என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-8 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவாதசி இரவு 11.25 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : பரணி பிற்பகல் 3.52 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    கார்த்திகை விரதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை

    இன்று கார்த்திகை விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன், திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம், திருத்தணிகை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி உற்சவம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும், அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-நட்பு

    கடகம்-கடமை

    சிம்மம்-வெற்றி

    கன்னி-போட்டி

    துலாம்- வரவு

    விருச்சிகம்-தாமதம்

    தனுசு- தெளிவு

    மகரம்-நன்மை

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-பண்பு

    • அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசியாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது.
    • அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் அப்பால் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரவேண்டும்.

    மதுரை அருகே உள்ள பழமுதிர்சோலை முருகன் கோவிலில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது, வேட்டுவர் குலத்தெய்வமான ராக்காயி அம்மன் கோவில். இங்கு நூபுர கங்கை தீர்த்தம் விழுகிறது. இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் உற்பத்தியிடம் எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்த போதிலும் இன்றுவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

    யானை துதிக்கைப் போல பருமனாக கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்தில் வந்து விழுகின்றது. இத்தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. இந்த தீர்த்தம் நோய்கள் தீர்க்கும் சக்திக் கொண்டதால், இங்கு நீராடினால் தீராத பல நோய்களும் நீங்குவதாக நம்பப்படுகிறது. இத்தீர்த்தம் தெற்கு நோக்கி பாயும்போது 'சிலம்பாறு' என்று வழங்கப்படுகிறது.

    அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசியாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது. ஆற்று நீரின் ருசியும், ஆற்று நீரால் விளையும் தானியங்களின் ருசியும் மிகுந்திருப்பதால் இதற்கு 'தேனாறு' என்றும் பெயர்.

    இங்கிருக்கும் "மாதவி மண்டபத்தில் அமர்ந்துதான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதியதாக செவிவழி செய்தியும் உண்டு. இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது.

    இங்கிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது, அனுமார் தீர்த்தம். இங்கே ஓர் அனுமன் கோவில் இருக்கிறது. இதற்குச் சற்று மேல், கருட தீர்த்தம், கருடர் கோவில் இரண்டும் இருக்கின்றன. அதன் பக்கத்தில் பாண்டவ தீர்த்தமும், கோவிலும் இருக்கிறது. மலையில் வட பக்க சரிவில், பார்த்த உடனேயே பாவத்தை போக்கக் கூடிய பெரிய அருவி தீர்த்தம் உள்ளது. அழகர் கோவிலுக்குச் சிறிது வடக்கே உள்ளது உத்தர நாராயண வாவி தீர்த்தம். இந்த தீர்த்தத்தினால் தான் கோவில் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகமும், சமையலும் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

    அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் அப்பால் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரவேண்டும். சைத்ரோற்சவ காலத்தில் அழகர் மதுரைக்கும் வண்டியூருக்கும் சென்று தங்கி இருக்கும்போது கூட இந்தத் தீர்த்தமே கொண்டு வரப்படுகிறது. வேறு தீர்த்தத்தில் அழகரை நீராட்டினால் அவர் உருவம் கருத்து விடுகிறது என்பதாலேயே இப்படி செய்யப்படுகிறது. இந்த விநோதத்தின் ரகசியம் இன்றுவரை ஒருவருக்கும் புலப்படவில்லை.

    • திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாசிரமத்தில் ஸ்ரீ மாதூர் பூதேஸ்வரர் பூஜை.
    • திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-7 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : ஏகாதசி நள்ளிரவு 1.52 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : அசுவினி மாலை 5.30 மணி வரை பிறகு பரணி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சர்வ ஏகாதசி, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

    இன்று சர்வ ஏகாதசி. திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாசிரமத்தில் ஸ்ரீ மாதூர் பூதேஸ்வரர் பூஜை. நெல்லை சமீபம் இரட்டை திருப்பதி ஸ்ரீசீனிவாசன், தேவர்பிரான், அலமேலு மங்கை பத்மாவதி தாயார், செந்தமாமரை கண்ணன் திருமஞ்சனம். திருத்தணிகை ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்குளம் வலம் வரும் காட்சி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.

    மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமான் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-சாந்தம்

    மிதுனம்-முயற்சி

    கடகம்-அமைதி

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-நலம்

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-இன்பம்

    தனுசு- நன்மை

    மகரம்-புகழ்

    கும்பம்-அன்பு

    மீனம்-ஆசை

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-6 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : நவமி காலை 8.41 மணி வரை பிறகு தசமி பின்னரவு 3.33 மணி வரை பிறகு ஏகாதசி.

    நட்சத்திரம் : ரேவதி இரவு 7.08 மணி வரை பிறகு அசுவினி.

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கலிக்காம நாயனார் குருபூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு.

    லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெருதிருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-கவனம்

    மிதுனம்-தேர்ச்சி

    கடகம்-உயர்வு

    சிம்மம்-செலவு

    கன்னி-வரவு

    துலாம்- முயற்சி

    விருச்சிகம்-பரிவு

    தனுசு- பாராட்டு

    மகரம்-சிறப்பு

    கும்பம்-சிந்தனை

    மீனம்-வெற்றி

    • சீதாதேவி பிரதிஷ்டை செய்த 106 சிவலிங்கங்களும் மூன்று வரிசையில் வடக்குப் பகுதியில் அழகாக அமைந்து உள்ளன.
    • பொதுவாக சிவன் சன்னிதி எதிரே நந்தி மட்டுமே இருக்கும்.

    தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ளது, '108 சிவாலயம்' என அழைக்கப்படும் ராமலிங்க சுவாமி திருக்கோவில். இந்தக் கோவில் 'கீழை ராமேஸ்வரம்' என்று அழைக்கப்படுகிறது. ராமபிரான் சீதாப்பிராட்டியுடனும், லட்சுமணனுடனும் இத்தலத்திற்கு வந்ததாகவும், இங்கு தன் தோஷம் நீங்க 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் தல வரலாறு கூறுகிறது. எனவே, இத்திருக்கோவில் மூலவர் 'ராமலிங்க சுவாமி' என்றும், அம்பாள் 'பர்வதவர்த்தனி' என்றும் அழைக்கப்படுகின்றனர். மேற்கு நோக்கிய கோவில்களில் வேண்டுதல் வைத்தால் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை. இத்தலம் மேற்கு நோக்கிய தலம் ஆகும். இத்தலத்தில் உள்ள 108 லிங்கங்களும் மேற்கு நோக்கியே அமைந்துள்ளன. இக்கோவிலில் தரிசனம் செய்தால் 108 சிவன் கோவில்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

     

    தல புராணம்

    பறவைகள் முதல் அனைத்து உயிர்களுக்கும் நாம் துன்பம் செய்யும்போது நமக்கு அவைகளின் சாபம் வந்து சேர்கிறது. நாம் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து விலகும்போது நமக்கு தோஷம் ஏற்படுகிறது. உதாரணமாக பித்ரு காரியம் போன்றவைகளை உரிய காலங்களில் முறைப்படி செய்யாவிட்டால் தோஷம் ஏற்படுகின்றது. நாம் அன்றாடம் செய்யும் செயல்களிலிருந்தும் பல்வேறு விதமான பாவங்கள் நமக்கு ஏற்பட்டு, பல பிறவிகளாக நம்மைத் தொடர்கின்றன. இத்தகைய சாப, தோஷ பாவங்களை நீக்கும் தலமாக பாபநாசம் 108 சிவாலயம் விளங்கி வருகிறது. தென்னகத்தில் மிகப் பெரிய (6 அடி உயரம்) சூரிய பகவான் சிலையும் கோவிலின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ளது. கோவில் முகப்பில் சூரிய தீர்த்தம் உள்ளது.

    ராம - ராவண யுத்தத்தில் பலரைக் கொல்ல நேர்ந்ததால் ராமபிரானுக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் பூஜை செய்தபின் ராமபிரான் கீழ்த்திசை நோக்கி சீதா தேவியுடனும் லட்சுமணனுடனும் வந்தார். அப்போது குடமுருட்டி ஆற்றின் கரையில் மரங்கள் அடர்ந்த ஒரு சோலையைக் கண்டார். அங்குள்ள ஒரு உயர்ந்த வில்வ மரத்தடியில் ராமபிரான் அமர்ந்தபோது தன்னை இன்னும் ஏதோ ஒரு தோஷம் தொடர்வதையும், அதனால் தனக்கு நிம்மதியின்மை ஏற்படுவதையும் உணர்ந்தார்.

    கர, தூஷன் என்னும் அரக்கர்களைக் கொன்ற தோஷம் ராமேஸ்வரத்தில் பூஜை செய்த பின்பும் தன்னைத் தொடர்வதை தனது ஞான திருஷ்டியால் அறிந்தார். அதைப் போக்க சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்வது அவசியம் என்பதையும் அறிந்தார். இறைவனே ஆனாலும் மனிதப் பிறவி எடுத்தால் அதற் குரிய சாப, தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதற்கு அரிய உதாரணம் இது.

    ராமபிரான் அனுமனை அழைத்தார். தான் பூஜை செய்ய காசியில் இருந்து சிவலிங்கம் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். ராமரின் உத்தரவை சிரமேற்கொண்டு அனுமனும் காசிக்குப் புறப்பட்டார். அங்கிருந்து அவர் சிவலிங்கம் கொண்டு வருவதில் சில தடைகள் ஏற்பட்டு கால தாமதம் ஆனது.

    அப்போது சீதா பிராட்டி, அருகிலிருந்த குடமுருட்டி ஆற்றின் மணலில் அமர்ந்து விளையாட்டாக சிவலிங்கங்களை உருவாக்கத் தொடங்கினார். இவ்வாறு 107 சிவலிங்கங்களை அவர் உருவாக்கிவிட்டார். அற்புதமாக அமைந்த அந்த சிவலிங்கங்களைப் பார்த்த ராம பிரான், தனது தேவியை பாராட்டினார். உடனே அந்த சிவலிங்கங்களுக்கு பூஜை செய்யத்தொடங்கிவிட்டார். அப்போது காசியில் இருந்து ஒரு சிவலிங்கத்தைக் கொண்டு வந்த அனுமன், வருத்தமுற்று தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை என்ன செய்வது என யோசித்தார்.

