என் மலர்
ஆன்மிகம்
- தேய்பிறை சஷ்டி விரதம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-24 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சஷ்டி நாளை விடியற்காலை 5.13 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : சித்திரை நாளை விடியற்காலை 4.53 மணி வரை பிறகு சுவாதி
யோகம் : மரண, அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை
தேய்பிறை சஷ்டி விரதம். குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு திருமஞ்சனம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர், நாமகிரிப்பேட்டை ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகி அம்மன். திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லி அம்மன் கோவில்களில் அபிஷேகம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.
உப்பிலியப்பன்கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-அமைதி
மிதுனம்-இரக்கம்
கடகம்-மாற்றம்
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-பொறுமை
துலாம்- போட்டி
விருச்சிகம்-புகழ்
தனுசு- உயர்வு
மகரம்-லாபம்
கும்பம்-நலம்
மீனம்-நற்செயல்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
முன்னேற்றம் கூடும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்
நினைத்தது நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. நேற்றைய வரவை இன்று விலை உயர்ந்த பொருளாக மாற்றுவீர்கள்.
கடகம்
சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். மறதியால் செய்ய மறந்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். தொழிலில் இருந்த போட்டிகள் அகலும்.
சிம்மம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வீடு வாங்கும் யோகம் உண்டு.
கன்னி
லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு கிட்டும். உத்தியோகத்தில் பம்பரமாக சுழன்று பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
துலாம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வரன்கள் வாயில் தேடி வரும்.
விருச்சிகம்
வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வருங்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் உருவாகும்.
தனுசு
மங்கலச்செய்தி மனை தேடி வரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனை அகலும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.
மகரம்
முன்னேற்றம் ஏற்படும் நாள். குடும்பச் சுமை கூடும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமான பற்றாக்குறை அகல புதிய வழி பிறக்கும்.
கும்பம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உடல்நலத்தில் கவனம் தேவை.
மீனம்
யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு இருமடங்காகும். புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும்.
- கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
- பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அக்னி சட்டி, அழகு குத்துதல், அங்கப் பிரதட்சணம், ஆயிரம் கண் பானை, கரும்புத் தொட்டில், தேர் இழுத்தல், மொட்டை போடுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி, தை, பங்குனி, சித்திரை உள்ளிட்ட மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும். இந்த காலகட்டங்களில் அதிக அளவிலான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்வர்.
இந்த நிலையில் இன்று தை கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், புளியங்குடி கரிவலம்வந்தநல்லூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆற்றுப்படுகையில் பக்தர்கள் கூட்டம் கடல்போல் காட்சி அளித்தது.
கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று தை கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குழந்தைகளுக்கு பாலூட்டும் இடவசதி, குடிநீர் வசதி, தங்குமிட வசதி, கழிப்பிட வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல முன்னேற்பாட்டு வசதிகளை செய்திருந்தன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக சாத்தூர் டி.எஸ்.பி. குருசாமி தலைமையில் நூற்றுக்க ணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பதை போன்று ஆரம்பத்தில் பிரம்ம தேவனுக்கும் 5 தலைகள் இருந்துள்ளது.
- சிவபெருமான் அழைத்தது, பிரம்மலோகத்தில் இருந்த பிரம்மாவின் காதுகளில் ஒலித்தது.
மும்மூர்த்திகளில் படைக்கும் தொழிலுக்கு அதிபதியானவர், பிரம்ம தேவன். இவரால் தான் உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் படைக்கப்படுகின்றன. பூமியில் பிரம்மனுக்கு கோவில்கள் குறைவு என்றாலும், அதில் நான்கு முகங்களுடன் பிரம்மா காட்சி தருவார். நான்கு முகங்களும் நான்கு வேதங்களையும், நான்கு திசைகளையும் குறிப்பதாக கூறப்படுகிறது.
புராணங்கள்படி, சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பதை போன்று ஆரம்பத்தில் பிரம்ம தேவனுக்கும் 5 தலைகள் இருந்துள்ளது. அவ்வாறு ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மா 'நான்முகன்' ஆனதற்கு சில புராணக் கதைகள் கூறப்படுகின்றன. அதில் ஒன்றை இங்கு பார்ப்போம்.
