேலனை குபேரனாக்கினார்.

    * மகா விஷ்ணுவின் அதிபதி கிழமையான புதன்கிழமையும் கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியும் இணைந்த நாளில் அட்சய திருதியை வருவதால் அன்றைய தினம் மகாலட்சுமி, நாராயணர் படம் வைத்து கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம் பாடி, குசேலர் கதை படித்து அவல் பாயாசம் வைத்து வழிபட்டால் பல தலைமுறை வறுமை, கடன், தீராத சொத்து பிரச்சினை, திருமணத் தடை தீரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    * திருப்பதி ஏழுமலையானின் திருமணத்திற்கு கடன் வழங்கிய குபேரன் அட்சய திருதியை நாளில் மகாலட்சுமியை வழிபட்டு சங்கநிதி, பதும நிதியை பெற்றதாக ஐதீகம். எனவே அன்றைய தினம் லட்சுமி குபேர பூஜை செய்தால் குறையாத செல்வம் உள்ள செல் வந்தர்களாக, லவுகீக வாழ்க்கைக்கு தேவையான அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்று பூரண நலத்துடன் வாழலாம்.

    • அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் சேரும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
    • அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டும் தான் தங்கம் சேரும் என்பதில்லை.

    அட்சயம் என்ற சொல்லுக்கு குறைவில்லாதது என்று பொருள். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் மென்மேலும் வளரும், இந்த நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து பாக்கிய பலனை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

    சமீப காலத்தில் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் சேரும் என்ற நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டும் தான் தங்கம் சேரும் என்பதில்லை.

    பரணி, பூரம், பூராடம் போன்ற சுக்கிரனின் நட்சத்திரம் வரும் நாட்களில் புதன், சுக்கிர ஹோரையில் தங்க நகை வாங்கலாம். அதே போல் புதன், வெள்ளி கிழமைகளில் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரம் சேர்ந்தது போல இருக்கும் நாட்களில் புதன், சுக்கிரன் ஹோரைகளில் நகை வாங்கினால் தங்கம் சேரும்.

    அன்னை மகாலட்சுமி கைகளில் இருந்து பொற்காசுகள் கொட்டும் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் ஐஸ்வர்யம் எப்போதும் தங்கும்.

    அட்சய திருதியை அன்று வாங்கக் கூடிய சில சுப மங்களப் பொருட்கள்:

    மண்பானை, துளசி செடி, கல் உப்பு, மல்லிகை பூ, சர்க்கரை, வெள்ளை தாமரை, நவதானியங்கள், ராமர் பாதம், சோழி, ஸ்ரீசக்கரம், வலம்புரிச்சங்கு, ஸ்வஸ்திக் சின்னம் போன்ற பொருட்களை வாங்கலாம்.

    சந்தனம், மஞ்சள் கிழங்கு, குங்குமம், வெற்றிலை பாக்கு, முனை முறியாத பச்சரிசி போன்றவற்றை வாங்கினால் லட்சுமி கடாட்சம் கூடும்.

    • கொடிமரம், பொதுவாக சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய ஐந்து வகையான மரங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
    • கோவிலில் இறைவனை வணங்க முடியாவிட்டாலும் கொடிமரத்தையாவது வணங்குவது அவசியம்.

    கொடிமரம் என்பது இந்து கோவில்களில் பலி பீடத்துக்கு அருகே கொடியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட மரமாகும். பல ஆலயங்களில் கொடி மரமானது உள்ளது. சமஸ்கிருதத்தில் கொடிமரம், 'துவ ஜஸ்தம்பம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கொடிமரம் மிகவும் புனிதமானது. இதன் சிறப்புகளைப் பற்றி காணலாம்.

    பொதுவாக ஆலயங்கள் ஆகம விதிப்படி கட்டப்படுகிறது. அதாவது ஒரு கோவிலை புனித உடலுடன் ஒப்பிடலாம். அதன்படி தலைப்பகுதியை கருவறையாகவும், மார்புப் பகுதியை மகா மண்டபமாகவும், வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்பிள் பகுதி கொடிமரமாகவும், கால் பகுதியை ராஜ கோபுரமாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு ஆகம விதிப்படி கட்டப்படும் கோவில்களில் திருவிழா நடைபெறும்போது முதல் நாள் கொடியேற்றமானது நடைபெறும். தேவர்கள், இந்த கொடிமரத்தின் வழியாகத்தான் கோவிலுக்குள் வருவதாக கூறப்படுகிறது.