    அப்போது அனுமனுக்கு அருளிய ராமபிரான், கோவிலுக்கு தென்புறத்தில் அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி தென்புறத்தில் அமைக்கப்பட்ட அந்த லிங்கத்திற்கு 'அனுமந்த லிங்கம்' என்று பெயரிட்டார்.

    சீதாதேவி பிரதிஷ்டை செய்த 106 சிவலிங்கங்களும் மூன்று வரிசையில் வடக்குப் பகுதியில் அழகாக அமைந்து உள்ளன. 107-வது லிங்கம் மூலவராக ராமலிங்க சுவாமியாக காட்சி தருகிறது. 108-வது சிவலிங்கமாக காசியிலிருந்து அனுமன் கொண்டு வந்த லிங்கம், 'அனுமந்த லிங்கம்' என்று வழங்கப்பட்டு வருகிறது. '107 லிங்கங்களையும் தரிசனம் செய்து, 108-வதாக அனுமந்த லிங்கத்தையும் தரிசனம் செய்தால்தான் சிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும்' என்று ராமபிரான் அருளியதால் அனுமனும் தன் வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுற்றார். மூலஸ்தானம் தவிர்த்து மற்ற 107 லிங்கங்களுக்கும் பக்தர்கள் தாங்களே நேரடியாக பூத்தூவி வழிபடலாம்.

    கோவில் அமைப்பு

    ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் சிவலிங்க பூஜை செய்தது புடைப்புச் சிற்பமாக உள்ளது. ராமாயணத்தோடு தொடர்புடைய கோவில் என்பதால் பிரகாரத்தில் ஆஞ்சநேயர், சுக்ரீவர் வணங்கியபடி நிற்கும் சிலைகள் உள்ளன.

    பிரகாரத்தில் வள்ளி - தெய்வானையுடன் முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். மேலும் காசி விசாலாட்சி, அன்னபூரணி ஒரு சன்னிதியிலும், கால பைரவர், சனீஸ்வரர், சூரிய பகவான் ஆகியோர் மற்றொரு சன்னிதியிலும் காட்சி தருகிறார்கள். எதிர்மறை கிரகங்களான சூரிய பகவானும், சனீஸ்வரரும் அருகருகில் இருப்பதால் சனி தோஷம் உள்ளவர்கள் இந்த சன்னிதியில் வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

    ராமலிங்க சுவாமி சன்னிதி விமானம் ராமேஸ்வரம் கோவில் அமைப்பிலும், அனுமந்த லிங்க சன்னிதி விமானம் காசி விஸ்வநாதர் கோவில் அமைப்பிலும் உள்ளது. எனவே காசி, ராமேஸ்வரம் செல்ல முடியாதோர் இங்கு வந்து வழிபடலாம்.

    பொதுவாக சிவன் சன்னிதி எதிரே நந்தி மட்டுமே இருக்கும். ஆனால் இங்கு நந்தியுடன் காமதேனு பசுவும் இருக்கிறது. காமதேனு சிலை கழுத்தில் சலங்கைகள் அணிந்து சிவனை நேராக பார்த்துக் கொண்டிருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. அகத்தியரின் ஆலோசனைப்படி இந்த கோவிலில் ராமபிரான் காமதேனு செய்தார். அதற்கு அகத்தியரே பிரதோஷ பூஜை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. தற்போதும் பிரதோஷ வேளையில் அகத்தியர் இங்கு பூஜை செய்வதாக ஐதீகம்.

     

    மகா சிவராத்திரிப் பெருவிழா

    இத்தகைய சிறப்புமிக்க பாபநாசம் தலத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி, பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 108 சிவலிங்கங்களையும் 108 முறை வலம் வரும் நிகழ்ச்சி பக்திப் பரவசத்துடன் நடைபெறும்.

    சிவராத்திரியன்று 108 லிங்கங்களுக்கும் ருத்ர மந்திரம் சொல்லி நான்கு கால பூஜை நடைபெறுகிறது. மேலும் ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    சனி தோஷம் விலக, பித்ருதோஷம் நீங்க, அறியாமல் செய்த பாவம் விலக என சகல தோஷங்களுக்கும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள் சுவாமிக்கு தேன், பால் கொண்டு அபிஷேக ஆராதனை செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

    கோவில், காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

    அமைவிடம்

    கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் பாபநாசம் உள்ளது. பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் பேருந்துகள் உள்ளன.

    • எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான்.
    • குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறைகளாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது.

    குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்துதான் வரும் என கிராமங்களில் சொல்வார்கள்.

    குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோவிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை தொடங்குபவர்கள் உடனே குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்போது செலுத்தி விடுவது வழக்கம்.

    குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது. ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.

    குலதெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும், பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள். உதாரணமாக, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்ற பிரபல கோவில்களுக்கு மட்டுமே செல்வது பலர் வழக்கம். இவர்களில் சிலர் வேறு கோவில்களுக்கு கூட செல்வது கிடையாது.

    எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான். மூலவரை வழிபடாமல் அங்கிருக்கும் சுவர் சித்திரங்களை வழிபட்டு வருவது போல் தான் பிற வழிபாடுகளை மட்டும் செய்வது. குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறைகளாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது. அய்யனார், சுடலை மாடன் என்று பல ( கிராம) தெய்வங்கள் உண்டு. பல ஊர்களில் அங்கு வலுவான ஒரு காரணத்தால் மரணமடைந்தவரின் பெயரில் கோவில் ஒன்றை எழுப்பி அதை அவ்வூரின் ஒரு சாரார் குலதெய்வமாக ஏற்று வழிபடுகின்றனர். பெரும்பாலான குல தெய்வங்களுக்கு பின்னணியில் இம்மாதிரி ஒரு நிகழ்வு இருக்கும்.

    பெருங்கோவில்களுக்கும் இவற்றுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால்... இம் மாதிரி குலதெய்வ கோவில்கள் குறிப்பிட்ட சில சமூகம் அல்லது குடும்பங்களின் பராமரிப்பில் அவர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டு இயங்கும். பங்குனி உத்திரம் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே குலதெய்வ கோவில்களில் வழிபாடுகளும் விழாக்களும் மிக சிறப்பாக நடைபெறும். பொங்கல், கிடா வெட்டு, பலி என்று விழா அமர்க்களப்படும். மற்ற நாட்களில் கேட்பாரின்றி இருக்கும்.



    ஆனாலும் அந்த சாமியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் எந்த முக்கிய நிகழ்வாக இருந்தாலும் அன்று குலதெய்வ கோவில் பூசாரியைத் தேடிப்பிடித்து கோவிலைத்திறந்து வழிபட்டு அதன் பின்னரே அந்த வேலையைத் தொடங்குவார்கள். அதுவே முறையானதாகும். அந்த வகையில் நாளை குலதெய்வ வழிபாடு முக்கியமானதாக கருதப்படுகிறது.

    உங்கள் குலதெய்வத்தை இதுவரை வழிபடாமல் இருந்தால், உடன் வழிபடத் தொடங்குங்கள், குலதெய்வம் எது என்று தெரியாமல் இருந்தால், ஊரில் வயதான பெரியவர்களிடம் கேளுங்கள், சொல்லி விடுவார்கள். அப்படியும் தெரியாவிட்டால் பலரிடம் விசாரித்தால் எப்படியாவது தெரிந்து விடும்.

    குல தெய்வத்திற்காக நடத்தப்படும் பிரத்யேக வழிபாட்டு முறை, மற்றும் முக்கிய வழிபாட்டு பொருளையும் தெரிந்து கொள்ளுங்கள். அங்கு செல்லும் போது மறக்காமல் அந்த பொருளை வாங்கிச் செல்லுங்கள். உதாரணமாக ஒரு சில கோவில்களில் தீபத்திற்கு நல்லெண்ணெய், ஏன் சாராயம் கூட இருக்கலாம். தவறாது வாங்கிச் சென்று படையுங்கள்.

    குலத்தைக் காப்பதால் தான் குலக்கடவுள், மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு குல தெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. குலம் தழைக்க வேண்டும். முன்னோர் சாந்தி அடைய வேண்டும். பின்னோர் செழிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் தவறாமல் நாளை குலதெய்வத்தை வழிபட வேண்டும். குலதெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்து ஓடி விடும். பல பிரச்சனைகளில் சிக்கி உழல்பவர்கள் பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குல தெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும். அப்படி செய்தால் தான் பரிகார பூஜைகளில் வெற்றி உண்டாகும்.

    குல தெய்வத்தை நினைக்காமல், பூஜிக்காமல் நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது. குல தெய்வ வழிபாட்டை மறந்து விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது, கடன், நோய், குடும்பத்துக்குள் பிரச்சனை என்று குழப்பமும், மன அமைதியின்மையும் ஏற்பட்டு விடும்.

    இத்தகைய பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால், தொடர்ந்து குல தெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குல தெய்வத்துக்கு உரிய படையல் போட்டு திருப்தி ஏற்படுத்த வேண்டும்.

    குல தெய்வம் மகிழ்ச்சி அடைந்தால், உங்கள் குலமே செழிக்கும். தினம், தினம் குல தெய்வத்தை வணங்குபவர்களுக்கு எந்த குறையும் வராது. குதூகலம்தான் வரும்.

    பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குல தெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும். என்றாலும் நாளை உங்கள் வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.



    நீங்கள் எத்தனை கடவுள்களை வணங்கினாலும் சரி.... குல தெய்வத்தை வழிபடா விட்டால் குண்டுமணி அளவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. ஆகையால் குல தெய்வத்தை அவசியம் வழிபடுங்கள். யார் ஒருவர் குல தெய்வத்தை விடாமல், ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது. அதுதான் குல தெய்வ வழிபாட்டின் மகிமை.

    அதனால் தான் "குருவை மறந்தாலும் குல தெய்வத்தை மறவாதே..."

