என் மலர்
அமெரிக்கா
- உலக பணக்காரரான எலான் மஸ்க் புதிய சாதனை.
- எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.
உலக பணக்காரரான எலான் மஸ்க் புதிய சாதனையை படைத்துள்ளார். டெஸ்லா, ஸ்பெஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ் சமூக வலை தளம் ஆகியவற்றின் உரிமை யாளரான அவரது சொத்து மதிப்பு சமீபகாலமாக ஏற்றமடைந்து வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எலான் மஸ்க் ஆதரவு அளித்தார். டிரம்ப் வெற்றி பெற்றதும் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் 65 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
அதேபோல் அவரது மற்ற நிறுவன பங்குகளும் விலை அதிகரித்தது. இதனால் எலான் மஸ்க் சொத்து மதிப்பு உயர்ந்தது.

இந்த நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் நிகர சொத்து மதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை எலான் மஸ்க் படைத்துள்ளார்.
ப்ளூம் பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.37 லட்சம் கோடி) எட்டியுள்ளது.
ஸ்பெஸ்எக்ஸ் நிறுவ னத்தின் முதலீட்டாளர்கள் 1.25 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்து எலான் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்தின் மதிப்பு 50 பில்லியன் டாலர் உயர்ந்து 440 பில்லியன் டாலராக அதிகரித்தது.
மேலும் ஒரு ஒப்பந்தம் காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன மதிப்பு சுமார் 350 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதனால் எலான்மஸ்க்குக்கு கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மஸ்க் தனது நிகர மதிப்பில் 218 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- புதிய காரை ஓட்டி வந்து விற்பனை நிலையத்தின் முன்பக்க கண்ணாடி கதவை உடைத்தார்.
- கண்ணாடி கதவு, மேஜை உள்ளிட்ட பொருட்கள் நொறுங்கி சிதறும் வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
கார் வாங்கி அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர், விற்பனை நிலைய கண்ணாடி கதவை உடைத்துக் கொண்டு வந்து காரை நிறுத்தும் வீடியோ இணையத்தில் பரவுகிறது. அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் ஒரு கார் விற்பனை நிலையத்தில் மைக்கேல் முர்ரே (வயது35) என்பவர் புதிய காரை பதிவு செய்து வாங்கினார்.
காரை ஓட்டிச் சென்ற சிறிது நேரத்தில் அவர் திரும்ப வந்தார். 'கார் திருப்தியில்லை, காரை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று விற்பனை நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டார். ஆனால் 'விற்பனை செய்த காரை திரும்பப் பெறுவதில்லை' என்று அதிகாரிகள் பதிலளித்தனர்.
இதனால் மைக்கேல் ஆத்திரம் அடைந்தார். 'காரை ஷோரூம் கதவை உடைத்துக் கொண்டு ஓட்டுவேன்' என்று ஆவேசமாக கூறினார். அதற்கு கார் நிறுவனத்தினர் 'மிரட்டல் வேண்டாம்' என்று அனுப்பினர். அவசரமாக வெளியே சென்ற மைக்கேல் தான் சொன்னபடியே புதிய காரை ஓட்டி வந்து விற்பனை நிலையத்தின் முன்பக்க கண்ணாடி கதவை உடைத்தார். கண்ணாடி கதவு, மேஜை உள்ளிட்ட பொருட்கள் நொறுங்கி சிதறும் வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. ஒரு கோடியே 75 லட்சம் பேர் வீடியோவை பார்வையிட்டு உள்ளனர். இது தொடர்பாக மைக்கேல் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
- மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்குகின்றன.
- உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவை முடங்கியது.
நியூயார்க்:
அமெரிக்காவை மையமாகக் கொண்டு மார்க் ஜூக்கர்பர்க் கடந்த 2004-ம் ஆண்டில் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம் பேஸ்புக்.
உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது.
தற்போது மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றை மார்க் ஜூக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் உலகெங்கும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரு சமூக வலைதளங்களும் முடங்கின.
இதனால் அவற்றை பயன்படுத்தும் பயனாளர்கள் கருத்துப் பரிமாற்றம் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.