    கொடி மரத்தின் அமைப்பு

    கொடிமரம், பொதுவாக சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய ஐந்து வகையான மரங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. மனிதனின் முதுகு தண்டைப் போன்றது கோவிலின் கொடிமரம். நமது முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போல கொடிமரமும் 32 வளையங்களுடன் அமைக்கப்படுகிறது.

    கோவில் சன்னிதிக்கும், கோபுரத்துக்கும் இடையே கொடிமரம் அமைந்திருக்கும். அதிகபட்சமாக 13 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்படும். கொடிமரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே நேரம் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்தில் இருக்கும்.

    கொடிமரம் மூன்று பாகங்களை கொண்டது. இது பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளின் அம்சம் பொருந்தியது. சதுரமான அடிப்பாகம் பிரம்மனையும், எண்கோணப்பகுதியான இடைப்பாகம் விஷ்ணுவையும், உருண்ட நீண்ட மேல்பாகம் சிவனையும் குறிக்கிறது. எனவே கொடிமரத்தை வணங்குவது சிறப்பான ஒன்றாகும். கொடிமரத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பர். கொடிமரத்தின் மேலே உலோகத் தகடுகள் அமைக்கப்பட்டிருக்கும். சில கோவிலில் கொடிமரத்தை இடி, மின்னலை தாங்கும் இடிதாங்கியாகவும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    சிறப்புகள்

    கோவிலில் இறைவனை வணங்க முடியாவிட்டாலும் கொடிமரத்தையாவது வணங்குவது அவசியம். ஏனென்றால் கோவிலில் இறைவனை வணங்குவதும், கொடி மரத்தின் கீழே விழுந்து வணங்குவதும் ஒன்றாக கருதப்படுகிறது. கொடிமரத்தை வணங்கும்போது மனதில் உள்ள தீய எண்ணங்களை நீக்கி, தூய மனதுடன் வணங்க வேண்டும். இறைவனின் அருளைப்பெற, நம்மை தகுதிப்படுத்த கொடிமர வணக்கம் அவசியமாகும்.

    நம்முடைய ஆன்மா இறைவனை தஞ்சமடைய வேண்டுமானால், நமது மனம் ஒருநிலையுடன் நிறுத்தப்பட வேண்டும். இதை உணர்த்தவே கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். அகர சக்திகளை அழிக்கவும், சிவகணங்களை கோவிலுக்குள் வரவைக்கவும், ஆலயத்தையும் பக்தர்களையும் காக்கவும் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.

    கொடி மரத்தின் உச்சியில் அந்தந்த கோவில் இறைவனின் வாகனம் அடையாள சின்னமாக அமைக்கப்படும். அதன்படி, விநாயகர் கோவிலில் மூசிகம், சிவன் கோவிலில் நந்தி, விஷ்ணு கோவிலில் கருடன், குபேரன் கோவிலில் நரன், முருகன் கோவிலில் மயில் அல்லது சேவல், சாஸ்தா கோவிலில் குதிரை, வருணன் கோவிலில் அன்னம், எமன் கோவிலில் எருமை, சனிபகவான் கோவிலில் காகம், இந்திரன் கோவிலில் யானை, துர்க்கை மற் றும் அம்மன் கோவில்களில் சிம்மம் என உருவங்கள் பொறித்த கொடி ஏற்றப்படும். இவ்வாறு ஏற்றப்படும் கொடியானது திருவிழா இறுதி நாளில் இறக்கப்படும்.

    இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய கொடிமரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், ஆராதனை, நைவேத்தியம் முதலான அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதி. அந்த அளவுக்கு கொடிமரம் மூலவருக்கு நிகராக கருதப்படுகிறது. கொடிமரத்துக்கு அருகில் நின்று நாம் வேண்டும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் சென்றடையும் என்பது நம்பிக்கை.