சிவனை போன்று 5 தலைகள் இருந்ததால், "அழிக்கும் கடவுளான சிவபெருமானை விட, படைக்கும் கடவுளான நானே உயர்ந்தவர்" என்ற கர்வம் பிரம்மனுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, பிரம்மா யாரையும் மதிக்காமல் செயல்பட ஆரம்பித்தார். இதை அறிந்த சிவபெருமான், பிரம்மனின் கர்வத்தை அடக்கி, உண்மையை உணர்த்திட முடிவு செய்தார்.
ஒரு சமயம் சிவபெருமான் கயிலாயத்தில் இருந்துகொண்டே பிரம்ம தேவனை அழைத்தார். சிவபெருமான் அழைத்தது, பிரம்மலோகத்தில் இருந்த பிரம்மாவின் காதுகளில் ஒலித்தது. இருப்பினும், படைப்பு தொழிலில் கவனம் செலுத்துவது போல இருந்தார். இதனால் கோபம் அடைந்த சிவபெருமான், பிரம்மலோகம் வந்தார். அப்போதும் பிரம்மா, சிவபெருமானை கவனிக்காமல் உதாசீனப்படுத்தினார்.
இதனால் மிகுந்த கோபத்துக்கு ஆளான சிவபெருமான், "பிரம்மனே! என்னை போன்று உனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால் தானே இவ்வளவு ஆணவம். இப்போதே உனது ஐந்தாவது தலையை துண்டித்து விடுகிறேன்" என பிரம்மனின் ஒரு தலையை துண்டித்து எறிந்தார். மேலும், "படைக்கும் தொழிலை இழந்து, பூலோகத்தில் மானிடராய் வாழ்ந்து அவதிப்படுவாய்" என்று சாபமிட்டார்.
பின்பு, தன் தவறை உணர்ந்த பிரம்மா, பூலோகத்தில் மானிடராய் அலைந்து திரிந்து, செல்லும் இடமெல்லாம் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவ்வாறு திருப்பட்டூர் தலத்துக்கு வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, சிவபெருமான் மனம் மகிழ்ந்து பிரம்மனுக்கு சாப விமோசனம் அளித்தார். இதையடுத்து நான்முகனாக, பிரம்மா மீண்டும் படைக்கும் தொழிலை கவனிக்க தொடங்கினார்.
- குழியிலிருந்து ஊற்றுத் தோன்றியதால் இவ்வூர் ஊற்றுக்குழி எனப்பெயர் பெற்றது.
- கதித்தமலையே ஓர் அழகிய மயில் வடிவில் தான் உள்ளது.
சிவபெருமான், அகத்தியர், அருணகிரிநாதர் ஆகிய மூவரும் முருகப்பெருமானிடம் உபதேசம் பெற்றவர்கள் ஆவர். அகத்தியர் முருகப்பெருமான் குடிகொண்டுள்ள தலங்களுக்கெல்லாம் யாத்திரை சென்றார். அப்போது கதித்தமலையான இப்பகுதியில் தவம் இயற்ற விரும்பி முயற்சித்த போது, நீர் நிலை இல்லாமல் தவித்தார்.
உடனே முருகப்பெருமானை வேண்ட, அகத்தியரின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்த முருகப்பெருமான், மலையில் தம் வெற்றிவேலினை ஊன்றி, ஒரு வற்றாத ஊற்றை ஏற்படுத்தினார். அந்த ஊற்றிலிருந்து நீர் பொங்கிப் பெருகியது. மகிழ்வுற்ற அகத்தியர் அனுட்டானங்களை எல்லாம் முடித்து வழிபாடும் மிகச் சிறப்புடன் செய்தார். அன்று முருகப்பெருமான் கூர் வேலினால் ஏற்படுத்திய அவ்வூற்று இன்றும் நம் கண் முன் வற்றாமல், வளமாக உள்ளது. குழியிலிருந்து ஊற்றுத் தோன்றியதால் இவ்வூர் ஊற்றுக்குழி எனப்பெயர் பெற்றது.
