என் மலர்tooltip icon

    வழிபாடு

    தர்மலிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
    X

    தர்மலிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்

    • வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
    • கிரக தோஷங்கள், திருமண தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கும்.

    மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான பிரச்சினைகளுக்காக தீர்வு கிடைக்க வேண்டி தர்மலிங்கேஸ்வரரை நாடி வருகிறார்கள்.

    தர்மலிங்கேஸ்வரை வழிபட்டு தொடர்ந்து கிரிவலம் சென்றால் குழந்தை பாக்கியம், தொழில் பிரச்சினை, வீடு கட்ட உள்ள தடை மற்றும் திருமண தடை போன்ற தடைகளும் நீங்கும் என்பது ஐதீகம். தர்மர் வந்து வழிபட்டதால் நியாயம், தர்மம், வழக்குகளில் வெற்றி மற்றும் நீதி வேண்டுபவர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அபிஷேகம் செய்தும், மலர்கள் வாங்கி கொடுத்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    நினைத்த காரியம் கைகூடும்: தர்மலிங்கேஸ்வரரை வழிபட்டால், நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.

    திருமணத்தடை நீங்கும்: திருமணத்திற்காக காத்திருப்பவர்கள், திருமண தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.

    குழந்தை பாக்கியம்: குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இங்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    தொழில் விருத்தி: தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, விருத்தி அடையும்.

    கஷ்டங்கள் நீங்கும்: வாழ்வில் உள்ள கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும்.

    நோய் நீங்கும்: உடல் உபாதைகள் மற்றும் நோய்கள் நீங்கி, ஆரோக்யம் மேம்படும்.

    பாவங்கள் நீங்கும்: இங்கு வந்து வழிபட்டால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும்.

    சகல தோஷங்களும் நீங்கும்: கிரக தோஷங்கள், திருமண தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கும்.

    Next Story
    ×