    • இன்று அட்சய திருதியை, சுபமுகூர்த்த தினம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-17 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திருதியை இரவு 8.41 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : ரோகிணி இரவு 8.32 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    அட்சய திருதியை, சுபமுகூர்த்த தினம், திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

    இன்று அட்சய திருதியை, சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கும்பகோணம் பெரிய கடை தெருவில் 12 கருட சேவை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும் இரவு அன்ன வாகனத்திலும் புறப்பாடு. மங்கையர்கரசி நாயனார் குரு பூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிறைவு

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-நன்மை

    கடகம்-ஆதாயம்

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-களைப்பு

    துலாம்- உறுதி

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- ஆர்வம்

    மகரம்-உதவி

    கும்பம்-லாபம்

    மீனம்-நன்மை

    • 12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார்கள்.
    • இந்திரவிமானத்தில் எழுந்தருளும் மீனாட்சி 4 மாசி வீதிகளில் எழுந்தருளி திக்கு விஜயம் செய்கிறார்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (29-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்ககொடி மரம் பல வண்ண மலர்கள், மக்காச்சோளம் உள்ளிட்ட நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    காலை 10 மணியளவில் பிரியாவிடையுடன் சுந்தரே சுவரரும், மீனாட்சி அம்மனும் கொடி மரம் முன்பு எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து 10.30 மணி முதல் 10.59 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி-அம்பாள் முன்னிலையில் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதி முன்பாக உள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

    12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார்கள்.

    விழாவின் முதல் நாளான இன்று இரவு கற்பக விருட்சம்-சிம்ம வாகனத்தில் சுவாமி-அம்பாள் 4 மாசி வீதிகளில் எழுந்தருளுகிறார்கள்.

    2-ம் நாளில் (30-ந்தேதி) காலையில் தங்கச்சப்பரத்திலும், இரவு பூதம்-அன்ன வாகனத்தில் வீதி உலா வருகிறார்கள். 1-ந்தேதி காலையில் தங்கச்சப்பரத்திலும், இரவு கைலாசபர்வதம்-காமதேனு வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.

    4-ம் நாளில் (2-ந்தேதி) காலை 9 மணிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து சின்னடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகபடியில் எழுந்தருளுகிறார்கள். மாலை 6 மணி அங்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் சுவாமி-அம்பாள், மாலை மீண்டும் கோவிலுக்கு சென்றடைகிறார்கள்.

    5-ம் நாள் (3-ந்தேதி) காலையில் தங்க சப்பரத்தில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் மாசி வீதிகள் வழியாக வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாயண சாவடியில் எழுந்தருளுகிறார்கள். இரவு தங்கக்குதிரை வாகனத்தில் வடக்கு மாசி வீதி, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்கு சென்றடைகிறார்கள்.

    6-ம் நாள் (4-ந்தேதி) காலை 7.30 மணிக்கு தங்க சப்பரத்தில் வீதி உலாவும், இரவு தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபத்தில் வீதி உலாவும் நடக்கிறது. 7-ம் நாள் (5-ந்தேதி) காலை கங்காளநாதர் மர சிம்மாசனத்தில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் 4 மாசி வீதி வழியாக உலா வருகின்றனர். இரவு நந்திகேஸ்வரர், யாழி வாகனத்தில் வீதி உலா புறப்பாடு நடக்கிறது.

    8-ம் நாள் (6-ந்தேதி) காலை தங்க பல்லக்கில் சுவாமி-அம்பாள் அருள் பாலிக்கின்றனர். இரவு 7.35 மணிக்கு மேல் மீனாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள ஆறுகால் பீடத்தில் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

    அப்போது அம்மனுக்கு கிரீடம் சாற்றி செங்கோல் கொடுக்கும் வைபவம் நடக் கிறது. மறுநாள் (7-ந்தேதி) காலை மரவர்ண சப்பரத்தில் வீதி உலா நடக்கிறது. அன்று மாலை அஷ்டதிக்கு பாலகர்களை எதிர்த்து மீனாட்சி அம்மன் வெற்றி பெறும் திக்குவிஜயம் நடக்கிறது. இந்திரவிமானத்தில் எழுந்தருளும் மீனாட்சி 4 மாசி வீதிகளில் எழுந்தருளி திக்கு விஜயம் செய்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற 8-ந்தேதி விமரிசையாக நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் உலா வருகிறார்கள். காலை 8.15 மணி முதல் 9.15 மணிக்குள் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மிதுன லக்னத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார்கள்.

    மறுநாள் (9-ந்தேதி) அதிகாலை 5.05 மணி முதல் 5.28-க்குள் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங் குகிறது. பெரிய தேரில் சுந்தரேசுவரரும், சிறிய தேரில் மீனாட்சியும் எழுந்தருளுவார்கள். பக்தர்கள் வெள்ளத்தில் 4 மாசி வீதிகளில் தேர் ஆடி அசைந்து வரும் நிகழ்வு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அன்று இரவு சப்தவர்ண சப்பரத்தில் வீதி உலா நடக்கிறது.