    "குலதெய்வத்தைக் கும்பிட்டு கும்மியடி..." என்று சொல்வார்கள்.

    எனவே உங்கள் குலதெய்வத்தை வழிபடாதிருந்தால், உடன் வழிபடத் தொடங்குங்கள்.

    இறந்து போனவர்களின் ஆத்மாவுக்கு ஆற்றல் அதிகம் என்று கருதப்பட்டதால்தான் குல தெய்வ வழிபாடு முறை தோன்றியது.

    தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து காணும் வாய்ப்பை குல தெய்வ வழிபாடே ஏற்படுத்தி கொடுக்கிறது.

    குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும்.

    கணவன் மரணம் அடைந்ததும் உடன்கட்டை ஏறும் பெண்களுக்கும் இறைசக்தி இருப்பதாக நம்பி வழிபடப்பட்டது. தீப்பாய்ச்சியம்மன் இம்முறையில் குல தெய்வமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நோய்கள் நீங்கவும், பிள்ளைவரம் கிடைக்கவும், மழை பெய்யவும் மக்கள் குல தெய்வத்தையே பெரிதும் நம்புவதுண்டு. ஊருக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் கடந்த 100 ஆண்டுகளில் கிராமங்களில் நடக்கும் குல தெய்வ வழிபாடுகள் மிக, மிக விமரிசையாக நடத்தப்படுகின்றன. குல தெய்வம் இருக்கும் இடத்தில் நிச்சயம் வேப்பமரம் அல்லது வில்வமரம் இருக்கும். குல தெய்வங்களுக்கு இதிகாச அடிப்படை எதுவும் கிடையாது.

    குல தெய்வ வழிபாடுகளில் பூஜைகள் முறைப்படி இல்லாமல் பெரியவர்களின் இஷ்டப்படியே நடக்கும். குல தெய்வங்களின் சிறப்புகள் கல்வெட்டுக்களாக இருப்பது இல்லை. பெரும்பாலும் செவி வழிக்கதைகளாகவே இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள குல தெய்வங்களில் பெரும்பாலான குல தெய்வங்கள் பெண் தெய்வங்களாக உள்ளன. குலதெய்வ கோவில்கள் பெரும்பாலும் 'வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கியே கட்டப்பட்டிருக்கும்.

    குடும்பத்தில் தொடர்ந்து அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலோ அல்லது தீமைகள் ஏற்பட்டாலோ குலதெய்வம் கடும் கோபத்தில் இருப்பதாக கருதும் நம்பிக்கை இன்றும் உள்ளது. தங்கள் குறைகளை தீர்க்குமாறு குல தெய்வங்களை வேண்டிக் கொள்பவர்கள், அக்குறை தீர்ந்ததும் பொங்கலிடுதல், பலியிடுதல் போன்ற நேர்த்திக் கடன்களை தவறாமல் செய்வதுண்டு.

    குல தெய்வத்துக்கு குறை வைத்தால் வம்ச விருத்தி ஏற்படாது என்பார்கள். ஒரே குல தெய்வத்தை வழிபடும் இரு குடும்பத்தினர் தங்கள் உறவை புதுப்பித்துக் கொள்ள விரும்பினால், தங்கள் குல தெய்வத்திடம் சென்று வழிபாடு செய்து, ஒருவர் கையால், மற்றவர் திருநீறு வாங்கி பூசிக் கொள்ள வேண்டும் என்பது பல ஊர்களில் நடைமுறையில் உள்ளது.

    நவீன மாற்றங்கள் மற்றும் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது குல தெய்வ வழிபாடுகளின் பூஜைகள், நேர்த்திக் கடன்கள், திருவிழாக்களிலும் பெரும் மாற்றங்கள் வந்து விட்டன. ஆனாலும் குல தெய்வம் மீதான பயமும், பக்தியுணர்வும் கொஞ்சமும் குறையவில்லை. ஆகையால் இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாளை உங்கள் குல தெய்வத்தை வழிபடுங்கள்...

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-5 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அஷ்டமி காலை 8.58 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம் : உத்திரட்டாதி இரவு 8.41 மணி வரை பிறகு ரேவதி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர மடத்தில் சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.

    தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-துணிவு

    மிதுனம்-ஆர்வம்

    கடகம்-பரிசு

    சிம்மம்-மகிழ்ச்சி

    கன்னி-உவகை

    துலாம்- முயற்சி

    விருச்சிகம்-பணிவு

    தனுசு- பாசம்

    மகரம்-அமைதி

    கும்பம்-பயணம்

    மீனம்-மகிழ்ச்சி

    • இறைவனின் கட்டளையை ஏற்று வாழ்ந்த மனிதர்கள் இம்மையிலும் மறுமையிலும் சிறப்புகளை அடைந்தனர்.
    • மனிதன் எப்படி தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தனது வேதங்கள் மூலம் விளக்கி கூறினான்.

    பரந்து விரிந்த வான்வெளியில் பல கோடிக்கணக்கான கோள்கள், நட்சத்திரங்கள், துணைக்கோள்கள் போன்றவை உள்ளன. இவற்றில் மனித இனம் வாழக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் நிறைந்தது இந்த பூமி.