இன்று அது மருவி ஊத்துக்குளி என்றாயிற்று. கதித்தமலையே ஓர் அழகிய மயில் வடிவில் தான் உள்ளது. மயிலுக்கு "மயூரம்" என்ற மற்றொரு பெயரும் உண்டு. கதித்தமலையை "மயூர கிரி" என்றும் அழைப்பர். "கதித்தமலைக் கவியமுதம்" என்ற நூல் மூலம் சண்முகசுந்தரக் கவிராயரும், "கதித்தமலைப்பிள்ளைத்தமிழ்" என்ற நூல் வழி சோமசுந்தரம் பிள்ளையும், "கதித்தமலைப் பதிகம்" என்ற கவிதை நூல் மூலம் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும், நம் கதித்தமலையின் பேரரும் சிறப்புகளை எல்லாம் பெரிதும் வியந்து போற்றிப் பாராட்டி உள்ளனர்.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- ஸ்ரீவில்லிபுத்துர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-23 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பஞ்சமி மறுநாள் விடியற்காலை 4.03 வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : அஸ்தம் பிள்ளிரவு 3.03 வரை பிறகு சித்திரை
யோகம் : அமிர்த/சித்தயோகம்
ராகு காலம் : காலை 10.30-12.00 மணி
எமகண்டம் : பிற்பகல் 3.00-4.30 மணி
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6-7 மணி மாலை 5-6 மணி
திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை
சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கூரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம். திருமயம் ஸ்ரீ ஆண்டாள் பவனி. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்துர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமணருக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - லாபம்
ரிஷபம் - விருத்தி
மிதுனம் - நிறைவு
கடகம் - கவனம்
சிம்மம் - முயற்சி
கன்னி - ஊக்கம்
துலாம் - நன்மை
விருச்சிகம் - சுகம்
தனுக - மேன்மை
மகரம் - உற்சாகம்
கும்பம் - தெளிவு
மீனம் - கடமை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகும். சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். மனதிற்கினிய சம்பவம் மாலையில் நடைபெறும்.
ரிஷபம்
உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மிதுனம்
காலை நேரத்திலேயே காது இனிக்கும் செய்தி வந்து சேரும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டு பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வீர்கள்.
கடகம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். காரியங்களைத் திறம்பட செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
சிம்மம்
எதிர்கால வெற்றிக்கு அடித்தளமிடும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமை அடைவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
கன்னி
மனக்குழப்பம் ஏற்படும் நாள். எடுத்த செயலை எளிதில் முடிக்க இயலாது. தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றலாமா என சிந்திப்பீர்கள்.
துலாம்
பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுகளைப் பெறும் நாள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு.
விருச்சிகம்
வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வாகன யோகம் உண்டு. வருமானம் இரு மடங்காகும். சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
தனுசு
சந்தோஷம் கூடும் நாள். அடகு வைத்த நகைகளை மீட்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பர்.
மகரம்
லாபகரமான நாள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கும்பம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வீண் விரயம் உண்டு.
மீனம்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும். சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.
- கோவிலின் மையத்தில் விளக்கொளி பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
- புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருத்தண்கா (தூப்புல்) இடத்தில் அமைந்துள்ளது விளக்கொளி பெருமாள் கோவில். திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 45-வது திருத்தலமாகும். இக்கோவில் மூலவர் விளக்கொளி பெருமாள், தீபப் பிரகாசர், திவ்ய பிரகாசர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி மரகதவல்லி தாயார்.
ஒரு சமயம் பிரம்மதேவர், 'பூலோகத்தில் தனக்கு கோவில் இல்லையே' என்பதை நினைத்து வருந்தினார். இதனால் சிவபெருமானை நினைத்து பிரமாண்ட யாகம் ஒன்றை நடத்தினார். மனைவியுடன் இணைந்துதான் யாகம் நடத்த வேண்டும் என்பது விதி. ஆனால் பிரம்மதேவர், சரஸ்வதி தேவியின் துணையில்லாமல் யாகம் நடத்த தொடங்கினார். இதனால் கோபம் அடைந்த சரஸ்வதி தேவி, யாகத்தை தடுக்க எண்ணி உலகத்தையே இருளில் மூழ்க செய்தார்.