    12-ம் நாள் இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள். இத்துடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் மே12-ந்தேதி அதிகாலை நடைபெறவுள்ளது.

    • பத்தரை மாற்று தங்கம் என்பது பத்து பங்கு தங்கம், அரை பங்கு செம்பு கலந்தது.
    • அபரஞ்சி தங்கத்தை பற்றி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ராமாயண பாடல்களை இயற்றியபோது, கம்பர் ஓர் இடத்தில் அதிக தயக்கம் கொண்டார் என கூறுவது உண்டு.

    ராமர் பிறந்ததும் அவரது முகத்தின் பிரகாசத்தை எதனோடு ஒப்பிடுவது என்று கம்பருக்கு தயக்கம் ஏற்பட்டதாம். அதாவது, பிரகாசமான எதனோடு ஒப்பிட்டாலும், அது ராமரின் முக அழகுக்கு ஈடாகாது என்பதால் கம்பர் தயங்கியதாக இலக்கிய ஆர்வலர்கள் கூறுவது உண்டு.

    கள்ளழகரின் சிலையை பொன்னால் வடிவமைக்க நினைத்தவர்களுக்கும் அதுபோன்ற தயக்கம் ஏற்பட்டது போலும். எத்தகைய பொன்னாக இருந்தாலும், அது அழகருக்கு ஈடாகாது என எண்ணி உள்ளனர்.

    பத்தரை மாற்று தங்கம், பத்து மாற்று தங்கம் என்றெல்லாம் சொல்லப்படுவது உண்டு.

    பத்தரை மாற்று தங்கம் என்பது பத்து பங்கு தங்கம், அரை பங்கு செம்பு கலந்தது. பத்துமாற்று தங்கம் என்பது செம்பு கலக்காத சொக்கத்தங்கம். ஆனால், அதைவிடவும் கூடுதல் சிறப்பு கொண்ட தங்கத்தில் அழகரின் விக்ரகத்தை உருவாக்க வேண்டும் என பழங்காலத்திலேயே முடிவு செய்து அலசி ஆராய்ந்துள்ளனர்.

    அப்படி தேடியபோது அவர்களுக்கு அபரஞ்சி தங்கம் பற்றி தெரியவந்துள்ளது. அகராதியில் அபரஞ்சி தங்கம் என்றால் என்ன என்று நாம் தேடினால் 'புடமிட்ட பொன்' என பொருள் கிடைக்கிறது.

    அதாவது, சொக்கத்தங்கத்தைவிட இன்னும் தூய்மை கொண்டதாக சொல்கிறார்கள்.

    அழகர்கோவிலின் மூலவர் சுந்தரராஜ பெருமாள். உற்சவர் கள்ளழகர். இதில் அழகர் என்றால் அழகில் சொக்க வைப்பவர். அப்படிப்பட்ட அழகரை கண்டதும் பக்தர்களை தானாக ஈர்க்கும் வகையில் அவரது சிலை அமைய வேண்டும் என்பதற்காக அபரஞ்சி தங்கத்தை பயன்படுத்தி மிகவும் கண்ணும் கருத்துமாக இந்த சிலையை உருவாக்கி இருக்கிறார்கள். அபரஞ்சி தங்கத்தை பற்றி தமிழ் இலக்கியத்திலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    திருக்குற்றாலக் குறவஞ்சி, அபரஞ்சி தங்கத்தை குறவஞ்சியின் மேனிக்கு உவமையாக பாடியுள்ளது.

    "வஞ்சி எழில்அபரஞ்சி வரிவிழி நஞ்சி". -இதுதான் அந்த பாடல்வரி.

    இதற்கு உரை எழுதிய தமிழ் அறிஞர்கள், அபரஞ்சி என்பதை வார்த்துவிட்ட பொன் என்றும், அத்தகையை மேனி பொலிவை உடையவள் குறவஞ்சி எனவும் கூறுகிறார்கள்.

    அபரஞ்சி தங்கத்தால் செய்த 2 சிலைகள்தான் உள்ளதாக அழகர்கோவில் பட்டர்கள் கூறுகிறார்கள்.

    அதில் ஒன்று கள்ளழகர் சிலை என்றும், மற்றொன்று திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் உள்ள சிலை எனவும் தெரிவித்தனர்.

    மேலும், அழகர் விக்ரகத்துக்கு அழகர் மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற நீரால் அபிஷேகம் செய்தால் சிலை கருத்து விடக்கூடும் என்றும் தெரிவித்தனர்.

    ×