என் மலர்
நீங்கள் தேடியது "Velankanni Temple Festival"
- வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நடைபெறும் திருவிழாக்களில் கொடியேற்றம் மிக முக்கியமான நிகழ்வாகும்.
- கொடியேற்றத்தின் போது, ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் திரண்டு வருவார்கள்.
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் கொடி மரம் ஆலயத்தின் அடையாளமாகவும், பக்தியின் வெளிப்பாடாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் இந்த கொடிமரத்தில் தான் கொடியேற்றம் நடைபெறுகிறது. இந்த கொடி மரம் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையையும், மரியன்னையின் அருளையும் குறிக்கிறது.
திருவிழாக்களில்...
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நடைபெறும் திருவிழாக்களில் கொடியேற்றம் மிக முக்கியமான நிகழ்வாகும். இந்த நாளில், ஆலயத்தின் கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. இது விழாவின் தொடக்கத்தை குறிக்கிறது. கொடி மரம் பக்தர்கள் நம்பிக்கையின் அடையாளமாக கருதப்படுகிறது. கொடி அசைவதன் மூலம், அன்னை மரியாளின் ஆசீர்வாதம் ஆலயத்திற்குள் வருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
முக்கிய அடையாளம்
கொடி மரம், வேளாங்கண்ணி பேராலயத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். இது ஆலயத்தின் முகப்பில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது, மேலும் இது ஆலயத்திற்கு வரும் பக்தர்களை வரவேற்கிறது. கொடி மரத்திற்கு ஆன்மிக ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் பல அர்த்தங்கள் கூறப்படுகின்றன.
ஆலயத்தின் வாயிலில் உள்ள இந்த கொடி மரம், பக்தர்களை உள்ளே வரும்போது புது மனிதர்களாகவும், புத்துணர்ச்சியுடன் ஆலயத்திற்குள் செல்லவும் வைப்பதாக கருதப்படுகிறது. கொடியேற்றத்தின் போது, ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் திரண்டு வருவார்கள்.
அணிவகுப்புகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட சிலைகளும் ஊர்வலமாக எடுத்து வரப்படும்.
- தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.
- வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் பக்தர்கள் ஓய்வெடுக்க ஆங்காங்கே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளா ங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.
புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடக்கிறது. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் அருட்சகோதரிகள் கலந்துகொள்கிறார்கள்.
விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
மறுநாள் 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேராலயத்தின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் பக்தர்கள் ஓய்வெடுக்க ஆங்காங்கே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்துள்ள பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிய அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனா்.
சிலர் தென்னங்கன்றுகளை வாங்கி ஆலயத்தில் கொடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகிறார்கள்.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
- பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வர தொடங்கி உள்ளனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
பெருவிழாவை யொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வரத் தொடங்கி உள்ளனர்.
இவர்கள் வெயில் நேரங்களில் ஓய்வு எடுத்தும், காலை மற்றும் மாலை நேரங்களில் மாதா பாடல்களை பாடியவாறும் நடைபயணம் மேற்கொள்வர்.
அதன்படி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து பாதயாத்திரை வரும் பக்தர்கள் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை கடந்து பேராலயம் சென்றடைவர்.
அவ்வாறு, இரவில் சாலையில் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக விபத்தில்லாமல் சாலைகளில் நடந்து செல்லும் வகையில் அவர்களது பைகள், உடைமைகளில் இரவில் ஒளிரும் பிரதிபளிப்பு ஸ்டிக்கர்களை போக்குவரத்து போலீசார் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதன் மூலம் எதிர்பாராத வகையில் ஏற்படும் அசம்பாவிதங்கைளை தடுக்கலாம். இதற்கு மக்கள் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.