இரவு 11 மணி முதல் வாட்ஸ்-அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என எக்ஸ் தளத்தில் பயனாளர்கள் புகாரளித்து வந்தனர். அதன் பிறகு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களும் செயல்படவில்லை.
இதனையடுத்து #MetaDown, #WhatsappDown போன்ற ஹேஷ்டேகுகளை பயன்படுத்தி பயனர்கள் பலரும் புகார் கூறிவருகின்றனர். இதனால் சில நிமிடங்களிலேயே இந்த ஹேஷ்டேகுகள் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இதுகுறித்து மெட்டா நிறுவனம் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. இதே போல கடந்த மார்ச் மாதம் இந்தியா உட்பட உலக அளவில் மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள சேவை முடங்கியது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்கா ஒப்புதலை தொடர்ந்து ரஷியா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
- இதற்கு பதிலடியாக ரஷியா புதிய வகை ஏவுகணையை உக்ரைன் மீது செலுத்தி சோதனை நடத்தியது.
உக்ரைன்- ரஷியா இடையே நடைபெற்று வரும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நெடுந்தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா ஒப்புதல் கொடுத்தது.
இதனைத்தொடர்ந்த உக்ரைன் ரஷியா மீது தாக்குதல் நடத்தியது. இதை ரஷியா வெற்றிகரமாக முறியடித்தது. அதேவேளையில் ரஷியா உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன குற்றம்சாட்டியது.
ஆனால், நாங்கள் ஒரேஷ்னிக் என்ற புதிய ஏவுகணையை சோதனை செய்தோம். இந்த ஏவுகணை உக்ரைன் பகுதியை தாக்கியதன் மூலம் சோதனை வெற்றி பெற்றது என புதின் அறிவித்தார்.
இந்த நிலையில் உளவுத்துறை மதிப்பீட்டின்படி மீண்டும் உக்ரைன் மீது ரஷியா பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதற்கிடையே உக்ரைன் போரில் கேம் சேஞ்சராக ஒரேஷ்னிக் இருப்பதைவிட, அமெரிக்காவை மிரட்டும் முயற்சியாகவே இது பார்க்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் பார்க்கிறார்கள்.
ரஷியாவிடம் ஒருசில ஏவுகணைகள் மட்டுமே இருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்த மற்ற ஏவுகணைகளை விட சிறிய வகை மட்டுமே கொண்டுள்ளனர் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டடு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
- கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் கூகுலின் குவாண்டம் ஆய்வகம் உள்ளது
- 30 ஆண்டுகால சவாலை முறியடித்து ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
குவாண்டம் கம்ப்யூட்டிங் என்பது குவாண்டம் கோட்பாட்டின் கொள்கைகளின் அடிப்படையில் கணினிகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் கணினி அறிவியலின் ஒரு பகுதியாகும். இயற்பியலின் கூறுகளை பயனப்டுத்தி மிகவும் சிக்கலான சிக்கல்களைத் தீர்க்க குவாண்டம் கம்ப்யூட்டிங் பயன்படுத்துகிறது.
குவாண்டம் கம்ப்யூட்டிங் ஒரு வளர்ந்து வரும் அறிவியல் துறையாக உள்ள நிலையில் தற்போது அதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகிள் நிறுவனம் சார்பில் புதிய குவாண்டம் கம்பியூட்டிங் சிப் [CHIP] ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய குவாண்டம் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்த புதிய சிப்-க்கு வில்லோ [WILLOW] என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஒரு சிக்கலான கணித பிராப்லம் -ஐ இன்றைய சூப்பர் கம்ப்யூட்டர்கள் தீர்க்க 10 செப்டில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொண்டால், அதே சிக்கலை 'வில்லோ' 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் தீர்க்கிறது என்று கூறப்பட்டுள்ளது. [1 (24 சைபர்கள்) = 1 செப்டில்லியன்]

எங்கள் புதிய அதிநவீன குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் 30 ஆண்டுகால சவாலை முறியடித்து ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- 150 ஆண்டு கால சட்டத்தை மாற்றிமைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
- டிரம்பின் முடிவால் இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று உள்ள டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்கிறார்.
