என் மலர்
ராசிபலன் - Rasi Palan

Today Rasipalan: இன்றைய ராசிபலன்-09.08.25
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
எதிரிகள் விலகும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.
ரிஷபம்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தைப் புதுப்பிக்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் சிறப்பாகப் பணியாற்றிப் பாராட்டுப் பெறுவீர்கள்.
மிதுனம்
விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். தொழிலில் வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
கடகம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கன்னி
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு உறவினர்களும், நண்பர்களும் கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
துலாம்
தட்டுப்பாடுகள் அகல கட் டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டிய நாள். எதிர்பார்த்த தொகை வந்தாலும் இருமடங்காக செலவு வரும். இல்லத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.
விருச்சிகம்
முன்னேற்றம் கூடும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பஞ்சாயத்துகள் சாதகமாகும். வீடு வாங்கும் அமைப்பு உண்டு. பயணங்களால் பலன் கிடைக்கும்.
தனுசு
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வரலாம்.
மகரம்
மகிழ்ச்சி கூடும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
கும்பம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தாமதமாக சில வேலைகளை செய்ய ஆரம்பித்தாலும் சரியான நேரத்திற்குள் முடித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை மாறும்.
மீனம்
வளர்ச்சி கண்டு மற்றவர்கள் பெருமைப்படும் நாள். கடனாகக் கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். உறவினர்கள் உதவி கிட்டும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.