    இந்த பூமியில் ஆதி மனிதனை படைத்த ஏக இறைவன் அல்லாஹ். மனித வாழ்வுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இங்கு ஏற்படுத்தினான். மனிதன் எப்படி தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தனது வேதங்கள் மூலம் விளக்கி கூறினான். மேலும் மனிதர்களை நேர்வழிப்படுத்த நபிமார்களையும் அனுப்பி வைத்தான்.

    இறைவனின் கட்டளையை ஏற்று வாழ்ந்த மனிதர்கள் இம்மையிலும் மறுமையிலும் சிறப்புகளை அடைந்தனர். இத்தகைய சிறப்பான வாழ்க்கை வாழ மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் ஒன்று நன்மைகளையே நாடுவது. இதுபற்றி திருக்குர்ஆனிலும், நபி மொழிகளிலும் ஏராளமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

    நன்மை செய்ய வேண்டும் என்பது முக்கியமானதாக இருந்தாலும், ஒருவர் நன்மை செய்ய வேண்டும் என்று மனதால் நினைத்தால் கூட அதுவே நன்மையாக அமையும் என்று நபி மொழிகள் கூறுகின்றன. அதுகுறித்த நபி மொழி இது-

    "ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணி விட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும், அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கை விட்டால் , அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் பதிவு செய்கிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் பதிவு செய்கிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    இந்த உலக வாழ்வில் நாம் செய்யும் நன்மைகள், மறுமை வாழ்வுக்கான சேமிப்பாக அமைகிறது என்பதை திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது. நாம் செய்யும் நன்மைகள் எப்படி எல்லாம் நமக்கு இறைவனின் அருட்கொடைகளாக மாறுகிறது என்பதை கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் அறியலாம்.

    "இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்". (திருக்குர்ஆன் 2:110).

    நன்மைகள் செய்பவர்களை இறைவன் மிகவும் நேசிக்கின்றான் என்று திருக்குர்ஆன் இவ்வாறு சாட்சி கூறுகிறது.

    "அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்". (திருக்குர்ஆன் 2:195).

    நன்மைகள் செய்வதென்றால் அது எவ்வாறு இருக்க வேண்டும், யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகம் மனிதர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. இதற்கும் திருக்குர்ஆன் வழிகாட்டுகிறது.

    நபியே அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்" என்று; நீர் கூறும்: "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் கொடுங்கள்; மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து தக்க கூலி தருபவனாக இருக்கிறான்" (திருக்குர்ஆன் 2:215).

    மேலும் நபி (ஸல்) அவர்களிடம் ஒருமுறை, 'யாருக்கு அதிகமாக நன்மை செய்ய வேண்டும்' என்று கேட்ட போது, தாய்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பதில் அளித்தார்கள். அதன் விவரம் வருமாறு:

    ``இறைத்தூதர் அவர்களே! நான் யாருக்கு அதிக நன்மை செய்ய வேண்டும்?'' என நான் அவர்களிடம் கேட்டேன். ``உன் தாய்க்கு'' என அவர்கள் கூறினார்கள். ``பின்னர் யாருக்கு?'' என நான் கேட்டேன். ``உன் தாய்க்கு'' என்றே கூறினார்கள். ``பின்னர் யாருக்கு?'' என நான் கேட்டேன். ``உன் தாய்க்கு'' என்றே கூறினார்கள். ``பின்னர் யாருக்கு?'' என நான் (நான்காவது முறை) கேட்டேன். ``உன் தந்தைக்கும், உன் நெருங்கிய உறவினருக்கும். பின்னர், அதற்கடுத்து நெருங்கிய உறவினருக்கு'' என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள் என பஹ்ஜ் இப்னு ஹாகிம் அறிவித்தார். (நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ).

    அல்லாஹ்வின் நல்லடியார்களே, நாளும் நன்மைகள் பல செய்வோம், இறையருள் பெறுவோம்.

    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
    • கரூரில் அமராவதி நதியின் வடக்கரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-4 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சப்தமி காலை 10.58 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 10.01 மணி வரை பிறகு உத்திரட்டாதி

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை

    திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருப்பெந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.

    ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடக்கரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-நிறைவு

    மிதுனம்-வரவு

    கடகம்-நட்பு

    சிம்மம்-நன்மை

    கன்னி-பாசம்

    துலாம்- செலவு

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு- சலனம்

    மகரம்-முயற்சி

    கும்பம்-இன்பம்

    மீனம்-பணிவு

    • நாளைய தினத்தில் இயன்றவரை பானகம், வெல்லம், வெல்லப்பாகு மட்டுமே உண்டு உபவாசம் இருப்பது சிறப்பு.
    • சாகம்பரி தேவி மூலிகை சக்திகள் நிறைந்த அசோக மரத்தை தோற்றுவித்தத் திருநாள் புதாஷ்டமி தினமாகும்.

    அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு பிறகு வரும் எட்டாவது திதியானது 'அஷ்டமி' எனப்படும். இந்த அஷ்டமி திதி புதன்கிழமையன்று அமையப் பெற்றால் அத்தினத்திற்கு 'புதாஷ்டமி' என்று பெயர். நாளை (18-ந்தேதி) புதாஷ்டமி தினமாகும்.