இதற்கிடையே தனது 2-வது முறை ஆட்சியில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக சட்ட விரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நீக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அரசியலமைப் பின் 14-வது திருத்தத்தின் படி, பெற்றோரின் குடியுரிமையைப் பொருட்படுத்தாமல், அதன் எல்லைக்குள் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.

150 ஆண்டு கால சட்டத்தை மாற்றிமைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதேவேளை அதை செயல்படுத்துவது என்பது டிரம்புக்கு கடினமாக இருக்கும்.
ஏற்கனவே டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், இச்சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இந்த அமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. அமெரிக்க குடிமகனாக மாறுவதற்கு கடுமையான தரநிலைகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்பின் இந்த முடிவால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.
- சேவை பாதித்துள்ள நிலையில் பயனாளர்களின் கோப்புகள் பாதுகாப்பாக உள்ளது.
- மைக்ரோசாப்ட் சேவையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணி நடைபெறுகிறது.
வாஷிங்டன்:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் கடந்த ஜூலை மாதம் 19 ம் தேதி சர்வதேச அளவில் முடங்கியது. மென்பொருள் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் இன்று நள்ளிரவில் திடீரென உலகளவில் சேவைகள் முடங்கியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சேவை பாதித்துள்ள நிலையில் பயனாளர்களின் கோப்புகள் பாதுகாப்பாக உள்ளது. மைக்ரோசாப்ட் சேவை முடங்கியதால் அவுட்லுக், எக்செல் போன்ற செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் சேவையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணி நடைபெறுகிறது.
- கடந்த நவம்பர் 30 ஆம் தேதி அமேரிக்கா சென்று டிரம்பை அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்தார்.
- அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறக்கூடும் என ட்ரூடோவிடம் சொன்னார்
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் கனடாவை அமேரிக்காவின் 51 வது மாகாணமாக பொருள்படும்படி அந்நாட்டின் பிரதமர் ட்ரூடோவை [மாகாண] கவர்கனர் ட்ரூடோ என்று தனது சமூக வளைதல பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் சொந்தமாக நடத்தி வரும் ட்ரூத் சோஷியல் என்ற சமூக ஊடகத்தில் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்டேட் ஆப் கானடாவின் கவர்னர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் இரவு உணவருந்தியது மகிழ்ச்சியாக இருந்தது vஎன்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார், மேலும் , கனடாவின் கவர்னர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் சேர்ந்து, விரைவில் மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். மற்றும் எங்களிடையில் நடக்கும் வர்த்தகம், வரி குறித்த பேச்சுவார்த்தை பிரமிக்க வைக்கும் வகையில் அமையும் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த நவம்பர் 25 அன்று, அமெரிக்காவிற்குள் குடியேறுபவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கனடாவும், மெக்சிகோவும் தடுக்கவில்லையென்றால் பதவியேற்றவுடன் இரு நாட்டு பொருட்களுக்கும் 25 சதவீத வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.
அமெரிக்க வர்த்தகத்தை அதிகம் சார்ந்துள்ள கனடா இதனால் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்பதால் கனடா அதிபர் ட்ரூடோ பதறியடித்துக்கொண்டு கடந்த நவம்பர் 30 ஆம் தேதி அமேரிக்கா சென்று டிரம்பை அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்தார்.
ஃபாக்ஸ் நியூஸ் செய்தியின்படி, அன்றைய தினம் டிரம்ப் இரவு விருந்தின் போது ட்ரூடோவிடம், எல்லைப் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தக குறைகளை நிவர்த்தி செய்ய தனது வரி உயர்வு அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

அத்தகைய வரி கனேடிய பொருளாதாரத்தை அழித்துவிடும் என்றும் எல்லையில் அதிக கவனம் செலுத்துவதாகவும் ட்ரூடோ கூறியுள்ளார். இந்த உரையாடலின்போது, ஒருவேளை கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறக்கூடும் என ட்ரூடோவிடம் கேலியாக சொன்னார் என்றும் ஃபாக்ஸ் நியூஸ் குறிப்பிட்டது.
இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் டிரம்ப் நேரடியாகவே தனது சமூக வலைத்தளத்தில் கனடாவை அமெரிக்காவின் மாகாணமாகக் குறிப்பிட்டு ட்ரூடோவை ஆளுநராக குறிப்பிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
- தாம்சன் மீது சுடப்பட்ட தோட்டாக்களில் 'Deny, defend, depose' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன.
- நான் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் இதை செய்தே ஆக வேண்டும்
அமெரிக்காவில் மருத்துவத்துறை சார்ந்த முன்னணி நிறுவனம் யுனைடட் ஹெல்த்கேர். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி [சிஇஓ] பிரையன் தாம்சன் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி [புதன்கிழமை] மன்ஹாட்டனில் நிறுவனம் முதலீட்டாளர் தினத்தை நடத்தும்போது நியூயார்க் ஹில்டன் மிட்டவுன் ஹோட்டலுக்கு வெளியே வைத்து மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
50 வயதான தாம்சன், யுனைடெட் ஹெல்த் கேர், யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் காப்பீட்டுப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஏப்ரல் 2021 முதல் தாம்சன் செயல்பட்டு வந்தார். தாம்சன் மீது சுடப்பட்ட தோட்டாக்களில் 'Deny, defend, depose' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன.

இந்த கொலை தொடர்பாகக் கடந்த வாரம் முதல் குற்றவாளியைத் தேடி வந்த எப்.பி.ஐ. போலீஸ் 26 வயதான இன்ஜினீயரிங் பட்டதாரி லூய்கி மான்ஜியோன் என்ற இளைஞரை இன்று கைது செய்துள்ளது.
முன்னதாக இவரின் புகைப்படங்களை போலீஸ் வெளியிட்டிருந்தது. அதன்படி அல்டூனா பகுதியில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவக ஊழியர் ஒருவர் இவரை அடையாளம் கண்டு போலீசிடம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஜினீயர் மான்ஜியோனை மடக்கிப் பிடித்துள்ளது.
கைது செய்யப்பட்டபோது மான்ஜியோன் "கார்ப்பரேட் அமெரிக்காவிற்கு" எதிராக என்ற கையால் எழுதப்பட்ட ஒரு அறிக்கையை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகள் கூற்றுப்படி, அந்த இரண்டு பக்க அறிக்கையில், [மருத்துவ] சுகாதாரத் துறை நோயாளிகளின் நலனை விட லாபத்தையே முதன்மை நோக்கமாக வைத்திருப்பதை விமர்சித்ததும், இதற்கு வன்முறைதான் பதில் என்ற முடிவை பரிந்துரைத்துள்ளது.
நான் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் இதை செய்தே ஆக வேண்டும், இந்த ஒட்டுண்ணிகளுக்கு இது நடக்க வேண்டியதுதான் [These parasites had it coming] என்று அதில் எழுதி வைத்துள்ளார். இன்ஜினியர் பட்டதாரி லூய்கி மான்ஜியோன் தன்னிச்சையாகவே இந்த கொலையை செய்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
- ஹர்மீத் நாட்டின் முன்னணி தேர்தல் வழக்கறிஞர்களில் ஒருவர்.
- அரசியலமைப்பு உரிமைகளின் அயராத பாதுகாவலராக இருப்பார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்கிறார். அவர் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறுபவர்களை நியமித்து வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்க நீதித்துறையின் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் வக்கீலான ஹர்மீத் கே தில்லானை நியமிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதள பதிவில் கூறும்போது, அமெரிக்க நீதித்துறையில் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக ஹர்மீத் கே. தில்லானை பரிந்துரைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அவர் தனது வாழ்க்கை முழுவதும், நாட்டின் சிவில் உரிமைகளைப் பாதுகாக்க தொடர்ந்து நிலைத்து நிற்கிறார். ஹர்மீத் நாட்டின் முன்னணி தேர்தல் வழக்கறிஞர்களில் ஒருவர். தனது புதிய பாத்திரத்தில், ஹர்மீத் நமது அரசியலமைப்பு உரிமைகளின் அயராத பாதுகாவலராக இருப்பார்.