இதையடுத்து பிரம்மதேவர், மகாவிஷ்ணுவின் உதவியை நாடினார். விஷ்ணு பகவான், பிரம்மனின் கோரிக்கையை ஏற்று, ஜோதி வடிவில் காட்சி தந்து யாகம் சிறப்பாக நடக்க அருள்புரிந்தார். எனவே தான் இங்குள்ள இறைவன் 'விளக்கொளி பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். பின்பு பிரம்மதேவர், சரஸ்வதி தேவியையும் சமாதானம் செய்தார்.
இந்த ஆலயம் சோழர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோவிலின் மையத்தில் விளக்கொளி பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். கோவிலில் லட்சுமி, ஹயக்ரீவர், ஆண்டாள், வேதாந்த தேசிகர், ஆழ்வார்கள் ஆகியோருக்கும் சன்னிதி உள்ளன. கோவிலுக்கு வெளியே சரஸ்வதி தீர்த்தம் காணப்படுகிறது.
புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அவ்விழாவில் வேதாந்த தேசிகர், வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு எழுந்தருள்வார். கல்வியில் சிறக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இத்தல பெருமாளை பக்தர்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.
காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
- பலர் தங்கள் படுக்கையறைகளில் கண்ணாடிகளை வைக்க விரும்புகிறார்கள்.
- படுக்கையறையை எப்போதும் சுத்தமாகவும், நன்கு காற்றோட்டமாகவும் வைத்திருங்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, படுக்கையறை வீட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். இது ஓய்வு எடுக்க மற்றும் கணவன் மனைவியுடனும் தொடர்புடையது. எனவே, இங்கே வாஸ்து சாஸ்திரங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். படுக்கையறையில் எதை வைக்க வேண்டும், எதை வைக்கக்கூடாது என்பதை ஆராய்வோம்.
படுக்கையறையில் சிலைகளை வைக்காதீர்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, தெய்வங்களின் சிலைகளை பூஜை அறையில் மட்டுமே வைக்க வேண்டும். அவற்றை வீட்டில் வேறு எங்கும் வைக்கக்கூடாது. மேலும், படுக்கையறையில் தெய்வங்களின் சிலைகளை வைக்கக்கூடாது.
தவறான இடத்தில் சிலைகளை வைப்பது பயத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி, திருமணத்தில் விரிசலை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், சிலைகள் அல்லது படங்கள் அமைதியையும் நேர்மறை ஆற்றலையும் பரப்பும் இடத்தில் வைக்கப்பட வேண்டும்.
படுக்கையறையில் இந்த பொருட்களை வைக்காதீர்கள்
* வாஸ்து சாஸ்திரத்தின்படி, தானியங்கள் போன்ற உணவுப் பொருட்களை படுக்கையறையில் வைக்கக்கூடாது. அவற்றை அங்கே வைத்திருப்பது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கத்திகள், கத்தரிக்கோல் போன்றவற்றையும் படுக்கையறையில் வைக்கக்கூடாது.

* படுக்கையறையில் நீர் தொடர்பான பொருட்களை, மீன் தொட்டிகள், நீரூற்றுகள் அல்லது நீர் படங்களை வைத்திருப்பது வாஸ்து குறைபாடுகளை உருவாக்குகிறது. இந்த நீர் பொருட்கள் நிதி உறுதியற்ற தன்மையையும் வறுமையையும் அதிகரிக்கும். படுக்கையறையில் இதுபோன்ற பொருட்களைத் தவிர்த்து, இயற்கை அல்லது பூக்கள் போன்ற நேர்மறையான படங்களை வைக்கவும். இந்த சிறிய மாற்றங்கள் படுக்கையறையின் ஆற்றலை மேம்படுத்தி செழிப்பைக் கொண்டுவரும்.