    அளப்பரிய நன்மைகளை அள்ளித்தரும் வழிபாட்டிற்குரிய விரத தினமாக புதாஷ்டமி தினம் கருதப்படுகிறது. பொதுவாக அஷ்டமி தினமானது காளி, துர்க்கை, பைரவர், சப்தகன்னியர் போன்ற தெய்வங்களுக்குரிய வழிபாட்டு தினமாக கருதப்படும்.

    குறிப்பாக அஷ்டமி திதிகளில் பைரவர் வழிபாடு சிறப்பானது. நாளை புதாஷ்டமி விரதம் இருந்தால் தொலைந்து போனது கிடைக்கும். கிடைப்பது நல்லதாக அமையும்.

    அவ்வகையில் இந்த புதாஷ்டமியும் அஷ்டமாதர்களை வழிபடுவதற்குரிய சிறப்பான விரத தினமாக நமது பெரியோர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.

    முன்னொரு காலத்தில் கவுசிகன் என்பவன் அவருடைய சகோதரி விஜயை ஆகியோர் கங்கைக்கரையில் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் மேய்ச்சலில் இருந்த அவர்களுடைய அரியவகை எருது ஒன்று காணாமல் போய்விட்டது. இதனால் பதறித் தவித்து அலைந்தனர்.

    அப்பொழுது, பசியால் வாடிய கவுசிகன், கங்கைக்கரையில் புதாஷ்டமி விரதபூஜையில் ஈடுபட்டிருந்த தேவமகளிரைக் கண்டு, பசி அதிகமாக இருப்பதாகவும் ஏதாவது உணவு இருந்தால் தாருங்கள் என்று கேட்டான். அதற்கு அந்த பெண் பூஜையில் சிரத்தையாக ஈடுபடுவோருக்கு மட்டுமே தர இயலும் என்று கூறினாள். இதையடுத்து கவுசிகனும், விஜயையும் அப்பூஜையில் பங்கேற்று, அவர்கள் அளித்த பிரசாதத்தினை உண்டு விரத பூஜையில் பங்கேற்றனர்.

    அதன் பலனாக, தொலைந்த எருது கிடைத்தது. அதோடு அவனது வாழ்வும் வளம்பெறத் தொடங்கியது. விஜயை நற்கணவனைப் பெற்றாள். கவுசிகனும் அயோத்தியின் அரசன் ஆனான்" எனப் புராணங்கள் சொல்கின்றன.



    "இந்த புதாஷ்டமி விரதம் மேற்கொள்வது எப்படி?" என்று பார்க்கலாம்.

    நாளைய தினத்தில் இயன்றவரை பானகம், வெல்லம், வெல்லப்பாகு மட்டுமே உண்டு உபவாசம் இருப்பது சிறப்பு. மாவிலைகளால் தைக்கப்பட்ட இலையில் கற்கண்டு சேர்த்த அன்னத்தினை இட்டு நிவேதித்து அஷ்டமாதர்களான பிராமி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சண்டி, மற்றும் சாமுண்டி ஆகியோரை வழிபட வேண்டும். அந்த அன்னத்தை தானம் செய்வதாலும் அறிவாற்றல் சிறக்கும். மூளைபலம் உண்டாகும். முன்னோர்கள் ஆசிகள் கிட்டிடும். இந்த நாளில் எழுதுபொருள்களை தானம் செய்வதால் வித்யா கடாட்சம் உண்டாகும்.

    புதன் கிரகமானது புத்திக்கு உரிய காரகத்துவம் உடைய கிரகம். கற்றலில் மந்தமானவர்கள், மூளைத்திறன் குறைந்தவர்கள், மந்தபுத்தி உடையவர்கள், படிப்பினைக் கண்டு அஞ்சுபவர்கள், குழப்பமான நிலையில் இருப்பவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள் ஆகியோர் புதாஷ்டமி அன்று விரதம் இருந்து இறைவழிபாடு செய்திட, அப்பிரச்சனைகளில் இருந்து நிரந்தர நிவாரணம் பெற முடியும்.

    புதாஷ்டமி விரதம் எளிமையானது. நாளை அதிகாலை 4.30 மணி, 6 மணி, 8 மணி, 10 மணி, மதியம் 12 மணி, மாலை 3, 6.30 மணி, இரவு 8.30 மணிக்கு என 8 முறை விளக்கேற்ற வேண்டும். குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் மற்றும் இனிப்பு வகைகளை பிரசாதமாக கொடுக்க வேண்டும்.

    சிவாலயங்களில் உள்ள பைரவர் சன்னதியில் செவ்வரளி மாலை அணிவித்து வணங்க வேண்டும். கடன் தொல்லை ஏற்படாமல் இருக்க, குழந்தைகளுக்கு நோய் நொடி தாக்காமல் இருக்க இந்த வழிபாடு உதவும். மேலும் பெண்களுக்கு தடையின்றி திருமணம் நடக்க இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

    சாகம்பரி தேவி மூலிகை சக்திகள் நிறைந்த அசோக மரத்தை தோற்றுவித்தத் திருநாள் புதாஷ்டமி தினமாகும். எனவே புதனும் அஷ்டமியும் கூடும் நாட்களில் ஆலயங்களில் உள்ள அசோக மர தரிசனம் மற்றும் மரத்தை வலம் வருதல் விசேஷமானது.