குடிமை உரிமைகள் மற்றும் தேர்தல் சட்டங்களை நேர்மையாகவும் உறுதியாகவும் செயல்படுத்துவார் என்று தெரிவித்தார்.
டிரம்பின் புதிய அமைச்சரவையில் பரிந்துரைக்கப்பட்ட 4-வது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஹர்மீத் தில்லான் ஆவார்.
- அதிகளவிலான டிரோன்களை பயன்படுத்தி சாகசம் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றது.
- வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி 10 கோடி பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் களைகட்ட தொடங்கி உள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மான்ஸ்பீல்ட்டு நகரில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று டிரோன் சாகசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
அந்த வகையில் இரவுநேரத்தில் வானத்தில் 5 ஆயிரம் டிரோன்களை பயன்படுத்தி வானில் உலா வரும் வகையிலான ராட்சத கிறிஸ்துமஸ் தாத்தா போன்ற தோற்றத்தை உருவாக்கினர். வானில் பறக்கவிடப்பட்ட டிரோன்களால் ஆன பூமி உருண்டையை பின்னணியாக கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா ஒருவர் பரிசுபெட்டியுடன் கலைமான்களால் பூட்டப்பட்ட ரதத்தில் உட்கார்ந்தவாறு செல்வதை காட்சிப்படுத்தினர்.
அதிகளவிலான டிரோன்களை பயன்படுத்தி சாகசம் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி 10 கோடி பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
- உக்ரைன்- ரஷியா இடையில் உடனடியாக போர் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும்.
- 4 லட்சம் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ள நிலையில் உக்ரைன அதிபர் ஜெலன்ஸ்கி போர் நிறுத்தத்தை எதிர்பார்க்கிறார்.
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் ஆயிரம் நாட்களை கடந்துள்ளது. ரஷியாவுக்கு உக்ரைனால் ஈடுகொடுக்க முடியாது. ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி வழங்கியதால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிரான போரிட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். தனது வெற்றி உரையில் நாங்கள் போரை விரும்பவில்லை எனக் கூறியிருந்தார். இதனால் உக்ரைன்- ரஷியா இடையிலான போர் முடிவடைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைன்- ரஷியா இடையிலான போர் உடனடியாக நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என டொனால்டு டிரம்ப் விரும்புகிறார்.
இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறுகையில் "உக்ரைன்- ரஷியா இடையில் உடனடியாக போர் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும். தேவையில்லாமல் ஏராளமான உயிர்கள் வீணாகி வருகிறது. ஏராளமான குடும்பங்கள் சீரழிந்துள்ளது. இது இப்படியே சென்று கொண்டிருந்தால் மிகவும் பெரியதாகி மோசமானதாகிவிடும். ரஷிய அதிபர் புதினுக்கு இது நன்றாக தெரியும். அவர் செயல்பட வேண்டிய நேரம் இது. சீனா உதவி செய்ய முடியும். உலகம் காத்துக் கொண்டிருக்கிறது.
4 லட்சம் ராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உக்ரைன் நாட்டின் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். ஜெலென்ஸ்கியும் உக்ரைனும் ஒரு ஒப்பந்தம் செய்து பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த விரும்புகிறார்கள். அவர்கள் அபத்தமான முறையில் 4,00,000 வீரர்களையும் (உயிரிழப்பு மற்றும் காயம்) இன்னும் பல பொதுமக்களையும் இழந்துள்ளனர்.
புதுப்பிக்கப்பட்ட நாட்டர்டாம் தேவாலயம் திறப்பு விழாவின்போது டொனால்டு டிரம்ப் உடன் ஜெலன்ஸ்கி பேசினார். அதனைத் தொடர்ந்து டிரம்ப் மேற்கண்டவாறு சமூக வலைத்ளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், நேட்டோ அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் பாதுகாப்பு செலவிற்கான பணத்தை முறையான விகிதத்தில் வழங்கவில்லை என்றால் நேட்டோவில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.