* பலர் தங்கள் படுக்கையறைகளில் கண்ணாடிகளை வைக்க விரும்புகிறார்கள். இருப்பினும், அவற்றின் எதிர்மறை விளைவுகள் இடத்தைப் பொறுத்தது. மேலும், படுக்கையறையில் படுக்கைக்கு முன்னால் ஒரு டிரஸ்ஸிங் டேபிள் இருப்பது வாஸ்து குறைபாட்டை உருவாக்குகிறது, இது ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் பாதிக்கிறது.
இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்
நீங்கள் ஒரு கண்ணாடியை நிறுவினால், உங்கள் படுக்கை கண்ணாடியில் பிரதிபலிக்கும் வகையில் இருப்பது நல்ல யோசனையல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். படுக்கையறையில் உங்கள் படுக்கைக்கு முன்னால் ஒரு கண்ணாடியை வைப்பது உங்கள் மன அமைதியைக் கெடுக்கும்.
தூய்மையில் கவனம் செலுத்துதல்
வாஸ்து சாஸ்திரத்தில் தூய்மை மிகவும் முக்கியமானது. ஒரு ஒழுங்கற்ற மற்றும் அழுக்கான படுக்கையறை எதிர்மறை சக்தியை ஈர்க்கிறது. இது நிதி சிக்கல்கள் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. உங்கள் படுக்கையறையை எப்போதும் சுத்தமாகவும், நன்கு காற்றோட்டமாகவும் வைத்திருங்கள்.
- ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-22 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தி பின்னிரவு 3.11 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : உத்திரம் நள்ளிரவு 1.41 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் கோவில்களில் அபிஷேகம்
இன்று சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சி பிள்ளையார், ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முருக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் காலையில் ஹோமம், அபிஷேகம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் புஷ்பாங்கி சேவை.
சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெரு மானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்ணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-ஆக்கம்
மிதுனம்-ஆதரவு
கடகம்-நலம்
சிம்மம்-பக்தி
கன்னி-சிறப்பு
துலாம்- போட்டி
விருச்சிகம்-வாழ்வு
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-வெற்றி
கும்பம்-மாற்றம்
மீனம்-பணிவு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
கனவுகள் நனவாகும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். முயற்சித்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கடன்கள் வசூலாகும்.
ரிஷபம்
பிரச்சனைகள் அகலும் நாள். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்போடு விரும்பிய காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மிதுனம்
பொழுது விடியும்பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடகம்
வளர்ச்சி கூடும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். இடம் வாங்கும் யோகம் உண்டு.
சிம்மம்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடருவீர்கள். மங்கல நிகழ்ச்சி மனையில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
கன்னி
யோகமான நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள்.
துலாம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வீடு மாற்ற சிந்தனை அதிகரிக்கும்.
விருச்சிகம்
முன்னேற்றம் கூடும் நாள். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
தனுசு
புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழில்ரீதியாக எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
மகரம்
வரவும், செலவும் சமமாகும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். வருமானம் உயரும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
கும்பம்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பயணங்களால் இடையூறுகள் ஏற்படும்.
மீனம்
உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். கல்யாண கனவுகள் நனவாகும்.
- சிவபெருமான் வேடனாக காட்சி தந்ததால், இத்தல இறைவன் 'திருவேட்டீசுவரர்' என்று அழைக்கப்படுகிறார்.