    மருத்துவ குணம் கொண்டது அசோக மரம். இந்த மரத்தின் பட்டை, பெண்களின் கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு மருந்தாக உள்ளது. தமிழகத்தில் ஓசூர், திருவண்ணாமலை, ரமணர் ஆசிரமம் ஆகிய இடங்களில் அசோக மரங்கள் உள்ளன.

    சகல புண்ணிய பலன்களையும் அள்ளித் தந்திடும் இந்த புதாஷ்டமி விரத தினத்தன்று, இயன்றளவு சிவாலய வழிபாடு செய்து அளப்பறிய நற்பலன்களை பெறலாம்.

    பெண்கள் நாளை புதாஷ்டமியில் ஸ்ரீகால பைரவரை வணங்கி புனிதமான நல்வரங்களைப் பெற வேண்டிய பைரவ பூஜை செய்யலாம்.

    நாளை பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நன்று. ஐந்து வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும். ஐந்து தனி தனி அகல் எடுத்துக் கொண்டு, ஒரு அகலில் நல்லெண்ணெய், இன்னொரு அகலில் இலுப்பை எண்ணெய், மற்றொன்றில் விளக்கெண்ணெய், பசு நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும்.

    ஒரு எண்ணெய் மற்றொரு எண்ணெயுடன் சேரக்கூடாது. இவ்வாறு ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். குறிப்பாக கால பைரவர் சிவபெருமானின் ருத்ரஅம்சமாக கருதப்படுபவர். சிவனின் நெற்றி கண்ணில் இருந்து தோன்றியவர். இதனால் உக்கிரமான ஆற்றல் அவரிடம் நிரம்பி உள்ளது.

    சிவாலயங்களில் வடகிழக்கு திசை நோக்கி இருக்கும் பைரவரை வழிபட்டால் உடனடியாக அவரது அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். பைரவரை ஒருவர் எந்த அளவுக்கு வழிபடுகிறாரோ அந்த அளவுக்கு அவரிடம் வாழ்வில் உள்ள அனைத்து பயங்களும் நீங்கி விடும். பயம் நீங்கினால் தானாகவே வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

    அதுமட்டுமல்ல பைரவர் வழிபாடு அஷ்டசித்திகளையும் தரும் ஆற்றல் கொண்டது. நாளை புதாஷ்டமி தினத்தில் வழிபட்டால் பைரவரிடம் இரட்டிப்பு பலன் பெற முடியும்.

    • 16 கோவில்களில் இருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தனர்.
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை ஆகியவை சார்பில் 91-ம் ஆண்டு கருட சேவை பெருவிழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து, 26 பெருமாள்கள் கருடசேவை விழா நேற்று (திங்கட்கிழமை) நடந்தது.

    இதனைத் தொடர்ந்து, 16 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி பெருவிழா என்கிற நவநீத சேவை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இதில் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள், நரசிம்மப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், மேல ராஜவீதி நவநீத கிருஷ்ணன், விஜயராமர் சன்னதி, எல்லையம்மன் தெரு ஜனார்த்தனப் பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கீழ ராஜவீதி வரதராஜப் பெருமாள், தெற்கு ராஜவீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராம சுவாமி பெருமாள், மகர்நோம்புச்சாவடி நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதப் பெருமாள், படித்துறை வெங்கடேசப் பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆகிய 16 கோவில்களில் இருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தனர்.

    பின்னர் அங்கிருந்து 16 பெருமாள்களும் புறப்பட்டு கீழராஜவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஒரே நேரத்தில் 16 சுவாமிகள் அவர்களுக்கு சேவை சாதித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். விழாவில் நாளை (புதன்கிழமை) விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

    • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரத உற்சவம்.
    • திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    இந்த வார விசேஷங்கள்

    17-ந் தேதி (செவ்வாய்)

    * சஷ்டி விரதம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராத்திரி உற்சவம் ஆரம்பம்.

    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரத உற்சவம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    18-ந் தேதி (புதன்)

    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா, ஊஞ்சலில் விருட்சப சேவை.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    19-ந் தேதி (வியாழன்)

    * திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    * சுவாமிமலை முருகப் பெருமானுக்கு தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * மேல்நோக்கு நாள்.

    20-ந் தேதி (வெள்ளி)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    21-ந் தேதி (சனி)

    * சர்வ ஏகாதசி.

    * திருத்தணி சுப்பிரமணியர் திருக்குளம் வலம் வரும் காட்சி.

    * திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * சமநோக்கு நாள்.

    22-ந் தேதி (ஞாயிறு)

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    23-ந் தேதி (திங்கள்)

    * பிரதோஷம்.

    * கார்த்திகை விரதம்.

    * செப்பறையில் ஆனி உற்சவம் ஆரம்பம்.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    ×