- கோவிலில் தனித்தனி சன்னிதியில் அருகருகே மகாலட்சுமி தாயார் மற்றும் சரஸ்வதி தேவி உள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ளது, மிகவும் பழமை வாய்ந்த செண்பகாம்பிகை உடனுறை திருவேட்டீசுவரர் திருக்கோவில். தேவார வைப்புத் தலம், மகாலட்சுமி வழிபட்ட தலம், ராகு-கேது பரிகாரத் தலம், சிவன், அம்பாள், சண்முகர் ஆகிய மூவருக்கும் தனித் தனியாக கொடிமரம் அமைந்த தலம் என பல்வேறு சிறப்புகளை உடைய தலமாக இக்கோவில் விளங்குகிறது. இத்தலத்தின் இறைவன் 'திருவேட்டீசுவரர்' என்றும், இறைவி 'செண்பகாம்பிகை' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
தல வரலாறு
ஒரு சமயம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். பல தலங்களுக்கு சென்ற அர்ஜூனன், செண்பக காடு வழியாக வந்தபோது, வித்தியாசமான நிறத்தில் ஒரு பன்றி இருப்பதை கண்டான். அந்த பன்றியை வேட்டையாட எண்ணிய அர்ஜூனன், பன்றியின் மீது அம்பு எய்தான். அம்பு பாய்ந்த பன்றி, கீழே விழுந்து இறந்தது. அர்ஜூனன் அருகில் வந்து பார்த்தபோது, பன்றியின் உடலில் இரண்டு அம்புகள் இருந்தன.
அர்ஜூனன், 'இன்னொரு அம்பை யார் செலுத்தி இருப்பார்' என்று யோசித்தான். அந்த வேளையில் அங்கு வந்த வேடன் ஒருவன், "இந்த பன்றியை நான் தான் கொன்றேன். எனவே இது எனக்கு தான் சொந்தம்" என்றான். அர்ஜூனன், 'முதலில் அம்பு எய்தது நான் தான். என்னுடைய அம்புபட்டு தான் பன்றி வீழ்ந்தது. எனவே இந்த பன்றி எனக்கே சொந்தம்" என்றான். இதனால் கோபம் அடைந்த வேடன், தன்னுடைய அம்பை எடுத்து அர்ஜூனன் மீது குறிவைத்தான்.
உடனே சுதாரித்துக்கொண்ட அர்ஜூனன், வேகமாக வேடனின் தலையை குறி பார்த்து அம்பு எய்தான். அர்ஜூனன் எய்த அம்பு வேடனின் தலையில் பட்டு ரத்தம் வடிந்தது. அடுத்த நொடியே வேடன், சிவபெருமானாக தோன்றினார்.
இதையடுத்து அர்ஜூனன், 'தங்களையா நான் காயப்படுத்தினேன்' என்று கண்ணீருடன் வருந்தினான். சிவபெருமான், "கவலைப்படாதே அர்ஜூனா, நடப்பது அனைத்தும் ஒரு காரணத்திற்காக தான். அடுத்த பிறவியில் நீ கண்ணப்பனாக பிறந்து, என்னை வணங்கி புகழ் பெறுவாய்" என்று ஆசி வழங்கினார். சிவபெருமான் வேடனாக காட்சி தந்ததால், இத்தல இறைவன் 'திருவேட்டீசுவரர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு 'பார்த்த பிரகர லிங்கம்' என்ற பெயரும் உண்டு.
அடுத்த பிறவியில் அர்ஜூனன், கண்ணப்பன் எனும் வேடனாக பிறந்தான். மிகுந்த சிவ பக்தி கொண்டிருந்த கண்ணப்பன், சிவனுக்கு தன் கண்ணையே காணிக்கையாக கொடுத்து பரிகாரம் தேடிக்கொண்டான். மேலும் சிவன் அருளால் நாயனாராகவும் அந்தஸ்து பெற்றான். அர்ஜூனன் வழிபட்ட தலம் என்பதால் இங்கு கண்ணப்ப நாயனார் உற்சவராக இருக்கிறார்.
இக்கோவில் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. காலப்போக்கில் இக்கோவில் முற்றிலும் அழிந்து, மூலவர் சிவலிங்கம் செண்பக மரங்களுக்கு இடையில் புதைந்து இருந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு ஒரு பசு தினமும் பால் சொரிந்து கொண்டிருந்துள்ளது. இதைப் பார்த்த ஊர் மக்கள், அந்த இடத்தை ஆராய்ந்து பார்த்தபோது, அங்கு சுயம்பு லிங்கம் இருந்துள்ளது. அந்த லிங்கத்தில் வெட்டு வடு இருந்ததால் இறைவன் 'திருவேட்டீசுவரர்' என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பின்பு இறைவனுக்கு கோவிலும் எழுப்பப்பட்டது.
கோவில் அமைப்பு
இந்த ஆலயம் ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முக மண்டபத்தின் முன், கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியன உள்ளன. உள் பிரகாரத்தில் விநாயகர், வீரபத்திரர், பால முருகன், சமயக் குரவர்கள், சேக்கிழார் போன்றோர் உள்ளனர். வெளிப்பிரகாரத்தில் விஸ்வநாதர், ராமலிங்கர், நவக்கிரகங்கள் காட்சி அளிக் கின்றன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

கோவில் தோற்றம் - சிவனை வழிபடும் மகாலட்சுமி
அம்பாள் செண்பகாம்பிகை தாயார், தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவர் சன்னிதி முன்பாக கொடிமரம் பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவை இருக்கின்றன. மகாலட்சுமி, திருமாலை மணந்து கொள்வதற்காக இங்குள்ள சிவபெருமானை வணங்கியதாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்குள்ள தூண் ஒன்றில் மகாலட்சுமி கைகளில் கலசத்தை வைத்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தபடி காட்சி தருகிறார். மேலும் இங்குள்ள மண்டப தூண்களில் முனிவர்கள், ரிஷிகள் மற்றும் அனுமனின் பல்வேறு தோற்றத்தில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
கோவிலில் தனித்தனி சன்னிதியில் அருகருகே மகாலட்சுமி தாயார் மற்றும் சரஸ்வதி தேவி உள்ளனர். இங்குள்ள சரஸ்வதியிடம் வீணை கிடையாது. பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு ஒவ்வொரு சஷ்டியின் போதும் 6 மலர்கள், 6 நைவேத்தியங்கள், 6 வகையான பழங்கள் படைத்து பூஜை செய்யப்படுகிறது.
வழிபாடு
கோவிலில் தினமும் காலை பூஜையின்போது மூலவர் அருகில் ஸ்படிக லிங்கத்தையும், நவக்கிரகங்க ளுக்குரிய நவரத்தினத்தையும் வைக்கின்றனர். பின்பு, ஒவ்வொரு கிரகத்துக்குரிய தானியங்கள், மலர்களை கொண்டு பூஜை செய்யப்படுகிறது. சூரியனுக்கு வைத்த மலரை பிரகாரத்தில் காணப்படும் சூரியன் சிலை முன்பு வைத்து தீபாராதனை நடைபெறுகிறது. அதன்பின்பே மூலவருக்குரிய பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜையில் 'ருத்ரதிரிசதி' எனப்படும் சிவபெரு மானுக்குரிய 300 திருநாமங்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது. அவ்வேளையில் சிவபெருமானை வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
பொதுவாக சிவன் கோவில்களில் அர்த்தஜாம பூஜை முடிந்து, பள்ளியறை பூஜையின்போது சிவனின் பாதமே கொண்டு செல்லப்படும். ஆனால், இங்கு சிவபெரு மானே பள்ளியறைக்குள் செல்கிறார். இதற்காக அர்த்த மண்டபத்தில் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இங் குள்ள சிவபெருமானை இந்திரன் வழிபட்டதாக கூறப் படுகிறது. அதன் அடிப்படையில், புரட்டாசியில் இந்திர பூஜை நடைபெறுகிறது. அப்போது, சுவாமியின் சன்னிதி முழுவதும் காய்கறி, பழங்கள் மற்றும் இனிப்புகளால் அலங்கரிக்கப்படுகிறது.
ஆலயத்தில் சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், புரட்டாசி மகாளய அமாவாசை, மாசி மகத்தில் தீர்த்தவாரி, பங்குனி உத் திரம் போன்ற விழாக்கள் மிகவும் சிறப் பாக கொண்டாடப்படுகிறது. கோவில், காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற் காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
சென்னை திருவல்லிக்கேணி தபால் நிலையம் பஸ் நிறுத்தத்திற்கு அருகிலேயே இக்கோவில் அமைந் துள்ளது. திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் உள்ளது.






